பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்

பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்


Woman ambulance driver noble serivce

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஜெனோவா புஷ்பம். இவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார்.

இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கணவர் பெயர் ஜான்சன். ஜெனோவா புஷ்பத்திற்கு சிறுவயதிலேயே வாகனங்களை ஓட்டுவது என்றால் அலாதி பிரியம். இதனால் லைட் வெயிட் டிரைவிங் முடித்த இவர் திருமணத்திற்கு பின் ஹெவி வெயிட் டிரைவிங் பயிற்சிக்கு ஐஆர்சி மூலம் தேர்வு செய்யப்பட்டார்.

பின்பு நெல்லையில் ஹெவி டிரைவிங் பயி்ற்சி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தார். கடந்த 2008ம் ஆண்டு சுகாதார துறையில் டிரைவராக இவருக்கு வேலை கிடைத்தது.

இதையடுத்து ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவராக ஜெனோவா புஷ்பம் பணியாற்றி வருகிறார். உயிர் காக்கும் முக்கிய வாகனமான ஆம்புலன்சில் ஜேனோவா புஷ்பம் டிரைவராக பணியாற்றுவது சவாலுக்குரியதாக உள்ளது.

இதுபற்றி ஜேனோவா கூறும்போது, ஆம்புலன்ஸ் ஓட்டுவது மற்ற வாகனங்களை ஓட்டுவதை விட சவாலானது. சில நிமிடங்கள் தாமதித்தால் கூட உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும். அதோடு நாமும் பாதுகாப்பாக ஆம்புலன்ஸை ஓட்ட வேண்டும்.

ரிஸ்க் அதிகம் என்றாலும் உயிர் காக்கும் பணி என்பதால் இதை மனநிறைவோடு செய்து வருகிறேன். பெண்கள் பலர் கார் ஓட்டுகிறார்கள். ஆனால் அரசு துறை வாகனங்களில் டிரைவராக பெண்கள் இல்லை.

எனவே பெண்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் அவர்களுக்கு உடனடியாக அரசு துறைகளில் வேலை கிடைக்கும். இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.


வாழ்த்துவோம், வணங்குவோம்,

Posted by போவாஸ் | at 9:58 PM | 0 கருத்துக்கள்

ஆங்கிலம், தங்கிலீஷ், தமிழ்..

நாளுக்கு நாள் நம் வாழ்க்கை முறையிலும், பழக்க வழக்கங்கக்ளிலும், பேச்சு வழக்கங்களிலும் பல மாற்றங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றது, பேச்சு வழக்கில் ஆங்கிலம் மிக எளிதாக நமது தமிழ் மொழியில் நுழைந்து, இன்று கிட்டத்தட்ட பல ஆங்கில வார்த்தைகளை நம் தமி அகாராதியில் இடம் பெரும் அளவுக்கு இருக்கின்றது. முதலில் ஆங்கில வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக இருந்தது. பின்னர் ஆங்கில வார்த்தைகள் தமிழுடன் கலந்து தங்லிஷ் ஆனது. இப்போ ஆங்கில வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் என்று சொல்லும் அளவுக்கு மாறிப் போயிருக்கிறது. நம்மோடு மிக அதிகமாகவே ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. நமக்கும் பிடித்து இருக்கின்றது. நாம் அன்றாடம் பேசும், கேட்கும் சில தமிழ் (ஆங்கில) வார்த்தைகள்.

sir, வணக்கம்.

TIme என்னாச்சு ?.

அந்த bus கோயம்பேடு bus stand போகுமா ?.

அக்கா, busTicket இல்லையாம், அதான் Trainbook பண்ணியிருக்காங்களாம்.

மதியம் என்ன lunch ?

Bike எல்லாம் இங்க park பண்ணக்கூடாது.

ஏம்பா, mount road வரை auto வருமா ?.

அம்மா, இந்த saree நல்லா இருக்குல.

ஏங்க, Cutting, shavingக்கு எவ்வளவுங்க ?.

இந்த areasupermarket இருக்கா?

இன்னைக்கு என்ன dress போடுறது?.

புது watchஆ நல்லா இருக்கே ?.

JJ நகர் bus stop வந்தா சொல்லுங்க.

Officeக்கு ஏன் late ?

Morningல இருந்து phone பண்றேன், எடுக்க மாட்டேங்குறானே ?

உங்க வீட்டுல sun tv, விஜய் tv, ராஜ் tv, ஜெயா tv, சுட்டி tv தெரியுமா?

உங்க pant size என்ன ?

evening cinema போகலாமா?

Light , fan எல்லாம் off பண்ணுங்கப்பா, current waste ஆகுதுல.

Room keyய பாத்தீங்களா?

Daily காலைல நான் walking போவேன்.

Sir, sunday hindu paper இருக்கா?

அக்கா, விஜய் tvல 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு'ன்னு ஒரு program வருதே, எப்படி இருக்கு?

10 இட்லி, 2 chicken leg piece parcel கட்டுப்பா.

சாத்துக்குடி juice இருக்கா?

கத்தரிக்கா kilO எவ்வளவு ?

தெரியாம கொட்டிட்டேன் sorry sir.

உங்களுக்கு, sugar, bp normalaதான் இருக்கு.

மொத்தமா வாங்குன எவ்ளோ discount கொடுப்பீங்க ?

Coffee, tea எல்லாம் சீக்கிரம் stop பண்ணனும்

ரொம்ப tiredஆ இருக்கீங்க போல..

இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

ஆனா பாருங்க இந்த வார்த்தைகளை எல்லாம் நம்மளால use பண்ணாம பேச முடியாதுன்கறதுதான் உண்மை....

இதை படிச்சவுங்க யாரும் கோச்சுக்க கூடாது...

சும்மா time passக்கு தெரியாத்தனமா எழுதிட்டேன்....very sorry.

Posted by போவாஸ் | at 4:02 PM | 0 கருத்துக்கள்

மத்திய இணையமைச்சர்கள் புறக்கணிப்பு: டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

12 Aug 09 மத்திய இணையமைச்சர்கள் புறக்கணிப்பு: டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

புதுடெல்லி: நாட்டில் மத்திய இணையமைச்சர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சரவையில் கேபினெட் அமைச்சர்களாக இருக்கும் பலரும் தங்களது துறை தொடர்பான பணிகளை, தாங்களே முழுமையாக எடுத்துக்கொள்வதால், அத்துறை இணையமைச்சர்கள் வேலையின்றி பெயரளவுக்கே இணை அமைச்சர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

தி.மு.க.வைச்சேர்ந்த பழனி மாணிக்கம் மத்திய நிதித்துறை இணையமைச்சராக உள்ளார். அவரிடம் பிரணாப் முகர்ஜி எந்த கோப்புகளையும் அனுப்புவதில்லை என்று கூறப்படுகிறது. இதேபோன்று உள்துறை இணைஅமைச்சர் அஜய்மாக்கான், தகவல் தொழில்நுட்பத்துறை இணைஅமைச்சர் குருதாஸ் காமத் உள்ளிட்ட பெரும்பாலானோர் வேலையின்றி பெயரளவுக்கே அமைச்சர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஜவுளித்துறை அமைச்சரான தயாநிதிமாறன், அத்துறையின் இணையமைச்சர் பனபாக இலட்சுமிக்கு எந்த பொறுப்பையும் வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வேதனை அடைந்துள்ள அவர், காங்கிரஸ் தலைமையிடம் முறையிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் இணைஅமைச்சர்களாக உள்ள 38 பேரில் பெரும்பாலானவர்களின் நிலை இதுதான் என்றும் தெரிகிறது.

இணையமைச்சர்களை காபினெட் அமைச்சர்கள் புறக்கணிப்பது குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்ததாகவும்,

இதையடுத்து, அவர், அமைச்சர்களிடம் பேசி, பணிகளை பகிர்ந்துகொள்ளுமாறு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், இணையமைச்சர்களை காபினெட் அமைச்சர்கள் புறக்கணிக்கும் நிலை தொடருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதே நேரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த மு.க. அழகிரி உள்பட பல அமைச்சர்கள் தங்களது பணிகளை தங்கள் துறை இணையமைச்சர்களுக்கு பகிர்ந்தளிப்பதாகவும், அவர்களை மரியாதையுடன் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

நல்லதா இருந்தா பாராட்டுரதுல தப்பே இல்லை.

அழகிரி அண்ணனுக்கு ஒரு ” ஒ “ போடுங்கப்பா.


நன்றி : குமுதம் இணையதளம்



Posted by போவாஸ் | at 1:07 PM | 0 கருத்துக்கள்

தொடரும் கள்ளக் காதல் கொலைகள்

12 Aug 09 தொடரும் கள்ளக் காதல் கொலைகள்



தொடரும் கள்ளக் காதல் கொலைகள் :

சமீப காலங்களாக கள்ளக் காதல் கொலைகள் அதிகரிக்கத்துக் கொண்டிருப்பது மிக வேதனைக்கு உரிய விஷயமாகும்.

சிறந்த பண்பாடும், கலாச்சாரமும், வாழ்க்கை நெறிமுறைகளும் கொண்ட நம் தமிழ் நாட்டில் தமிழ் நாட்டில் கள்ளக் காதலும், அதையொட்டிய கொலைகளும், கொள்ளைகளும் நடப்பது வேதனைக்கு உரிய விஷயமாகும்.

இன்று நக்கீரன் இணையதளத்தில் வந்த ஒரு செய்தி :

தாய்க்கு செய்த துரோகம்:தந்தையை வெட்டிக்கொன்ற மகன் நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (50). இவர்களுக்கு முருகன் (31), மகாதேவி (25) என்ற பிள்ளைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் கேசவனுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (31) என்ற பெண்ணுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. கோவிந்தம்மாளுக்கு குழந்தைகள் உள்ளன. இந்த விபரம் கேசவனின் மனைவி விஜயலட்சுமிக்கு தெரிய வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

அப்போது விஜயலெட்சுமி தனது கணவர் கேசவனை மண்வெட்டியால் வெட்டி உள்ளார். இந்த வழக்கில் போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சந்தர்ப்பத்தால் கேசவன் தனது கள்ளக்காதலி கோவிந்தம்மாளை வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்த தொடங்கினார்.

இது கேசவனின் மகன் முருகனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தாயை சிறைக்கு அனுப்பிவிட்டு, கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்துவதா? உடனே சொத்தை எங்களது பெயருக்கு எழுதி வையுங்கள்” என்று முருகன் தந்தையிடம் தகராறு செய்தார்.

ஆனால் கேசவன் சொத்தை எழுதி கொடுக்க மறுத்துவிட்டார். நேற்று கேசவனும், கள்ளக்காதலி கோவிந்தம்மாளும் ஒரே அறையில் படுத்து உல்லாசம் அனுபவித்தனர். தாய்க்கு துரோகம் செய்ததை அறிந்த முருகன் அரிவாளுடன் அங்கு சென்று கேசவனை சரமாரி அரிவாளால் வெட்டினார்.

அதை தடுத்த கள்ளக்காதலி கோவிந்தம்மாளையும் வெட்டினார். இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு எஸ்.பி.அஸ்ரா கார்க் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தப்பி ஓடிய முருகனை, வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் தனிப்படை போலீசார். தீவிரமாக தேடிவருகிறார்கள்.

எங்கேப் போய்க் கொண்டிருக்கிறது நமது தமிழ் சமூகம்.?

Posted by போவாஸ் | at 1:04 PM | 0 கருத்துக்கள்

தாய்நாடு திரும்பியவுடன் செய்ய வேண்டியவை

12 Aug 09 தாய்நாடு திரும்பியவுடன் செய்ய வேண்டியவை

ஒரு என்.ஆர்.ஐ இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்பியவுடன் மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் தொடர்பான காரியங்கள் என்னென்ன?

1. ஒரு என்.ஆர்.ஐ தாய்நாடு திரும்பியவுடன் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் அவர் திரும்பி வந்துவிட்ட தகவலை வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வங்கி என்.ஆர்.இ மற்றும் எஃப்.சி.என்.ஆர் கணக்குகுளை ரெசிடென்ட் கணக்குகளாக மாற்றுவார்கள். இந்தக் கணக்குகளில் வழங்கப்படும் வட்டியை மாற்ற மாட்டார்கள். ஆனால் இந்தியா திரும்பிய நாள்முதல் வருமானவரி செலுத்திட வேண்டும்.

2. என்.ஆர்.ஐ இந்தியா திரும்பியவுடன் ரெசிடென்ட் ஃபாரின் கரன்சி கணக்கு தொடங்கலாம். தனது கையில் உள்ள அன்னியச் செலாவணியையும் அவருக்குப் பிறகு வரக்கூடிய அன்னியச் செலாவணியையும் இந்தக் கணக்கில் ஒரு என்.ஆர்.ஐ வரவு வைக்கலாம்.

3. அவருக்கு வெளிநாட்டில் சொத்துக்கள் இருந்தால் அதன் விவரங்களை எழுத்து மூலம் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஃபெமா சட்டத்தின் 6(4) பிரிவின்படி (1999ம் ஆண்டு) வெளிநாட்டில் உள்ள அசையாச் சொத்துக்கள், அன்னிய முதலீடுகள், அன்னியக் கரன்சி ஆகியவற்றை வெளிநாட்டில் இருந்தபோது ஈட்டியிருந்தால் அவற்றை ஒரு என்.ஆர்.ஐ தாய்நாடு திரும்பும்போது கொண்டுவரலாம்.

4. வெளிநாடு வங்கிகளில் அன்னியக் கரன்சி கணக்கு இருந்தால் அவற்றை பாரத ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம்.

5. வெளிநாட்டு காப்பீடு நிறுவனத்திடம் இருந்து காப்பீட்டு பாலிசி பெற்றிருந்தால், அது முதிர்வடையும்வரை வெளிநாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான பிரீமியம் தொகையை வெளிநாட்டு கணக்கு மூலமாகவோ அல்லது உள்நாட்டில் உள்ள ஆர்.எஃப்.சி கணக்கில் இருந்தோதான் செலுத்த முடியும்.

6. கம்பெனிகளின் ஷேர்கள், கடன் பத்திரங்கள் (டிபென்ச்சர்கள்) மற்றும் டெபாசிட்கள் ஆகியவை தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு என்.ஆர்.ஐ.கள் தாய்நாடு திரும்பியவுடன் தாங்கள் திரும்பி வந்துவிட்ட தகவலையும் அவர்களது உள்நாட்டு முகவரியையும் தவறாமல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஈவுத்தொகை (டிவிடெண்ட்) மற்றும் வட்டி அனுப்புவதற்கும் மேற்கூறிய முதலீடுகள் உள்நாட்டு முதலீடுகள் என்று குறித்துக்கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.
- எஸ். கோபாலகிருஷ்ணன்

நன்றி : குமுதம் இணையதளம்

Posted by போவாஸ் | at 1:03 PM | 0 கருத்துக்கள்

அட்டகாசமான டிஜிட்டல் எபெக்ட்ஸ்

2 Aug 09 அட்டகாசமான டிஜிட்டல் எபெக்ட்ஸ்



அட்டகாசமான டிஜிட்டல் எபெக்ட்ஸ்


அட்டகாசமான டிஜிட்டல் எபெக்ட்ஸ்

visit http://www.photo505.com/ 505 டிஜிட்டல் எபெக்ட்ஸ்

Posted by போவாஸ் | at 1:02 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails