இந்த நாராயணன் தொல்லை தாங்க முடியலப்பா..


சனிப்பெயர்ச்சியால் சுனாமி ஆபத்து: ஜோதிடர் காழியூர் நாராயணன் தகவல்




நியூசிலாந்து அருகே பசிபிக் பெருங்கடலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சுனாமி அரக்கனால் சாமோவ் நாடு, மற்றும் அமெரிக்கன் சமோவ் தீவை சேர்ந்த 144 பேர் உயிரிழந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன.இதே போல இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் பிற்பகலில் ஏற்பட்ட பூகம்பத்தால் அங்குள்ள பதாங் நகரமே இடிந்து நாசமானது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்த திடீர் பேரழிவுகளுக்கு கடந்த 26-ந் தேதி நடந்த சனிப்பெயர்ச்சியின் தாக்கமே காரணம் என்று சென்னையின் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:- உலக நடப்புகள் யாவுமே பிரகத் ஜாதகம் என்று சொல்லக்கூடிய மன்டேன் அஸ்ட்ராலஜி படி மிக துல்லியமாக இதுவரை நடந்து வந்துள்ளன.
நாஸ்டர் டாமஸ் போன்ற 16-ம் நூற்றாண்டு ஜோதிட வல்லுனர்கள் அன்றே இதனை கணித்து கூறி உள்ளனர்.நமது நாட்டிலும் ஆர்யப்பட்டா, வராகமிகிரர், போன்ற ஜோதிட வானிலை ஆராய்ச்சியாளர்கள் மிகத்துல்லியமாக எடுத்து கூறி உள்ளனர்.இன்று நிகழ்ந்து வரும் ஜல (நீர்) சம்பந்தமான சுனாமி போன்ற பேரழிவுகளுக்கு காரணமாக இருப்பது சனி மற்றும் குருப்பெயர்ச்சிகள் ஆகும்.கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி நடந்த சனிப்பெயர்ச்சி இதற்கு காரணமாகும்.
மேலும் ஜலகாரகன் என்று சொல்லக்கூடிய சந்திரனானது அமெரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் 6 மற்றும் 8-ம் இடங்களில் சஷ்டாஸ்டக தோஷமுடன் விளங்கியதால் இப்படிப்பட்ட நீர் சம்பந்தமான உட்பாதங்களுக்கு (சீரழிவு) காரணம் என்று நம்முடைய ஜோதிட வல்லுனர்கள் அன்றே எழுதி வைத்துள்ளனர்.
குருபகவான் வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி அன்று மகரராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயரும் போது மீண்டும் ஒரு சுனாமி அமெரிக்கா, இந்தோனே சியா போன்ற நாடுகளில் ஏற்படும்.
இதனால் நமது நாட்டுக்கும் சிறிய பின் விளைவுகள் ஏற்படலாம். இது மிதமாக இருந்தாலும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி அன்று ஜல ராசியாக மீனத்துக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார். இதனால் இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு “சுனாமி” ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவை யாவுமே பரிகாரத்துக்கு உட்பட்டது என்று அன்றைய பெரியவர்கள் பல ஜெபங்களையும், யாகங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு சுதர்சன யாகம், ஆங்காங்கே செய்தால் சுனாமியை தடுக்கலாம். இதனுடன் மகாமிருத்திஞ்சியயாகம் செய்வித்தால் மனித இறப்புகளும், மற்ற பேரிழப்புகளும் நிச்சயம் தவிக்கப்படும்.
இவ்வாறு ஜோதிடர் காழியூர் நாராயணன் கூறினார்.
ஒரு பெரியார் இல்ல ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை போன்றவர்களை திருத்த முடியாது.
உங்களை நம்பிக்கிட்டு இருக்குற மக்களுக்கு பகுத்தறிவு வர வரை...உங்க கதை நல்லா ஓடும்.

Posted by போவாஸ் | at 8:30 PM | 1 கருத்துக்கள்

சர்தார்ஜி ஜோக்ஸ் - 5

ஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும்

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்.

எடை பார்க்கும் மிஷின்
நம்ம சர்தார்ஜி ஒரு நாள் கடை வீதிக்கு சென்று இருந்தார். அவருடன் அவரது 2 வயது பெண்ணும் சென்று இருந்தார். அப்போது அவர் குழந்தை தனது எடையய் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. மேலும் ஒரு ரூபாய் நாணையத்தையும் தானே போடுவேன் என்று பிடிவாதம் பிடித்தது. ஆணால் குழந்தை உயரம் இல்லாததால் அந்த குழந்தையால் நாணையத்தை போட முடியவில்லை. அதை பார்த்த நம்ம சர்த்தார்ஜி குழந்தையை தூக்கி பிடித்து கொண்டார். குழந்தையும் நாணையத்தை போட்டது.
உடனே ஒரு கார்டு வந்து விழுந்த்தது.
எடை 0 என்று.


தொலைபேசி அழைப்பு
சர்தார்ஜிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் "சந்தா! உங்கள் மகள் இறந்து விட்டாள்" என்கிறார்.
துக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து சர்தார்ஜி குதித்து விடுகிறார்.
50வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.
25வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.
10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் சந்தா அல்ல பந்தா என்று.

ஓவியம் அல்ல கண்ணாடி
ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்
"பார்க்க படுகேவலமாக இருக்கும் இதை தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"
பதில் வருகிறது"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி"

Posted by போவாஸ் | at 7:54 PM | 1 கருத்துக்கள்

Related Posts with Thumbnails