சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் ஓடிய கவர்ச்சிக் கன்னி



சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் ஓடிய கவர்ச்சிக் கன்னி.
இப்படி ஒரு டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு ஓடணும்னு யார் கேட்டா ?.
இந்நேரம் எத்தனை பேர் இந்த போட்டோவ பாத்துருபாங்க. அசிங்கமா தெரியலையா ? 
எம்மா...ஏன்...? என்னாத்துக்கு இந்த சீனு...?
மழைல நெனையாம, ஒரு வேலை கூட்டத்துல தள்ளுமுள்ளு ஏற்பட்டு டி-சர்ட் கிழிஞ்சி போயிருந்தா...? என்ன ஆயிருக்கும்...?
இதுக்குதான் இடத்துக்கு ஏத்தமாதிரி டிரெஸ்ஸ போடனும்னு சொல்றது.
ஆம்பிளை ஜட்டியோட கூட ஓடி வருவான். ஆனா பொண்ணுங்களால முடியுமா ?
பொண்ணுங்க கொஞ்சம் முன் எச்சரிக்கையா இருந்தா நல்லது.

Posted by போவாஸ் | at 11:18 AM | 1 கருத்துக்கள்

சிறப்பு ரயிலே வேணாம்...நீங்களே தொண்டர்களுடன் டில்லிக்கு வந்து சேருங்க


வருகிற 29ம் தேதி, தமிழக மீனவர்கள் பிரச்னைக்காக, டில்லியில் விஜயகாந்த் உண்ணாவிரதம் இருக்கப்போறார். இதுக்காக, "ஒவ்வொரு மாவட்டச் செயலரும் 100 தொண்டர்களை டில்லிக்கு கூட்டிண்டு வரணும்னு கட்சித் தலைமையில இருந்து உத்தரவு போட்டுட்டா. 
"சமீபத்தில் அறிமுகமான, "பாயின்ட் டூ பாயின்ட் துரந்தோ எக்ஸ்பிரஸ்' ரயில்ல அவர்களை அழைச்சிட்டு போக ஏற்பாடும் செஞ்சிருக்காங்க.தெற்கு ரயில்வேயில் முன்பதிவுக்கு 15 லட்சம் ரூபாய் கட்ட, 22ம் தேதி கடைசி நாள்.அதுக்கு மாவட்டச் செயலர்களிடம் பணம் கேட்டப்ப, ரெண்டு நாள் கழிச்சு தர்றதா சொல்லிருக்காங்க... சில மாவட்டச் செயலர்கள், பணம் இல்லைன்னு சொல்லி, மொபைலை, "ஸ்விட்ச் ஆப்' செஞ்சுட்டாங்கலாம். 
"கோபமான கட்சித் தலைமை, "சிறப்பு ரயிலே வேணாம்... நீங்களே தொண்டர்களுடன் டில்லிக்கு வந்து சேருங்க'ன்னு சொல்லிடுச்சாம்... "கட்சி வளர்ச்சிக்கு ஏராளமான பணத்தை செலவு பண்ணியும், 15 லட்சம் ரூபாய்க்கு நம்மை நம்பலையே'ன்னு மாவட்டச் செயலர்கள் இப்ப புலம்பிட்டு இருக்காங்களாம்.
நன்றி: தினமலர்.
இதுதான் தேமுதிக மற்றும் அதன் தலைவர் விசயகாந்தின் தன்மை, கட்சியினர் மேல் வைத்துள்ள நம்பிக்கை என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். கட்சிக்கு செலவு செய்ய மனமில்லாத கட்சித் தலைவர் விசயகாந்த். கட்சியில இருக்குறவுங்கள 'ஆண்டி'யாக்காமல் விடமாட்டார் போலருக்கு. என்னும் எவ்ளோ நாளைக்குன்னு பாக்கலாம்.
இப்படியெல்லாம் செஞ்சு கட்சிகாரங்கள கஷ்டபடுத்தி டெல்லில போயி டிராமா போடனுமா? ஐயோ..ஐயோ...இன்னும் இவரை சில ஜனங்க நம்பிக்கிட்டு இருக்குறதுதான் கொடுமையிலும் கொடுமை.
"ஆழம் அறியாமல் காலை விடாதே" - இது மாவட்ட செயலர்களுக்கு.
"தன வினை தன்னைச் சுடும்" - இது விசயகாந்துக்கு.
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" - இது மக்களாகிய நமக்கு.
லேட்டஸ்ட் நியூஸ்:
விஜயகாந்த் டெல்லி செல்லும் நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி, முதல்வர் பதவி, ஆளுக்குப் பாதி தொகுதிகள் என்ற ஃபார்முலாவுக்கும் அவர் தயாராகிவிட்டாராம். ஏற்கெனவே, இதுபற்றி டெல்லியில் சுதீஷ் பேசியிருக்கிறாராம். விரைவில் இருதரப்பு தலைவர்களும் பேசுவார்களாம். போராட்டம் நடத்தப் போகும் தலைநகர் டெல்லியிலும் பெண் குழந்தைகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறாராம் கேப்டன். அங்கேயும்  50 குழந்தைகளுக்கான தொகை டெபாசிட் செய்யப்படவுள்ளதாம்.
nandri:kumudam.
இப்போ உங்களுக்கு தெரிஞ்சதா இவர் ஏன் டெல்லில போய் டிராமா போடப் போறாருன்னு.
உங்களால் முடிந்தால் உங்களுக்கு தெரிஞ்சவுங்க,அக்கம்பக்கத்துல இருக்குறவங்ககிட்ட எல்லாம் இவரைப் பத்தின உண்மையை  கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.
"பேராசை பேரு நஷ்டம்" - இதை விஷகாந்த் புரிந்துகொள்ளும்போது பெருங்கஷ்டமாக இல்லாமல் இருந்தால் சரி.

Posted by போவாஸ் | at 10:42 PM | 0 கருத்துக்கள்

நகைச்சுவை துணுக்குகள் - சர்தார்ஜி ஜோக்ஸ் - 4

கொலஸ்ட்ரால் எங்கே?
ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், "அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."  
பந்தயம் கட்டிய சர்தார் 
சோகமே உருவாக உட்கார்ந்திருந்த பந்தா சிங்கிடம் அவருடைய நன்பர் அருகில் வந்தமர்ந்து, ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டார். அதற்க்கு பந்தா சிங், தான் பந்தயத்தில் ரூ.800 தோற்று விட்டதாக சொன்னார். நன்பர் எப்படி 800 ரூபாயை தொலைத்தாய் என்றதற்க்கு சர்தார் பந்தா சிங் சொன்னார், "நேற்று நடந்த இந்திய-இலங்கை கிரிகெட் மேட்ச்சில் இந்தியா ஜெயிக்கும் என ரூபாய் 400 பந்தயம் கட்டினேன், ஆனால் இந்தியா தோற்று போய் விட்டது.." என்றார். நன்பர், "சரி மீதி ரூ.400 எப்படி தொலைந்தது?" என்றதற்க்கு பந்தா சிங் சொன்னார், "அன்றிரவு பார்த்த ஹை-லைட்டிலும் பந்தயம் கட்டினேனே.." என்றார்.  
எய்ட்ஸ் பயமா? 
ஒரு முறை சர்தாரும் நண்பர்களும் (சர்தாரல்லாத) இரவில் தெரு வழியே வந்துக் கொண்டிருந்த போது ஒரு வழிபறியிடம் மாட்டிக் கொண்டனர். வழிபறி தன் கையில் டாக்டர் போடும் ஊசி (சிரின்ச்) ஒன்றை வைத்துக் கொண்டு, அதில் எயிட்ஸ் நோய் உள்ள இரத்தம் உள்ளதாகவும், தன்னிடம் உள்ளதை தர மறுப்பவர்களை குத்த போவதாகவும் மிரட்டினான். பயந்து போன எல்லோரும் தன்னிடமிருந்த பணம், கடிகாரம், மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கலட்டி கொடுத்து விட்டனர். ஆனால் நம் சர்தார் மட்டும் தைரியமாக, எதையும் கொடுக்க மறுத்து விட்டார். கோபமான வழிபறி ஊசியால் சர்தார் கையில் குத்தி விட்டு ஓடிவிட்டான். சர்தார் கவலை படவில்லை. மற்றவர்கள் பதறி போய், சர்தாரிடம் "ஏன் இப்படி செய்தாய், இப்ப உனக்கு எயிட்ஸ் வந்து விடுமே "என்று கேட்டதற்கக்கு சர்தார் கூலாக சொன்னார், "எனக்கு அதுலாம் வராது ஏன்னா நான்தான் காண்டம் அணிந்திருக்கேனே" என்றார்.  
ஸ்மைல் ப்ளீஸ் 
ஒரு சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர் "ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?" என்று மற்றொருவரைக் கேட்கிறார். "பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?".  
நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி 
சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”. யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், “பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.  
கண்ணாடிக் கடையில் சர்தார்ஜி 
சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க... கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது.. சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.

Posted by போவாஸ் | at 5:54 PM | 0 கருத்துக்கள்

சத்தம் காட்டாமல் 'ஜகா' வாங்கிய விஜயகாந்த்



அரசியல் கட்சி என்பது தேர்தலில் போட்டியிட்டே ஆகவேண்டும் என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம். இப்படி சொன்னவர் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்.
சமீபத்தில் நடந்த ஐந்து சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் தே.மு.தி.க., அத்தேர்தலை எதிர்க் கொள் கிறது என்பதற்காகத் தான் விஜயகாந்த் இப்படி அறிக்கை விட்டார். 
தற்போது தமிழகத்தில் காலியாகவுள்ள 603 உள்ளாட்சி இடங்களுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 7ம் தேதி நடக்கிறது. திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளின் இரு கவுன்சிலர் பதவிகளுக்கும், ராஜபாளையத்தில் ஒட்டுமொத்த நகராட்சிக்கும் சேர்த்து தான் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் புறக்கணிப்பு நிலை எடுத்த அ.தி.மு.க., தனது கூட் டணி கட்சிகளை புறந்தள்ளிவிட்டு உள்ளாட்சி இடைத் தேர்தலை சந்திக்கிறது. ஆனால் தேர்தலை சந்தித்தே தீரவேண் டும் என்று கூறிய தே.மு.தி.க., தலைமை சத்தமின்றி உள்ளாட்சி இடைத்தேர்தலை புறக்கணித்து "ஜகா' வாங்கியுள் ளது. 
போட்டியா, புறக்கணிப்பா, அதற்கான காரணமென்ன என்பதையும் அக்கட்சி தலைமை இதுவரை வெளியிடவில்லை
இது அக்கட்சியினர் மத்தியில் மட்டுமின்றி அரசியல் மட்டத்திலும் பெரும் பரபரப் பாக பேசப்பட்டு வருகிறது. தே.மு.தி.க.,வின் இடைத் தேர்தல் புறக்கணிப்பிற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கட்சியினரிடையே நிலவும் கோஷ்டி பூசல் அதற்கு முதல் காரணமாக சொல்லப்படுகிறது.
தேர்தலில் போட்டியிட்டால் அதற்கு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பணத்தை செலவழிக்க வேண்டும்.ஏற்கனவே பல்வேறு தேர்தலுக்கு பணத்தை செலவழித்து நொந்து "நூடுல்ஸ்' ஆகியுள்ள அவர்கள் ஒதுங்கிக் கொள்வர் அல்லது வேறு கட்சிகளுக்கு ஓடிவிடுவர் என்பதை கருத்தில் கொண்டே தே.மு.தி.க. தலைமை இத் தேர்தலை புறக்கணித் துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இதுமட்டுமின்றி கட்சித் தலைமைக்கும் இத்தேர்தலால் செலவு ஏற்படும்; பிரசாரத்திற்கு செல்ல வேண்டிய நிர் பந்தமும் ஏற்படும். இதுவும் தே.மு.தி.க., தேர்தல் புறக்கணிப்பிற்கு காரணம் என்று விவரம் அறிந்த சிலர் அறிக்கை வாசிக்கன்றனர்.
தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிய அக்கட்சி நிர்வாகிகள் சிலர், கட்சி அலுவலகத்திற்கு வந்து விஜயகாந்தை சந்தித்து பேசினர். அப்போது விஜயகாந்த், "தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் தேர்தலில் சுயேச்சையாக நீங்கள் போட்டியிடுங்கள்; கட்சி சார்பில் போட்டியிட வேண்டாம்' என கூறி அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது.

nandri : dinamalar.

Posted by போவாஸ் | at 12:57 AM | 0 கருத்துக்கள்

ரூ.315 கோடி செலவில் ராஜசேகர ரெட்டி நினைவாலயம்.






ஆந்திர முதல்- மந்திரியாக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவர் சென்ற ஹெலிகாப்டர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலை காட்டுப்பகுதியில் சிறு மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
ராஜசேகர ரெட்டி உயிரிழந்த அந்த மலையில் மிகப்பிரமாண்டமான நினைவாலயம் அமைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. 1412 ஹெக்டர் நிலப்பரப்பில்,ரூ.315 கோடி செலவில் ராஜசேகர ரெட்டி இந்த நினைவாலயம் அமையும்.
நல்லமலை காட்டுப்பகுதி வன இலாகாவுக்கு உரியதாகும். அந்த இடத்தின் சுற்றுச்சூழல் பாதிக்காதபடி மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ராஜசேகர ரெட்டிக்கு உருவாக்கப்படும் இந்த நினைவாலயம், இந்தியாவில் இதுவரை எந்த தலைவருக்கும் இல்லாத வகையில் மிக, மிக பிரமாண்டமாக இருக்கும். மொத்தம் 315 கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இந்த நினைவாலயம் கட்டி முடித்து திறக்கப்படும் என்று ஆந்திர மந்திரி கீதா ரெட்டி கூறினார். ராஜசேகர ரெட்டி நினைவிடத்தை சுற்றுலா தலம் போல மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடப்பா,சித்தூர், கர்னூல் போன்ற மாவட்டங்கள் நீர் நிலையுள்ள மாவட்டங்கள் . காரணம் பசுமை குறைவில்லாத பிரதேசம் அது. அதனால் விவசாயம் என்பது எப்போதும் செழிப்போடு இருக்கும். டிவியிலேயே நல்ல காமிச்சாங்க..அவ்வளவு ஒரு அடர்ந்த காடா இருக்குது. இப்போ அதை அழித்து, முன்னூற்றி பதினைந்து கோடி பணத்தை விரயம் செய்வதென்பது வடிகட்டின முட்டாள்தனம். 

யாரு வீட்டு காச யாரு இப்படி வீணா செலவு செய்யுறது , கட்சி நிதியிலோ அல்லது ரெட்டியோட சொந்த பணத்துல செஞ்சா பரவாயில்லை. அரசாங்க பணத்துல ஏன் செய்யணும். மக்களோட வரிப்பணத்துல ஏன் செய்யணும்.

1412. ஹெக்டேர் நிலப்பரப்பில் 315 கோடி செலவில் ஒரு தொழிற்சாலை தொடங்கினால், கிட்டத்தட்ட 1000 குடும்பங்கள் நிரந்தரமாக பிழைக்க வழி பிறக்கும். தொழிற்சாலை லாபகரமாக செயல்பட்டால், அரசாங்கத்திற்கு வருமானம் வரும். அதை விடுத்து நினைவாலயம் கட்டினால் 1412. ஹெக்டேர் நிலம் வேஸ்ட், 315 கோடி பணம் வேஸ்ட், அதோடுமட்டுமல்லாமல் எதிர் காலத்தில் பராமரிப்பிற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
 
மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வரும் வேளையில் இது போன்ற முட்டாள்தனமான் செயல்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 
பிரதமர், பிரணாப் முகர்ஜீ, அறியாமை பகழ் ராகுல் காந்தி, அன்னை சோனியா எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். 

இது மிக மிக தவறான, கண்டிக்கத்தக்க செயல்.எல்லா அரசியல் தலைவர்களும் இதை பின்பற்ற ஆரம்பித்து விடுவர். மக்கள் பணத்தை இப்படியா விரயம் செய்வது. இதை தடுக்காவிடில், இது ஒரு தவறான முன்னுதாரணத்திற்கு வழி செய்துவிடும். 
இதை பின்பற்றி இனி பலர் எதிர்காலத்தில் செய்யக்கூடும்.  
இதை தடுக்காவிடில், இனி காங்கிரஸ் அரசு, சிக்கன நடவடிக்கை என்பதைக் கூறுவதற்கு எந்த முகாந்திரமும், அதை பற்றி பேச ஒரு அருகதையுமில்லை.  

1412. ஹெக்டேர் என்பது கிட்டத்தட்ட 3489 ஏக்கர். 
3489 ஏக்கர் என்பது கிட்டத்தட்ட 1,52,024,400 சதுர அடி. 
இவ்ளோ பெரிய பரப்பளவு கொண்ட இடத்தில் சராசரியாக 1000 அடி கொண்டு வீடுகளை கட்டினால் கிட்டத்தட்ட 1,50,000 வீடுகள் கட்ட முடியும். 
315 கோடியில், வீடில்லாதோருக்கு, வீடுகளைக் கட்டிக் கொடுத்தால்... 5 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 6300 பேருக்கு கட்டிகொடுக்க முடியும். 
10 லட்சம் செலவில் பள்ளிகளைக் கட்டினால், கிட்டத்தட்ட 3000 பள்ளிகளைக் கட்ட முடியும்.  
இன்னும் என்னென்னமோ நல காரியங்களைச் செய்யலாம்.


இதெயெல்லாம் விட்டுட்டு நினைவாலயம் கடடுறாங்கலாம். யாரு பணத்துல யாரு கட்டுறது. பரதேசி பசங்க. முட்டாள்கள்.
தலைவர்கள் மீது பற்றும், பாசமும், பிரியமும் இருக்க வேண்டியதுதான். அதற்காக மக்கள் வரிப்பணத்தில் இது போன்று செலவு செய்வது தேவைதானா?

இன்னும் என்னன்ன கூத்து நடக்கப் போகுதோ.

Posted by போவாஸ் | at 11:18 PM | 1 கருத்துக்கள்

போட்டோ கமெண்ட்ஸ் - 2



 
என்னம்மா, உலகத் தமிழ் மாநாட்டுல ”உலகத் தமிழ் நாயகி”-ன்னு உனக்கு ஒரு பட்டம் கொடுத்திடுவோமா...?


 அம்மா, தாயே... ஆளாளுக்கு என்னை வம்புக்கு இழுக்காதீங்க... அப்புறம் நான் ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லி ஏதாவது பிரச்னையாகிடப் போகுது... எனக்கே நேரம் சரியில்லை..






கை விரல்களை வேட்டிடுவோம்னு சின்னதா ஒரு மிரட்டல் கடிதம் வந்ததுக்கே..இப்படி பயந்தா எப்படி சேகர்ஜி...? 


லோக்சபா கூட்டத் தொடர் இல்லாததனால க்ளோசப் பேஸ்ட் 
விளம்பரத்துல நடிக்க போறேன்.


 
இடைத்தேர்தல்ல தோத்துட்டமேன்னு வருத்தமா ஷீலாஜி...? எப்படி ஜெயிக்கறதுன்னு எங்க கிட்டே கேட்டிருந்தா சொல்லியிருப்போமே...?

 
ஹலோ, பைலட்... நான் இந்தக் கரும்புக் காட்டுக்குப் பக்கத்துல நிக்கறேன்... ஹெலிகாப்டரை இங்கே கொண்டு வர்றீங்களா..?

Posted by போவாஸ் | at 8:56 PM | 0 கருத்துக்கள்

தேர்தலை புறக்கணிக்கும் விசயகாந்து



தமிழக உள்ளாட்சி மன்றங்களில் தற்போது காலியாக உள்ள 603 பதவிகளுக்கான இடைத் தேர்தல் வரும் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
இதை தமிழக தேர்தல் ஆணையம் நடத்துகின்றது.
இதுல என்ன இருக்குன்னு கேக்குறிங்களா ? 
நம்ம வீர்ர்ரரு, தீர்ர்ரரு, சுர்ர்ரரு கேப்டன் விசயகாந்தின் தே.மு.தி.க கட்சி போட்டியிடவில்லை.
நாங்க யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம், மக்களுடனும் தெய்வத்துடனும் மட்டும்தான் கூட்டணி, மக்களைக் காக்க வந்த கருப்பு (வெறுப்பு) எம்ஜிஆர், புத்தரின் மறுபிறவி, மக்களுக்காக இருக்கும், பாடுபடும் ஒரே கட்சி,ஒரே தலைவர் என்று வெட்டி வாய்ச்சவடால்கள் பேசிக் கொண்டு இருக்கும் விசயகாந்தின் கட்சி போட்டியிடாத காரணம் என்ன ? 
 விஷயம் தெரிஞ்சும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும், புரிந்து புரியாமலும் எல்லாத்துக்கும் ஆஜராகி பேசுகின்ற விசயகாந்து இதை பற்றி வாய் திறக்காமல் எங்கயோ எஸ்கேப் ஆகிவிட்டார் போல.
தலைவர் சிக்காததால, நம்ம பண்ருட்டி (பன் & டி ) ராமச்சந்திரன்ட்ட கேட்டுருக்காங்க. 

அவரு என்னா சொல்லிருக்காருன்னா  "இப்போது நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலை நாங்கள் பெரிதாக கருதவில்லை. மத்திய தேர்தல் ஆணையத்தாலேயே தமிழகத்தில் முறையான தேர்தலை நடத்த முடியவில்லை. இப்படி இருக்கையில் தமிழக தேர்தல் ஆணையம் முறையான தேர்தலை எப்படி நடத்திவிடும்.
தேர்தலில் போட்டியிட எங்களுக்கு முரசு சின்னம் கிடைக்கவில்லை என்பதும், தேர்தலில் போட்டியிடாததற்கு ஒரு காரணமாகும். இது குறித்து நாங்கள் தேர்தல் அதிகாரிகளையும் சந்திக்கவில்லை. இந்த தேர்தலை நாங்கள் புறக்கணித்துவிட்டதாக கூறுவது தவறு, ஒதுங்கி நிற்கிறோம் என்பதுதான் சரி என்றார் அவர்".
இதெல்லாம் ஒரு காரணமா ?.

எம்.பி எலெக்சன்ல ஜெயிக்க முடியலை. மக்களுக்கு ஒன்னும் செய்ய முடியலை. சரி . 
எம்.எல்.ஏ. எலெக்சன்ல கட்சித் தலைவரைத் தவிர யாரும் ஜெயிக்க முடியல.மக்களுக்கு ஒன்னும் செய்ய முடியலை.சரி. 
இப்பொழுது உள்ளாட்சி மன்ற தேர்தலில் நிற்காமல் ஒதுங்கியது (புறக்கணித்தது) ஏன் ?.மக்களுக்கு நல்லது செய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் விலகியது ஏன் ?.
எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் வாய்ப்பு தாருங்கள். அரியணையில் அமர்த்திப் பாருங்கள் என்று தெரு தெருவாக ஊருக்கு ஊர் கத்திய, கெஞ்சிய விசயகாந்த்.....இந்த வாய்ப்பைப் ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
எம்.பி., எம்.எல்.ஏவை விட மக்களுடன் கலந்து, மக்களிடம் நெருங்கி பழகி, மக்களுக்கு செய்பவர்கள் உள்ளாட்சி மன்றங்களில் இருப்பவர்கள்தான். 
ஒரு கட்சியை நடத்தும் விசயகாந்துக்கு இது தெரியாதா என்ன ?.
போட்டியிடுவதற்கு ஆள் இல்லையா ? பொருளாதாரம் சூழ்நிலைகள் சரியில்லையா ? அல்லது அதிமுக கூட்டணிக்காக விட்டு கொடுத்து ஒதுங்கிக் கொண்டதா? .

தகுந்த பதிலனை ஓய்வு நேர அரசியல்வாதி, எங்கள் ஆசான், கேப்டன் விசயகாந்துதான் சொல்ல வேண்டும். 
மத்திய தேர்தல் ஆணையத்தாலேயே தமிழகத்தில் முறையான தேர்தலை நடத்த முடியவில்லை என்று பண்ருட்டி (பன் & டி ) ராமச்சந்திரன் சொல்லிருக்காரு. அப்படினா அடுத்த வர சட்டமன்றத் தேர்தலையும் மத்திய தேர்தல் ஆணையம்தான் நடத்தும். அப்போதும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.மிக நன்றாக இருக்கும். தேர்தல் ஆணையத்துக்கும், உங்க கட்சித் தொண்டர்களுக்கும் செலவு மிச்சமாகும்.

இவுங்கெல்லாம் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது பண்ணி...எப்போ நாம முன்னேறது..இதுக்கு பேசாம 10 திட்டத்துல 5 நல்லது 5 கேட்டது பண்ணுற நம்ம அம்மாவோ அல்லது கலைஞரோ ஆட்சில கிடைக்கறத வாங்கிகிட்டு புள்ளைங்கள படிக்க வச்சு நமக்கு நாமே முன்னேருரத தவிர வேற வழியில்லை.
நல்லது பன்றவன நம்பலாம்.
சில சமயம் கேட்டது பன்றவன கூட நம்பலாம்.
ஆனா நல்லது பண்றேன்னு நல்லது பண்றேன்னு சொல்லிட்டு திரியரவன 
நம்பவே முடியாது. 
மக்களுக்கு எப்போ புரியப் போகுதோ ?. ம்ம்ம்ம்  
கொசுறு தகவல் :
மாநில தேர்தல் அலுவலக வட்டாரங்கள் கூறியது:  2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள்தான் இப்போதும் பின்பற்றப்படுகின்றன. தே.மு.தி.க. இந்த இடைத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து எங்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. மேலும் முரசு சின்னம் குறித்து தே.மு.தி.க. சார்பில் யாரும் எங்களைச் சந்திக்கவில்லை என்று கூறப்பட்டது.
 செய்திக்கு நன்றி : தினமணி. 

Posted by போவாஸ் | at 2:05 AM | 0 கருத்துக்கள்

நகைச்சுவை துணுக்குகள் - சர்தார்ஜி ஜோக்ஸ் - 3

கொசுவலையுடன் போர்

இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டனர். என்ன செய்வது என்று இந்திய வீரர்கள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடிரென்று.ஒரு சர்தார் மட்டும் தன் மேல் கொசு வலை ஒன்றை சுற்றிக் கொண்டு, மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். நிலைகுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் ஓடி விட்டனர். சர்தாரின் வீர செயலை பாரட்டி எல்லோரும், சர்தாரிடம் கொசு வலையை போர்த்திக் கொண்டு எப்படி உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று கேட்டனர். அதற்கு சர்தார் சொன்னார், "எல்லாம் கொசு வலையை போர்த்திக் கொண்டால் குண்டு துலைக்காது என்கிற தைரியத்தில்தான், இவ்வளவு சின்ன கொசுவினாலேயே இதனுல் நுழைய முடியவில்லையே, அதை விட பெரிய தோட்டா எப்படி நுழையும்" என்றார்..இராணுவத்திலிருந்து இந்த சர்தாருக்கு ஓய்வு கிடைத்த பிறகு அவருடை மகனுக்கு அங்கே வேலை கிடைத்தது. இன்னொரு முறை போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டது. இம்முறை சர்தார்(மகன்) மட்டும் மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாக்கிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். ஆனால் எதிரிகள் திருப்பி சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டார். அங்கு அவரை பார்க்க வந்த சகவீரர் ஒருவர் கேட்டார் "உன் அப்பாவாவது உடம்பில் கொசுவலையை போர்த்திக் கொண்டு எதிரியை நோக்கி சுட்டார், நீ ஏன் ஒன்றுமே அணியாமல் வெளியே வந்தாய்?" அதற்க்கு சர்தார் சொன்னார், "நான்தான் உடம்பில் ஓடோமாஸ் (கொசு கடிக்காமல் இருக்க உடம்பில் சிக்கொல்லும் ஒரு வகை மருந்து) சியிருந்தேனே" என்றார்.

எத்தனை கோழி?
ஒரு முறை சர்தார் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார், அப்போது அவருடையை நண்பர் ஒருவர் சந்தைக்குப் போய்விட்டு கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார்.
சர்தார்: "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?"
நன்பர்: "வேறொன்றுமில்லை கோழிதான்.."
சர்தார்: "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?
நண்பர்: "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்"
சர்தார்: "அஞ்சு கோழி , சரியா?.."

அடி வாங்கிய சர்தார்கள்
இரண்டு சர்தார்கள் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.
முதல் சர்தார் சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம், அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது. போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்".
'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் மற்ற சர்தார்.
"என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்".

இரண்டாவது சர்தார் தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது. அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை. அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை. வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள். அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மற்ற சர்தார். "வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்.."

ஏன் குதிக்கிறாய்?
தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்த சர்தாருக்கு தெரு ஓரத்தில் குதித்துக் கொண்டிருந்த ஒரு ஆளைப் பார்த்ததும் அவனருகில் சென்று பார்க்க ஆர்வம். அந்த ஆள் ரோட்டில் இருந்த மேன்-ஹோல் மூடியின் மீது இருபத்தி மூனு.. இருபத்தி மூனு.. என்று எண்ணிக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தான்.
சர்தார் ஆர்வம் தாங்காமல் அவனிடம் போய், என்ன விசயம் இருபத்தி மூனு.. இருபத்தி மூனுன்னு குதிச்சுகிட்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான், நான் என்னவென்று சொல்வதைவிட நீயே போய் உள்ளே பார்த்தால் நல்லா தெரியும் என்று சொன்னான். சர்தாரும் குழிக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க உள்ளே இறங்கினார். அவ்வளவுதான், அந்த ஆள் உடனே மேன்-ஹோலை மூடியை போட்டு மூடிவிட்டு அதன் மேல் ஏறி மறுபடியும் குதிக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் இந்த முறை இருபத்தி மூனுக்கு பதில், இருபத்திநாலு.. இருபத்திநாலு.. என்று எண்ணத் தொடங்கினான்

Posted by போவாஸ் | at 7:21 PM | 0 கருத்துக்கள்

மம்மி ரிடன்ஸ்

மம்மி ரிடன்ஸ்


லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. எதிர்பாராத இந்த தோல்வியால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா தனது தோழியோடு கடந்த மே 30ம் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் விட்டார். தொடர்ந்து அங்கேயே தங்கியுள்ளார்.
அங்கிருந்தபடி கட்சிப் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளார். கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றை நடத்தினார். எஸ்.வி.சேகர், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்கினார். தினசரி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். பல்வேறு போராட்டங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார். இடையில் நடந்த ஐந்து தொகுதி சட்டசபை இடைத் தேர்தலையும் புறக்கணித்தார்.
ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் போய் விட்டதை எதிர்க்கட்சியினர் விமர்சித்து கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அக்டோபர் 17ம் தேதி அதிமுக ஆண்டு விழா வருகிறது. எனவே இதில் ஜெயலலிதா கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. எனவே இதற்கு வசதியாக அக்டோபர் முதல் வாரமே அவர் கொடநாட்டிலிருந்து சென்னை வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் தொய்வடைந்து போய்க் கிடக்கும் அதிமுகவினருக்கு புத்துணர்ச்சியூட்ட முடியும் என அவர் நம்புகிறாராம்
நன்றி: தட்ஸ்தமிழ்.

Posted by போவாஸ் | at 2:38 PM | 0 கருத்துக்கள்

போட்டோ கமெண்ட்ஸ் - 1

 
உள்நாட்டு பாதகாப்பு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, மறுபடியும் 
எப்போ ஆப்பு வைக்கப் போறாங்கனு ஒரு பக்கம் பயமாவும் இருக்கு.

 
என்னய்யா...பாஜகவ ஆட்டம் காண வச்சது போதுமா ?...
இன்னும் வேணுமா ?

 
தமிழ்நாட்டையும், தமிழர்களையும் இந்தியாவுல இருக்கிரதாவே மத்திய அரசு நினைக்கலை. ஒபாமாட்ட சொல்லி தமிழ்நாட்டை அமெரிக்காவோட சேத்துக்கோங்க. நாங்கெல்லாம்,அமெரிக்கத் தமிழர்கள் ஆய்டுறோம்.

 
எவ்வளவுதான் மேக்கப் போடாம அரசியல்ல வேஷம் போட்டாலும்..
அதுக்குன்னு நாலு ஜனங்க வரத்தான் செய்யுது.அவுங்க 
தலையேலுதத யார் மாத்த முடியும்.

 
தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து  
"நாமம்" 
போடுறதை இப்படி சிம்பாலிக்கா காட்டுறிங்களா.

photos: dinamalar.com 

Posted by போவாஸ் | at 5:20 PM | 0 கருத்துக்கள்

நகைச்சுவை துணுக்குகள் - சர்தார்ஜி ஜோக்ஸ் - 2

எது என் குதிரை..?
குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.
சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".
அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார். அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வைத்துக் கொண்டு நின்றது. இதைப்பார்த்து கவலைப்பட்ட சந்தா சொன்னார், "சரி இனி சிகப்பு குதிரை உன்னது, வெள்ளை என்னது" 

வேலை வாய்ப்பகத்தில்...  
அரசு பணிக்காக வேலை வாய்ப்பகத்தில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துக்கொண்டிருந்தார் ஒரு சர்தார். மிக கவனமாக ஒவ்வொன்றாக படித்து பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார். SEX என்று குறிப்பிட்டிருந்த இடத்திற்கு என்ன எழுதுவது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, 'மாதம் ஒரு முறை குறிப்பிட்டார்.இதை கவனித்த அருகில் இருந்த ஒருவர், சர்தாரிடம் சொன்னார், "அதில் ஆணா அல்லது பெண்ணா என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்" என்று சொன்னார். உடனே சர்தார், 'ஆண்/பெண் NN blem' என்று திருத்தி எழுதினார். அதற்க்கு பிறகு Salaaa EEEecced: என்ற இடத்தில் 'Yee' என்று எழுதினார். விண்ணப்பத்தின் கீழ் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்த குறிப்புகளை படித்துவிட்டு (IIIIIIcciii), உடனே விண்ணப்பத்தை கிழித்து போட்டு விட்டார். பக்கத்திலிருந்த ஒருவர் "ஏன் என்னாச்சு கிழித்து போட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டதற்கு சர்தார் சொன்னார், "நான் இப்ப அவசரமா டெல்லி போகனும், ஏன்னா இந்த விண்ணப்பத்தை அங்கதான் பூர்த்தி செய்யனும்னு இதிலே போட்டிருக்கு" என்றார். அருகிலிருந்தவர் குழம்பிப் போனவராய், "எங்கே அப்படி போட்டிருக்கு காண்பிங்க பார்க்கலாம்" என்றதற்க்கு, சர்தார் காண்பித்த இடத்தில் " Fill The Application In Capital" என்று எழுதியிருந்தது.. 

என்னையா முந்துகிறாய்..
ஒரு இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக்கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்தனர். முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப் போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ் நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்.. 

எத்தனை இட்லி?
ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார்.அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார், 'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார். உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்.. 
சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார். 

ஹாஸ்பிட்டலில் நண்பர்
நோய்வாய்பட்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்றுவிட்ட நண்பரை பார்க்க சர்தார் ஒருவர் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்றுக் கொண்டிருந்த சர்தார், நண்பரின் நிலைமை திடிரென்டு மிகவும் மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார். அந்த நிலையில் பேச முடியாத நண்பர் செய்கையால் ஒரு பேப்பரும், பேனாவும் வேண்டுமென கேட்டார். அவசரமாக ஏதோ எழுதி கொண்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே அவரைவிட்டு பிரிந்தது. சர்தார் அந்த பேப்பரில் தன் குடும்பத்துக்கு ஏதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்கக் கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பைக்குள் வைத்துக் கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் சர்தார், நண்பர் வீட்டுக்கு போய் துண்டு பேப்பர் விஷயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி அதைப் படித்துப் பார்க்க சொன்னார். பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி மயக்கம் போட்டு கீழேயே விழுந்துவிட்டார், அப்பொழுதுதான் சர்தார் அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார். அதில் "நீ என் ஆக்சிஜன் குழாய் மீது நின்றுக் கொண்டிருக்கிறாய் என்று எழுதியிருந்தது.." 

Posted by போவாஸ் | at 11:35 AM | 1 கருத்துக்கள்

தெரிந்துகொள்வோம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகுதி 3

மாநில தகவல் ஆணையம் 
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15ன்படி, தமிrநாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீr 07.10.2005 முதல் இயங்கி வருகிறது. 

பொது தகவல் அலுவலர் மற்றும் உதவி பொது தகவல் அலுவலர் நியமனம் 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு (1)ன்படி, தகவலுக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு,
தகவல் அளிக்க ஏதுவாக, ஒவ்வொரு அலுவலகங்களிலும், பொது தகவல் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். மேலும் உட்பிரிவு 2ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றை பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். (தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் தகவல் பெறுவதற்காக பொது தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், நிகரி எண் போன்றவைகள் தரப்பட்டுள்ளன.

தகவல் பெறுவதற்குச் செய்ய வேண்டிய நடைமுறை 
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6ன்படி, தகவல் பெற விரும்பும் நபர், ஆங்கிலம் அல்லது தமிழ்மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர்களிடத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான இன்றைய கட்டணமான ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) பணமாகவோ வரைவோலையாகவோ அல்லது அரசு கருவூல சீட்டு மூலமாகவோ, அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தன்னால் கோரப்படும் தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாதவிடத்து, அதனை எழுத்து வடிவில் கொணர்ந்திட தகுந்த, எல்லா உதவிகளையும் பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர் செய்திட வேண்டும்
தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடமிருந்து அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் கூடாது. மேலும், அவரை தொடர்பு கொள்வதற்காக தேவையான விவரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் தகவல் பெற விரும்புபவர்களிடமிருந்து கோருதல் கூடாது. 

ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிறவிடத்து, அந்தத் தகவல்; (அ) பிரிதொரு அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக; அல்லது அதன் உறு பொருள் பிறிதொரு அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற் பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்குமிடத்து, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து, அத்தகைய மாற்றல் குறித்து விண்ணப்பதாரருக்கு உடனடியாக தெரிவிக்கப்படல் வேண்டும். 
இதனை இயன்ற அளவு விரைவாக செய்திடல் வேண்டும். எந்நேர்விலும் அந்த விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்குமிகைபடாமல் செய்யப்படவேண்டும்.

Posted by போவாஸ் | at 11:30 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails