நகைச்சுவை துணுக்குகள்

கார் ஒன்று வேகமாக போய்க்கொண்டிருப்பதை டிராபிக் போலிஸ்காரர் பார்த்தார். அதனை தனது பைக்கில் விரட்டினார். போலிஸ் துரத்துவதைப் பார்த்ததும் அவன் இன்னும் வேகமாக ஓட்டினான். ஏறக்குறைய இரண்டு மணி நேர துரத்தலுக்குப் பின், போலிஸ்காரர் அவனை மடக்கிப் பிடித்தார்.
“ஏன் வேகமாகப் போனே? என்னைப் பார்த்ததும் நிக்காம, இன்னும் வேகமாகப் போனது எதுக்கு?”
“போனவாரம் என் மனைவி ஒரு போலிஸ்காரரோட வீட்டை விட்டுப் போயிட்டா! நீங்க தான் அவரோன்னு தப்பா நினைச்சிட்டேன்!”
“அதுக்கு எதுக்கு நிக்காமப் போகனும்?”
“இல்லை, நீங்க அவளைத் திருப்பித் தர வந்திருக்கீங்களோன்னு நினைச்சிட்டேன்!

பக்கத்து வீட்டுக்காரி:உன் மாமியாரை 6 பேரு சேர்ந்து  அடிச்சுகிட்டிருக்காங்க, நீ என்ன வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கே? போய் உதவி ஏதும் செய்யலையா?

மருமகள்: ஏற்கனவே 6 பேரு இருக்காங்க, என்னோட உதவி அவங்களுக்குத் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்!
பக்கத்துவீட்டுக்காரி: ???????????????????

“என்னங்க! இன்னிக்கு அதிர்ஷ்டவசமா எங்கம்மா ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பிச்சாங்க. மணிக்கூண்டு வழியா சந்தைக்கு அவங்க போயிருக்காங்க. மணிக்கூண்டை அவங்க கடந்த அடுத்த நிமிடமே, அந்தப் பெரிய கடிகாரம் மேலிருந்து தரையில் விழுந்து உடைஞ்சிருக்கு..”
“எனக்குத் தெரியும், பாழாய்ப்போன அந்த கடிகாரம் எப்பவுமே லேட்டுன்னு”
 
மருத்துவர் நோயாளியின் கணவரிடம் : உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம் தான் உயிரோட இருப்பாங்க..
கணவர் : பரவாயில்லை டாக்டர். இத்தனை வருஷன் பொறுத்துக்கிட்டேன். இன்னும் ஒரு மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா?
மருத்துவர் : ????

நேத்து என் பையனை நீங்கதான் ஆத்து வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே....?’
'ஹி...ஹி...ஆமாம்! அந்த சின்ன விஷயத்துக்குப் போய் நன்றி சொல்ல வந்தீங்களாக்கும்...?’
'அதுக்கில்லேங்க.......பையன் பாக்கெட்டுல ரெண்டு ரூபா வச்சிருந்தானாமே..அதை நீங்க எடுத்தீங்களா?’
 
ஆசிரியர்: அமேசான் காடுகளில் இருக்கிற பழங்குடியினர் இலைகளாலான உடையைத் தான் அணிகின்றனர்.
மாணவன்: சார்! இலையுதிர்காலத்தில் அமேசான் காடுகளுக்கு சுற்றுலா போகலாமா?

அமெரிக்கர்கள் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறார்கள்.”

இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500 அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.”
இந்தியர்களும் தோண்டினார்கள். 1000 அடி தாண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.”

Posted by போவாஸ் | at 9:22 PM | 1 கருத்துக்கள்

நகைச்சுவை துணுக்குகள்

வாழ்க்கை என்பது டெஸ்ட்
வாழ நினைப்பது பெஸ்ட்

எதிலும் வரணும் ஃபர்ஸ்ட்
அதுவரை எடுக்காதே ரெஸ்ட்

தேள் கொட்டினால் வலிக்கும்
முடி கொட்டினால் வலிக்குமா?

செக்யூரிட்டி: மேனேஜர் ஏன் கோபமாக பேசிட்டுப் போறார்?

டிரைவர் : சடன் பிரேக் போடும்போது பார்த்துப் போடுன்னார்

செக்யூரிட்டி:நீ அதுக்கு என்ன சொன்ன?

டிரைவர்:பிரேக் போடும்போது ஒங்களை எப்பிடித் திரும்பிப் பார்க்க முடியும் சார்?ன்னு கேட்டேன்.

பில்லி, ஏவல், சூனியம்ங்கறதை எல்லாம் நம்புறீங்களா?
"பில்லி, ஏவல் - சூனியம்ங்க றதை நம்புறேன்.'
அவ்வளவு பெரிய நகரத்துல ஒரு வீடுகூட இல்லடா? ஆச்சர்யமா இருக்குதா? நான் பார்த்தது "மேப்'லடா!
ஏன் தம்பி படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்கே?

மூடி வைக்கணும்னு இருக்கேன்.

மாலையில் சோர்வாக வீட்டுக்குத் திரும்ப பீட்டர் காலிங் பெல்லை அழுத்தினான். கதவைத் திறந்த அவனுடைய மனைவி ஸ்டெல்லா உடனே பொசுக்கென்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
"என்னாச்சு ஸ்டெல்லா... ஏன் அழுவுற?''
"உங்கம்மா என்னை அவமானப்படுத்திட்டாங்க...''
"எங்கம்மாவா? அவங்கதான் வெளிநாட்டில இருக்காங்களே... அப்புறம் எப்படி?''
"இன்னைக்கு காலையில உங்க பெயருக்கு ஒரு லெட்டர் வந்தது. ஆர்வத்துல பிரிச்சிப் படிச்சிட்டேன்...''
"எனக்கு வந்த லெட்டர்தானே படிச்சே அதுல என்ன தப்பு?''
"அந்த லெட்டரோட கடைசியில உங்க அம்மா, "ஸ்டெல்லா இதை நீ படிச்சவுடனே மறக்காம என் மகன் படிக்கிறதுக்கும் கொடு'ன்னு எழுதியிருக்காங்க!'
ஒரு நாள் பணம் கொடுத்தா போதும்,முப்பது நாளும் விடாம அர்ச்சனைதான்!''
"எந்தக் கோயில்ல?''
"என் வீட்டுலதான். ஒண்ணாம்தேதி சம்பளத்த கொடுத்ததும் அர்ச்சன தொடங்கினாள்ன்னா மாசம் முடியறவரைக்கும் விடமாட்டா...
வாழ்க்கையில் முன்னேற நினைப்பவன் வழியைத் தேடுகிறான்..
அதைக் கடைப்பிடிக்க மறந்தவன் காரணத்தைத் தேடுகிறான்
நீ நேசிப்பவர்களுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு
ஆனால் எதற்காகவும் நேசிப்பவர்களை விட்டுக் கொடுக்காதே!

Posted by போவாஸ் | at 8:02 PM | 1 கருத்துக்கள்

பட்டுச்சேலையில் திருக்குறள் + திருவள்ளுவர்.



இந்த பட்டு சேலையால்
திருக்குறள் + திருவள்ளுவருக்கு
மதிப்பா ? அல்லது அவமதிப்பான்னு ?
தெரியாது.
ஆனால் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Posted by போவாஸ் | at 3:30 PM | 0 கருத்துக்கள்

பழசிராஜா:16-ந்தேதி ரிலீஸ்: 500 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது


தென்திருவிதாங்கூர் சமஸ்தானமாக கேரளமாநிலம் இருந்தபோது அதை ஆட்சிபுரிந்தவர் பழசிராஜா. இவர் வெள்ளையர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராடி வீரர் என மலையாள வரலாற்றில் சித்தரிக்கப்படுகிறார். இந்த வரலாற்று பின்புலத்தை மையமாக வைத்து பழசிராஜா என்ற கதையை திரைப்படமாக எடுத்துள்ளனர்.

மலையாளத்தில் வெளியாகும் இத்திரைப்படத்தில் மம்முட்டி பழசிராஜாவாக நடிக்கிறார். அவரது தளபதியாக சரத்குமார் நடிக்கிறார். மற்றும் நெடுமுடிவேணு, மனோஜ் கே.ஜெயன், பத்மப்ரியா, தனிகா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பல கோடி ரூபாய் செலவில் தயாரான இத்திரைப்படத்துக்கு தியேட்டர்களில் கட்டண உயர்வு அளிக்கவேண்டும் என்று தயாரிப்பு நிர்வாகம் அரசை வலியுறுத்தியது. கடந்த மாதமே வெளியாக வேண்டிய பழசிராஜா திரைப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளிபோனது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பழசிராஜா திரைப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யபட்டு வெளியாகிறது. வருகிற 16-ந்தேதி ரிலீஸ் ஆகும் பழசிராஜா உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை யொட்டி பழசிராஜா ரிலீஸ் ஆவதால் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.

Posted by போவாஸ் | at 1:54 PM | 0 கருத்துக்கள்

விருதுக்கு மரியாதை தர தெரியாத தரமற்றவர்கள்


நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் விவேக் அந்த விருதின் தன்மையையும், கவுரவத்தையும் சீர்குலைக்கும் வகையில் பொது நிகழ்ச்சியில் பேசி வருவதை மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி, அந்த விருதை திரும்பப் பெற வேண்டுகோள் விடுப்பது உள்ளிட்ட பல தீர்மானங்களை சினிமா பிரஸ் கிளப் நிறைவேற்றியுள்ளது.
சினிமா பிரஸ் கிளப் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செக்கர்ஸ் ஓட்டலில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ராவணன், தலைவர் சக்திவேல் தலைமையிலும், பொதுச்செயலாளர் எம்.பி.ஆபிரகாம் லிங்கன் முன்னிலையிலும் நடைபெற்றது.
திரையுலகினால் கடுமையான அவமரியாதைக்கு உட்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களின் உணர்வுகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
1. நாளிதழ் ஒன்றில் திரையுலகினர் பற்றி வந்த செய்தியால் திரையுலகினர் குறிப்பாக சம்மந்தப்பட்ட நடிகைகள் மன வருத்தத்தை சினிமா பிரஸ் கிளப் புரிந்து கொள்கிறது. இதுதொடர்பாக 7.10.09 அன்று நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் திரையுலகில் மதிப்பு மிக்க இடத்தில் இருக்கும் சத்யராஜ், சூர்யா, விவேக், சேரன் ஆகியோர் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் இழிவு படுத்தி பேசியது எங்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு சினிமா பிரஸ் கிளப் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
2. எங்கள் உறுப்பினர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இனி நடைபெறும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் சம்மந்தப்பட்டவர்கள் தரும் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்வதில்லை என சங்கம் தீர்மானித்துள்ளது.
3. பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய விவேக், சேரன், சூர்யா, சத்யராஜ் ஆகியோர் தொடர்பான செய்திகள் புறக்கணிப்பது தொடர்பாக அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும், உரிமையாளர்களையும் சந்தித்து வேண்டுகோள் வைப்பது.
4. இந்த பிரச்சனை தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியிருக்கும் சென்னை பிரஸ் கிளப், சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் உள்ளிட்ட பத்திரிகையாளர் கூட்டுக்குழு நடவடிக்கைகளுக்கு சினிமா பிரஸ் கிளப் முழு ஆதரவு தெரிவிக்கிறது.
5. நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் விவேக் அந்த விருதின் தன்மையையும், கவுரவத்தையும் சீர்குலைக்கும் வகையில் பொது நிகழ்ச்சியில் பேசியிருப்பதையும்,அவருடைய திரைப்படங்களில் ஊனமுற்றோர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி வசனம் பேசி வருவதையும் மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி, அந்த விருதை திரும்பப் பெற வேண்டுகோள் வைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவரா விவேக் ?
பத்மஸ்ரீ விருது கிடைத்தவுடன் திரு.விவேக் அவர்களின் பேட்டி ஒரு நாளிதழில் வெளியானது. அதிலிருந்து ஒரு சிறு பகுதி.


மிகச் சிறந்த நகைச்சுவைக் கலைஞர்களான என்எஸ்கே மற்றும் நாகேஷுக்கே வழங்கப்படாத பத்மஸ்ரீ விருது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதே… படத்துக்குப் படம் ஆபாச வசனங்கள் அதிகம் பேசும் நீங்கள் இதற்குத் தகுதியானவர்தானா?’, என விவேக்கிடம் கேள்வி எழுப்பியதால் கடுப்பானார் விவேக்.
டெல்லியி்ல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பத்மஸ்ரீ விருது பெற்றுத் திரும்பிய நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு அவரது ரசிகர்கள் மூலம் மிகப் பெரிய வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று சில நிருபர்களைச் சந்தித்து தனது பத்மஸ்ரீ அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
தமிழின் உன்னதமான நகைச்சுவைக் கலைஞர்களான என்எஸ்கே, நாகேஷ் போன்றவர்களுக்குக் கூட கிடைக்காத பத்மஸ்ரீ விருது உங்களுக்குக் கிடைத்துள்ளது. படத்துக்குப் படம் ஆபாச வசனங்கள் பேசும் நீங்கள் இந்த விருதுக்குத் தகுதியானவர்தானா என்று கேட்டதற்கு, “என்எஸ் கிருஷ்ணன் காலத்தில் பத்மஸ்ரீ வி்ருது வழங்கப்படவில்லை. நாகேஷ் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு விருது கொடுக்காதது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை”, என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: “27 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். பல சமூக சீர்திருத்த கருத்துக்களைக் கூறி வந்திருக்கிறேன். குடும்பநல திட்டம், பெண் சிசு கொலை, குழந்தைகள் கல்வி, வரதட்சணை ஒழிப்பு, போலியோ மருந்தின் அவசியம், போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகிய கருத்துக்களை நான் நடித்த படங்களின் மூலம் சொல்லியிருக்கிறேன். படத்தில் நாத்திகம் பேசினாலும் நான் ஒரு ஆன்மிகவாதி. கண்டிப்பாக நாத்திகன் அல்ல. ஆன்மிகத்தில் உள்ள சில மூடப்பழக்க வழக்கங்களை படங்களில் எடுத்து சொல்கிறேன், அவ்வளவுதான். என் கருத்துக்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்லத்தான் இப்போது கதாநாயகனாக நடிக்க விரும்புகிறேன். நான் சாமியாராகப் போவதாக சிலர் கேட்டிருந்தார்கள். நிச்சயமாக நான் சாமியார் ஆகமாட்டேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் உண்மை என ஒன்று இருக்கிறது. குறிப்பிட்ட அளவு வாழ்ந்து முடித்த பின், பெரும் உண்மையை தேடி போகவேண்டும் என்ற ஆசை சிலருக்கு ஏற்படுவது உண்டு. அது எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சாமியார் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை…”, என்றார்.
வடிவேலுவின் நகைச்சுவை மாதிரி சுவாரஸ்யமாக உங்கள் நடிப்பு இல்லையே… திரும்ப திரும்ப ஒரே மாதிரிதானே நடிக்கிறீர்கள். படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறீர்கள், என்று கேட்டபோது கடுப்பான விவேக், “சில பிரசாரங்கள் ‘போர்’ அடிக்கத்தான் செய்யும். கசப்பு மருந்துக்குள் இனிப்பு கலப்பதைபோல் சொல்லவேண்டும். சுருளிராஜனின் நகைச்சுவையைகூட விமர்சித்தவர்கள் இருக்கிறார்கள். இன்னொருவரின் பெயரை சொன்னீர்களே அவரைப்போல் நான் ஏன் நடிக்க வேண்டும்?”, என்றார் காட்டமாக.

தகுதியில்லாத, தரமில்லாத, பொது வாழ்க்கையில் தூய்மை, நேர்மை,  மற்றோருக்கு முன் உதாரணமாக இல்லாத, கலாச்சாரத்தை சீரழிக்கும் இவரைப் போன்ற சிலருக்கு பத்மஸ்ரீ, பத்மா பூசன் உள்ளிட்ட உயரிய வழங்கப் படுகிறது.முதலில் அதை நிறுத்த வேண்டும். விருதுக்கு தேர்வுக்கு செய்யும் குழு சிறப்பான குழுவாக இருக்க வேண்டும். அதுவே ஒழுங்கு கிடையாது. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். ஒழுங்கில்லாத குழு ஒழுங்கில்லாதவர்களைய்யே தேர்ந்தெடுக்கும்.

உள்நாட்டில் 6 Doctorate, வெளிநாட்டில் 2 Doctorate, 3 National Award, மேஸ்ட்ரோ இசைக்காக Royal Philharmonic என்ற உயரிய விருது, இன்னும் பல Honour Awards பெற்ற இசைஞானி இளையராஜா போல பல துறைகளில் இருப்பவர்களுக்கு கொடுக்காமல், நடிப்பிலும்  சரி, பொதுவாழ்க்கையிலும் சரி ஆபாசப் பேச்சுக்களைப் பேசும் நடிகருக்கும், அவுத்து போட்டு நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் போன்றோருக்கும் கொடுத்தால் இப்படித்தான்.


இவர்களால் விருதுக்கு ஒரு சதவீதம் கூட மரியாதை தர தெரியாத தரமற்றவர்கள். திரு.விவேக்கிடமிருந்து விருதைத் திரும்பப் பெற வேண்டும். இது அவருக்கும், இவரைப் போன்று இருப்பவர்களுக்கும், விருதைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுவுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும்.

Posted by போவாஸ் | at 12:55 PM | 6 கருத்துக்கள்

Related Posts with Thumbnails