வேட்டைக்காரன் ஸ்பெஷல் - ஏம்பா, அந்த பையன போட்டு இந்த அடி அடிக்கிறாங்க.

"ஏம்பா, அந்த பையன போட்டு இந்த அடி அடிக்கிறாங்க.?."
"விஜயோட வேட்டைக்காரன் படத்தை பாத்துட்டு நல்லா இருக்கு, சூப்பர்னு சொன்னானாம்."


டாக்டர் : என்னய்யா நம்ம ஆஸ்பத்திரில இவ்ளோ கூட்டம் ?.
கம்பவுண்டர் : விஜய் நடிச்ச வேட்டைக்காரன் படத்தைப் பாத்துட்டு எல்லாருக்கும் கண்ணு, காதுல இருந்து ரத்தமா வழியுதாம்.கொஞ்ச பேருக்கு வாந்தி பேதியும் இருக்குங்க.


அம்மா தன மகளிடம் : மகளே நீ உன்னோட பிரண்ட்சோட சேர்ந்து பார்க், பீச், ஹோட்டலுக்கு, கோயிலுக்குன்னு எங்க வேணும்னாலும் போ. தப்பி தவறி வேட்டைக்காரன் சினிமாவுக்கு மட்டும் போயிடாத.


"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".





நண்பர் 1: என்னங்க வேட்டைக்காரன் விஜயோட நிலைமை இப்படி ஆயிடுச்சே ?.
நண்பர் 2: அது ஒன்னும் இல்லைங்க விஜய் வேற அரசியல்க்கு வராத சொல்லிட்டு  திரியாருல, அதனால வந்த வினைதான் இது. SUN pictures sketch போட்டு தூகறாங்க இவர. இன்னும் பொறுத்திருந்து பாருங்கல் என்னவெல்லாம் நடக்குதுன்னு...இவர இல்லாம பண்ண போறாங்க...! (உண்மையாக இருக்குமோ)

உங்க வாழ்க்கைல பொக்கிஷமா இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்.

விஜயின் படங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு வித்யாசம் தெரியும்,அதாவது படத்தின் பெயரில் மட்டும் வித்யாசமாக இருக்கும் மற்றபடி எல்லாம் ஒரேமாதறி தான் இருக்கும் இதுவும் அப்படிதான் இருக்கு, அனுஷ்காவை பார்க்க இந்த படத்திற்கு போகலாம்.

விஜய் : வேற வேற வேற வேற வேற வேற வேற ஒரு நல்ல படத்தை போய்  பாருங்கையா.
ரசிகர்கள்: ?????

திரையிக்கு வந்து சில மணி நேரங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம் "வேட்டைக்காரன்" திருட்டு வீ சீ டீ. ஆனாலும் ஒரு வீ சீ டீ கூட விக்கவில்லை.

"விஜயின் வேட்டைக்காரன் படம் பார்த்துவிட்டு வரும் மக்களுக்கு வாந்தி பேதி, மயக்கம், தலைசுற்றல் உள்ளான உடல் கோளாறுகள் ஏற்பட்டால்  உடனடியாக ஆங்காகே அமைந்திருக்கும் சிறப்பு மருத்துவ முகாமுக்கு சென்று சிகிச்சைப் பெற்று கொள்ளவும்". - தமிழக அரசு.

(சும்மா ஜோக்குக்குதாங்க)


Posted by போவாஸ் | at 11:44 PM | 4 கருத்துக்கள்

93 விழுக்காடு இந்தியர்கள் தூக்கத்தை இழந்துவிட்டனர்: ஆய்வுத் தகவல்


பெரும்பாலான இந்தியர்கள், குறிப்பாக இளைஞர்களும், தொழில் முனைவோரும் தூக்கம் இன்மையுடன் தொடர்புடைய இடர்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று பிலிப்ஸ் ஹெல்த் கேர் நிறுவனம் வெளியிட்டு உள்ள ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[bxp52648.jpg]

வளமான உடல் நலத்துக்கு எட்டுமணி நேர உறக்கம் தேவை. எட்டு மணி நேரம் பணி, எட்டுமணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம் என்பது மனிதனுக்கு வகுக்கப்பட்ட நியதியாகும். ஆனால், பணம் ஒன்றே அனைத்தும் என்ற இலக்கோடு வேகமாக இயங்கி வரும் இன்றைய உலகில், எட்டு மணி நேர உறக்கம் என்பதே இயலாததாக ஆகிவிட்டது.
உறக்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், தூக்கமின்மையால் உடல் நலம் பாதிக்கப்படுவது கவனிக்கப்படாமல் விட்டுவிடப்படுகிறது. 2009 நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் அய்ந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வாழும் 35 முதல் 65 வயதுக்கு உட்பட்ட 5600 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் இந்த ஆய்விலிருந்து விலக்கப்பட்டனர். எஞ்சியவர்களில் 93 விழுக்காட்டினர் தூக்கமின்மையால் அவதிப் படுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் 58 விழுக்காட்டினர் இத்தகைய தூக்கமின்மையால் தங்களின் பணி பாதிக்கப்படுவதாகக் கூறினர். பணி நேரத்தில் தூங்கிவிடுவதைத் தவிர்க்க 11 விழுக்காட்டினர் விடுப்பு எடுக்கின்றனர்.
தூக்கமின்மையும், வேலையில் கவனமின்மையும் இணைவதால் ஏற்படும் அலை பாயும் மனநிலை குடும்ப உறவுகளைப் பாதிப்பதாகக் கூறினர். 74 விழுக்காட்டினர் தூங்கும் நேரங்களில் இரைச்சலாலும், இயற்கை அழைப்புகளாலும் தூக்கம் கலைகின்ற-னர். 62 விழுக்காட்டினர் குரட்டை போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். குரட்டை விடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய்களின் ஆபத்து உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.
நல்ல உறக்கம் இல்லாததால் உடல் நலிவடைவதை 87 விழுக்காட்-டினர் உணர்ந்தாலும், 2 விழுக்காட்டினர் மட்டுமே மருத்துவர்களை அணுகுகின்றனர்; மற்றவர்கள் அதைப் பொருட்படுத்துவதேயில்லை.

Posted by போவாஸ் | at 10:11 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails