மேலும் ஒரு செக்ஸ் அர்ச்சகன் சிக்கினான்


காஞ்சிபுரத்தில் செக்ஸ் அர்ச்சகன் தேவநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்னொரு அர்ச்சகனும் சிக்கி உள்ளான்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதாக அர்ச்சகன் தேவநாதன் மீது சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். அர்ச்சகன் தேவநாதனை சிவகாஞ்சி காவல்துறையினர் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. தேவநாதன் கோவில் கருவறையிலும், காஞ்சிபுரத்தில் முக்கிய விடுதிகளிலும், மருத்துவமனையிலும் பல வி.அய்.பி. பெண்களிடம் உல்லாசமாக இருந்துள்ளான்.
கருவறையில் விபச்சாரம்
கோவில் கருவறையில் விபச்சார பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துவிட்டு அங்கேயே பணத்தை கொடுத்துள்ளான். காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தேவநாதன் தன்னை மயக்க சாக்லெட் கொடுத்து கற்பழித்து விட்டதாகவும், அதை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பலமுறை தன்னை கோவிலின் கருவறையில் வைத்து உல்லாசம் அனுபவித்ததாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
அதன் அடிப்படையில் காவல்துறையினர் அர்ச்சகன் தேவநாதன் மீது கற்பழிப்பு வழக்கை புதிதாக சேர்த்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அர்ச்சகன் தேவநாதன் செக்ஸ் லீலைகளில் மேலும் ஒரு அர்ச்சகனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தீவிர விசாரணையில் அர்ச்சகன் தேவநாதனின் நெருங்கிய நண்பர்களுக்கும் (பெயர் வெளியிடவில்லை) தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவன் வேறு ஒரு கோவிலில் அர்ச்சகனாக வேலை செய்து வருகிறான். தேவநாதன் கோவில் கருவறையில் பெண்களுடன் எடுத்த செக்ஸ் லீலை காட்சிகளை நண்பனுக்கு முதலில் காட்டுவானாம்.
அவன் கொடுத்த உற்சாகம்தான் தேவநாதன் மேலும் மேலும் தவறுகள் செய்ய தூண்டுகோலாக இருந்துள்ளது. அர்ச்சகன் தேவநாதனுக்கும், அவரது நண்பனுக்கும் எந்த அளவுக்கு தொடர்பு உள்ளது என காவல்துறை வட்டாரம் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது. அவனை இந்த வழக்கில் சேர்த்த பின்பு மேலும் அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Posted by போவாஸ் | at 8:57 PM | 1 கருத்துக்கள்

சென்னையில் நாளை பிரமாண்ட விழா: கலைஞருக்கு சிறந்த வசனகர்த்தா விருது



தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத் தில் நடக்கிறது.

2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன்படி சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் - தொலைக்காட்சி பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழா நாளை மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. முதலில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். சிறிய நாடகங்கள், நடனங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

மாலை 5 மணிக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. முதலமைச்சர் கருணாநிதி, திரைப்பட விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

2007-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை ரஜினிகாந்த் (சிவாஜி) பெறுகிறார். 2008-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கு (தசாவதாரம்) கிடைக்கிறது.

சிறந்த நடிகர் விருதுகளைப்பெறும் ரஜினி-கமல்ஹாசன் ஏற்புரை - வாழ்த்துரை வழங்குகிறார்கள். சிறந்த நடிகைகளுக்கான விருதுகள் ஜோதிகா (மொழி), சினேகா (பிரிவோம் சந்திப்போம்) ஆகியோருக்கு கிடைக்கிறது. சத்யராஜ் (பெரியார்), சூர்யா (வாரணம் ஆயிரம்), பத்மபிரியா (மிருகம்), திரிஷா (அபியும் நானும்) ஆகியோர் சிறப்பு பரிசு பெறுகிறார்கள்.

சிறந்த படங்களுக்கான முதல்பரிசுகளை சிவாஜி (2007), தசாவதாரம் (2008) ஆகியவை பெறுகின்றன. 2-வது, 3-வது பரிசுகளை மொழி, பள்ளிக்கூடம், அபியும் நானும், சந்தோஷ்சுப்பிரமணியம் படங்களுக்கு கிடைக்கின்றன.
 
சிறப்பு பரிசுகள் “பெரியார்”, “மெய்ப்பொருள்” படங்களுக்கும், பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படங்களுக்கான பரிசு “மிருகம்”, “பூ” படங்களுக்கும் கிடைக்கின்றன.

சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது கலைஞர் மு.கருணாநிதி (உளியின் ஓசை), பாலாஜி சக்திவேல் (கல்லூரி), பாடல் ஆசிரியர் விருது வைரமுத்து (பெரியார்), வாலி (தசாவதாரம்), சிறந்த இயக்குனர்கள் விருது தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்),  ஆகியோருக்கு கிடைக்கிறது.

சிறந்த இசை அமைப்பாளர்களுக்கான விருதுகளை இளையராஜா (அஜந்தா), வித்யாசாகர் (மொழி) ஆகியோர் பெறுகிறார்கள். இதுபோல பல்வேறு நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விருதுகள், பரிசுகளை பெறுகிறார்கள். இது தவிர எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன

Posted by போவாஸ் | at 8:48 PM | 0 கருத்துக்கள்

தேவநாதனுக்குப் ‘‘செருப்பாபிஷேகம்’’


Important incidents and happenings in and around the worldகாஞ்சியிலே என்ன நடக்கிறது? மச்சேஸ்வரன் கோயிலாம் அங்கு ஓர் அர்ச்சகப் பார்ப்பானாம். அவன் பெயர் தேவநாதனாம்.


கோயிலுக்கு வரும் பக்தப் பெண்களைக் கோயில் கருவறைக்குள்ளேயே வைத்து சரசலீலை செய்தானாம் உடலுறவு கொண்டனாம் ஊரே சிரிக்கிறது.


அந்தக் காவாளி அந்தக் கேடு கெட்ட காரியத்தைச் செய்ததை கைப்பேசி வழியாக ஒளிப்படமும் எடுத்து வைத்திருக்கிறானாம் புழுத்த நாய் குறுக்கே போகாது அப்படி ஒரு ஆபாசக் கூவம்!

நீதிமன்றத்திற்கு வந்தவனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் “நல்ல முறையில் வரவேற்று இருக்கிறார்கள். செருப்படி, துடைப்பக் கட்டை அடி, சாணியடி சகிதமாக வரவேற்று இருக்கிறார்கள்.


அதே காஞ்சியிலே ஜெயந்திர சரஸ்வதி அரங்கேற்றிய சமாச்சாரத்தை அவரின் சிஷ்ய கே(£)டி தொடர்ந்திருக்கிறான் அவ்வளவுதான்.



ஒன்றை எல்லோரும் மறைத்துவிட்டார்கள் பார்ப்பனர்களோ அவர்களின் ஊடகங்களோ ஒன்றை அழுத்தமாக மறைத்து விட்டன. 


இவ்வளவு ஆபாசம் வழிந்து ஓடியதே அந்தக் கோயிலின் நடையைச் சாத்தினார்களா? சந்நிதானம் தீட்டுப்பட்டு விட்டது என்று சுத்திகரிப்புச் செய்தார்களா?


ஆகமத்துக்கு விரோதமாக அநியாயங்கள் நடந்துவிட்டன என்று சொல்லி ஆன்மிக முறையில் சடங்குகளைச் செய்தார்களா?


அப்படி ஏதாவது செய்திதான் கசிந்ததுண்டா?


இதே பார்ப்பனர்கள் சாமிக்குத் தமிழில் பூஜை செய்தால் தீட்டுப் பட்டுவிடும் என்று “சோ” ராமசாமி வரை புலம்புகிறார்கள்.


கரூரையடுத்த திருமுக்கூடலூரில் உள்ள திருமணி முத்தீசுவரவர் கோயிலில் தமிழில் குடமுழுக்குச் செய்ததற்காக (9.9.2002) பார்ப்பன அர்ச்சகர்கள் என்ன செய்தார்கள்? கோயிலை இழுத்துப் பூட்டவில்லையா? பல நாள்கள் இக்கோயில் மூடிக் கிடக்கவில்லையா? சாங்கியங்கள், சுத்திகரிப்புச் செய்யப்பட்ட பிறகுதான் கோயிலை மீண்டும் திறந்தார்கள். தமிழில் குடமுழுக்குச் செய்ததற்காக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, அர்ச்சகர் சங்கமும் கண்டனம் தெரிவிக்கவில்லையா?

சிதம்பரம் நடராசன் கோயில் திருச்சிற்றம்பலத்திலே தமிழில் தேவாரம் பாடினார் என்பதற்காக ஓதுவார் ஆறுமுகசாமி என்ற பெரியவர் தீட்சதப் பார்ப்பனர்களால் அடித்துத் துவைக்கப்படவில்லையா? அவர் கை முறிந்து விடவில்லையா?


மனநலம் சரியில்லாத கிறித்துவ இளைஞன் டேவிஸ் குருவாயூர் கோயிலுக்குள் நுழைந்தான் என்பதற்காக, கோயில் தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, சுத்திகரித்தார்களே (தினகரன் 21.11.2005) அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் செய்தது அதைவிட அல்பமான காரியமோ? பெரியவா செய்தால் பெருமாள் செய்தது மாதிரி என்பதுஇதுதானோ!


1971_இல் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை நிறைவேற்றிய போது அதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றார்களே நினைவிருக்கிறதா?


அப்பொழுது இந்தப் பார்ப்பனர்கள் “வைகனாச” ஆகமம்” என்ற ஒன்றை அவர்களுக்கு வசதியாகத் தாக்கல் செய்தார்களே அந்த வைகனாச ஆகமம் என்ன சொல்லுகிறது?


பொது வழிபாட்டுக்குரிய கோயில்களில் கடவுளின் உருவத்தையோ, சிலையையோ அர்ச்சகரைத் தவிர சத்திரியர்கள் தொட்டு விட்டால் சாமி சிலை தீட்டாகி விடும். அதனை சுத்திகரிக்க தூய நீரினால் அபிஷேகம் செய்யப்பட வேண்டும். பின்னர் ஏழு கலசங்களை வைத்து முறைப்படி வணங்கியபின் சம்ப்ரோட்சணம் செய்ய வேண்டும். வைசியர்கள் தொட்டு விட்டாலும் சாமிதீட்டாகி விடும். 24 கலசங்களைச் செய்து வைத்து சம்ப்ரோட்சணம் செய்ய வேண்டும் பிராமண போஜனமும் செய்யப்பட வேண்டும்.


சூத்திரர்களான நான்காம் வருணத்தவன் தீண்டினாலும் கடவுள் தீட்டாகி விடுவார் அப்பொழுது என்ன செய்ய-வேண்டுமாம்? 108 கலசங்களைச் செய்து வைத்து, மஹாசாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே, இந்த ஆகமக் கூற்றுகளை ஏற்றுக் கொண்டுதானே நீதிபதிகள் தீர்ப்புக் கூறினார்கள்?


(அதிலே ஒரு நீதிபதி அர்ச்சகர் குடும்பத்தைச் சேர்ந்த பார்ப்பனர்)


“ஒரு சைவ, அல்லது வைஷ்ணவ கோயிலில், அர்ச்சகர் நியமனம் அந்தக் கோயிலுக்கு இணக்கமான ஆகமத்தில் கூறப்பட்டிருக்கும் ஆணைகளுக்கு இணங்கவே செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் அது இச்சட்டத்தின் 28 ஆவது செக்ஷனுக்கு முரணானது மட்டுமல்ல, மதப் புழக்கத்தில் தலையிடுவதாகவும் ஆகும். இதன் தவிர்க்க முடியாத விளைவாக கடவுளின் உருவம் தீட்டுப்பட்டு விடும் என்று தீர்ப்புக் கூறப்பட்டதே!
இப்படியெல்லாம் ஆகமங்கள் கூறுகின்றன உச்சநீதிமன்றமும் தீர்ப்புக் கூறுகிறது.


அதே நேரத்தில் கோயிலில் உள்ள ஓர் அர்ச்சகன் கோயில் கருவறைக்குள்ளேயே பெண்களை இழுத்துச் சென்று காமக் களியாட்டம் ஆடி, உடலுறவு கொண்டு கோயிலைக் காமக் கோட்டமாக பள்ளியறையாக, படுக்கையறையாக மாற்றிக் கூத்தடித்தால் சாமி சிலை தீட்டாகி விடாதா?
அதற்குப் பரிகாரம் செய்யப்படாதது ஏன்?
பக்தர்கள் யாராவது இந்தக் கேள்வியை எழுப்பியதுண்டா?

அர்ச்சகப் பார்ப்பான் எப்படியும் நடந்து கொள்ளலாம். காரணம், அவன் பிர்மாவின் நெற்றியிலே பிறந்தவன் பிர்மாவே, தான் பெற்ற மகள் சரஸ்வதியையே பெண்டாளவில்லையா?


அந்தப் பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணன் கருவறையைக் காமக் கழிநீர் கழிக்கும் (கழிவறை) கக்கூசாகப் பயன்படுத்துவதில் என்ன தவறு என்று “சோ” ராமசாமிகள் எழுதினாலும் எழுதுவார்கள்; அதற்கு வக்காலத்து வாங்கி பழ. கருப்பையாக்கள் “ஹார்-மோனி’’யம் வாசித்தாலும் வாசிப்பார்கள் யார் கண்டது?


அன்றைக்குத் தீட்சிதப் பார்ப்பனர்கள் சிதம்பரம் நடராசன் கோயிலில் தமிழராகிய ஆறுமுகசாமியைத் தாக்கினார்கள். இன்றைக்கோ தமிழ்ப் பெண்கள் காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதனுக்கு நல்ல பாடம் கற்பித்துள்ளனர்.


விழுந்தது செருப்படி ஏதோ தேவநாதன் என்ற ஒரு பார்ப்பான்மீது மட்டும் என்று நினைக்க வேண்டாம்! 

இன்றைக்கு பார்ப்பனர்களைத் தாங்கிப் பிடிக்கும் பார்ப்பனியப் பாதங்களைக் கழுவிக் குடிக்கும் கபோதிகளுக்கும்,
பார்ப்பனியத் திமிரைப் பூணூல் போட்டு முறுக்கிக் காட்டும் கும்பலுக்கும்,
பக்தியின் பெயரால் நடத்தும் ஆபாசக் கூத்துகளுக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் கொடுத்த “பரிசு அது”.


அன்று தமிழ் நாட்டு வீரப் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டினார்கள். என்றால், இன்றைக்குத் தமிழ்நாட்டுப் பெண்கள் பார்ப்பனிய ஆபாச சேட்டைகளுக்குச் செருப்பாபிஷேகம் (பாதுகா பட்டாபிஷேகம்) செய்து, பெரியார் மண்ணின் மகத்துவத்தை வீர தீரத்தைப் பாரீர் என்று பாருலகுக்கே தெரிவித்து விட்டார்கள்! வாழ்க அந்த மறக்குல மானமிகு தமிழ் மகளிர் பட்டாளம்!


பார்ப்பனர்களோ கப்சிப்! உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்பனத்திபோல பதுங்கிக் கிடக்கிறார்கள். தமிழர்களே, உரக்க ஒரு முறை சிரியுங்கள். பக்திக் குட்டையில் உழலும் தமிழர்களும் உடம்பைக் கொஞ்சம் கிள்ளிக் கொண்டாவது சிந்தித்துப் பார்க்கட்டும்!


நன்றி:விடுதலை ஏடு.

Posted by போவாஸ் | at 1:03 PM | 2 கருத்துக்கள்

உங்களில் ஒருவனாக நான்! அரசியலில் இருந்து ஓய்வா ? : கலைஞர் கருணாநிதி



அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகின்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு இன்னும் நெருக்கமாக உங்களோடு நான் வருவேன். இந்த அரசியல், அமைச்சர் பதவி இவைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து உங்களில் ஒருவனாக நான் என்னை இணைத்துக் கொள்வேன் என்று முதலமைச்சர் கலைஞர் பரபரப்பாக பேசினார்.
2009_2010ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அருந்ததியருக்கு 3 சதவிகித தனி உள் இடஒதுக்கீட்டை முதலமைச்சர் கலைஞர் வழங்கினார். இதன்மூலம் இந்த ஆண்டு ஒற்றை சாளர முறையில் 56 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளிலும், 1165 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளிலும் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்தார். மேலும், உயர்கல்வி வளர்ச்சிக்கு நன்கொடையாக ரூ.61 லட்சத்து 5 ஆயிரம் வழங்கினார்.
இதற்காக முதலமைச்சர் கலைஞருக்கு அருந்ததியர் மக்கள் ஒன்றுகூடி நடத்தும் நன்றி பாராட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அருந்ததி மக்கள் கட்சி சார்பில் நடந்த இந்த விழாவில் முதலமைச்சர் கலைஞர் கலந்து கொண்டு ஏற்புரையாற்றினார். அவரது உரை வருமாறு:
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அய்யன் வள்ளுவருடைய வாய்மொழியை இங்கே உரையாற்றியவர்கள் நினைவுபடுத்தினார்கள். அந்த அருமையான வாசகம், வள்ளுவருடைய குறளிலே இருக்குமே அல்லாமல், வள்ளுவரைப் பாராட்டுகின்ற, வள்ளுவருடைய படத்தைத் திறந்து வைக்கின்ற, வள்ளுவருடைய குறளை மூச்சுக்கு முப்பது முறை எடுத்துக் கூறுகின்ற புலவர்களிடத்திலே, படித்த மக்களிடத்திலே இன்றைக்கு இருக்கிறதா என்றால் இல்லை.

வள்ளுவரை பெயரளவுக்கு; நமக்கும் வள்ளுவம் தெரியும் என்று பெருமைப்படத் தக்க அளவிற்கு பெயர் சூட்டி அழைக்கிறோமே அல்லாமல், அவருடைய கொள்கைகளை, அவருடைய எண்ணத்தை, அவருடைய உறுதியை, அவர் யாத்து தந்த திருக்குறளிலே பொதிந்த கருத்துகளை ஏற்றுக் கொண்டிருக்கிறோமா, அவ்வழி நடக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளும்போது நமக்கு நம்மை அறியாமல் ஒரு வெட்கம் தான் தலையைத் தாழ்த்த வைக்கின்றது.
சுயமரியாதை கொடியைப் பறக்கவிட
இங்கே குறிப்பிட்டார்களே, சுதந்திரம் கிடைத்து இத்தனை நாட்களாகியும் கூட, எங்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று, சுதந்திரம் மாத்திரமல்ல கிடைக்காமல் போனது, உங்களுக்கும், உங்களைப் போன்ற இன மக்களுக்கும் கிடைக்க வேண்டிய சுயமரியாதையும் இதுவரையில் கிடைக்கவில்லை. உங்களுக்காக அந்தச் சுயமரியாதைக் கொடியை பறக்கவிட வேண்டிய அந்தக் கடமையைத்தான், பணியைத்தான் நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.
நான் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறேன், படித்துப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். இன்றைக்கு இந்த விழாவிற்குப் பிறகு நாளைக்கு நான் பேனா எடுத்து எழுதப் போகின்ற வாழ்க்கை வரலாறு அல்ல. அப்பொழுதே எழுதியிருக்கிறேன், என்னுடைய பொது வாழ்க்கையின் தொடக்கம், ஏழையெளிய, பாட்டாளி மக்களுடைய பகுதிகளிலே தான், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலே தான் என்று எழுதியிருக்கிறேன். அது இன்று வரையில் அந்த நிலை தொடருகிறது. இன்றும் தொடருகிறது, என்றும் தொடரும் என்ற உறுதியை இந்த விழாவிலே நான் உறுதிப்படுத்துகின்றேன். மீண்டும் மீண்டும் உங்களுக்கு சத்தியம் செய்து குறிப்பிடுகின்றேன்.

நீங்கள் பேசும்போது சொல்லிக் கொண்டீர்கள், நீங்கள் என்னிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதை நான் நிறைவேற்றிக் கொடுத்ததாகவும் பேசும்போது துரைசாமியும், ரவிச்சந்திரனும் சொன்னார்கள். நான் சொல்லுகிறேன், நீங்கள் யாரும் கோரிக்கை வைத்து நான் கொடுக்கவில்லை. இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், நானே கோரிக்கை வைத்து, நானே நிறைவேற்றிக் கொண்ட திட்டம் தான் இந்தத் திட்டம்.

யாரிடத்திலே கோரிக்கை வைப்பது?
நான் யாரிடத்திலே கோரிக்கை வைப்பது? என்னிடத்திலே தான்கோரிக்கை வைக்க வேண்டும். மிக, மிக உணர்ச்சிகரமானது
வள்ளுவர் கோட்டத்திலே எத்தனையோ விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அந்த விழாக்களில் கலந்து கொள்ளும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வை விட, அந்த உயிர்ப்பை விட இன்றைக்கு இந்த விழாவிலே கலந்து கொள்ளும்போது ஏற்படுகின்ற உயிர்ப்பும் உணர்வும் மிக மிக உயரமானது, மிக மிக உணர்ச்சிகரமானது.
ஏனென்றால், என்னுடைய உள்ளக் கிடக்கையை ஒரு கவிதை மூலமாக நான் வெளியிட்டதை இங்கே தமிழரசி எடுத்துச் சொன்னார். அது என்ன கவிதை? இந்த அருந்ததியருக்கான 3 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறும்பொழுது நான் மருத்துவமனையிலே இருந்தேன். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகு தண்டுவடத்திலே அபாயகரமான ஒரு அறுவைச் சிகிச்சைக்கு ஆட்பட்டு, மீண்டும் வந்து உங்களை எல்லாம் பார்ப்பேனா என்ற அய்யப்பாட்டுக்கிடையே படுக்கையிலே இருந்தேன். அப்போது நான் எழுதிய அந்தக் கவிதையை முரசொலியிலே வெளியிடச் சொல்லி அனுப்பினேன்.
எழுதியது மாத்திரமல்ல. இட ஒதுக்கீடு சட்டத்தை மருத்துவமனையில் இருந்தபடியே சட்டப் பேரவைக்கு அனுப்பி, இங்கே நம்முடைய துணை சபாநாயகர் எடுத்துச் சொன்னதைப் போல, அங்கே நிறைவேற்ற நான் எழுதிய கடிதம் இதோ நம்மை ஒருசேர இணைக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அவை முன்னவர் அருமைப் பேராசிரியர் அவர்களே, சட்டப் பேரவை அனைத்துக் கட்சி அன்பு உடன்பிறப்புகளே, இன்று வந்து உங்களை சந்திப்பதாக இருந்தும் கூட டெல்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.
முதுகுத்தண்டில் வலி வலி வலி
நிமிர முடியாமலும், திரும்ப முடியாமலும் நங்கூரம் போட்டது போல நரம்பிணைந்து முதுகுத் தண்டில் வலி! வலி! வலி!
ஒன்று உடல் வலி, பிறிதொன்று நீங்கள் வழங்கியுள்ள மன வலி! கருத்து மாறுபாடுகளுக்கிடையிலேயும் நீங்கள் காட்டும் கனிவு, அரசியல் மாச்சரியங்களை மீறி நீங்கள் காட்டும் அன்பு, இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது, தமிழ்த் தாயின் கரம் நம்மை ஒரு சேர அணைக்கிறது.
அறிவியக்கம்,ஆன்மிகம், நாத்திகம்,ஆத்திகம் இந்த வேறுபாடுகள் மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வும் நன்மனித நேயமும் வளர்த்திடுவோம். ஆரம்பகால பொதுவுடைமை வாதி என்ற முறையிலும் அய்யா, அண்ணா, காமராஜர், அண்ணன் ஜீவா போன்றோரின் அருமைத் தொண்டர்களில் ஒருவன் என்ற முறையிலும், அடி மட்டத்துக்கெல்லாம் அடி மட்டமாகக் கிடந்து அவதியுறும் மனித ஜீவன்கள் அருந்ததி மக்கள், புதிய உலகம், புரட்சியுகம் காண்பதற்காக; இன்று அவையில் நான் முன் வைக்கும் சட்ட முன் வடிவை; உங்கள் ஆதரவு வழங்கி; நிறைவேற்றித் தர வேண்டுகிறேன் என்று ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து எழுதினேன்.
அன்றைக்கு அரசின் துணை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் பேரவையில் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட காரணத்தால் தான் இங்கே நாமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்திலே நிரம்பி, திளைத்துக் கூடியிருக்கிறோம்.
அடித்தளம் என்பது கேவலமான ஒன்றல்ல. அடித்தளம் கோபுரத்தையே காப்பாற்றக் கூடிய, கோபுரத்திற்கு அடிவாரம். ஆகவே தான் அடித்தள மக்களைக் காப்பாற்றினால் தான் அடித்தள மக்களை உயர்த்தினால் தான் அடித்தள மக்களை நம்மோடு அணைத்துக் கொண்டால்தான், சமுதாயத்தை வாழ வைக்கமுடியும். நாட்டை வாழ வைக்க முடியும். இந்த உன்னதமான கருத்தோடு நான் பாலப் பருவத்திலேயிருந்து இதுவரை உழைத்து வருகிறேன். இன்னமும் உழைக்கத் தயாராக இருக்கிறேன். உழைப்பேன். ஆனால் என்னுடைய உழைப்பில் நான் சிந்துகின்ற ஒவ்வொரு துளி வியர்வையும் ஏழை-யெளிய மக்களுக்காக, பாட்டாளி மக்களுக்காக, குடிசைகளிலே வாழ்கின்ற மக்களுக்காக, தொழிலாளத் தோழர்களுக்காக இங்கே கூடி யிருக்கிறீர்களே, அருந்ததியர், இந்த அருந்ததிய மக்களுக்காக, ஆதி திராவிட மக்களுக்காக, இன்னும் சொல்லப் போனால், இன்றைக்கு தொலைக் காட்சியிலே பார்த்தேன், மதுரை மாநகரத்தில் திருநங்கையர் கூட்டம், இவர்கள் எல்லாம் ஆடவரும் அல்ல, பெண்டிரும் அல்ல என்ற கேலிக் குரியவர்களாக, சமுதாயத்திலே பேசப்பட்ட காலம் போய் இன்று அவர்களுக்கு எல்லாம் திருநங்கையர் என்ற பட்டம் சூட்டி, அவர்களுக்கு வாக்குச் சீட்டு, ரேஷன் கார்டு வரையிலே தந்து அவர்களை நாம் உயர்த்தியிருப்பது இந்த ஆட்சியிலே தான் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

புலியாக மாறுவோம்

நாம் புழுக்களாக இருப்பவர்களை புலிகளாக மாற்றுவோம், நாம் சிற்றெறும்புகளாக கிடப்பவர்களை சிங்க ஏறுகளாக ஆக்குவோம், அப்படி மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது தான் உதயமானது தான் திராவிட இயக்கம். திராவிட இயக்கம் தான் அது தோன்றிய காலத்தில் எடுத்துச் சொன்ன கொள்கைகளையெல்லாம் ஏதோ பிரிவினைக்காக மக்களிடத்திலே வேறுபாடான உணர்ச்சிகளை ஏற்படுத்துவதற்காக என்றெல்லாம் எதிரிகளால் சொல்லப்பட்டது.
ஆனால் இன்றைக்கு எதிரிகளாலும், பகைவர்களாலும் பாராட்டப்படுகின்ற, போற்றப்படுகின்ற கொள்கைகளை, செயல்படுத்துகின்ற இயக்கம் திராவிட இயக்கம், குறிப்பாக திராவிட இயக்கத்தின் அரசியல் பிரிவான திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்ற எல்லோரையும் நான் பாகுபடுத்தாமல் அவர்களை யெல்லாம் நம்மவர்கள் என்ற முறையிலே தான் நான் நினைக்கிறேன்.
எனக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த துணை சபாநாயகர் துரைசாமி ஆனாலும், அல்லது அருந்ததிய மக்கள் கட்சியின் தலைவர் ரவிச்சந்திரன் ஆனாலும், இரண்டு பேரும் எனக்கு உடன்பிறப்புகள்தாம். இருவரும் ஒன்றுபட்டு உழைத்தால் இன்னும் பல உறுதியான வெற்றிகளை நாம் பெற முடியும். அந்த வெற்றிகளைப் பெறுவதற்கு நான் ஓயாமல் உழைக்க இந்த வள்ளுவர் கோட்டத்திலே உங்கள் முன்னால் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.
ஒன்று சொல்வேன், என்னுடைய மிச்சம் இருக்கின்ற வாழ்நாள் முழுதும் உங்களைப் போன்ற ஏழையெளிய மக்களுக்காக, உங்களைப் போன்ற அடக்கப்பட்ட மக்களை அடலேறுகளாக மாற்றுவதற்காக, உழைப்பேன், உழைப்பேன் என்று சொல்லிக் கொண்டு அதற்கென்று ஒரு அறிவிப்பை நான் அமைச்சர் பதவியிலே இருந்து கொண்டு இதையெல்லாம் செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு நானே தருகின்ற விடையாக, என்னுடைய லட்சியத்திலே பல நிறைவேறிவிட்டன. அவைகளிலே மிச்சம் இருக்கின்ற லட்சியங்கள், சட்டசபையின் புதிய கட்டடம், அண்ணா பெயரால் புதிய நூலகம், உலகத்திலேயே புகழ் பெற்ற நூலகமாக அந்த நூலகம் அமைகின்றது.



மாநாடு முடிந்தபிறகு
அடுத்து 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறுகின்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, அந்த மாநாடு முடிந்த பிறகு இன்னும் நெருக்கமாக உங்களோடு நான் வருவேன், இந்த அரசியல், அமைச்சர் பதவி இவைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து உங்களில் ஒருவனாக நான் என்னை இணைத்துக் கொள்வேன் என்ற மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியை இந்தக் கோட்டத்திலே குறிப்பிட்டு இந்த அளவில் உங்களுடைய பாராட்டுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு கலைஞர் கூறினார்.

Posted by போவாஸ் | at 11:10 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails