சுவையான நகைச்சுவை

சுவையான நகைச்சுவை

பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?
விழுந்தது பலாப்பழம் ஆச்சே.
------------------------
ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற?
எங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான்.
------------------------
உங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேரு?
எங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லைங்க எல்லோரும் ஒல்லி தான்.
------------------------
நகை கடைக்காரனுக்கு பிடித்த சோப்?
பொன் வண்டு.
------------------------
ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன்.. ஆசீர்வாதம் பண்ணு பாட்டி.
பார்த்து மெதுவா ஓடிப்போ, வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே.
------------------------
டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்?
ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.
------------------------
நீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க?
நான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான்.
------------------------
அந்த ஆள் புத்தகத்தை தின்கிறார் ஏன்?
அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு.
------------------------
கி.பி. 5000ல் உலகம் எப்படியிருக்கும்?
உருண்டையாகத்தான்...
------------------------
ஒரு குடிகாரன் கீழே குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தா ன். அதைக் கண்ட ஒருவன் நீ என்ன தேடுகிறாய்? என்று கேட்டான்.

என் கைக்கடிகாரம் கீழே விழுந்து விட்டது என்றான் குடிகாரன் வந்தவனும் தேடிப் பார்த்தான் கைக்கடிகாரம் அகப்படவில்லை.

உண்மையிலேயே - நீ கைக்கடிகாரத்தை தொலைத்தது உண்மையா

ஆமாம்

எங்கே தொலைத்தாய்?

அடுத்த தெருவில் தொலைத்தேன்.

அதை இங்கே ஏன் தேடுகிறாய்?

அந்த தெருவில் லைட் இல்லை வெளிச்சமும் இல்லை என்றான். குடிகாரன்.
------------------------
அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற?
அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன்.
------------------------
குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?
நாம கேட்டா கொடுப்பாரா...
------------------------
உங்க வீட்டில் இன்று சாம்பாரா?
எப்படி கண்டுபிடித்தீர்கள்?

நான் மூக்காலும் உணர்ந்தவன்.
------------------------
வருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது?
எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது.
------------------------
கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்?
இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள்.
------------------------
மிகவும் மக்கான ஊர் எது?
மாமண்டூர்.
------------------------
நம்ம கபாலி ரொம்ப சின்சியர்

எப்படி சார்?

நேத்து நைட் 12 மணிக்கு திருடிட்டு, ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து மாமூல் கொடுத்துட்டு போறான்.
------------------------
ஒவ்வொரு விரல்லியும் ஒரு சிகெரட் வெச்சு பிடிக்கிறாரே?
நிறைய சிகெரட் பிடிப்பாருன்னு சொன்னனே அது இவர்தான்.
------------------------
நேற்று அவனை ஒன்றுக்குமூ லாயக்கில்லை என்று கூறிய பிறகு எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும்படி ஒரு காரியம் செய்து விட்டான்.

அப்படி என்ன காரியம் செய்தான்?

கால்வாயை குச்சியால் கலக்கி விட்டான்.
------------------------
மெக்கானிக்கு பிடித்த சோப் எது?
வீல் சோப்.
------------------------
நாய் கடிக்கு முதலில் என்ன செய்யனும்?
நாய்கிட்டே போய் காலை கொடுக்கனும்.
------------------------
வயதான பாட்டி வீட்டிற்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிந்தார். அங்கு வந்தவர் என்ன தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றார்? வீட்டிற்கு உள்ளே போட்ட நைகைய தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார் பாட்டி?
ஏன் வெளியே தேடிக் கொண்டிருக்கீறீர்கள் என்றர் அவர் ? உள்ளே மின்சாரம் கட் அதான் வெளியே தேடுகிறேன் என்றாராம்.
------------------------
உள்ளாடை அணியும் ஊர் எது?
வாணியம் பாடி
------------------------
சாப்பிடக்கூடிய ஆணி எது?
பிரியாணி
------------------------
ஒரே வீட்ல பத்து தடவைக்கு மேலே திருடியிருக்கியே ஏன்?
நான் அவங்க பேமிலி திருடன் எஜமான்.
------------------------
உங்க வீட்டு கதவுல ராமசாமி இன் அவுட்னு போர்டு வெச்சிருக்கீங்கேள, அவர் ரொம்ப பிஸியா?
ம்ஹும் கடன்காரங்களுக்கு உதவியா இதை வெச்சிருக்கார்.
------------------------
உங்க வீடு எங்கே இருக்கு ஸார்?
அடமான பேங்க்ல இருக்கு ஸார்?
------------------------
அந்த கடையில் குடை வாங்காதீங்க அது ராசில்லாத கடை
வாங்கினா என்ன ஆகும்?

மழையே வராது.
------------------------
எதுக்கு வேலைக்காரியை எட்டு மணிக்கு வரச் சொல்ற?
ஏழு மணிக்கு தலைப்பு செய்திகள் சொல்லுவா எட்டு மணிக்கு பக்கத்து வீட்டுச் செய்தியெல்லாம் விரிவா சொல்லுவா.
------------------------
நான் நீச்சல் கத்துக்கேறன்
எங்கே...?

தண்ணியிலதான்...!
------------------------
கப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?
ஏன்?

கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்கடி முடியாதே.
------------------------
இவருக்கு நான் பொண்ணுதர்றேன். நீ பொண்ணு தர்றேன்னு பயங்கர போட்டி
அப்படி என்ன வேலை செய்றாரு?

தண்ணீர் லாரி வச்சிருக்காரு.
------------------------
குடி குடியை கெடுக்கும் படம் என்னாச்சு?
ஊத்திக்கிச்சு
------------------------
டி.வி. வாங்கினால் 20 கைக்குட்டைகள் இலவசமாக கொடுக்கிறா ர்களே ஏன்?
மெகா சீரியல் பார்க்கும் போது வரும் கண்ணீரை துடைக்கதான்.
------------------------
ஆட்டோவில் பயணம் செய்த கிராமவாசி மீட்டரில் 30ரூ காட்டிய போதும் 15ரூ தான் தந்தார் ஏன்?
டிரைவரும் ஆட்டோவில் வந்ததால் 50-50 பாதி பாதி.
------------------------
உன் பல்லழகைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் இருக்குன்னு என் காதலிகிட்டே சொன்னது தப்பாப் போச்சு
என்னவாம்?

பார்த்துகிட்டே இருங்கன்னு சொல்லி பல்செட்டை கழட்டி என் கையில கொடுத்துக்கிட்டு போயிட்டார்.
------------------------
குடி குடியைக் கெடுக்குமாடா?
நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும் நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும்.
------------------------
100 வயதுவரை வாழ்வது எப்படிங்கற புத்தகத்தை கொடுத்தவரை திட்றாரே ஏன்?
அவர்க்கு வயது 102.
------------------------
எலிக்கும், மவுசுக்கும் என்ன வித்தியாசம்
எலிக்கு வால் பின்னாடி இருக்கும், மவுசுக்கும் வால் முன்னாடி இருக் கும்.
------------------------
இங்கே ஒருத்தன் நாயா கத்திக்கிட்டிருக்கேன் எங்கடிபோன?
உங்களுக்கு பிஸ்கட் வாங்க தாங்க போனேன்.
------------------------
என்னால் என் நண்பர்கள் துன்பபப்படுவதைப் பார்த்துக் கொண் டு இருக்க முடியாது.
உடனே அவர்களுக்கு உதவி செய்வாயா?
நான் கண்ணை மூடிக் கொள்வேன். இல்லாவிட்டால் அந்த இடத் தை விட்டு ஓடிடுவேன்.
------------------------
குழந்தையை ஏன் பிரிட்ஜில் வைத்து பூட்ரீங்க
வெளிய விட்டா கெட்டுப்போயிடும் அதான்.
------------------------
மறதிக்கு பெயர் போன புகழ் பெற்ற ஓர் அறிஞர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். டிக்கெட் சோதனையாளர் பயணிகளிடம் டிக்கெட்டைக் வாங்கி பார்த்து விட்டு அந்த அறிஞரிடம் வந்து அவருடைய டிக்கெட்டை கேட்டார். அறிஞர் அதை வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருந்தார்.
அவர் யார் என்பதை அறிந்திருந்த டிக்கெட் சோதனையாளர் பரவாயில்லை நான் உங்களிடம் வார்த்தைகளை நம்புகிறேன். டிக்கெட் தேட வேண்டாம் என்று சொன்னார். அதற்கு அறிஞர் எனக்கு தற்போது பொரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. நான் இப்பொழுது எந்த ஊருக்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்பது தெரியவோ அந்த டிக்கெட் எனக்கு இப்பொழுது தேவைப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

Posted by போவாஸ் | at 6:16 PM | 0 கருத்துக்கள்

தமிழக காங்கிரஸில் உருவாகும் புது கோஷ்டி

தமிழக காங்கிரஸில் உருவாகும் புது கோஷ்டி.



சிதம்பரம் கோஷ்டி,
வாசன் கோஷ்டி,
தங்கபாலு கோஷ்டி,
இளங்கோவன் கோஷ்டி....
இப்படி பல பல கோஷ்டிகள் இருக்கும் காங்கிரஸில் புதிதாக உருவாகி சேர இருக்கிறது

விஜய் கோஷ்டி.

இதுவரை நடிப்பில் தான் ஒரு சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற முடியாத விஜய் காங்கிரஸில் சேரப்போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

விஜய் காங்கிரஸில் சேருவதால், காங்கிரசிற்கு லாபமா ? நஷ்டமா ?

காங்கிரஸ் என்றாலே கோஷ்டியும், சண்டையும், சச்சரவும் இருக்கும் என்று அனைவரும் நன்கு அறிந்த ஒன்றே. காங்கிரஸ் கட்சியினரே பல சமயங்களில் வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்த கூட்டத்தில் விஜய் சேர்ந்தால் எப்படி இருக்கும் ?.

இன்று, விஜய் கட்சியில் சேரப் போகிறார் என்று விஷயம் வெளியே கசிந்ததும் வாங்க வாங்க என்று அழைக்கின்ற வாய், நாளைக்கு ஏன்டா இவர கட்சியில சேத்துகிட்டோம் என்று புலம்பும் நேரம் கண்டிப்பாக வரும்.

விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் மற்ற கோஷ்டியினருக்கு கட்டுப் படுவார்களா?.

மேலிடத்தில் இருந்து, மாவட்டம், வட்டம், ஊராட்சி என்று இவரது ரசிகர்கள் பதவிக்காக ஆசைப் படுவார்கள். மனிதனுக்கு ஆசைகள் என்பது இயற்கைதானே.

இவரால், இருக்கின்ற பல கோஷ்டியினரை மீறி, தன ரசிகர்களின் தாகத்தைப் போக்க முடியுமா?.

இது கொஞ்சம் கஷ்டமே.

சீனியர் கோஷ்டியினரையும், மற்ற கோஷ்டியினரை மீறி விஜயால் மட்டுமல்ல அவரது ரசிகர்களாலும் தொண்டர்களாலும் பெரிதாக ஏதும் செய்ய முடியாத சூழ்நிலைகள் வரும்.

விஜய்க்கு தக்க மரியாதை கிடைக்குமா?.

இவர் காங்கிரஸில் சேரும்போது வேண்டுமானால் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினரும் தமிழகத்தில் 2011ல் நமது ஆட்சிதான் என்று கூவிக் கொண்டு இருக்கலாம்.

விஜயைவிட பக்கம் பக்கமாக , சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும், தேர்தல் நேரத்திலும் வசனங்களைப் பொழிந்து தள்ளும் விஜயகாந்தாலே ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர இன்று வரை இயலவில்லை.

விஜயால் என்ன முடியும் என்று தெரியவில்லை ?.

ஆரம்பகட்டத்தில் விஜயகாந்திற்கு கூட்டம் சேர்ந்ததைப் போல விஜய்க்கும் மதி மயங்கிய ரசிகர்களின் கூட்டம் சேரும்.
சேரலாம் .

பின்னர் எல்லாம் புஸ்வானம் போல் புஸ்ஸாகப் போவது உறுதி.

விஜய் காங்கிரஸில் சேருவதால் கொஞ்சம் பலம் சேரலாம்....ஆனால், அதுகூட ஒரு உபயோகமில்லாத பலமாக இருக்கும்.

ஒரு பெரிய குழி விஜய்க்காக காத்திருக்கிறது. நிச்சயம் அதில் அவர் வீழ்வாரா ? அல்லது வெல்வாரா ? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இவர் அரசியலில் சேர்வது தேவையில்லாத ஒன்று என்று பலர் நினைக்கிறார்கள்....அதில் நானும் ஒருவன்.

ஆனா, இவரு " ஒரு முடிவு எடுத்துட்டேனா, என் பேச்ச நானே கேட்க மாட்டேன் " சொல்வாரு. என்ன பண்றது.

எல்லோரும் கடலில்தான் முத்து எடுப்பார்கள்..

நம் விஜயோ அரசியல் என்ற ஒரு சாக்கடையில் மூழ்கி முத்து எடுக்க ஆசைப்படுகிறார்.

இவர் முத்தும் எடுக்க மாட்டார், சிப்பியும் எடுக்க மாட்டார்....

நொந்து நூலாகி...நூடுல்ஸ் ஆகப் போவது உறுதி.


விஜய் காங்கிரஸில் சேருவதற்கு பதிலாக திராவிட கட்சிகளான தி.மு.கவிலோ , அ.தி.மு.கவிலோ சேர்ந்தால் ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பியாவது ஆகலாம்.

காங்கிரசில இருக்குற கோஷ்டியில இவரு போயி சிக்கி சின்னா பின்னாமா ஆனாத்தான் இவருக்குத் தெரியும். புரியும்.

சினிமாவிலும் நடிக்க முடியாமல்...அரசியலிலும் பிரகாசிக்க முடியாமல் ...கடைசில...வடை போச்சேன்னு வீட்டில் உக்காரப் போறாரு.

பாக்கலாம் இது எவ்ளோ தூரம் போகுதுன்னு.

Posted by போவாஸ் | at 4:04 PM | 1 கருத்துக்கள்

கமல் எக்ஸ்பிரஸ்

கமல் எக்ஸ்பிரஸ்




நடிகர் கமல்ஹாசன் திரை உலகுக்கு வந்த 50-வதுவருடத்தை விஜய் டி.வி. "உலக நாயகன் கமல்ஐம்பது' என்ற பெயரில்பெரும் விழாவாகஎடுக்கிறது.

விழாவின் முதல்கட்டமாகஉருவாக்கப்பட்ட சிறப்புபேருந்து தமிழ்நாட்டின்முக்கிய நகரங்களில்வலம் வர உள்ளது. "கமல்எக்ஸ்பிரஸ்' என்ற இந்தபேருந்தில்கமல்ஹாசனின் அரிதானபுகைப்படங்கள், சினிமாவாழ்வின் அவதாரங்கள், சினிமா வாழ்க்கை குறித்தசெய்திகள்கண்காட்சிகளாக இடம்பெற்றிருக்கும்.

கடந்த திங்கள்கிழமைசென்னையில் நடைபெற்றகமல் எக்ஸ்பிரஸ்' துவக்கவிழாவில் பெப்ஸிதலைவர் வி.சி.குகநாதன், தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர்இராம.நாராயணன், ஏவி.எம்.சரவணன், கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா, கௌதமிமகள் சுப்புலெட்சுமி, விஜய்டி.வி.யின் பொதுமேலாளர் ஸ்ரீராம்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் (படம்).

சென்னையில் தொடங்கிசெங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, பரமக்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, பெங்களூர், திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்டநகரங்களில் இந்த பேருந்துவலம் வர உள்ளது.

இந்த பேருந்தின்வருகையின் போதுரசிகர்கள் மற்றும்பொதுமக்கள் பேருந்தின்உள்ளே உள்ள கமல்குறித்த கண்காட்சியைபார்க்கலாம். அத்துடன்பேருந்தில்அமைக்கப்பட்டுள்ள நீண்டபேனரில் தங்களின்வாழ்த்துகளைகமல்ஹாசனுக்குதெரிவிக்கலாம்
.


நன்றி: தினமணி

Posted by போவாஸ் | at 2:03 PM | 0 கருத்துக்கள்

எம்.ஜி.ஆருக்கு நேர்ந்த அவமரியாதை.

எம்.ஜி.ஆருக்கு நேர்ந்த அவமரியாதை.



நீங்களே சொல்லுங்க பாஸ்...இவரு இப்படி பன்றதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை.

நன்றி: தினமலர்

Posted by போவாஸ் | at 11:09 AM | 0 கருத்துக்கள்

முல்லா ஸ்பெஷல் - V

மீன்

ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.

முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் முல்லா. ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார்.

முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா.

அதிர்ஷ்டமான மனிதன்

முல்லாவும் அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத்தைக் கேட்டனர்.

முல்லா என்ன சத்தம் என்று பார்த்துவர கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். தனது தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசைவதைப் பார்த்தார் முல்லா. துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்து அதைச் சுட்டார் முல்லா.

காலையில் எழுந்து, தான் எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக முல்லா தோட்டத்திற்கு போனபோது, அது காய்வதற்காக மரத்தில் போட்டிருந்த தனது மிகச் சிறந்த சட்டையாய் இருப்பதைக் கண்டார் முல்லா.

‘அதிர்ஷ்டம் கெட்டவரே! உங்களின் மிகச் சிறந்த சட்டையை நாசமாக்கிவிட்டீரே! என்று முல்லாவின் மனைவி அங்கலாய்த்தார்.

‘இல்லை. நானே பூமியில் அதிர்ஷ்டமான மனிதன். காலையில் அந்தச் சட்டையை கிட்டத்தட்ட அணியும் நிலையிலிருந்தேன். அந்தச் சட்டையை போட்டுக் கொண்டிருந்தால், உறுதியாக நான் கொல்லப்பட்டிருக்கலாம்’, என்றார் முல்லா
.

தளபதியின் சமரசம்

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.

மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.

முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.

இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.

மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.

கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.

கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார்.

மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.

பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.

நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.

நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.

முல்லா ஏன் அழுதார்?

முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார்.

அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை
எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “சென்ற வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு
எனது அத்தை இறந்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன் அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “மூன்று நாட்களுக்குமுன் எனது தாத்தா இறக்கும்முன்
50 இலட்ச ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”

நண்பர் கேட்டார்: “கொண்டாடாமல் ஏனப்பா அழுகிறாய்?”

முல்லா சொன்னார்: “இனிமேல் சொத்தை எழுதிவைத்துவிட்டு இறந்துபோறதுக்கு
எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் இல்லையே, அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”

கேட்ட நண்பர் மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.

எந்த வீட்டுக்குப் போவது ?

ஒருமுறை முல்லாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
பதிவு செய்யப்பட்டிருந்தது

பல மனைவிகள் இருந்ததாக முல்லா மீது குற்றச்சாட்டு இருந்தது.
ஆனால் அதைநிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லை.

முல்லாவில் வழக்கறிஞர், “நீ அமைதியாக இரு.ஒரு வார்த்தைகூட
பேசாதே. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்,” ... என்றார்.

முல்லாவும் அப்படியே அமைதியாக இருந்தார். மனத்தின் உள்ளே
அமைதியாக இருந்ததால் ஒரு புத்தரைப் போல முல்லா காட்சி தந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “சாட்சிகள் இல்லாத்தால் உன்மீதான
குற்றச்சாட்டை தள்ளுபடி செய்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம்,”... என்றார்.

அதுவரை அமைதியாக இருந்த முல்லா, வழக்கு வெற்றியாக
முடிந்த மகிழ்ச்சியில் ” நீதிபதி அவர்களே! எந்த வீட்டுக்கு
நான் போவது ?” என்று கேட்டார்
.

Posted by போவாஸ் | at 10:56 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails