ர்தார்ஜிக்கெல்லாம் இங்க TV விக்கறதில்லை

எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
ஒரு பத்திரிகை ஆபீசுல காப்பி ரைட்டரா இருக்கான்.


தந்தை : ஏன் சார் பையன அடிச்சீங்க . . . அப்படி என்ன தப்பு செஞ்சான்?
ஆசிரியர் : காக்கை குருவி எங்கள் ஜாதின்னு பாரதியார் பாடியிருக்காரே . . . அப்ப காக்கா குருவியெல்லாம் ஐயரான்னு கேட்டா உங்க பையன என்ன கொஞ்சுவாங்களா?

ஆசிரியர் : அரசாங்கத்துக்கும் ராபின்ஹுட்டிற்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்:பணக்காரங்க கிட்ட புடுங்கி ஏழைக்கு கொடுக்கறவன் ராபின்ஹுட். ஏழைங்க கிட்ட புடுங்கி பணக்காரங்க கிட்ட கொடுத்தா அது அரசாங்கம்.
ஆசிரியர் : ???? 

அ‌ந்த போ‌லி‌ஸ்கார‌‌ர் டே‌பி‌‌ள்ல ஏடிஎ‌ம்- னு எழு‌தி வ‌ச்‌சிரு‌க்காரே, அ‌ப்படி‌ன்னா?
அ‌ப்படி‌ன்னா... எ‌னி டை‌ம் மா‌மூ‌ல்-னு அ‌ர்‌த்த‌ம்.
இது கூட‌த் தெ‌ரியாமலா இ‌ங்க வேல பா‌க்குற? 

சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்
அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?
10000
ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்.

சர்தார்ஜி ஒரு கடைக்கு போனார். அங்க இருந்த பொருளைப் பாத்து இந்த டிவி என்ன விலைன்னு கேட்டார். அதற்கு அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
சர்தார்ஜி சரின்னுட்டு வெளியே போய் தன்னுடைய தல முடியெல்லாம் வெட்டிட்டு 'கெட் அப்பை' மாத்தி அதே கடைக்கு வந்தார்.
அதே பொருளைக் காட்டி 'இந்த டிவி என்ன விலைன்னு' கேட்டார்.
மறுபடியும் அவன் சர்தார்ஜிக்கெல்லாம் இங்க விக்கறதில்லைன்னு சொன்னான்.
அவன் கிட்ட எப்படி கரெக்டா நான் சர்தார்ஜின்னு கண்டுபிடிக்கிறேன்னு கேட்டார்.
அதற்கு அவன் நீங்கள் விலை கேக்கறது டிவி இல்ல மைக்ரோவேவ் ஓவன் அப்டின்னான். 

பின்லேடனை பிடி‌ச்சா 5 லட்சம் பரிசு என்று போலி‌அ‌றி‌வி‌த்தவுட‌ன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலி‌ஸஅதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாரா‌ம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு. 

Posted by போவாஸ் | at 11:04 PM | 0 கருத்துக்கள்

டி.வி-யில் மூழ்கி விட்ட பண்டிகைகள்

டி.வி-யில் மூழ்கி விட்ட பண்டிகைகள்

``இந்தியத் தொலைக்காட்சிகளில்... என்பது போய், தற்போது உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன...''

இதுதான் அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் தற்போது அரைமணி நேரத்திற்கு 60 முறை ஒளிபரப்பப்பட்டு வரும் விளம்பரமாக உள்ளது.

`
அனைத்து நிகழ்ச்சிகளையும் பாருங்கள். தீபாவளியைக் கொண்டாடுங்கள்' என்பதோடு நில்லாமல், ``தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்குவோர்... '' என்று கூறி ஒரு நீண்ட பெரிய பட்டியலையும் குறிப்பிடுவார்கள்.

அந்தப் பட்டியல் முழுவதும் பல கோடி ரூபாய் விளம்பரங்கள் என்பது டி.வி முன் பண்டிகை நாளில் தவமிருக்கும் பல்லாயிரக்கணக்கானோருக்கு தெரிய வாய்ப்பில்லை.
 


பகுத்தறிவு பாசறைக் குடும்பத்தின் புதிய தொலைக்காட்சி, கடந்த காலங்களில் விடுமுறைத் தினக் கொண்டாட்டம் என்று சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது. தற்போது தீபாவளித் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்றே வெளிப்படையாக ஒளிபரப்பத் தொடங்கி விட்டது.

இந்த தொலைக்காட்சி சேனல் உருவாவதற்கு முன் சூரியத் தொலைக்காட்சியில் ஆன்மீக நிகழ்ச்சிகள், கோயில் தொடர்பான நிகழ்ச்சிகள் இடம்பெறாமல் இருந்தது. சூரியக் குழுமத்திற்குள் பிளவு வந்து, மீண்டும் இணைந்துள்ள நிலையில் தற்போது சூரிய டி.வியில் ஆன்மீகத்திற்கு இடம் அளிக்கப்பட்டு விட்டதும் குறிப்பிடத்தக்கது.

தீபாவளிப் பண்டிகை என்றால் பொதுவாக அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, வீட்டில் விளக்கேற்றி கடவுளை வழிபட்டு, புத்தாடை அணிந்து உரிய இனிப்பு உள்ளிட்ட பதார்த்தங்களை சாப்பிட்ட பின் கோயி‌ல்களுக்குச் சென்று வழிபடுவதாக இருந்தது ஒருகாலத்தில்.

ஆனால், இன்று தீபாவளி உட்பட அனைத்துப் பண்டிகைகளும் சில, பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் சிறப்பு நிகழ்ச்சிகளாய் மாறி சின்னாபின்னமாகிச் சிக்கித் தவிக்கிறது.

காலையில் எழுந்தவுடனேயே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு சேனல்களாக மாற்றி, மாற்றிப் பார்க்கும் நிலைதான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது எண்ணமுமாக உள்ளது.

பிரபல, முன்னாள், இந்நாள் - நடிகர், நடிகைகள், அவர்களின் நடிப்புலக அனுபவங்கள் (!?) அல்லது அவர்கள் காதல் மனைவியுடன் அவர்களது `தலைதீபாவளி அனுபவங்கள்' என தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் (எந்த சேனல்களும் விதிவிலக்கல்ல) சினிமாவின் ஆதிக்கம் தொற்றிக்கொண்டாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன.

இதில் சில தொலைக்காட்சிகளில் `ஷூட்டிங் ஸ்பாட்' வேறு. நடிகர் - நடிகைகளின் தீபாவளியைப் பார்க்கும் ஆர்வத்தில் நம் வீட்டு தீபாவளிக் கொண்டாட்டங்களையல்லவா தொலைத்து விடுகிறோம்?


இதற்கெல்லாம் ஒரே தீர்வு, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலாவது டி.வி.-க்கு விடுமுறை என்ற உறுதியை வீட்டிலிருப்பவர்கள் எடுத்து, கேபிளை ஒருநாளாவது எடுத்து விடுவது தான்.

அக்கம்-பக்கம் வீட்டில் இருந்து சத்தம் கேட்டால் கவலையில்லை.

குழந்தைகளுடன் அல்லது வீட்டிற்கு வரும் உறவினர்களுடன், வீட்டில் உள்ள தாய் - தந்தை, பாட்டி-தாத்தா உள்ளிட்ட மூத்தவர்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து, தீபாவளியைக் கொண்டாடலாம். அனைவரும் ஒரே இடத்தில் விடுமுறையில் இருப்பதால், அவர்களை ஒட்டுமொத்தமாக சந்திப்பதே பெரிய நிலையாகி விட்ட இக்காலகட்டத்தில், மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு கலந்து பேசி களிக்கலாம்.

அப்போது தான் வருங்கால சந்ததியினருக்கு தீபாவளியின் முக்கியத்துவமும், கொண்டாட்டங்களின் அனுபவங்களும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி சேனல்கள் இல்லாத கால கட்டத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளியின் மகிழ்ச்சி இப்போது இல்லை.

பட்டாசு கொளுத்துவது கூட டி.வி-யில் ஏதாவது செய்தி (!?) போன்ற பார்க்க விரும்பாத நிகழ்ச்சி வரும் போதுதான் என்பதை பெரும்பாலானோர் வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை.

தீபாவளிப் பண்டிகை மட்டுமல்ல. பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என அனைத்துப் பண்டிகைகளின் போதும் இதே நிலைதான். சிறப்பு நிகழ்ச்சிகளை அளிப்பதன் மூலம் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தினர் பல்லாயிரம் கோடியை கல்லா கட்டி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

அந்த நிகழ்ச்சிகளை வெறுமனே எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிட்டபடியே பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, வீணான நோயும், மூளை அழற்சியும், உடல் சோர்வும் ஏற்படுவதான் நாம் பெறும் பரிசாக உள்ளது.

மகிழ்ச்சி என்பது பண்டிகை நாட்களில் வீணாக டி.வி. முன் அமர்ந்திருப்பது அல்ல என்பதை பெரியவர்கள் உணர்வதுடன் மட்டுமல்லாமல், தங்கள் வீட்டில் உள்ள இளையோருக்கும் அதனை உணர்த்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் மூலம் விருப்பம்.



Posted by போவாஸ் | at 10:25 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails