கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மூன்று நாட்கள் நடந்தன.
இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு பதில் அவரது மனைவி பிரேமலதா கலந்து கொண்டார். அதற்கு முன் நடந்த தொழிற்சங்க அணி நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார். ஆனால், மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளாதது மட்டுமின்றி, கட்சி ஆபீஸ் பக்கமும் எட்டிப் பார்க்கவில்லை. சென்னையில் இருந்தால் கட்சி ஆபீஸ் வந்து செல்லும் விஜயகாந்த், மகளிர் அணி கூட்டம் நடந்த மூன்று நாட்களும் அங்கு வராததால், மாநில நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா, விஜயகாந்த் பாணியில் மகளிர் அணியினருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அவர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து அளித்தார். ஆனால், கடைசி வரை கட்சியில் பிரேமலதாவுக்கு என்ன பொறுப்பு என தெரியாமலே மகளிர் அணியினர் கலைந்து சென்றனர்.
நன்றி:தினமலர்
இதப்படிக்கிற விஜயகாந்து ரசிகர், தேமுதிக தொண்டர் யாரவாது இருந்தீங்கனா பிரேமலதா விஜயகாந்துக்கு கட்சில என்ன பொறுப்புன்னு கொஞ்சம் சொல்லுங்கபா,
Posted by போவாஸ்
|
at
1:11 AM
|
காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் தேவநாதன் (வயது 35). வாலாஜாபாத்தை அடுத்துள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்த இவர் தான் பூஜை செய்து வந்த கோவிலை காமக்கூடாரமாக மாற்றி பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு வந்தது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நெற்றி நிறைய விபூதி பட்டை, வாரி முடித்து கட்டிய கொண்டை, மடித்து கட்டிய வேட்டி...என பக்தி பழமாக காட்சி அளித்த அர்ச்சகர் தேவநாதன் இவ்வளவு மோசமான பேர் வழியா என்று.. காஞ்சீபுரம் நகரமே கதிகலங்கி போய் கிடக்கிறது. ஒன்றல்ல...இரண்டல்ல... மொத்தம் 6 பெண்களுடன் தேவநாதன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு கள்ளக்காதல் மன்னனாக வலம் வந்தகதை பற்றித்தான் ஊர் முழுக்க பேச்சாக உள்ளது.
தேவநாதனின் துணிகர செக்ஸ்லீலைகள் வெளிச்சத்துக்கு வந்ததும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. துரைராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து சிவகாஞ்சி போலீசார் தேவநாதன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தேவநாதன் தப்பி ஓடி தலைமறைவானார். அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால் தொடர்ந்து தேவநாதன் போலீசுக்கு தண்ணி காட்டி கொண்டிருக்கிறார்.
சென்னை நங்கநல்லூரில் தேவநாதனின் உறவினர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களின் தயவில் சென்னையில் தேவநாதன் பதுங்கி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது அர்ச்சகர் தேவநாதனுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்து விட்டது. எனவே எங்களது பிடியில் இருந்து அவர் எங்கும் தப்பிச்சென்று விட முடியாது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றனர்.
கோவில் என்று கூடபாராமல் தேவநாதனுடன் ஒன்றாக இருந்த பெண்கள் அனைவருமே குடும்ப பாங்கான பெண்கள் போல தோற்றம் அளிப்பதாக போலீசார் கூறினார்கள். இவர்களில் ஒரு பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் ஒரு வித மிரட்சியுடனே காணப்படுகிறார்.
உள்ளூர பயத்துடன் காட்சி அளிக்கும் அவர் அர்ச்சகரின் ஆபாசவலையில் சிக்கிய பின்னர் மெய்மறந்து விடுகிறார். இவரைப்போல கோவிலுக்கு வந்த பல பெண்களுடன் நைசாக பேச்சு கொடுத்து அவர்களை தன் வழிக்கு கொண்டு வந் துள்ளார் தேவநாதன். இப்படி தேவநாதனின் காமப்பசிக்கு இரையான பெண்களின் பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஆபாச அர்ச்சகரின் செக்ஸ் படங்கள் காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அமோகமாக விற்பனை யாகிறது. திருட்டுத்தனமாக ஆபாச படங்களை சி.டி.யில் பதிவு செய்து விற்பனை செய்யும் வக்கிர கும்பல் ஒன்று தேவநாதன் பெண்களுடன் செக்ஸ்லீலையில் ஈடுபடும் சி.டி.க்களை 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சி.டி. விற்பனை கும்பலை பிடிக்க போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Posted by போவாஸ்
|
at
8:57 PM
|