முஸ்லிம்களையும், கலாச்சாரத்தையும் அவமதித்த விஜயகாந்த்


பொதுவாகவே அரசியலில் இருப்பவர்கள் ரம்ஜான் நோன்பு மாதங்களில் இது போன்ற இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதும் நடப்பதுதான்.

நம்ம கேப்டன் விஜயகாந்த் எப்பொழுதுமே கொஞ்சம் வித்தியாசம்.

ஆசை இல்லாத மனிதன் எவருமில்லை. ஆனால் பேராசை பேரு நஷ்டத்தை ஏற்படுத்தும். நம்ம விஜயகாந்த் இரண்டாவது ரகம்.

விஜயகாந்துக்கு இருக்குற சில் குணங்கள் என்னன்னா, தன்னைப் பற்றி, பத்திரிகையில் போட்டோ வரணும், செய்தி வரணும், அறிக்கைதரனும், லூசுத் தனமான கேள்விகள் கேட்டு அப்புறம் பதில் சொல்ல முடியாமல் எஸ்கேப் ஆகணும் இப்படி நிறைய இருக்கு.

எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தன் எண்ணங்களைப் பிரதிபலிக்கச் செய்வார். உப்பு சப்பு இல்லாத விஷயத்தையும் அரசியல் ஆக்க முயற்சிகள் செய்வார்.

சரி இது தெரிஞ்சதுதானே, இப்ப என்ன சொல்ல வரன்னு கேக்குறிங்களா?

கீழ இருக்குற படத்தைப் பாருங்க.

நேற்று நடந்த ஒரு இப்தார் நோன்பு விருந்தில் கலந்துகிட்ட போட்டோ.
தினமலர் இணையதளத்துல வெளியாகிவுள்ளது.

தொண்டர்கள் சூழ ஒய்யாரமாக உக்காந்து கஞ்சி குடிப்பது போல (ஒரு வேளை குடித்து இருக்கலாம், போடோவைப் பார்த்தல் குடிப்பது போல தெரியவில்லை)
போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

சுற்றி நிற்கும் எல்லோரும் தங்கள் தலையில் முஸ்லீம் மதத்திற்கும், மதிப்பிற்கும், அடையாளத்திற்கும், கலாச்சாரத்திகும் உரிய குல்லா வைத்துள்ளார்கள்.

ஆனால், விஜயகாந்தின் தலையைப் பாருங்கள், என்ன இருக்கிறது என்று ?.

இது எம்.ஜி.ஆர் அணியும் தொப்பியைப் போல் இருக்கிறது.
இவர் இப்தார் விருந்துக்கு போனாரா அல்லது நான் கருப்பு எம்.ஜி.ஆர்னு தலைல குல்லா வச்சிக்கிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்க போனாரா.

இவரது தொண்டர்கள் அழைப்பது போல கருப்பு எம்.ஜி.ஆரவே இருக்கட்டும்...அதற்காக இப்படி ஒரு வேஷம் கட்டுவதா ?

பின்னால் பாருங்கள்...தே.மு.தி. கட்சிக் கொடியினை.

இது என்ன முஸ்லிம்களின் இப்தார் விருந்தா அல்லது கட்சியை வளர்க்க, மக்கள் மனதில் இடம்பிடிக்க நாடக மேடையா ?

ஒன்று முஸ்லீம் நண்பர்களைப் போன்று குல்லா வைத்திருக்கலாம், அல்லது வைக்காமலேயே இருந்திருக்கலாம்.

இவர் முஸ்லீம் நண்பர்களையும், கட்சியினரையும், மக்களையும், இனத்தையும் தகுந்த மரியாதையுடன் மதிக்கிறார் என்றால் இப்படி ஒரு குல்லாவைத் தன் தலையில் வைத்திருப்பாரா ?

முஸ்லீம் மதத்திற்கும், இனத்திற்கும் விஜயகாந்த் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா?

இந்து மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் விட மிக மிக கட்டு கோப்பான மதம் முஸ்லீம் மதம் என்று படித்திருக்கிறோம். அவர்கள் தங்களது கொள்கையிலும், கலாச்சார பழக்கவழக்கங்களையும் மிக நேர்த்தியாக, பயபக்தியுடன் கண்டிப்புடன் பின்பற்றி வருகிறவர்கள்.

அப்படிப்பட்ட முஸ்லீம் மதத்தின் இப்தார் விருந்துக்கு சென்ற விஜயகாந்த், இது போன்று வழக்கத்திற்கு மாறாக நடப்பது சரிதானா ?

இந்த லட்சணத்தில் சென்ற இதை போல நடந்த ஒரு இப்தார் நோன்பு விருந்தில் விஜயகாந்துக்கு விஜய்கான் என புதிய பெயர் இப்தார் விருந்தில் முஸ்லிம்கள் புதிய ஒஎயர் வைத்தனர். (sep 30 2008, triplicane, chennai)
சரி என்றால், முஸ்லீம் மக்கள் அனைவரும் விதம் விதமாக, கலர் கலராக குல்லா என்ற தொப்பியை வைத்துக் கொள்ளலாமே. முடியுமா ?

இதில் வெக்கக் கேடான விஷயம் என்ன வென்றால், இவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் எல்லாம், கொஞ்சம் கூட கவலைப்படாமல், கலாச்சாரத்தின் மேல் அக்கறையில்லாமல், விஜயகாந்துடன் போடோவிற்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை என்ன வென்று சொல்வது.

ஒரு வேளை...இந்த முஸ்லீம் நண்பர்கள் தாங்கள் வணங்கும், வழிபடும் 'அல்லா', விஜயகாந்தாக மறுவடிவம் எடுத்து வந்துள்ளார் என்று நினைக்கிறார்களோ என்னவோ.

இது உண்மை முஸ்லிம்களின் இப்தார் விருந்தல்ல...விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்று காட்டிக் கொள்ள தன் சகாக்களுடன் நடத்திய நாடக மேடை என்றே சொல்ல வேண்டும்.

விஜயகாந்த் நல்ல நடிகர் என்று அவருடன் இருப்பவர்களுக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.

சொல்லிருக்கும், செயல் இருக்காது - இதுதான் விஜயகாந்த்.

"சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை" என்பது பழமொழி.

Posted by போவாஸ் | at 11:24 PM | 5 கருத்துக்கள்

மீன் பிடிக்க வரட்டும் ராகுல் காந்தி ?


எம்மக்களுடன்


மீன்
பிடிக்க


வருவாரா


ராகுல் காந்தி ?



தன்னை சாதாரண மனிதர், எளிமையான மனிதர் என்று காட்டிக் கொள்ளும் ராகுல் காந்தியே எம் மக்களுடன் நீ ஒரு முறை மீன் பிடிக்க எங்களுடன் கடலுக்கு வருவாயா ?

வயதானவர்களைக் கட்டிப் பிடிப்பது, குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது, ஏழை எளியோரின் வீட்டில் தங்குவது, குடிசைகளில் உறங்குவது,சிக்கன நடவடிக்கை ரெயிலில் செல்வது, விமானத்தில் பொருளாதார வகுப்பில் செல்வது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

உயிரைப் பணயம் வைத்து, எந்நேரம் என்ன ஆகுமோ என்ற அச்சத்துடன், பயத்துடன் கலக்கத்துடன் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் எம் மீனவ மக்கள் படும் பாடு உனக்கு தெரியவில்லையா?

இளைஞர்கள் கட்சிக்கு வேண்டும், நாட்டுக்கு வேண்டும் என்று ஆசைப் படும் ராகுல் காந்தியே, கடலில் இலங்கைக் கடற்படையிடம் அடியும் உதையும் வாங்கி வந்து இன்று சாப்பிடவதற்கு கஷ்டப்படும் எம் மீனவ இளைஞர் மக்கள் உனக்கு இளைஞராகத் தெரியவில்லையா?

உண்மையில் மக்களுக்காக வாழும் ஒரு சாதாரண மனிதன் என்றால், எங்களுடன் ஒரு முறை கடலுக்குள் மீன் பிடிக்க வரட்டும்.

தூண்டில் போட வேண்டாம், வலை வீசி மீன் படிக்க வேண்டாம். எந்த வேலையும் செய்ய வேண்டாம். எங்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் போன்று வரட்டும். அப்போது தெரியும் இவருக்கு இலங்கை கடற்படையினால் படும் பாடுகளும், வேதனைகளும்.

எம்மக்களுடன் சேர்ந்து இவரும் அடிபட்டால்தான் தெரியும், அடியின் வலியும், வேதனையும்.

இதுவே குஜராத்திலும், கொல்கத்தாவிலும் உள்ள மீனவர்கள் தாக்கப்பட்டால், காயப்பட்டால் பொறுத்துக் கொள்வீரோ ?
பதறி
அடித்து ஓடி இருக்க மாட்டீரா?
பக்கம்
பக்கமாய் அறிக்கைகளும் , கண்டங்களும் விட்டிருக்க மாட்டீரா?
தமிழர்களை
புறக்கணிக்கும் வடநாட்டுச் செய்தி நிறுவனங்களும் ஊதி ஊதி பெரிதாக்கியிருக்காதா?

எண்ணற்ற வேதனைகளுடன் எம்மக்கள் இருக்கின்றனர்.
ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம் போதாதென்று தமிழக மக்களுக்கும் துரோகம் செய்ய துணிந்துவிட்டீரா.

எல்லாவற்றிற்கும் ஓர் எல்லையும் உண்டு, முடிவும் உண்டு. மறந்து விட வேண்டாம்.
காலங்கள் மாறும், காட்சிகளும் மாறும். நினைவில் கொள்க.

இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டுள்ள 5 விசைப் படகுகளையும், 21 மீனவர்களையும் எப்பொழுது மீட்கப் போகிறீர்கள்.?

இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டுவரும் இத்தகைய வன்முறைகளுக்கு இனியாவது ஒரு முடிவு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமா?

Posted by போவாஸ் | at 4:56 PM | 1 கருத்துக்கள்

ஆங்கிலத்தில் அசத்தப் போறாங்க அரசுப் பள்ளி மாணவர்கள்


பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் ஆங்கிலப் பயிற்சி, மாணவர்களிடம் எளிய ஆங்கிலத்தில் தடை இல்லாமல் பேசும் தன்னம்பிக்கையை ஆசிரியர்களுக்கு அளிக்கும். ஆசிரியர்கள் பேசும் எளிமையான ஆங்கிலம், மாணவர்களையும் பேச வைக்கும்” என்று பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் தாரா வர்மா மற்றும் தீபாலி ஆகியோர் தெரிவித்தனர்.

அரசுப் பள்ளி வகுப்பறைகளில் ஆங்கிலத்தில் பாடம் நடத்துவது தொடர்பாக, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். முதல்கட்ட பயிற்சி ஜூலையில் காருண்யா பல்கலையில் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சி, கோவையில் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதில் கோவை, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 83 ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சி பற்றி பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் தாரா வர்மா மற்றும் தீபாலி ஆகியோர் கூறியதாவது:

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை துவங்குவதற்கு முன், முதலில் தமிழகம் முழுவதும் உள்ள சில அரசுப் பள்ளிகளை நேரில் பார்வையிட்டோம். அங்கு ஆங்கிலம் தொடர்பான ஆசிரியர்கள், மாணவர்களின் தேவைகள் பற்றி ஆய்வு நடத்தினோம். ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மாணவர்களிடம் பேசியதில் எந்த மாதிரி பயிற்சி தேவை என்பதை அறிய முடிந்தது. அதற்கேற்ப பயிற்சிக்கான பாடத் திட்டத்தை வடிவமைத்தோம். இதுவரை டில்லி, கேரளாவில் பயிற்சி முடிந்துள்ளது. தமிழக ஆசிரியர்கள் நன்கு ஒத்துழைக்கின்றனர்.

ஒவ்வொரு மாநில பள்ளிகளின் தேவைகளும், பாடத் திட்டங்களும் வெவ்வேறானவை என்பதால் அதற்கேற்ப பயிற்சி அளிக்கிறோம். வகுப்பறைகளில் மாணவர்கள் புரிந்து கொள்ளும்படியான எளிமையான ஆங்கிலத்தில் பேசினால் போதும் என்பதால், வகுப்பறைக்கென தனி ஆங்கிலம் வடிவமைத்து பயிற்சி அளித்து வருகிறோம். எளிய முறை ஆங்கிலத்தில் ஆசிரியர்களை பேச வைப்பதன் மூலம் அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுதான் இந்த பயிற்சித் திட்டத்தின் நோக்கம்.

தன்னம்பிக்கையுடன் ஆசிரியர் பேசும் எளிய ஆங்கிலத்தை பின்பற்றி, மாணவர்களும் தானாகவே பேச துவங்கி விடுவர். ஆங்கிலத்தில் கதை சொல்வது, கேள்வி கேட்பது, கட்டளையிடுவது, வகுப்பறை நிர்வாகம், ஒரு பாடத்தை துவங்குவதும் முடிப்பதும் எப்படி என்பதை பற்றி சுவாரஸ்யமான சிறு விளையாட்டுகளின் வாயிலாக கற்பிப்பதால் ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனர் கவிதா என்பவர் கூறுகையில், “இந்த பயிற்சியில் பங்கேற்ற பின் பயம், தயக்கம், வெட்கம் போய் விட்டது. வகுப்பறை மட்டுமல்லாமல், எந்த மாதிரி சூழலையும் சந்திக்கும் தைரியம் கிடைத்துள்ளது,” என்றார்.

ஈரோட்டை சேர்ந்த பாரதி என்பவர் கூறுகையில், “அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் தெரியும் என்றாலும் இதுவரை ஊக்குவிப்போ, பேசுவதற்கான வாய்ப்போ கிடைக்கவில்லை. பயிற்சியில் குழு கலந்தாலோசனை பயனுள்ளதாக உள்ளது. இதனால் பேசுவதில் தவறுகள் இருந்தாலும் உடனுக்குடன் சரி செய்து கொள்ள முடிகிறது,” என்றார்.

பயிற்சி பற்றி அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் கூறுகையில், “நான்கு அணிகளாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 3,520 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் இத்திட்டத்தின் மூலம், வரும் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தானாக அதிகரித்து விடும்,” என்றார். இப்பயிற்சி, செப்., 26ல் நிறைவு பெறுகிறது.

நன்றி:கல்விமலர்

நல்ல முயற்சி..

பாராட்டுவோம்
...

வரவேற்போம்
....

Posted by போவாஸ் | at 3:33 PM | 0 கருத்துக்கள்

டி‌வி‌யி‌ல் ஆபாச ‌நிகழ்ச்சிகள் - குடும்பங்கள் சீர்குலைய போவது நிச்சயம்


தொலைக்காட்சி‌‌‌ அலைவரிசைகளில் நள்ளிரவு நேரத்தில் ஆபாச நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப அனுமதி அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

த்திய தகவல் லிபரப்புத் துறை அமைச்சர் ம்பிகா சோனி, தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு என புதியவிதிமுறைகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி வகுத்துள்ள 2 யோசனைகள், மிகவும் முக்கியமானவை. குறிப்பிட்ட சேனல்களை, தங்கள் குழந்தைகள் பார்க்கக்கூடாது என்று பெற்றோர் நினைத்தால், அத்தகைய சேனல்களை லாக் செய்யும் வசதி இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

தொலைக்காட்சிகளில், நள்ளிரவு நேரத்தில், வயது வந்தோருக்கான ஆபாச நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதிக்கலாம் என்றும் அவர் கருதுகிறார். இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை, இத்தகைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி கொடுக்கலாம் என்பது அவரது யோசனை.

பல்வேறு வயதுள்ள நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில், ஒரே ஒருதொலைக்காட்சி பெட்டி மட்டுமே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஆபாச நிகழ்ச்சிகளுக்கு தனியாக நேரம் ஒதுக்குவது, ல்லவிஷயமாக இருக்கும் ன்றுஅம்பிகா சோனி கருதுகிறார்.

வெளிநாடுகளில் பின்பற்றப்படும் இந்த நடைமுறை, இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அம்பிகா சோனி விரும்புகிறார். இவை பற்றிதொலைக்காட்சி சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கருத்து ஒற்றுமை ஏற்பட சிறிது காலம் ஆகும் ன்று அவர்கள் கூறினர்.

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வெளிநாடுகளில் நல்ல விஷயம் பலவற்றுக்கு பின்பற்றப்படும் நடைமுறை, இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினால் சந்தோசப்படலாம். அதை விட்டு விட்டு ஆபாச நிகழ்ச்சிகளுக்கு வெளிநாடுகளில் இருக்கும் நடைமுறை போல பின்பற்ற, அம்பிகா சோனி விரும்பிகிறாராம்.

இருக்குற கலாச்சார சீர்கேடுகள் போதாதென்று மத்திய அரசே தகுந்த அதிகாரத்துடன் கலாச்சாரசீர்கேடுக்கு வழி வகுத்துக் கொடுக்கிறது.

இந்தியா மேலும் மேலும் கீழே போவதற்கு நல்ல ஒரு பாதையை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

இப்பவே பாலீயல் ரீதியாக பலபல பிரச்சனைகள் நாட்டில் எழுகின்றன.

குடும்ப
ங்கள் சீர்குலைய போவது நிச்சயம்.

Posted by போவாஸ் | at 1:56 PM | 0 கருத்துக்கள்

நதிநீர் இணைப்பு பற்றிய ராகுல் கருத்து சரியே - சொல்கிறார் அதிமேதாவி இளங்கோவன்


நதிநீர் இணைப்பு தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் சரியானவைதான் என்றார் மத்திய முன்னாள் அமைச்சர் .வி.கே.எஸ்.இளங்கோவன்.


தீவிரவாதத்தால்
உலகில் எண்ணற்ற அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வகையிலும் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. காஷ்மீரில் தீவிரவாதிகளால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும், அதில் ஈடுபடுவோரையும் ஆதரிக்காது.

தேசிய அளவில் நதிகளை இணைப்பதால் சுற்றுச்சூழலுக்கும், இயற்கை வளங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற ராகுல் காந்தியின் கருத்து ஏற்கத்தக்கதே.

ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகளை அகலப்படுத்தும்போதே ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. லட்சக்கணக்கான கிலோமீட்டர் தூரத்துக்கு நதிகளை இணைத்தால் எத்தனை கிராமங்கள், நகரங்கள், இயற்கை வளம் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். எனவே நதிநீர் இணைப்பு குறித்து சிந்தித்து, விவாதித்து, அனைவரும் ஏற்க கூடிய வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரசுக்கு அதிக அக்கறை உள்ளது. அங்கு நிலவும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசும் முயற்சித்து வருகிறது. அதேசமயம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான பிரபாகரனின் துதிபாடுவதையோ, அவரது படத்துக்கு பூஜைகள் செய்வதையோ ஏற்க முடியாது என்றார்.


சோனியா காந்தி குடும்பத்தை துதி பாடிக் கொண்டு தன்னயும், தன் குடும்பத்தினரையும் வளர்த்துக்கொள்வதை மட்டுமே இலட்சியமாக கொண்டுள்ள இளங்கோவன் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் பற்றியோ, ஈழத்தமிழரைப்பற்றியோ, பிரபாகரனைப்பற்றியோ பேசுவதற்கு எந்த ஒரு சராசரி தகுதியும் இல்லை.

சோனியா குடும்பத்தை துதி பாடிக் கொண்டிருக்கும் இளங்கோவன், தன் இருப்பிடத்தை
நிரந்தரமாக தில்லியில் மாற்றிக் கொள்ளலாமே. ஜால்ரா போட வசதிகள், வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

நதிகளை இணைப்பதில் எந்த தவறும் இல்லை. அது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும். முன்னாள் பிரதமர் நேரு பல அணைகளை கட்டினார். மேலும் அந்த அணைகளே நவீன இந்தியாவின் தூண்கள் என்று கூறினார்.

அமெரிக்காவில் கலிபோர்னியாவில், ஐரோப்பாவில், ஆஸ்திரேலியாவில் என்று உலகம் எங்கும் கடலுக்கு செல்லும் நீரை தேக்கியும், அதை பயனுள்ள வழிகளில் திருப்பியும் விவசாயத்தையும் அதன் மூலம் பொருளாதாரத்தையும் உயர்த்தி உள்ளார்கள்.

உலகில் அதிகம் மழை ப்பையும் இடமான, ஒரிசா மாநிலத்தில் இருக்கும் சிரபுஞ்சியிலையே தண்ணீர் பஞ்சமாம். காரணம் என்ன ?. பெய்யும் மழை நீரை முறையான வழியில் சேமித்திட வழியில்லை.

இயற்கையுடன் ஒத்து வாழ ஆசைப்படும் இளங்கோவன் ஆதிவாசியைப் போல இல்லை தலைகளை கட்டிக்கிட்டு திரியலாமே.

இவரை போன்ற கருப்பு ஆடுகள் திரிந்து கொண்டும், வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டும் இருப்பதனால் தான் தமிழர்களை யாரும் மதிப்பது இல்லை.

இவரையெல்லாம் ஆப்பிரிக்காவில இருக்குற நைஜீரியா நாட்டுல தங்க சுரங்கத்துல தங்கம் எடுக்குற வேலைக்கு அனுப்பனும்.

கண்டிப்பாக இவர் இனி அடுத்து வரும் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற வாய்ப்பேயில்லை. அந்த அளவுக்கு பணத்திற்கு மேல் வெறுப்பை சம்பாதித்து வைத்து இருக்கிறார்.

இவரது தேர்தல் தோல்வி, வரலாறில் இடம்பெறும் அளவுக்கு சாதனை தோல்வியாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

Posted by போவாஸ் | at 11:49 AM | 2 கருத்துக்கள்

Related Posts with Thumbnails