நக்கீரனே........செய்திகளை முந்தித் தரும் அவசரத்தில் புள்ளி விவரத்தை கோட்டை விடலாமா?

நக்கீரனே........ஏன் இந்த அவசரம் ?


சற்று முன் நக்கீரன் இணையதளத்தில் வந்த செய்தி :

இடைத்தேர்தல்: 60 சதவீத ஓட்டுப்பதிவு.

இதை tamilish இணையதளத்தில் இடுக்கயாகவும் போட்டு விட்டார்கள்.

5 நிமிட இடைவெளியில் பார்த்தால் ?

இடைத்தேர்தல்: 70 சதவீத ஓட்டுப்பதிவு என்று இருக்கிறது.

ஏற்கனவே வெளியிட்ட இடுக்கையின் தலைப்பையும், செய்தியையும் மாற்றினர்

1 மணி நேரத்திற்கு பின்னர் இப்பொழுது நக்கீரன் இணையத்தில் ர்த்தால்....

இடைத்தேர்தல்: 66 சதவீத ஓட்டுப்பதிவு என்று இருக்கிறது.


செய்திகளை முந்தித் தரும் அவசரத்தில் புள்ளி விவரத்தை கோட்டை விடலாமா?

அவசர செய்திகளை தரும் பட்சத்தில் சில தவறுகள் நேரலாம்,

அதுக்காக இப்படியா ?

ஒரே செய்திக்கு தொடர்புடைய புள்ளி விவரங்கள் மூன்று முறை மாறி இருக்கிறது.
ஏன் இந்த அவசரம், ஏன் இந்த வேறுபாடு ?

இதைக் குறையாக சொல்லவில்லை.....நக்கீரனின் தீவிர வாசகன் என்ற வகையில் சொல்கிறேன்.

Posted by போவாஸ் | at 8:39 PM | 0 கருத்துக்கள்

மலம் கழிக்கும் போராட்டம் !.

திருச்சி துவாக்குடியில் கழிப்பிடம் வசதி கோரி நகராட்சி முன்

மலம் கழிக்கும் போராட்டம் :

திருச்சி: "துவாக்குடிமலை, அண்ணாதுரைவளைவு பகுதியில் உடனடியாக பொதுக்கழிப்பிடம், சாக்கடை வசதி உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும்; இல்லையெனில், துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் நடத்தப்படும்,'என அப்பகுதி பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அம்மனுவில் கூறியிருப்பதாவது: துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலனோர் கல்லுடைக்கும் வேலை மற்றும் கூலி வேலைக்கு செல்லும் மக்கள். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லை. கருவேற்காடும், ஜி.பி.டி., அரசு கலைக்கல்லூரியின் புறம்போக்கு மைதானமும் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.


பெண்கள் படும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. காட்டுக்கு செல்லும் போது குடிகாரர்களாலும், பொறுக்கிகளாலும் அவமானத்தை சந்திக்கின்றனர். கல்லூரி நிர்வாகம் தனது இடத்துக்குள் பெண்கள் மலம் கழிக்க வரக்கூ�டது என சுவர் எழுப்பியுள்ளது.


ஆனால், வேறு வழியின்றி பெண்கள் சுவரைத் தாண்டி சென்று கால் ஓடித்துக் கொள்வது அன்றாட செயலாகி விட்டது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கூட்டியே கழிப்பிடம் பயன்படுத்த முடியாமலும், சில காணாமல் போயும் உள்ளன.


இந்த பகுதியில் தொடரும் கொடுமைகளால், கர்ப்பிணி பெண்கள், இளம்பெண்கள், வயதான தாய்மார்கள் நாள்தோறும் பாதிக்கப்படுகின்றனர். மறுபுறம் ஊருக்கு நடுவே உயிரை காவு வாங்கும் பாறைக்குழிகள் அதிகமாக காணப்படுகின்றன. இடறி விழுந்து பலர் இறந்துள்ளனர்.


இதற்கு தடுப்பு சுவர் எழுப்பவும், சாக்கடை வசதி, குப்பைகளை முறையாக அள்ளுவது, குடிதண்ணீர் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பலமுறை போராடி உள்ளோம். ஆனால், துவாக்குடி டவுன் பஞ்சாயத்தாக இருந்த காலம் முதல் இன்று நகராட்சி ஆகியும் எந்த மாற்றமும் இல்லை.


கடந்த ஜனவரி 19ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இம்மனுவை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில், துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்


இதைப் போன்ற சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 26ந் தேதி குடியரசு தினத்தன்று மேட்டுப்பாளயம் நகராட்சியில் நடக்க இருந்தது.


ஆயினும் போலீசாரின் நடவடிக்கையால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.


ஐந்துக்கும், பத்துக்கும், குவாட்டருக்கும். கோழி பிரியாணிக்கும் ஆசைப்படுகிறவர்கள் இருக்கும் வரை, மக்கள் பிரச்சனைகளை மறந்திட்ட அரசியல் வியாதிகள் இருக்கும் வரை, வாங்கும் சம்பளத்துக்கு விசுவாசமில்லாமல் வேலை பார்க்கும் அரசாங்க ஊழியர்கள் இருக்கும் வரை, எது நடந்தாலும் எனக்கென்ன என்று நினைக்கும், ஒரு விழிப்புனர்வில்லாத மக்கள் இருக்கும் வரை..... இத்தகைய போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.


இருந்தாலும் இதுமாதிரியான போராட்டங்கள் அதிக கவனத்தை ஈர்க்கும் என்பது உண்மையே.


நினைத்துப் பாருங்கள்...கும்பலாக ஒரு 100 பேர் மொத்தமாக ஒரு பொது இடத்தில் , அதுவும் நகராட்சி அலவலகம் இருக்கும் இடத்தில் மலம் கழித்தால் எப்படி இருக்கும்?.


ஒரு அசிங்கமான, அருவருப்பான விஷயம். இந்த அசிங்கத்தையும், அருவருப்பையும் விட இந்த மக்கள் படும், கடும் வேதனைகளின் வெளிப்பாடே இத்தகைய போராட்டத்திகு காரணமாய் உள்ளது.


வழி ஏற்படுத்தி கொடுக்குமா நம் தமிழக அரசு.....???

Posted by போவாஸ் | at 3:25 PM | 0 கருத்துக்கள்

முல்லா ஸ்பெஷல் - II

முல்லா- ஒரு பெண்-நூடுல்ஸ்

முல்லா நஸ்ருதீன் பெண்கள் மீது விருப்பம் கொண்டவர் என்று நான் கெள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் அவருக்கு பெண்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமே கிடையாது. எவரும் அவரை விரும்ப மாட்டார்கள். ஒரு பெண்னை அவர் முதன்முறையாக சந்திக்க சென்றார்.அதற்க்கு முன் அவர் தனது நண்பனிடம் கேட்டார்; “ உன்னுடைய ரகசியம் என்ன ? நீ பெண்களுடன் நன்றாக பழகுகிறாயே ? நீ எளிதில் அவர்களை மயக்கிவிடுகிறாய். ஆனால் நான் தோல்வி காண்கிறேன். எனவே எனக்கு எதாவது வழிவகை சொல்லிக்கொடு. நான் முதன்முறையாக ஒரு பெண்னைப் பார்க்க போகிறேன், எனக்குச் சில ரகசியங்களை சொல்லிக்கொடு.

நண்பன் கூறினான் ; “ மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். எப்போது, உணவைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி, தத்துவத்தைப்பற்றிப் பேசு”.

ஏன் உண்வைப்பற்றி பேச வேண்டும்என்று கேட்டார் முல்லா. நண்பன் கூறினான்; “உண்வைப் பற்றி பேசுவதை பெண் விரும்புவதால் நான் அதைப் பற்றிப் பேசுகிறேன் . ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் உணவில் விருப்பம் உண்டு. அவள் குழந்தைக்கு உண்வாகிறாள், மனித சமுதாயம் முழுமைக்கும் அவள் உணவாக இருக்கிறாள். எனவே அடிப்படையில் அவள் உணவில் விருப்பம் கொண்டிருக்கிறாள்”.

சரி குடும்பத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் ?” என்று முல்லா கேட்டார். அவளுடைய குடும்பத்தைப் பற்றி நீ பேசினால் உன்னுடைய உள்நோக்கங்களை நேர்மையானவையாக காட்டும் என்று நண்பன் பதில் கூறினான்.

தத்துவத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் ? “ என்று முல்லா அடுத்த கேள்வியை கேட்டான். அதற்க்கு அந்த நண்பன் பதில் தருகையில் , “ தத்துவத்தைப்பற்றி பேசினால் அந்த பெண் தன்னைப் புத்திசாலியாக கருதிக் கொள்கிறாள் என்றான்

உடனே முல்லா விரைந்து சென்றான். அந்த பெண்னைக் கண்டதும் ஹல்லோ , உணக்கு நூடுல்ஸ்” ( ஒரு வகை உணவு என்றும் முட்டாள் என்றும் பொருள் உண்டு) பிடிக்குமா ? என்று கேட்டான். அதை கேட்டு அவள் அதிர்ச்சி அடைந்தாள், “ இல்லை என்று பதில் கூறினாள் . முல்லா இரண்டாவது கேள்வியைக் கேட்டான் , “ உணக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்களா ? “
இல்லைஎன்றாள். முல்லா ஒரு நிமிடம் திகைத்தான் . தத்துவத்தைப்பற்றி எப்படி ஆரம்பிப்பது? “ என்று யோசித்தான். ஒரு வினாடி கழித்து கேட்டான், “ உணக்கு ஒரு சகோதரன் இருந்தால் அவனுக்கு நூடுல்ஸ்பிடிக்குமா ? “


விண்மீன்கள் பளிச்சிடும் இரவில்….. காதலியுடன்

முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது.

ஆகவே அவர் கண் டாகடரிடம் கேட்டார் : கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள் ? அவளுடைய முகம் கூட எனக்கு சரியாகத் தெர்யவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதிரில் போகக் கூடாது : உடனே என்னை நிராகரித்து விடுவாள் . என்ன செய்யலாம் ? “

டாக்டர் ஆலோசனை கூறினார் : ஒன்று செய்யலாமே! வெகு தொலைவு வரை உம்மால் பார்க்க முடிவது போல் நடியும் . இப்படி அவள் நம்பும்படி ஏதாவது செய்து பாரும் !

முல்லா இதை செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார். ஒரு நாள் பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது . தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு தையல் ஊசியைக் குத்திவிட்டு வந்தார்.நல்ல கண்பார்வை இருந்தால் கூட அவ்வளவு தொலைவில் உள்ள ஊசியை யாராலும் பார்க்க முடியாது.

முல்லா விண்மீ ன்கள் பளிச்ச்சிடும் இரவில் அன்று அந்த மரத்திலிருந்து 100 அடி தொலைவில் தன் காதலியுடன் உட்கார்ந்திருந்தார், திடிமென அவளிடம் அதோ அந்த மரத்தில் பொருப்பில்லாமல் யாரோ ஒரு தையல் ஊசியை குத்தி வைத்திருக்கிறார்களே ! என்று கூறினார்.

அப்பெண் முல்லாவின் கண்பார்வையின் மேல் ஏற்க்னவே சந்தேகம் கொண்டிருந்தாள். அப்படி இருக்க இவ்வளவு தொலைவில் ஒரு ஊசி இருப்பதை அவரால் எப்படி காண முடிந்தது என்று ஐயம் கொண்டாள். மேலும் அவளாலும் அதை பார்க்க முடியவில்லை ; அந்த மரத்தையும் கூட சரியாகப் பார்க்கவில்லை . நஸ்ருதீன் , எனக்கு ஊசி ஒன்றும் தெரியவில்லையே,” என்று கூறினாள்.

முல்லா பந்தாவாக எழுந்து , “ நான் போய் அதை எடுத்து வருகிறேன் “, என்று கூறியபடி நடக்கலானார். ஓன்றிரண்டு அடி வைத்ததுமே தொப்பென்று தரையில் விழுந்தார். ஏனேன்றால் எதிரில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. இது அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.

எந்த வேஷமும் நெடு நேரம் நிலைத்திருக்காது! உங்கள் வேஷத்தை மக்கள் கண்டுபிடிக்க வெகுனநேரமாகாது. ஆனாலும் மரியாதைக்காக நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்று உங்களிடம் அவர்கள் சொல்லுவதில்லை. ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது நாகரீகமாகிவிட்டது

முல்லாவும் இளம் விதவையும்

முல்லாவும் ஒரு இளம் பணக்கார விதவைப் பெண்னும் காதலித்துவந்தார்கள் . தீடிரேன ஒரு நாள் அந்தப்பெண் தான் நடத்திவந்த தொழில் அடைந்த நஷ்டத்தில் அவளிடம் இருந்த செல்வம் அனைத்தையும் இழந்துவிட்டாள் அதை முல்லாவிடம் சொல்லிவிட்டு அன்பே , நான் செல்வம் இழந்து ஏழையாகிவிட்டேன் இப்போதும் என்னை தொடர்ந்து காதலிப்பாயா ? “


முல்லா என்ன இது அசடு மாதிரி பேசிக் கொண்டு! நான் கண்டிப்பாக காதலிக்கிறேன் அனேகமாக இதுவே நான் உண்னை பார்ப்பது கடைசி முறையாக இருக்கக் கூடும் என்ற போதிலும்

ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் என்று சொன்னான்.


முல்லா கம்பீரமானார். எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார்.

இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்குஎன்றான் அவன்

அந்த நாள் நசுருதீனின் பொழுது மன ஆமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பைடவில்லை. இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது என்று முடிவு செய்திருந்தார்.

நேரம் போய் கொண்டே இருந்தது.

அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.

இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.

அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. தனக்கு திருமணம் ஆகவில்லை என்பது

ஒரு பொண்னு கடல்ல முழ்கப்போனபோது

இரு நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்

"
நம்ம முல்லாவிற்க்கு என்னாச்சு ? பார்த்து நம்ப வ்ருசமாச்சு ! "

"
அடப்பாவி ! உனக்குத் தெரியாதா ? அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான் , அத்வும் ஒரு பொண்ணு கடல்ல முழுகப்போன போது காப்பாத்தி கல்யாண்ம் பண்ணிக்கிட்டான் "

"
அப்படியா ? சந்தோசமாத்தான இருக்கான் ? "

"
அது எனக்கு தெரியாது ! ஆனா அவன் கடல்ன்னு சொன்னாவே கடுப்பாய்விடுகிறான்"

என் பரம்பரயே ஒரு கம்யூனிஸ்ட்

ஒரு முறை முல்லா ரஷ்ய அரசின் நீதிமன்றத்தின் முன் ஏதோ குற்றத்திற்க்காக் ஆஜர் படுத்தப்பட்டார்.

நீதிபதி : " நீங்கள் எத்தனை காலமாக கட்சியில் உள்ளீர் ? "

முல்லா " பல ஆண்டுகளாக ?

நீதிபதி : " உமது தந்தை ? "

முல்லா : " அவரும் தான் அவர்மட்டும் அல்ல அவ்ரது தந்தை அவரது தாத்தா அனைவரும் கம்யூனிஸ்ட்கள்தான் "

நீதிபதி : " கவனி ! அப்போது கட்சியே ஆரம்பிக்கபடவில்லை ! "

முல்லா : " அதனால் என்ன ? அவர்கள் அப்போதே திருடிக்கொண்டும் பிச்சையெடுத்து கொண்டும்தான் இருந்தனர்."

Posted by போவாஸ் | at 1:54 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails