முன்கூட்டியே வருகிறது தேர்தல் : முதல்வர் அறிவிப்பின் பின்னணி



தனது கடுமையான உழைப்பால் சிகரத்தை தொட்டவர்;
தி.மு.க., என்ற ஆலமரத்தின் ஆணிவேராக இருந்து கட்சியைத் தாங்கி நிற்பவர்;
ஐந்து முறை தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்தவர்:
என முதல்வர் கருணாநிதியின் வரலாற்றுப் பக்கங்கள் பல்வேறு சாதனைகளால் நிரம்பியிருக்கிறது.


இந்த சாதனைப் பயணம் தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், முதல்வரின் சமீபத்திய அறிவிப்பு அனைவரையும் திகைக்கச் செய்துள்ளது.

"எனது மிச்சமிருக்கின்ற லட்சியங்களான, புதிய சட்டசபை வளாகம், அண்ணா துரையின் பெயரிலான புதிய நூலகம், உலக தமிழ் செம்மொழி மாநாடு ஆகியவை முடிந்த பின், பதவியில் இருந்து விலகி உங்களில் ஒருவனாகப் போகிறேன்' முதல்வருக்கு மிகவும் பிடித்த இடமான, வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பாராட்டு விழாவில், பேசும்போது, முதல்வர் குறிப்பிட்ட வார்த்தைகள் இவை. "ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர்' என பலராலும் புகழப்படும், முதல்வரின் இந்த "திடீர்' அறிவிப்புக்கான காரணம் புரியாமல் கலங்கியிருக்கின்றனர் உடன்பிறப்புகள்.

முதல்வரின் இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி அரசியல் அரங்கிலும் பெரிய விவாதமாக எழுந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு, முதல்வரின் வயோதிகத்தைக் குறிப்பிட்டு, "அவர் ஓய்வு பெற வேண்டும்' என எழுதியதற்காக ஒரு செய்தி விமர்சகர், உடன்பிறப்புகளால் கடுமையாக கண்டிக்கப்பட்டார். அப்படியிருக்க, தற்போது முதல்வரே தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அரசியலில் சோதனையான காலங்களில் எல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்ட முதல்வர் கருணாநிதி, 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போதே, "இதுதான் எனக்கு கடைசி தேர்தல்' என்று கூறி தேர்தலைச் சந்தித்தார். ஆனால், அதன்பின் தனது முடிவை மாற்றிக் கொண்டு, 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளார். முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி தற்போது விலகக் கூடாது என்பதே மூத்த நிர்வாகிகளின் எதிர் பார்ப் பாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம், முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி விலகினால், அவருடன் தற்போது மூத்த அமைச்சர்களாக உள்ள அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். எனவே, "முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி விலகக் கூடாது, பதவி காலம் முடிய அவரே முதல்வராக தொடர வேண்டும். வரும் சட்டசபை தேர்தலின் போது வேண்டுமானால், முதல்வர் பதவிக்கு, அவர் ஸ்டாலினை முன் மொழியலாம்' என்று மூத்த அமைச்சர்கள் எதிர்பார்க்கின்றனர். 

அவர்களின் எதிர்பார்ப்பு பொய்க்காது என்பதைப் போல், "அரசியலில் இருந்து விலகினால், யாரிடம் பொறுப்பை ஒப்படைக்கப் போகிறீர்கள்' என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், "செம்மொழி மாநாடு முடிய நீண்ட காலம் இருக்கிறது. அதுவரை பொறுத்திருங்கள்' என, "சஸ்பென்சை' நீட்டியுள்ளார்.

இவற்றை மறுக்கவோ, ஏற்கவோ விரும்பாத மூத்த தி.மு.க., நிர்வாகி ஒருவரோ, "முன்கூட்டியே தேர்தல் வரப் போகிறது' என்ற தனது கருத்தை வெளிப்படுத்தினார். அந்த நிர்வாகி கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி தொடர்ந்தாலும், அவர்கள் தரப்பில் பெரிய அளவில் நெருக்கடி ஏதும் இல்லை; ஏற்படாதவாறு முதல்வர் பார்த்துக் கொண்டார். ஆனால், முதல்வரை சீண்டும் வகையில், "மைனாரிட்டி தி.மு.க., அரசின் முதல்வர்' என்ற வார்த்தையை தினந்தோறும் ஜெயலலிதா கூறி வருகிறார். இந்த வார்த்தை மேல் முதல்வருக்கு இருந்த கோபம் தான் "திருமதி' சர்ச்சை வரை நீண்டது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தேர்தல் களம் கண்டு, தனிப் பெரும்பான்மை பெற வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் "டிவி'யில் துவங்கி சமீபத்திய "ஹிட்'டான இலவச காப்பீட்டுத் திட்டம் வரை, மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்ந்திருக்கிறது. அதன் பலனை உடனே அறுவடை செய்ய உரிய காலம் இது. இலங்கைத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை தங்கள் வசிப்பிடங்களுக்கு அனுப்பும் பணிகள் ஒரு புறம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

செம்மொழி மாநாட்டை நடத்தி முடித்த கையோடு, சட்டசபை தேர்தலை சந்தித்து, புதிய சட்டசபை வளாகத்தில், "சிறுபான்மை' தகுதியை மாற்றி தனிப் பெரும்பான்மை அரசாக மாற்ற வேண்டும்; கட்சித் தலைமையையும், ஆட்சியையும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்திற்கு, சாதகமான காலம் இப்போது கனிந்துள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான், முதல்வர் விலகலுக்கு நாள் குறித்துள்ளார். இதை நோக்கியே கட்சியின் அடுத்தகட்ட நடவடிக் கைகள் முடுக்கி விடப்படும். முதல்வரை உணர்ந்தவர்கள், அவரின் இந்த எண்ணத்தை உணர்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Posted by போவாஸ் | at 10:44 PM | 0 கருத்துக்கள்

சோதனை எலிகளாகும் இந்தியர்கள்!

மரபணு மாற்று கத்திரிக்காயை இந்திய அரசின் விவசாயத்துறை சோதனைரீதியாக பயிரிட அனுமதி-செய்தி
இந்த செய்தி பெரும்பான்மை மக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இயற்கையை நேசிப்பவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து போராட்டங்

களை நடத்தினர். அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளை இவர்கள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மரபணு மாற்று பயிரில்? என்ற கேள்வி நம்மில் இயல்பாகவே எழும். இந்த கேள்விகளுக்கு விடை காணும் முன், முதலில் மரபணு மாற்றுப் பயிர் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

மரபணு மாற்று பயிர்

நாம் ஒரு வீடு கட்ட நினைக்கும் போது அந்த வீட்டிற்கான மாதிரியை உருவாக்குவோம். ஆங்கிலத்தில் அதை புளூ பிரிண்ட் என்று அழைப்பார்கள். இதில் அந்த வீட்டின் நீளம், அகலம், வாசல், ஜன்னல் ஆகியவை எங்கே அமைய வேண்டும், எந்த வடிவத்தில் அமைய வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும்.

இதேபோல் ஒவ்வொரு உயிரினங்களின் உடல் அமைப்பு, நிறம், உயரம், அளவு, பண்புக்கூறுகள் என வரைபடமாக உள்ளது தான் மரபணுக்கள். உதாரணமாக நாம் கருப்பாக இருப்போமா? உயரமா? குட்டையா? சுருட்டை முடியா? பூனைக் கண்ணா? என்று ஒரு மனிதனின் அத்தனை அடையாளங்களையும் உள்ளடக்கிய தகவல் களஞ்சியமே மரபணுவில் உள்ளது.

இந்த மரபணுக்களில் மாற்றங்கள் செய்யும் போது உயிரினங்களின் அடிப்படை குணாம்சங்களை கூட மாற்றிவிட முடியும். மரபணு மாற்றம் என்பது தற்போது மருத்துவ துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரபணு மாற்றத்தை விவசாயத்துறையிலும் புகுத்தி இயற்கை விவசாயத்தை தலைகீழாக மாற்ற தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

எதற்கு இந்த மரபணு மாற்றம்? 

உதாரணத்திற்கு கத்தரிக்காய் விதைகளை மரபணு மாற்றம் செய்து ஒரு கம்பெனி வெளியிடுகிறது என்றால் அதற்கான காப்புரிமையை அந்த நிறுவனம் பெற்றுக் கொள்கிறது. அந்த குறிப்பிட்ட பயிரின் விதையை காப்புரிமை பெற்ற நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனமும் விற்பனை செய்ய முடியாது உற்பத்தியும் செய்ய முடியாது, ஏன் அந்த பயிரைப் பயிரிடும் விவசாயி கூட அந்த விதைகளை மறுபடியும் உற்பத்தி செய்ய முடியாது! அது எப்படி என்றால் குறிப்பிட்ட நிறுவனங்கள் மரபணுமாற்று விதையை விவசாயிகள் மறு உற்பத்தி செய்வதை தடுப்பதற்காக ஒரு முறை மட்டுமே பூத்து காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்து மலட்டுத் தன்மையை செயற்கையாகவே விதைகளில் உண்டாக்கி விடுகின்றன. 
மாற்றத்தின் விளைவு

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கை சோதனைக்காக 30 எலிகளுக்கு தந்த போது 8 எலிகள் காரணம் கண்டறியப்படாமலேயே உயிரிழந்தன. இறந்த எலிகளை பரிசோதித்ததில் பெரும்பாலான எலிகளின் உணவுப் பாதையில் புண் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது. அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனை நடத்திய ஆய்வில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை சாப்பிட்ட அமெரிக்காவின் மக்கள் தொகையில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மரபணு மாற்று பயிர்களில் செயற்கையாக மலட்டு தன்மை உண்டாக்கப்படுவதால் அதை தொடர்ந்து சாப்பிடுவோருக்கும் மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சோதனை எலிகள்

அமெரிக்காவில் ஒரு ஆப்பிளின் விலை இந்திய மதிப்பில் ரூ.50க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டாலும் அமெரிக்காவில் விளைந்த மரபணு மாற்று ஆப்பிள்கள் இந்தியாவில்
இறக்குமதி செய்யப்பட்டு ரூ.15க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இது எப்படி சாத்தியம்?
அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வர போக்குவரத்து, குளிர் சாதன பாதுகாப்பு கிடங்கு வாடகை, விவசாயிக்கான லாபம் என எல்லாவற்றையும் கூட்டினாலே ஒரு ஆப்பிளின் விலை ரூ.100ஐ தாண்டும். ஆனாலும் அமெரிக்க அரசு புதிய ரக மரபணுமாற்று ஆப்பிள்களை மானிய வசதியுடன் இந்தியாவிற்கு இலவசமாக ஏற்றுமதி செய்கிறது. இதற்காக இந்தியர்களை அமெரிக்கா சோதனை எலிகளாக பயன்படுத்துகிறது.

இந்தியாவில் விளையும் சிம்லா ஆப்பிள்களை முழுவதும் அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்காக அதிக விலை கொடுத்து வாங்கி கொள்கிறது. நமது பாரம்பரிய ஆப்பிள்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது பல்வேறு வண்ணங்களில் நாம் சாப்பிடும் ஆப்பிள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மரபணு மாற்றம் செய்யப்பட்டவையே!

40 நாடுகளில் தடை

மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி-பழங்களுக்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் தடைவிதித்துள்ளன. அல்ஜீரியா, இலங்கை, தாய்லாந்து, சீனா போன்ற நாடுகள் ‘மரபணு’ மாற்றப்பட்ட பயிர்களுக்கு தடை விதித்துள்ளன.

ஜப்பானில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. நார்வே, ஆஸ்திரியா நாடுகள் நன்றாக பரிசோதிக்கப்பட்ட மரபணு பொருட்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கின்றன. 

ஜெர்மனியில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகள் மரபணு மாற்று பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் முழு அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து, பராகுவே, ஆஸ்திரேலியாவில் வணிக நோக்கத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள மேரிலேன்ட் தீவு, கொலாராடோ, சான் பிரன்சிஸ்கோ, கலிபோர்னியாவில் மரபணு மாற்றப்பட்ட மீன்களுக்கு தடை உள்ளது. ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் மரபணு காய்கறி-பழங்கள், தானியங்கள் மீது “மரபணு மாற்றப்பட்ட பொருள்” என்று லேபிள் ஒட்டும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரபணு மாற்று காய்கறி, பழங்கள், தானியங்கள் முழு அளவில் பரிசோதனை செய்யப்பட்டதால் இந்த நாடுகளில் எல்லாம் இப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இந்த பட்டியலில் இந்தியாவைக் காணவில்லையே ஏன்?

Posted by போவாஸ் | at 9:02 PM | 0 கருத்துக்கள்

சென்னை சாலைகளை ஆக்கிரமித்து 3000 கோயில்கள்


பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததுடன், இந்த ஆணையை மத்திய மாநில அரசுகள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் தகவல் அறிவும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களிலிருந்து சென்னை-யின் பெரும்பாலான சாலைகள் மற்றும் தெருக்கள் நடைபாதைக் கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை மாநகரில் குறைந்தது 3,000 கோயில்களாவது இவ்வாறு சாலைகளையும், தெருக்களையும் ஆக்ரமித்துக் கட்டப்பட்டுள்ளன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சாலையில் போக்குவரத்துக்கும், மக்களின் நடமாட்டத்திற்கும் பெரும் இடையூறாக இருக்கும் இந்தக் கோயில்களில் பெரும்பாலானவை பல பத்தாண்டு காலமாக இருந்து வருகின்றன என்று டிராபிக் ராமசாமி கூறுகிறார்.
இவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சென்னை மாநகரின் 2 மற்றும் 4 ஆவது வட்டங்களில் உள்ள சாலைக் கோயில்களைப் பற்றிய பொதுநல மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 2வது வட்டத்தில் மட்டும் 500 சதுர மீட்டர் அளவு சாலைகள் இத்தகைய கோயில்களால் ஆக்கிரமிகப்பட்டு உள்ளது. மக்கள் நெருக்கடி மிகுந்த வியாசர்பாடியில் மட்டும் இது போன்ற 95 கோயில்கள் பொது இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ளன.

மின் இணைப்புகள் கொடுத்தது எப்படி?

இத்தகைய சாலைக் கோயில்களில் பெரும்பாலானவற்றிற்குச் சட்டப்படியான மின் இணைப்பு தரப்பட்டிருப்பதும், வங்கிக் கணக்குகள் அந்தக் கோயில்களின் பெயர்களில் இருப்பதும் வியப்பையே அளிக்கிறது. அதிகார பூர்வமற்ற இத்தகைய சாலை ஆக்கிரமிப்புக் கோயில்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது சட்டப்படி சரியானதுதானா என தகவல் அறியும் உரிமை சட்டத்-தின் கீழ் கேட்கப்பட்டபோது, நீண்ட காலத்திற்கு முன்பே இக் கோயில்களுக்கு உரிய இணைப்புக் கட்டணம் செலுத்தப்பட்டு மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.

Posted by போவாஸ் | at 7:57 PM | 0 கருத்துக்கள்

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி ?


ஆந்திர மாநிலத்தை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் தொடர் உண்ணாவிரதம் இருந்ததால் ஆந்திராவில் பெரும் கலவரம் வெடித்தது.இதனால் மத்திய அரசு தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒத்துக் கொண்டது.

 
ஆனால் இதற்கு ஆந்திராவின் ராயலசீமா, கடலோர ஆந்திர பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். 2 நாட்கள் முழு அடைப்பு நடந்தது. இதில் வன்முறைகள் வெடித்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
 
தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு இந்த பகுதிகளை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜியம் என கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதுவரை 5 எம்.பி.க்களும், 138 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
 
இப்போது ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளை சேர்ந்த மந்திரிகளும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று ஐதராபாத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். அனைவரும் மந்திரி பதவியை ராஜினாமா செய்வது என்று முடிவு எடுத்தனர். இது பற்றி முதல்-மந்திரி ரோசய்யா விடம் தெரிவித்தனர்.
 
இதையடுத்து ரோசய்யா அனைத்து மந்திரிகளையும் அழைத்து பேசி சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் அவர்கள் சமாதானத்தை ஏற்கவில்லை. எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே ராஜினாமா செய்வதை தவிர வேறுவழியில்லை என்றனர்.
 
ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்ட நிலையில் மந்திரிகளும் ராஜினாமா செய்ய போவதாக அறிவித்து இருப்பதால் முதல்-மந்திரி ரோசய்யாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே ரோசய்யாவும் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.
 
இது பற்றி கட்சி மேலிடத்துக்கு தெரிவித்து விட்டார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2 நாட்களாக தனது சொந்த தொகுதியான ரேபரேலியில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். இதனால் ஆந்திரா பிரச்சினை தொடர்பாக அவர் எந்த முடிவும் எடுக்கும் நிலையில் இல்லை. நேற்று இரவு தான் டெல்லி திரும்பி இருக்கிறார். எனவே அவர் இன்று இது பற்றி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
எனவே சோனியா எடுக்கும் முடிவை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும். இதற்கிடையே ராஜினாமா முடிவு எடுத்த 24 மந்திரிகளும் இன்று மீண்டும் ரோசய்யாவை சந்திக்க போவதாக கூறி உள்ளனர்.
 
அதே போல அனைத்து எம்.பி.க்களும் இன்று ரோசய்யாவை சந்திக்க உள்ளனர். அப்போது அவர்கள் அதிரடி முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. ரோசய்யாவுக்கு மேலும் அவர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இது, ரோசய்யா முதல்-மந்திரி பதவியில் தொடர முடியாத அளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
 
ஏற்கனவே சட்டசபையில் உள்ள பாதி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டதால் அரசியல் சட்டசிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன. இப்போது மந்திரிகளும் ராஜினாமா செய்துள்ளனர். அதோடு முதல்-மந்திரியும் ராஜினாமா செய்யும் நிலை உருவாகி உள்ளது. இது பெரும் சட்டசிக்கல்களை உருவாக்கும். இத்துடன் ஆந்திரா முழுவதுமே கலவரம் ஏற்பட்டு மாநிலமே ஸ்தம்பித்து உள்ளது.
 
இந்த சூழ்நிலையில் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்தினால் தான் நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. எனவே இது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
 
சட்டசபையை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
 
தற்போதைய நிலையில் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தவிர வேறு வழி இல்லை என்று சட்டநிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
 
காங்கிரஸ் மேலிடம் ஆந்திரா பிரச்சினை தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கலாம் என்று தெரிகிறது. தற்போதைய பிரச்சினைகளை முதல்-மந்திரி ரோசய்யா சரியாக அணுகி தீர்வு காணவில்லை என்ற அதிருப்தி கட்சி மேலிடத்திடம் இருக்கிறது. எனவே ரோசய்யாவுக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கும் முடிவையும் கட்சி மேலிடம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

Posted by போவாஸ் | at 3:03 PM | 0 கருத்துக்கள்

விஜய் படத்துக்கு ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு


விஜய்யின் வேட்டைக்காரன் படத்தை புறக்கணிப்போம் என புலம்பெயர் ஈழத் தமிழர்கள் இமெயில் மற்றும் துண்டு அறிக்கைகள் மூலம் உலகத் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.




ஈழப் போருக்கு இந்தியாவை ஆளும் காங்கிரஸ் நேரடியாக உதவி செய்ததை இலங்கை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இது தெ‌ரிந்தும் ராகுல் காந்தியை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசித்தார் விஜய். 


வெளியே ஈழத் தமிழருக்கு ஆதரவு போல் காட்டிவிட்டு, ராகுல் காந்தியை சந்தித்து அரசியல் பேரம் பேசிய விஜய்யின் படங்களை ஆத‌ரிப்பதில்லை என அப்போதே ஈழத் தமிழர்கள் வெளிப்படையாக அறிவித்தனர். 



வரும் பதினெட்டாம் தேதி வேட்டைக்காரன் வெளியாக இருக்கும் நிலையில் தங்களது எதிர்ப்பை வலுவாக காட்டி வருகிறார்கள் ஈழச் சகோதரர்கள்.



மேலும், போர் நேரத்தில் சிங்கள‌ப் பே‌ரினவாதிகளுக்கு உற்சாகமூட்டும் பாடல்களை புனைந்தளித்தவ‌‌ன், ரா‌ஜ்வீரரத்னே என்ற சிங்களவன். அவனுடன் இணைந்து பணிபுரியும் விஜய் ஆண்டனிதான் வேட்டைக்காரன் படத்துக்கு இசையமைத்துள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



சிங்கள பாடல்களின் டியூனை வேட்டைக்காரன் படப் பாடல்களில் பயன்படுத்தி தமிழர்களை அவமானப்படுத்தியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



மேலே உள்ள காரணங்களால் வேட்டைக்காரன் படத்தை புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
-------------------------------------------
புலம்பெயர் ஈழத் தமிழர்கள் அழைப்பினை ஏற்று,
தமிழகத்தில் 
வைகோ,
நெடுமாறன்,
சீமான்,
ராமதாஸ் குரூப்ஸும்,
இன்னபிற 
ஜால்ரா குரூப்ஸும் 
என்ன செய்யப் போகின்றார்கள்.
தமது தொண்டர்களிடம், 
விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை
புறகணிக்க சொல்வார்களா ?
அப்படி சொல்ல தைரியம் தான் இருக்கிறதா?
ஈழத் தமிழர்களுக்காக குய்யோ முறையோ 
என்று 
கூட்டத்தை கூட்டி,
கூப்பாடு போட்டு,
வானத்தைப் பிளக்கும் அளவுக்கு, 
வாய் கிழியப் பேசும் இவர்களும், 
இவர்கள் பின்னால் 
சுற்றித் திரியும் கூட்டமும் 
என்ன செய்யப் போகிறார்கள் ?.


ஈழத் தமிழர்களின் மேல் உண்மை அக்கறை இருந்திருந்தால், இருக்குமானால், புலம்பெயர் தமிழர்களுக்கு இவர்கள் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். பேச்சோடு இல்லாமால் செயலில் காட்டியிருக்க வேண்டும். ஆனால் இங்கோ நிலைமை தலைகீழ்.


இவர்கள் விஜயின் வேட்டைக்காரன் படத்தினைப் புறக்கணிப்பார்களா ? 


கட் அவுட்டுக்கு பால் ஊத்தி கொண்டாடப் போகிறார்களா?


பொறுத்திருந்து பார்ப்போம்.


இல்லை, இதையெல்லாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டு,  வழக்கம்போல் கலைஞர் அவர்களை தமிழின துரோகி என்று கூப்பாடு போட்டு உளறிக் கொண்டு , நாட்களைக் கடத்திக் கொண்டு ஆதாயம் தேடப் போகிறார்களா ?.


உண்மைத் தமிழர்கள் உணரவேண்டும்.

Posted by போவாஸ் | at 2:15 PM | 1 கருத்துக்கள்

அரசின் சாதனைகளை சொல்லி உரிமையுடன் ஓட்டு கேட்கிறேன் : கலைஞர் கருணாநிதி.





"தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு ஓட்டு கேட்போம்' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:திருச்செந்தூர், வந்தவாசியில், வரும் 19ம் தேதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் மிகவும் கடுமையாக நடந்து வருகிறது.கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரியும், அப்பகுதி மாவட்ட செயலர்களும் திருச்செந்தூரிலேயே முகாமிட்டு, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகின்றனர்.

அதுபோலவே, வந்தவாசி தொகுதியில் திருவண்ணாமலை மாவட்டச் செயலர் வேலுவும், அந்த பகுதி மாவட்ட செயலர்களும் முகாமிட்டு, பம்பரமென சுழன்று, தேர்தல் பணிகளை ஆற்றி வருகின்றனர்.பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., மற்றும் பலர் இந்த இரண்டு தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தல் என்பதாலும், என் உடல்நிலை கருதியும், நான் நேரடியாக அந்த தொகுதிகளுக்கு வரவில்லை.


எதிர் தரப்பினர், இந்த தேர்தலில் என்ன சொல்லி ஓட்டு கேட்பது, அரசின் மீது என்ன குற்றம் சாட்டுவது எனத் தெரியாத நிலையில், குழப்பமடைந்து ஏதேதோ பேசி வருகின்றனர். அருந்ததிய சமுதாயத்துக்கு பல ஆண்டுகளாக கேட்டுக் கிடைக்காத கோரிக்கையான 3 சதவீத உள்ஒதுக்கீட்டை நாம் செய்து கொடுத்து, அதன் வாயிலாக அவர்கள் பெரும் பயன்பெற்று, அதற்காக, வள்ளுவர் கோட்டமே கொள்ளாத அளவுக்கு, எனக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தினர்.

மூன்றாம் நாள், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர், திருச்செந்தூரிலே தேர்தல் பிரசார கூட்டத்தில், "அருந்ததிய சமுதாயத்துக்கு எதுவும் செய்யவில்லை' என்று பேசுகிறார் என்றால், அந்தத் தொகுதி மக்கள், அவரைப் பற்றி என்ன நினைப்பர் என்று தான் வருத்தப்படுகிறேன்.
நாம் ஓட்டு கேட்கிறபோது, நம் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளைச் சொல்லி, "எங்களை பதவியில் அமர்த்தினீர்கள். நாங்கள் சும்மா இருக்கவில்லை. இதோ, இவற்றைச் செய்திருக்கிறோம்' என்று பட்டியலிட்டுக் காட்டி, அதன் பெயரால் ஓட்டு கேட்க முடிகிறது.

அதே சமயத்தில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., சென்று, அவர்கள் ஆட்சியிலே செய்த கொடுமைகளைப் பட்டியலிட்டுத் தான் கேட்க முடியும்.தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும், தி.மு.க., அரசின் சாதனைகளில் ஏதாவது ஒன்றால் பயன்பெறுகின்றனர். 

அந்தச் சாதனைகளின் பெயரால், இத்தகைய சாதனைச் சரித்திரம் படைத்த ஆட்சியின் தலைவன் என்ற நிலையில் தான், அனைத்து மக்களிடமும், அவர்களின் குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவனாக இருக்கிற உரிமையோடு, ஓட்டு கேட்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Posted by போவாஸ் | at 10:08 AM | 0 கருத்துக்கள்

உஷார்: மொபைல் போனால் பணம் பறிப்பு


மொபைல் போன் பிரீபெய்டு சிம் கார்டுகளில் "ஜோக் பேக்', "சாங் பேக்', "கிரிக்கெட்' உட்பட பல பெயர்களில், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் அபகரிக்கும் நிலை உள்ளது.பல நிறுவன பிரீபெய்டு சிம் கார்டுகள் பயன் படுத்துவோர்களுக்கு, அந்நிறுவனம் மட்டுமின்றி பல நிறுவனங்கள், அமைப்புகள் பெயர்களில், தினமும் பல எஸ்.எம்.எல்.,கள் சேவை என்ற பெயரில் வருகிறது. இதில், ஏர்டெல் நிறுவனம் நேரடியாக குறிப்பிட்ட சினிமா பாட்டுகள், கிரிக்கெட், ஜோக் பேக், சாங் பேக், காலர் டியூன் உட்பட பல எஸ்.எம்.எஸ்.,களை அனுப்புகின்றனர். அவை ஆங்கிலத்தில் வருவதால், இவற்றை புரிந்தோ, புரியாமலோ பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தெரிந்த ஒரு கீயை அல்லது மொபைலின் சிவப்பு நிற துண்டிப்புக்கான கீயை அழுத்தி எஸ்.எம்.எஸ்.,ஐ துண்டிக்கின்றனர்.


பல நேரம் இந்நிறுவன எண்களில் இருந்து கம்ப்யூட்டர் வாய்ஸ்களில், "நீங்கள் ஹலோ டியூன் வாடிக்கையாளர் ஆனதற்கு நன்றி...' என்பது போன்ற தொடர் பேச்சும், அதைத் தொடர்ந்து இந்த பட்டனை அழுத்துங்கள், வேறு பட்டனை அழுத்துங்கள், என வருகிறது. 

இதை தவறாக கையாளும்போது, உடனடியாக அவர்கள் காலர் டியூன், சில குறிப்பிட்ட பாட்டுக்களை டவுன் லோடு செய்ததாக கணக்கிடப்படுகிறது. இதில், கிரிக்கெட், ஜோக், படங்கள், பாட்டுகள் போன்றவைகளுக்கு தினமும் ஒரு ரூபாய் கட்டணம், ஒரே முறையில் கழித்துக் கொள்ளும்படி 30 ரூபாய் கட்டணம் என பலவாறு வாடிக்கையாளர் மொபைலில் கையிருப்பில் உள்ள தொகை கழிக்கப்படுகிறது.பணம் திடீரென குறைந்ததும், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து, இந்நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால், "நீங்கள் ஜோக் பேக் எடுத்துள்ளீர்கள். கிரிக்கெட் பேக் எடுத்துள்ளீர்கள். அதற்காக இத்தொகையை பிடித்தம் செய்துள்ளோம். நீங்கள் வேண்டாமென்றால் துண்டித்துக் கொள்கிறோம்' எனக்கூறி துண்டிக்கின்றனர். 

துண்டிக்கப்பட்டாலும், அதற்காக அவர்கள் மொத்தமாக 30 ரூபாய் அல்லது பல நாட்களாக ஒரு ரூபாய் வீதம் அவர்கள் எடுத்துக் கொண்ட தொகை வாடிக்கையாளருக்கு பறிபோய்விடுகிறது. இந்த துண்டிப்பு நடவடிக்கைக்கும் 24, 48 மணி நேரம் அவகாசம் வைத்து துண்டிக்கின்றனர். அதற்குள் ஒரு தொகை பறிபோகிறது.

இதுபோன்ற அனைத்து சேவை எஸ்.எம்.எஸ்.,கள், அழைப்புக்களை முழுமையாக தங்கள் எண்ணுக்கு துண்டித்துவிடும்படி வாடிக்கையாளர்கள் கூறினால், சேவை துண்டிக்கப்படும் என்ற தகவல் வருகிறது. ஆனால், அச்சேவை துண்டிப்புச் செய்ய 45 நாள் ஆகும் என கூறுவதுதான் வாடிக்கையாளர்களை கொதிப்படைய செய்கிறது. இந்த 45 நாட்களுக்குள் வாடிக்கையாளர் பெரும் தொகையை இழக்க நேரிடுகிறது.வாடிக்கையாளர் அறியாமல் சேவை எஸ்.எம்.எஸ்.,ஐ கிளிக் செய்துவிட்டால், அடுத்த வினாடி அவரது இருப்பில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யும் அதே நிறுவனம், வாடிக்கையாளர் தனக்கு எந்த சேவை அழைப்புகளும் வேண்டாம் என்பதை ரத்து செய்ய 45 நாள் எடுத்துக் கொள்வது வெறுப்படையச் செய்கிறது.

இதுபற்றி, ஏர்டெல் சேவை மையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "சேவைகளை துண்டிக்க 45 நாட்கள் எடுத்துக் கொள்வது எங்கள் நிறுவன விதிமுறை. வேறு வழியில்லை. வாடிக்கையாளர் குறிப்பிட்ட கீ களை அழுத்தி, ஏற்றுக் கொள்ளும் போது தான் கட்டணத்துடன் கூடிய பேக்குகள் அவர்கள் எண்ணுக்கு சென்றடைகிறது' என்கின்றனர்.

ஒரு நிறுவனத்துக்கு வாடிக்கையாளர் அவசியம் என்பதைப்போல, அவர்களது பணத்தை அவர்கள் விரும்பாமல் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதும் அவசியமாகிறது

நன்றி : தினமலர்.

Posted by போவாஸ் | at 9:56 AM | 0 கருத்துக்கள்

அழ​கு​ப​டுத்​தப்​பட்ட மெரினா கடற்கரையை முதல்வர் திறக்கிறார்


அழ​கு​ப​டுத்​தப்​பட்​டுள்ள மெரினா கடற்​க​ரையை முதல்​வர் கரு​ணா​நிதி டிசம்​பர் 20}ம் தேதி திறந்து வைக்​க​வுள்​ளார் என்று துணை முதல்​வர் மு.க.​ ஸ்டா​லின் கூறி​னார்.​
Swine Flu
​ சென்னை மாந​க​ராட்சி சார்​பில் மருத்​துவ அலு​வ​லர்​கள்,​​ மருந்​தா​ளு​நர்​கள்,​​ களப்​ப​ணி​யா​ளர்​கள்,​​ தொழில்​ப​யிற்சி முதல்​வர் உள்​ளிட்ட பல்​வேறு பணி​யி​டங்​க​ளுக்கு பணி நிய​மன ஆணை​கள் மற்​றும் கருணை அடிப்​ப​டை​யி​லான பணி நிய​மன ஆணை​கள் வழங்​கும் விழா சென்னை தேனாம்​பேட்டை அன்​ப​கத்​தில் உள்ள அண்ணா மன்​றத்​தில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ இதில் பங்​கேற்று பணி நிய​மன ஆணை​களை வழங்​கிய துணை முதல்​வர் மு.க.​ ஸ்டா​லின் பேசி​யது:​

​சென்​னையை சிங்​கா​ரச் சென்​னை​யாக மாற்​று​வ​தற்​காக,​​ பல்​வேறு வளர்ச்​சிப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.​ இந்த முயற்​சி​யில் இது​வரை 85 சத​வீத பணி​கள் முடிக்​கப்​பட்​டுள்​ளன.​
​ உல​கின் இரண்​டா​வது பெரிய கடற்​க​ரை​யாக விளங்​கும் மெரினா கடற்​க​ரையை அழ​கு​ப​டுத்​தும் பணி​கள்,​​ முடி​வ​டைந்​துள்​ளன.​ நேப்​பி​யர் பாலம் முதல் கலங்​கரை விளக்​கம் வரை 3.10 கி.மீ.​ நீளத்​துக்கு ரூ.​ 25.92 கோடி​யில் அழ​கு​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது.​ அழ​கு​ப​டுத்​தப்​பட்​டுள்ள மெரினா கடற்​க​ரையை முதல்​வர் கரு​ணா​நிதி வரும் 20}ம் தேதி திறந்து வைக்​க​வுள்​ளார்.​

இது​போல் ரூ.​ 100 கோடி செல​வில் உரு​வாக்​கப்​பட்டு வரும் அடை​யாறு பூங்​காவை,​​ 2010 நவம்​பர் மாதம் முதல்​வர் திறந்து வைப்​பார்.​ கூவத்​தைச் சீர​மைக்க எனது தலை​மை​யில் ஆணை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.​ இந்​தப் பணி​யும் நிறை​வேற்​றப்​பட்டு சென்னை மக்​க​ளுக்​குப் பரி​சாக அளிக்​கப்​ப​டும் என்​றார்.​

விழா​வில் 4 மருத்​து​வர்​கள்,​​ 7 மருந்​தா​ளு​நர்​கள் ஆகி​யோ​ருக்கு பணி நிய​மன ஆணை​க​ளும்,​​ 107 நபர்​க​ளுக்கு கருணை அடிப்​ப​டை​யில் பணி நிய​ம​னங்​க​ளும்,​​ தொழிற்​ப​யிற்சி முதல்​வர் உள்​பட 7 அலு​வ​லர்​க​ளுக்கு பணி நிரந்​தர ஆணை​கள் மற்​றும் 15 மலே​ரியா களப் பணி​யா​ளர்​க​ளுக்கு ஆணை​க​ளும் வழங்​கப்​பட்​டன.​

மேயர் மா.​ சுப்​பி​ர​ம​ணி​யன்,​​ மாந​க​ராட்சி கமி​ஷ​னர் ராஜேஷ் லக்​கானி,​​ துணை மேயர் ஆர்.​ சத்​தி​ய​பாமா,​​ கவுன்​சில் எதிர்க் கட்​சித் தலை​வர் சைதை ரவி உள்​ளிட்​டோர் விழா​வில் பங்​கேற்​ற​னர்

Posted by போவாஸ் | at 9:41 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails