தமிழ்நாடுபற்றி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்



இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அந்நிய முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் மாநிலம்; உள்கட்டமைப்பு வசதி மற்றும் நிருவாகமே இதற்குக் காரணம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.


இந்தியாவில் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் சூழல் பற்றிய குறியீட்டு எண் என்ற ஆய்வினை இங்கிலாந்து நாட்டில் லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மேற் கொண்டுள்ளது.


தமிழகத்தைப் போலவே முதல்நிலையில் கருநாடகா, மகாராஷ்டிரா, டில்லி மற்றும் குஜராத் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.


இந்த மாநிலங்கள் அனைத்தும் பொருளாதார சிறப்புச் செயல்பாடுகளை உள்கட்டமைப்பிலும் மனித வளத்தை மேம்படுத்துவதிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. செயல்பாடுகளில் நிரந்தரமான நிருவாகமும் இங்குள்ளன.


இந்தியாவில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பான முன்னேற்றம் என்பது குறித்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஆயிரம் கல்விக்கழக உறுப்பினர்களிடம் ஆலோசனை பெற்றது.


இந்தியாவின் வணிக ஆய்வில் மாநில அளவில் குறிப்பிடத்தக்க காரணிகளில் உள்ள வேறுபாடுகனை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
மனித வளத்தை மேம்படுத்துவதைப் பொறுத்தவரையில் இமாச்சலப் பிரதேசம், கோவா, புதுச்சேரி ஆகியவையே வியக்கத்தக்க வகையில் முதலீடுகளை ஈர்த்துள்ளன. இவற்றில் கோவா முன்னிலையில் உள்ளது.


மேற்கு வங்கத்திலும் உத்தரப் பிரதேசத்திலும்தான் மிகக்குறைவான சூழ்நிலை நிலவுகிறது. வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்கள் குறைந்த நிலையில் உள்ளன. ஜார்கண்ட், அருணாச்சலப்பிரதேசம், பிகார் ஆகியவை மாநிலத்தில் குறைவான தகுதி காரணமாக உள்கட்டமைப்பு நிருவாகம் ஆகியவற்றில் கீழ்நிலையில் உள்ளன.


ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வு, குறியீட்டு எண்ணில் இந்தியாவில் 28 மாநிலங்களும் 2 பெரிய யூனியன் பிரதேசங்களுமான டில்லியும், புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளன.

Posted by போவாஸ் | at 1:59 PM | 2 கருத்துக்கள்

விஜயகாந்து அன்றும் இன்றும்.


அன்று: பெற்றோர் வைத்த பெயர் விஜயராஜ்.
இன்று: பொருள் சேர்க்க வைத்த பெயர் விஜயகாந்து.


அன்று: விஜயகாந்து பார்வையில் கலைஞர் ஒரு காவியத் தலைவன்.
இன்று: விஜயகாந்து பார்வையில் கலைஞர் ஒரு தமிழினத் துரோகி.


அன்று: திமுகவே கதி, கலைஞரே தலைவர் என்று சொல்லிக்கொண்டு அட்டகாசமான நிஜ வாழ்க்கை நடிப்பு.
இன்று: எது நடந்தாலும் திமுகவின் சதி. கலைஞரே மூலக் காரணம்.


அன்று: கலைஞருடன் ஒட்டிக்கொண்டு நடித்த (நிஜ வாழ்க்கையில்) காலத்தில் கிடைத்த பட்ட பெயர் "புரட்சிக் கலைஞர்"
இன்று: அவருக்கு அவரே சூட்டிக் கொண்ட பட்ட பெயர் கருப்பு எம்ஜிஆர்.


அன்று: வாழ்நாளில் இனி போலீஸ் வேடத்தை ஏற்று நடிக்க மாட்டேன் என்று கூறியது.
இன்று: விருதகிரி சினிமாவில் விறுவிறுப்பாக போலீஸ் வேடத்தில் நடித்துக் கொண்டிருப்பது.


அன்று: டிவி மீடியாக்களுக்கு பேட்டியே கொடுக்க மாட்டேன்.
இன்று: சொந்தமாக கேப்டன் டிவி தொடங்குவது. சன் டிவி, தினமணி, தினமலர் போன்ற ஜால்ரா பத்திரிக்கைகளிடம் நட்பாக இருப்பது.


அன்று: சினிமாவில் பக்கம் பக்கமாய் வசனம்.
இன்று: தேர்தல் நேரத்தில் பக்கம் பக்கமாய் வசனம்.


அன்று: சினிமா வசனம் எழுத இப்ராகிம் ராவுத்தர்.
இன்று: தேர்தல், அறிக்கை வசனங்கள் எழுத பண்ரூட்டி ராமச்சந்திரன்.





அன்று: சினிமாவிற்கு கால் சீட் கொடுத்து வசனங்கள் பேசி நடிப்பது.
இன்று: தேர்தல் நேரத்தில் மட்டும் ஊர் ஊராக சென்று நிஜத்திலும் வசனம் பேசி நடிப்பது.


அன்று: திமுக ஒரு குடும்பக் கட்சியாக காட்சி அளிக்கிறது.
இன்று: தனது மனைவியும், மச்சானும் இல்லாமல் எந்த ஒரு கட்சி கூட்டமும் இல்லை.


அன்று: நடிகர் வடிவேலுவின் அலுவலகத்தில் தன் ஆட்கள் செய்த கலாட்டக்களையும், அட்டூழியங்களையும் பற்றி மனிதாபிமானமில்லாத் முறையில் ஜனநாயகத்துக்கு மாறாக, முரண்பாடாக பேசியது.
இன்று: தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற மீண்டும் தர்மயுத்ததிற்கும், தியாகத்திற்கும் தேமுதிக தயாராக இருக்கிறது என்று அறிவித்தது.


அன்று: சொந்த கருத்துக்கள் கிடையாது. பேசவும் தெரியாது.
இன்று: இன்றும், சொந்த கருத்துக்கள் கிடையாது. பேசவும் தெரியாது.


அன்று: ஊழலை ஒழிப்பேன் இன்று வாய் கிழிய பேசுவது.
இன்று: எம்ஜிஆரே ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பண்ரூட்டி இராமச்சந்திரனை அருகிலே வைத்திருப்பது.


அன்று: மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டுமே கூட்டணி.
இன்று: யாருடனும் கூட்டணிக்கு தயார்.


அன்று: தேமுதிக ஏழைகளுக்காக பாடுபடும். வறுமையை ஒழிக்கும்.
இன்று: இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலுமே பணக்காரர்களுக்கு மட்டுமே சீட் கொடுத்தது.


படிப்பறிவு : எஸ்.எஸ்.எல்.சி.
பொதுஅறிவு: இல்லை.
பகுத்தறிவு: சுத்தமாக இல்லை.
நன்றி, விசுவாசம்: சிறிதும் இல்லாதது.
மரியாதை: மரியாதை என்ற படத்தினில் நடிக்கத் தெரிந்தவர்..நிஜத்தில் மரியாதை கொடுத்துப் பேசத் தெரியாதவர்.
கேள்வி மட்டுமே கேட்டு அறிக்கை மழைகளை விடுவது.
எதிர் கேள்வி கேட்டால் அல்லது பிரச்னைக்கு தீர்வைக் கேட்டால் ஓடி ஒழிவது.


தேமுதிக கட்சியால் இதுவரை செய்த சாதனை : தேர்தல் கூட்டம் என்று பலவற்றிற்கு கட்சியினர் பலரை செலவு செய்ய வைத்து ஆண்டியும் போண்டியும் ஆக்கினது..



ஊரில் உள்ளவனோட எல்ல காசையும் செலவு பண்ணி தமது ஆதரவு எவ்வளவு என்று முடிவு பண்ணிபுட்டு , இப்ப சீட்டுக்கு பேரம் பேச கெளம்பிட்டாரு . கிடைக்கிற சீட்டுல மச்சான் , மனைவி என்று கொடுத்து மீதி ஏதேனும் இருந்த அதில் தனது பினாமிகளுக்கு சீட் கொடுப்பார் இந்த ஓவராக வசனம் பேசி வந்த விஜய்காந்த்.இதுக்கு முந்தி செலவு செய்தவன் கதி அதோகதிதான்..

சூடு சொரனை இல்லாதவர்கள் தான் அரசியல் வாதிகள் என்பதை விஜய்காந் நிரூபித்து விட்டார் திமுக அதிமுகவையும், கட்சி ஆரம்பித்ததிலிருந்து குறைகூரிவந்தவர் கட்சியில் உள்ளவர்கள் விலகி போவதால் யாருடனும் கூட்டனி என்கிரார் தமிழக மக்களே இனியாவது இது போன்ற போலி தமிழன் வேஷம் போடும் விஜய்காந்தை ஒதிக்கிவையுங்கள்.

மக்களுடனான கூட்டணியும், கடவுளுடனான கூட்டணியும் முரிஞ்ச்சிபோச்சா? கை விட்டுட்டாங்களா ?.

Posted by போவாஸ் | at 1:34 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails