சிறப்பு ரயிலே வேணாம்...நீங்களே தொண்டர்களுடன் டில்லிக்கு வந்து சேருங்க


வருகிற 29ம் தேதி, தமிழக மீனவர்கள் பிரச்னைக்காக, டில்லியில் விஜயகாந்த் உண்ணாவிரதம் இருக்கப்போறார். இதுக்காக, "ஒவ்வொரு மாவட்டச் செயலரும் 100 தொண்டர்களை டில்லிக்கு கூட்டிண்டு வரணும்னு கட்சித் தலைமையில இருந்து உத்தரவு போட்டுட்டா. 
"சமீபத்தில் அறிமுகமான, "பாயின்ட் டூ பாயின்ட் துரந்தோ எக்ஸ்பிரஸ்' ரயில்ல அவர்களை அழைச்சிட்டு போக ஏற்பாடும் செஞ்சிருக்காங்க.தெற்கு ரயில்வேயில் முன்பதிவுக்கு 15 லட்சம் ரூபாய் கட்ட, 22ம் தேதி கடைசி நாள்.அதுக்கு மாவட்டச் செயலர்களிடம் பணம் கேட்டப்ப, ரெண்டு நாள் கழிச்சு தர்றதா சொல்லிருக்காங்க... சில மாவட்டச் செயலர்கள், பணம் இல்லைன்னு சொல்லி, மொபைலை, "ஸ்விட்ச் ஆப்' செஞ்சுட்டாங்கலாம். 
"கோபமான கட்சித் தலைமை, "சிறப்பு ரயிலே வேணாம்... நீங்களே தொண்டர்களுடன் டில்லிக்கு வந்து சேருங்க'ன்னு சொல்லிடுச்சாம்... "கட்சி வளர்ச்சிக்கு ஏராளமான பணத்தை செலவு பண்ணியும், 15 லட்சம் ரூபாய்க்கு நம்மை நம்பலையே'ன்னு மாவட்டச் செயலர்கள் இப்ப புலம்பிட்டு இருக்காங்களாம்.
நன்றி: தினமலர்.
இதுதான் தேமுதிக மற்றும் அதன் தலைவர் விசயகாந்தின் தன்மை, கட்சியினர் மேல் வைத்துள்ள நம்பிக்கை என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். கட்சிக்கு செலவு செய்ய மனமில்லாத கட்சித் தலைவர் விசயகாந்த். கட்சியில இருக்குறவுங்கள 'ஆண்டி'யாக்காமல் விடமாட்டார் போலருக்கு. என்னும் எவ்ளோ நாளைக்குன்னு பாக்கலாம்.
இப்படியெல்லாம் செஞ்சு கட்சிகாரங்கள கஷ்டபடுத்தி டெல்லில போயி டிராமா போடனுமா? ஐயோ..ஐயோ...இன்னும் இவரை சில ஜனங்க நம்பிக்கிட்டு இருக்குறதுதான் கொடுமையிலும் கொடுமை.
"ஆழம் அறியாமல் காலை விடாதே" - இது மாவட்ட செயலர்களுக்கு.
"தன வினை தன்னைச் சுடும்" - இது விசயகாந்துக்கு.
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" - இது மக்களாகிய நமக்கு.
லேட்டஸ்ட் நியூஸ்:
விஜயகாந்த் டெல்லி செல்லும் நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி, முதல்வர் பதவி, ஆளுக்குப் பாதி தொகுதிகள் என்ற ஃபார்முலாவுக்கும் அவர் தயாராகிவிட்டாராம். ஏற்கெனவே, இதுபற்றி டெல்லியில் சுதீஷ் பேசியிருக்கிறாராம். விரைவில் இருதரப்பு தலைவர்களும் பேசுவார்களாம். போராட்டம் நடத்தப் போகும் தலைநகர் டெல்லியிலும் பெண் குழந்தைகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறாராம் கேப்டன். அங்கேயும்  50 குழந்தைகளுக்கான தொகை டெபாசிட் செய்யப்படவுள்ளதாம்.
nandri:kumudam.
இப்போ உங்களுக்கு தெரிஞ்சதா இவர் ஏன் டெல்லில போய் டிராமா போடப் போறாருன்னு.
உங்களால் முடிந்தால் உங்களுக்கு தெரிஞ்சவுங்க,அக்கம்பக்கத்துல இருக்குறவங்ககிட்ட எல்லாம் இவரைப் பத்தின உண்மையை  கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.
"பேராசை பேரு நஷ்டம்" - இதை விஷகாந்த் புரிந்துகொள்ளும்போது பெருங்கஷ்டமாக இல்லாமல் இருந்தால் சரி.

Posted by போவாஸ் | at 10:42 PM | 0 கருத்துக்கள்

நகைச்சுவை துணுக்குகள் - சர்தார்ஜி ஜோக்ஸ் - 4

கொலஸ்ட்ரால் எங்கே?
ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், "அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."  
பந்தயம் கட்டிய சர்தார் 
சோகமே உருவாக உட்கார்ந்திருந்த பந்தா சிங்கிடம் அவருடைய நன்பர் அருகில் வந்தமர்ந்து, ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டார். அதற்க்கு பந்தா சிங், தான் பந்தயத்தில் ரூ.800 தோற்று விட்டதாக சொன்னார். நன்பர் எப்படி 800 ரூபாயை தொலைத்தாய் என்றதற்க்கு சர்தார் பந்தா சிங் சொன்னார், "நேற்று நடந்த இந்திய-இலங்கை கிரிகெட் மேட்ச்சில் இந்தியா ஜெயிக்கும் என ரூபாய் 400 பந்தயம் கட்டினேன், ஆனால் இந்தியா தோற்று போய் விட்டது.." என்றார். நன்பர், "சரி மீதி ரூ.400 எப்படி தொலைந்தது?" என்றதற்க்கு பந்தா சிங் சொன்னார், "அன்றிரவு பார்த்த ஹை-லைட்டிலும் பந்தயம் கட்டினேனே.." என்றார்.  
எய்ட்ஸ் பயமா? 
ஒரு முறை சர்தாரும் நண்பர்களும் (சர்தாரல்லாத) இரவில் தெரு வழியே வந்துக் கொண்டிருந்த போது ஒரு வழிபறியிடம் மாட்டிக் கொண்டனர். வழிபறி தன் கையில் டாக்டர் போடும் ஊசி (சிரின்ச்) ஒன்றை வைத்துக் கொண்டு, அதில் எயிட்ஸ் நோய் உள்ள இரத்தம் உள்ளதாகவும், தன்னிடம் உள்ளதை தர மறுப்பவர்களை குத்த போவதாகவும் மிரட்டினான். பயந்து போன எல்லோரும் தன்னிடமிருந்த பணம், கடிகாரம், மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கலட்டி கொடுத்து விட்டனர். ஆனால் நம் சர்தார் மட்டும் தைரியமாக, எதையும் கொடுக்க மறுத்து விட்டார். கோபமான வழிபறி ஊசியால் சர்தார் கையில் குத்தி விட்டு ஓடிவிட்டான். சர்தார் கவலை படவில்லை. மற்றவர்கள் பதறி போய், சர்தாரிடம் "ஏன் இப்படி செய்தாய், இப்ப உனக்கு எயிட்ஸ் வந்து விடுமே "என்று கேட்டதற்கக்கு சர்தார் கூலாக சொன்னார், "எனக்கு அதுலாம் வராது ஏன்னா நான்தான் காண்டம் அணிந்திருக்கேனே" என்றார்.  
ஸ்மைல் ப்ளீஸ் 
ஒரு சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர் "ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?" என்று மற்றொருவரைக் கேட்கிறார். "பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?".  
நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி 
சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”. யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், “பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.  
கண்ணாடிக் கடையில் சர்தார்ஜி 
சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க... கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது.. சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.

Posted by போவாஸ் | at 5:54 PM | 0 கருத்துக்கள்

சத்தம் காட்டாமல் 'ஜகா' வாங்கிய விஜயகாந்த்



அரசியல் கட்சி என்பது தேர்தலில் போட்டியிட்டே ஆகவேண்டும் என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம். இப்படி சொன்னவர் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்.
சமீபத்தில் நடந்த ஐந்து சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் தே.மு.தி.க., அத்தேர்தலை எதிர்க் கொள் கிறது என்பதற்காகத் தான் விஜயகாந்த் இப்படி அறிக்கை விட்டார். 
தற்போது தமிழகத்தில் காலியாகவுள்ள 603 உள்ளாட்சி இடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 7ம் தேதி நடக்கிறது. திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளின் இரு கவுன்சிலர் பதவிகளுக்கும், ராஜபாளையத்தில் ஒட்டுமொத்த நகராட்சிக்கும் சேர்த்து தான் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் புறக்கணிப்பு நிலை எடுத்த அ.தி.மு.க., தனது கூட் டணி கட்சிகளை புறந்தள்ளிவிட்டு உள்ளாட்சி இடைத் தேர்தலை சந்திக்கிறது. ஆனால் தேர்தலை சந்தித்தே தீரவேண் டும் என்று கூறிய தே.மு.தி.க., தலைமை சத்தமின்றி உள்ளாட்சி இடைத்தேர்தலை புறக்கணித்து "ஜகா' வாங்கியுள் ளது. 
போட்டியா, புறக்கணிப்பா, அதற்கான காரணமென்ன என்பதையும் அக்கட்சி தலைமை இதுவரை வெளியிடவில்லை
இது அக்கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி அரசியல் மட்டத்திலும் பெரும் பரபரப் பாக பேசப்பட்டு வருகிறது. தே.மு.தி.க.,வின் இடைத் தேர்தல் புறக்கணிப்பிற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கட்சியினரிடையே நிலவும் கோஷ்டி பூசல் அதற்கு முதல் காரணமாக சொல்லப்படுகிறது.
தேர்தலில் போட்டியிட்டால் அதற்கு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பணத்தை செலவழிக்க வேண்டும்.ஏற்கனவே பல்வேறு தேர்தலுக்கு பணத்தை செலவழித்து நொந்து "நூடுல்ஸ்' ஆகியுள்ள அவர்கள் ஒதுங்கிக் கொள்வர் அல்லது வேறு கட்சிகளுக்கு ஓடிவிடுவர் என்பதை கருத்தில் கொண்டே தே.மு.தி.க. தலைமை இத் தேர்தலை புறக்கணித் துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதுமட்டுமின்றி கட்சித் தலைமைக்கும் இத்தேர்தலால் செலவு ஏற்படும்; பிரசாரத்திற்கு செல்ல வேண்டிய நிர் பந்தமும் ஏற்படும். இதுவும் தே.மு.தி.க., தேர்தல் புறக்கணிப்பிற்கு காரணம் என்று விவரம் அறிந்த சிலர் அறிக்கை வாசிக்கன்றனர்.
தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிய அக்கட்சி நிர்வாகிகள் சிலர், கட்சி அலுவலகத்திற்கு வந்து விஜயகாந்தை சந்தித்து பேசினர். அப்போது விஜயகாந்த், "தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் தேர்தலில் சுயேச்சையாக நீங்கள் போட்டியிடுங்கள்; கட்சி சார்பில் போட்டியிட வேண்டாம்' என கூறி அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது.

nandri : dinamalar.

Posted by போவாஸ் | at 12:57 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails