முல்லா ஸ்பெஷல் - III

காதலும் திருமணமும்

ஒரு பெண் முல்லா நசுருதினிடம் “ நீ என்னை காதலிக்கிராயா ? “ எனக் காதில் கிசு கிசுத்தாள்.


முல்லா “ கண்டிப்பாக , நாண் உண்னை காதலிக்கிரேன், இதில் என்ன சந்தேகம் ? “ என பதில் கூறினாள்

“ அப்படியானால் என்னை திருமணம் செய்துகொள்வாயா ?” என அந்தப் பெண் கேட்டாள்

“ நாம் பேசிக்கொண்டிருக்கும் விசயத்தை விட்டுவிட்டு ஏன் வேறு விசயத்திற்க்கு மாறுகிறாய் ? எனக்கேட்டார்.

துண்டைக் காணோம் துணியைக் காணோம்

முல்லா தனது நன்பர்களுடன் வேட்டைக்குச் சென்றார், வழியில் ஒரு சிங்கத்தை அவர்கள் கண்டுவிட்டனர், அந்த சிங்கமும் இவர்களைப் பார்த்து துரத்த ஆரம்பித்தது, நண்பர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு திசையாக துண்டை காணோம் துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்தனர். ஆனால் பாவம் முல்லாவினால் சிங்கத்தின் பார்வையிலிருந்து தப்பமுடியவில்லை, சிங்கம் அவரை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது.

நண்பர்கள் முல்லாவின் கதை முடிந்தது என்றே நினைத்தனர். மிகவும் கவலையுடன் ஊருக்குள் வந்து சேர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு முன்னால் முல்லா ஊருக்குள் வந்து சேர்ந்திருந்தார்,நண்பர்களுக்கு தங்களின் கண்களையே நம்ப முடியவில்லை . அவர்கள் முல்லாவை பார்த்து “அடப்பாவி! எப்படி சிங்கத்திடம் இருந்து தப்பித்தாய் ! ” என வினவினர்

முல்லா “ நான் வந்த திசையிலே விடாமல் துரத்தி வந்தது சிங்கம் ! நானும் விடாமல் ஓடிவந்தேன் , எனக்கும் சிங்கத்திற்க்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தது, சிங்கம் என் மிக அருகில் நெருங்கி என் மீது பாயும் சமயம் ஒரு சிறிய பள்ளத்தாக்கு குருக்கிட்டது , நான் அதை உயிரைக்கொடுத்து தாண்டினேன் ! சிங்கம் தாண்டும் போது வழுக்கிவிழுந்தது! “ எனச் சொன்னார்

அப்போது அந்த நண்பரில் ஒருவர் “ முல்லா நீங்கள் மிகவும் தைரியசாலி , நாங்களாக இருந்தால், பயத்தில் பேன்டு ஒழப்பியிருப்போம் “ என்றார்

முல்லா “ பின்னே சிங்கம் எப்படி வழுக்கிவிழுந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் ?! “ என்றார்

எனது தாத்தாவுக்கு ஆறு இஞ்ச்!

முல்லா நசுருதீன் ஒரு பரம்பரை பிரியர்.


குளிருக்காக ஒரு அதிசய கருப்பு நிறக் கோட்டை அணிந்திருந்தார் இதை கண்ட அவரது நண்பன் , “ என்ன முல்லா உனது கோட் மிகவும் பழையதாக் உள்ளது “ என்று கேட்டான்.

முல்லா “ இதை அணிந்து கொள்ளும் பழக்கம் எங்கள் இல்லத்தில் பரம்பரையாக உள்ளது ,என்னுடைய தாத்தாவும் இதை அணிந்திருந்தார். என்னுடைய தந்தையும் இதையே அணிந்திருந்தார்; இப்போது இதனை நான் அணிந்துள்ளேன் “ என்று பெருமையுடன் கூறினார்.

“ நீ ஏன் தாடி வைத்துள்ளாய் ? “என்று கேட்டான் முல்லாவின் நண்பன்.

“ தாடி வளர்ப்பதும் எமது பரம்பரை வழக்கமே ! எனது தாத்தாவிற்க்கு ஆறு இஞ்ச் தாடி இருந்தது . எனது தந்தைக்கும் ஆறு இஞ்ச் தாடி இருந்தது!”. என்றார் முல்லா.

“ முல்லா, இதுவரை நீ ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை ? அது கூட உன்னுடய குடும்பத்தின் ஏதாவது பழைய பரம்பரை பழக்கமா ? “ என்று கேட்டான் நண்பன்.

“ அதில் என்ன சந்தேகம் ! “ என்ற முல்லா உணர்ச்சிவசப்பட்டு , “ என்னுடைய தாத்தாவும் வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாதவராக இருந்தார். பிறகு எனது தந்தையும் அவ்வாறு திருமணம் இல்லாதவராக இருந்தார். நானோ எனது பரம்பரை பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன்!”என்றார் பெருமையுடன்!


மேலே ஏறுவது மிக கஷ்டம்

முல்லா தனது வீட்டின் கூறை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் , முல்லா மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் “ என்ன விசயம் எதற்க்காக என்னை கிழே வருமாறு அழைத்தீர்கள் “ எனக்கேட்டார்.


அந்த சாமியார் “ நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்! அதை சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது! அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன் , மன்னிக்கவும் “ என்றார்

உடனே முல்லா “ எடுப்பது பிச்சை இதில் போலி கவுரவம் வேறு ! சரி பரவாயில்லை என்னுடன் வா” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூறை மேல் ஏறினார். 

அந்த சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலை கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கோண்டு முல்லாவை தொடர்ந்தார்

சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , முல்லா மீண்டும் தனது வேலையை பார்க்கத்தொடங்கினார்.

சாமியார் “ எனக்கு என்ன தருகிறீர்கள் ? “ எனக் கேட்டார் சற்று பொறுமை இழந்தவராக

முல்லா “ என்னிடம் கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை, sorry ! “ என்றார்

சாமியார் “ முட்டாள் ! இதை கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய் ! “

முல்லா “ என் பக்கத்து வீட்டுக்காரன் இருந்தான் அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல வெட்க்கமாக இருந்தது அதான்- மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது ( கஷ்டத்தையாவது) உனக்கு தானமாக கொடுக்கலாம் என்று உன்னை அழைத்தேன்! ஹீ ஹி… “ என்றார்

“ அனுபவப் பாடம் எப்போதுமே உபயோகமானது"

இன்று இரவை வித்யாசமாக அனுபவிப்போமா ?

முல்லா தனது மனைவியிடம் “ இன்று இரவை நாம் சற்று வித்யாசமாக முற்றிலும் நேர் மாறாக அனுபவிப்போமா ? “


அவரது மனைவி “ ???? , சொல்லித்தொலை எப்படியென்று ! “ என்றாள்

முல்லா “ இன்றைக்கு நீ எனக்கு முத்தம் கொடு, ஒரு மாறுதலுக்காக நான் உன் கன்னத்தில் அறைகிறேன் “ என வழிந்தார்

முதலில் எனக்கு ஒரு முத்தம் கொடு!

முல்லாவும் அவரது நன்பர் ஷேக் அப்துல்லாவும் அடர்ந்த காட்டில் வழிதவறி மாட்டிக்கொண்டனர், மாலை கடந்து இரவும் வந்தது. அந்தக் காடு மிகவும் கொடிய மிருகங்கள் நிறைந்த காடு , அதனால் அன்று இரவு முழுதும் அவர்கள் முழித்திருக்க வேண்டிய கட்டாயம், அல்லது ஏதாவது மிருகங்கள் அவர்களை கொன்றுவிடக்கூடும். அதனால் அவர்கள் இருவரும் நாம் முழித்திருப்போம் என உறுதி கொண்டனர்.


நேரம் கடந்து கொண்டிருந்தது , அவர்கள் எவ்வள்வோ முயன்றும் தூக்கம் வந்தது. முல்லா சொன்னார் “ நாம் இப்படியே இருந்தால் தூக்கம் வருவதை தடுக்க முடியாது ! அதனால் இதற்க்கு ஏதாவது கண்டுபிடி , எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது பகல் முழுதும் நடந்த களைப்பு ! “

அப்துல்லா “ என்னை என்ன செய்ய சொல்கிறாய் ? “எனக் கேட்டார்

அதற்க்கு முல்லா “ நாம் இப்படி செய்தால் என்ன ? நாம் ஒரு விளையாட்டு விளையாடுவோம், கண்டுபிடிக்கும் விளையாட்டு – ஏதாவது ஒரு நடிகையைப் பற்றிய குறிப்பு சொல்வது அதை மற்றவர் கண்டுபிடிப்பது ! “ என சொன்னார்

அப்துல்லா “ சூப்பர் ஐடியா ! இதை எப்படி ஆரம்பிப்பது ? “ எனக் கேட்டார்

முல்லா “ ம்.. முதலில் நீ உன்னை ஒரு நடிகையாக நினைத்து விவரி நான் கண்டுபிடிக்கிறேன், பிறகு நான் விவரிக்கும் போது நீ கண்டுபிடி “

அப்துல்லா “okey! wait “என்றார் பிறகு சிறிது நேரம் யோசித்துவிட்டு “ எனது கண்கள் சிநேகாவின் கண்கள் போன்றது, இடை சிம்ரன் போன்றது , தொடை ரம்பா போன்றது மற்றும் எனது இத்யாதி இத்யாதி “என விவரித்தார்

அவரது வர்ணனை கேட்க கேட்க முல்லா மிகவும் உண்ர்ச்சிவயப்பட்டார்,அவரது இரத்த நாளங்கள் துடித்தது . இருட்டிலும் அவரது கண்களில் அது பிரதிபலித்தது . அப்துல்லா மேலும் தொடர்ந்தார் “ எனது உடம்பின் அளவுகள் 36-24-36 இப்போது சொல் நான் யார்” என்று அப்துல்லா முடிக்கும் முன் முல்லா எழுந்து அப்துல்லாவின் மீது பாய்ந்தார்.

அப்துல்லா “ பொறு ! நான் யார் கண்டுபிடி “ என்று சொன்னார்.

முல்லா “ கண்டுபிடிப்பதைப் பற்றி யாருக்கு கவலை! நீ யார் என்பது பற்றிய கவலை எனக்கில்லை ! முதலில் எனக்கு ஒரு முத்தம் கொடு!” என்றார்

“மனிதனின் மனதின் நிலை இதுதான் , கனவு மற்றும் ஆசைகளால் உண்மையை உண்ர்வதில்லை ! மனிதன் கனவுகானத் துவங்குகிறான் பிறகு அதன் பிடியில் மாட்டிக்கொண்டு தன்னை இழக்கிறான்! “

Posted by போவாஸ் | at 3:31 PM | 0 கருத்துக்கள்

பிரபாகரன் என பெயர் வைத்தால் கைது செய்ய முடியுமா ?


பிரபாகரன் என பெயர் வைத்தால் கைது செய்ய முடியுமா? வைகோ

 தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் என்றால், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கும் அனைவரையும் கைது செய்ய முடியுமா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புரசைவாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வைகோ இவ்வாறு பேசினார்.

நம்ம வைகோக்கு தமிழக அரசின் எச்சரிக்கை செய்தியை ஒழுங்காக படிக்கவில்லை போலும். ஒரு வேளை புரியவில்லையோ ?.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி :


தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌‌க்க‌ங்களை ஆத‌ரி‌‌த்து‌ப் பேசுபவ‌ர்க‌ள் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை ‌வி‌டு‌த்து‌ள்ளது.

மேலு‌ம் தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌‌ங்க‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள் பட‌‌ங்க‌ள், கொடி, இல‌ச்‌சினைகளை (மு‌த்‌தி‌ரை) பொது ‌விள‌ம்பர‌ங்களு‌க்கு உபயோ‌கி‌த்த‌ல், ப‌த்‌தி‌‌ரி‌க்கை, தொலை‌க்கா‌ட்‌சி‌க‌ளி‌ல் ‌பிரசு‌ரி‌த்த‌ல், கா‌ண்‌பி‌த்த‌ல் ஆ‌கியவை Unlawful Activities (Prevention) Act, 1967 படி த‌ண்டனை‌க்கு‌ரிய கு‌ற்ற‌ங்களாகு‌ம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

எனவே பொது‌க்கூ‌ட்ட‌ங்க‌ள், மாநாடு, பேர‌ணி போ‌ன்றவ‌ற்றை நட‌த்துபவ‌ர்க‌ள் யாரா‌யினு‌ம், எ‌ந்த அமை‌ப்பை‌ச் சா‌ர்‌ந்தவ‌ர்களா‌யினு‌ம் இதை மன‌தி‌ல் கொ‌ள்ள வே‌ண்‌டு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

இதனை ‌மீறுபவ‌ர்க‌ள் ‌‌மீது ச‌ட்ட‌ப்படி கடுமையான நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

தமிழக அரசின் செய்திக் குறிப்பில் பிரபாகரன்  என்று ஒரு இடத்தில் கூட இல்லையே....பின்னர் ஏன் வைகோ இப்படி கூறியுள்ளார்.

ஒ...கேரளா போயிட்டு திரும்பி வந்துட்டேன்னு காட்ரதுக்கா ?

ஒண்ணுமே புரியலையே...... 

Posted by போவாஸ் | at 11:18 AM | 1 கருத்துக்கள்

ரகசியத்தை தருவாரா விஜயகாந்த் ?.


தகவலை ரகசியமாகத் தாருங்கள் : விஜயகாந்துக்கு கருணாநிதி பதில்

சென்னை, ஆக. 18: ""இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தொடர்பாக, ரகசியமாகத் தகவல் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


  இதுதொடர்பாக, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

"ஐந்தாவது கட்டமாக 2009 - 2010-ம் நிதியாண்டில் சுமார் 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பெற்று வழங்கிட ரூ. 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்படி வழங்கப்பட்டுவரும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஏதோவொரு தெரிந்த மருத்துவமனைக்கு கொடுத்து விட்டதாக ஒருவர் குறை கூறினார். உடனே, அது எந்த மருத்துவமனை என்று விளக்கம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தேன்.

ஆனால், குற்றம்சாட்டியவரே எந்த மருத்துவமனை என்பதை அரசே கண்டுபிடிக்க வேண்டுமென்று சொல்லி விட்டார்.

அப்படியொரு மருத்துவமனை இருந்தால்தானே கண்டுபிடிக்க முடியும். உண்மையில் தவறு களையப்பட வேண்டுமானால் குற்றம்சாட்டியவர் அந்த மருத்துவமனையின் பெயரைச் சொல்ல வேண்டும்.

வெளிப்படையாகச் சொல்வது தவறு என்று நினைத்தால், அந்தத் தகவலை அரசுக்கு ரகசியமாகக் கூறினால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராகவே உள்ளது'' என்றார்.

நன்றி : தினமணி. 

               --------------------------------------------------------------

ரகசியத்தை தருவாரா விஜயகாந்த் ?.


இந்த விஜயகாந்துக்கு ஒரு பழக்கம் உண்டு.

அடுக்கு அடுக்கா குற்றம் சொல்லுகிற பழக்கம். என்ன குற்றம், குற்றத்தின் விளக்கத்தைக் கூறு, எங்கே நடந்தது, எப்படி நடந்தது என்று கேட்டால்...அதற்கு பதில் சொல்லத் தெரியாமல், முழி பிதுங்கி அடுத்த குற்றச்சாட்டுக்குத் தாவி விடுவார்.

சரி விஷயத்திகு வருவோம்.

தமிழக மாநிலத்தின் முதல்வர் இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டத்தைக் கொண்டு வந்து அதை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலின் பிராச்சாரத்தின் பொது இந்த விஜயகாந்த் கூவிய குற்றச் சாட்டுகளில் " தமிழக அரசு வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டிகள், எதோ ஒரு தெரிந்த மருத்துவமனைக்கு கொடுத்துவிட்டதாக குற்றச்சாட்டினைக் கூறி, அதற்கான புகைபடங்களை பிரச்சார வேன் முன் இருந்த மக்களிடம் மட்டுமே காட்டினார். 

அதை அவர் முறையாக வெளியிடவில்லை, பத்திரிக்கைகளிலும் வெளி வரவில்லை.

இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறிய அன்றே, விஜயகாந்துக்கு கலைஞர் அவர்கள் பதிலடியாக அல்லாமல், பக்குவமாக , ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற பொறுப்புணர்வோடு அது எந்த மருத்துவமனை சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கேட்டார்.

அதற்கு, பதில் சொல்லத் தெரியாமல் முழித்த விஜயகாந்த் அந்த மருத்துவமனையை தமிழக போலீசாரிடம் சொல்லி கண்டுபிடிக்க சொன்னார்.

மீண்டும் கலைஞர் அவர்கள், குற்றச்சாட்டை கூறிவிட்டு அதற்கு தொடர்புடைய விளக்கங்களையும், ஆதாரங்களையும் தாராமல் இருந்தால் எப்படி என்று கேட்டார். 
அட, அந்த மருத்துவமனை பெயராவது சொல்லுங்கள் என்று கேட்டார்.

அப்பொழுதும் இந்த விஜயகாந்து ஒரு பதிலும் சொல்லாமால், தேர்தல் பிரச்சாரத்தில், ஒரு பக்கம் கலைஞரையும் ஒரு பக்கம் தி.மு.கவையும் திட்டிக் கொண்டும், அதை செய்வேன் இதை செய்வேன் என்று கூவிக் கொண்டு இருந்தார்.

கூவுவது அவரது இஷ்டம். அதை கேட்பதும் கேட்கமால் இருப்பதும் நம் மக்கள் இஷ்டம்.

ஆனால், இவர் கூறிய குற்றச்சாட்டுக்கான விளக்கத்தை இவர் தர வேண்டுமல்லவா ?.

சாதாரணமாக நம் வீட்டில் ஒரு பொருள் காணவில்லையென்றால், வீட்டில் இருப்போரிடம் நாம் கேட்போம் அல்லவா?.

எவ்வாறு கேட்போம்.....இந்த இடத்தில், இந்த பொருள் வைத்து இருந்தேன்...அதை இப்பொழுது காணவில்லை ...யாரேனும் பார்த்தீர்களா என்று கேட்போம். தெரிந்தவர்கள் பார்த்தேன் என்று சொல்வார்கள். தெரியாதவர்கள் எனக்கு தெரியாது என்று சொல்வார்கள். 

எனக்கு தெரியும், ஆனால் நான் சொல்ல மாட்டின் என்று ஒருவர் சொன்னால்...அந்த மனிதருக்குள் இருக்கும் வில்லத்தனனும், விசமத்தனமும், பொய்யும், வேஷமும்தான் வெளிப்படும். பொருளைத் தொலைத்த்வருக்கு கோபம் வருமா வராதா?.

அதை போலவே, மாநிலத்தின் முதல்வர் முறையாக கேட்கும் போது, இவர் இந்த இடத்தில் உள்ள மருத்துவமனை, அதன் பெயர் இது என்று விலாவாரியாக சொல்ல வேண்டியதுதானே ?. அதிலே என்ன சிக்கல் ?. இல்லை பயமா? இல்லை வேறு காரணங்கள் உண்டா? 

இவர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்றால்..ஆதாராங்களுடன் பத்திரிக்கைகளுக்கும், அரசுக்கும் கொடுக்க வேண்டியதுதானே ?. 

இன்று மீண்டும் கலைஞர் அவர்கள், தனிப்பட்ட முறையில் ரகசியமாகவாது சொல்லுங்கள் என்று கேட்டுவிட்டார்.

மூன்றாவது முறையாக கேட்டுவிட்டார்.

ஒரு பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக இருக்கும் இந்த விஜயகாந்த் இப்பொழுதாவது சரியான் விளக்கங்களைத் தருவாரா?.

இவர் இனியும் தரவில்லையென்றால்...இவரை என்னவென்று சொல்வது ?.

இவர் பொய் குற்றச்சாட்டை கூறியுள்ளாரா? என்ற சந்தேகம் எழுகின்றது.

கருப்பு (இருட்டு) எம்.ஜி.ஆருக்கே வெளிச்சம்.

Posted by போவாஸ் | at 2:35 AM | 0 கருத்துக்கள்

என்ன கொடுமை சரவணன்....?

Posted by போவாஸ் | at 2:30 AM | 0 கருத்துக்கள்

விண்டோஸும் விஜயகாந்தும்

Posted by போவாஸ் | at 2:21 AM | 0 கருத்துக்கள்

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு ... இது கேப்டனோட ஸ்டைலு.

Posted by போவாஸ் | at 2:11 AM | 0 கருத்துக்கள்

"சின்ன கவுண்டர்" வடிவேலு.

Posted by போவாஸ் | at 1:43 AM | 0 கருத்துக்கள்

திருவிளையாடல் Vs 23ம் புலிகேசி

Posted by போவாஸ் | at 12:37 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails