சீன நலனை முன்னெடுக்கிறார் தி இந்து ராம்


ஈழ விடுதலைக்கு எதிராகவும், ராஜபக்சேவி்ற்கு ஆதரவாகவும், அதே நேரத்தில் திபெத்தியர்களின் போராட்டத்திற்கு எதிராகவும் தனது நாளிதழில் செய்திகளையும், கட்டுரைகளையும் தீட்டும் தி இந்து நாளேட்டின் ஆசிரியர் என். ராம், சீன நாட்டின் நலனை கருத்தில் கொண்டே செயல்படுகிறார் என்று மே 17 இயக்கம் நடத்திய கருத்தரங்கில் குற்றம் சாற்றப்பட்டது.


‘தி இந்து நாளிதழும், அதன் ஆசிரியர் என்.ராமும் வாசகர்களை ஏமாற்றுவது ஏன், ஊடகங்களின் பொறுப்பு என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமை சென்னை தியாகராயர் நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள தேவநாயகம் பள்ளியில் மே 17 இயக்கம் கருத்தரங்கத்தை நடத்தியது.


தமிழர்கள், ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் உண்மையை மறைத்து எப்படியெல்லாம் தி இந்து கட்டுரை எழுதியது என்பதை இந்தக் கருத்தரங்கில் பேசிய ஒவ்வொருவரும் ஆதாரத்துடன் எடுத்துரைத்தனர்.


இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த ஜி. திருமுருகன், இந்தியாவை நேசித்த ஈழத் தமிழர்கள் சிறிலங்க இனவெறி அரசால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டதனால், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையின் கடற்பகுதி இந்தியாவிற்கு எதிரான சீனா போன்ற சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது என்று கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவின் உதவியைப் பெற்று ஒழித்த சீனா, தென்னிலங்கையில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவிற்குத் தாரை வார்த்து, அதனை நன்கு காலூன்ற இடமளித்துவிட்டது. இது மட்டுமின்றி, இலங்கையின் மற்ற இடங்களிலும் சீனா பலமாகக் காலூன்றி வருகின்றது என்று கூறிய திருமுருகன், சீனா அமைத்துள்ள தளத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்திற்கு உட்பட்டுத்தான் கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளது என்று கூறினார்.

இந்தியா, சீனா எல்லைப் பிரச்சனையில் சீனத்தின் பக்கம் சார்ந்த தி இந்து எழுதி வருகிறது என்று குற்றம் சாற்றிய திருமுருகன், இந்தியாவை 20, 30 துண்டுகளாக உடைக்க வேண்டும் என்று சீனத்தின் சர்வதேச இராணுவ ஆய்வு மையம் தனது இணையத்தளத்தில் எழுதியபோது அது குறித்து தி இந்து எந்தணச் செய்தியையும் வெளியிடாதது மட்டுமின்றி, அதுகுறித்து சீனா அரசு கருத்தேதும் கூறாத நிலையில், அதனை ‘அதிகப்படியான கருத்துக் கூறல்' என்று கூறி தி இந்து அதனை சாதாரணமாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டினார்.

தி இந்து நாளேடு தொடர்ந்து ஆதரித்து எழுதிவந்த சிறிலங்க அரசு தனது நாட்டு மக்கள் மீதே தொடுத்தப் போரில் எப்படிப்பட்ட போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டது என்பதை அமெரிக்க அயலுறவு அமைச்சகம் தயாரித்த அறிக்கையை மேற்கோள் காட்டி விவரித்தார் இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் எம். சுப்ரமணியம்.

மனிதாபிமானமும், உண்மை கூறல் வேண்டு்ம் என்ற நேர்மை சற்றும் இன்றி எவ்வாறு ஒவ்வொரு பிரச்சனையிலும் தி இந்து நாளிதழ் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டது என்பதை தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் ஆசிரியர் கா.அய்யநாதன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

உலகமே அதிர்ச்சியுற்ற செஞ்சோலைப் படுகொலையை கண்டுக்காதது, போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் போராடியபோது அதனை தமிழ் வெறித்தனம் என்று சித்தரித்தது, பாலஸ்தீன விடுதலைப் போரையும், ஹமாஸ் இயகத்தையும் சரியாக தனது செய்திகளில் குறிப்பிட்ட அதே நேரத்தில், ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து உண்மையை மறைத்து எழுதி வந்தததையும் எடுத்துக்காட்டிய அய்யநாதன், கச்சத் தீவுப் பிரச்சனையில் எப்படியெல்லாம் உண்மையை மறைத்து, தமிழ் மீனவர் நலனை கேவலப்படுத்தி எழுதியது தி இந்து என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தினார்.

இறுதியாக உரையாற்றிய திபெத் விடுதலைப் போராளி டென்சிங், இந்தியாவின் பாதுகாப்பிற்கும், நலனிற்கும் திபெத் விடுதலைப் பெறுவதன் அவசியத்தை தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்புடைய திபெத்தும், அதன் மக்களும் இந்தியாவின் இயற்கையான நண்பர்களாக வரலாற்றுக் காலத்திலிருந்து திகழ்ந்து வருகின்றனர் என்று கூறினார்.
இந்தியாவை வளப்படுத்தும் ஜீவ நதிகளான கங்கை, யமுனை, பிரம்புத்திரா ஆகியன திபெத்தில் உருவாவது மட்டுமின்றி, இந்துக்கள் மிகப் புனிதமான இடமாக கருதும் கைலாயமும், மானசரோவர் நதியும் திபெத்தில் உள்ளதையும், ஆனால் திபெத் சீனத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அங்கு இந்தியர்கள் அனைவரும் சென்றுவர முடியாத நிலை உள்ளது என்றும் கூறினார்.

இந்தியாவின் தெற்கிலுள்ள ஈழத்து விடுதலைப் போராட்டமும், வடக்கில் உள்ள திபெத்தின் விடுதலைப் போராட்டமும் ஒன்றிணைவது காலத்தின் அவசியம் என்றும் டென்சிங் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் தி இந்து நாளிதழின் உண்மைக்குப் புறம்பான போக்கை விமர்சித்து பத்திரிக்கையாளர்களும், வரலாற்றாளர்களும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘பத்திரிக்கை அறமும் இந்து என்.ராமும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தை முதுபெரும் பத்திரிக்கையாளரும், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலருமான விடுதலை இராசேந்திரன் வெளியிட, அதனை டென்சிங் பெற்றுக் கொண்டார்.

நன்றி:வெப்துனியா

Posted by போவாஸ் | at 9:37 PM | 0 கருத்துக்கள்

எம்மாம் பெரியயயய வாய்ய்ய்ய்ய்

ஒரு பீர் டின்ன சர்வ சாதரணமா வாய்க்குள்ளாற விட்டு எடுக்குறாரு..இந்த ஆப்பிரிக்கா நாட்டு மனிதர். பார்க்க பிரமிப்பாக, ஆச்சரியமாக உள்ளது. 
யப்பா..எம்மாம் பெரியயயய வாய்ய்ய்ய்ய்


Posted by போவாஸ் | at 8:16 PM | 0 கருத்துக்கள்

சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் செல்போன் குப்பைகள்.



தொழில்நுட்ப பயன்பாடு அதிகம் உள்ள ஒரு புதிய செல்பேசியை வாங்கி பழைய செல்பேசியை தூக்கி எறிவது என்பது தற்போதைய நாகரீகத்தின் ஒரு ஆடம்பரமாக விளங்குகிறது. ஆனால் தூக்கி எறியப்பட்ட பயன்படாத செல்பேசிகள் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் அடுத்த ஒரு பூதாகாரம் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
2012ஆம் ஆண்டு 8,000 டன்கள் செல்பேசிக் குப்பைகள் சேரும் என்று டெலாய்ட் என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் எச்சரித்துள்ளது.


தூக்கி எறியப்படும் செல்பேசிகள் சுற்றுச்சூழலை நாசம் செய்யும் ஒரு அசுர சக்தியாக உருவெடுத்து வருகிறது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.


பழைய செல்பேசிகளை பழுது பார்த்து வைத்துக் கொள்ளும் வழக்கம் ஏறக்குறைய இல்லவேயில்லை என்றே கூறிவிடலாம். தொழில் நுட்ப நுணுக்கங்களை அதிகரித்து புதிய செல்பேசிகள் நாளுக்கு நாள் அறிமுகம் செய்யப்படும் வேளையில் பழைய செல்பேசிகள் குப்பையாக மாறுகின்றன.


"முறையான மறு சுழற்சி, மறு பயன்பாடு திட்டங்கள் இல்லாததால் நச்சுத் தன்மையுடைய 8000 டன் செல்பேசி குப்பைகள் 2012ஆம் ஆண்டு ஆங்காங்கே கொட்டப்பட்டு சுற்றுச்சூழலை கடும் பாதிப்பிற்குள்ளாக்கும்". என்று டெலாய்ட் ஆலோசனை நிறுவனந்தின் மண்டல நிர்வாக இயக்குனர் பராக் சய்கோங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


பயனற்ற செல்பேசிகளை ஆங்காங்கே நாம் கொட்டும்போது அதிலிருந்து வெளிப்படும் நச்சு நிலத்தடி நீரினுள் ஊடுருவும் அபாயமுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


உலகிலேயே செல்பேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா வெகு வேகமாக முன்னேறி வரும் நிலையில் செல்பேசிக் குப்பைகளை சரிவர அகற்றுவது குறித்த மேலாண்மை அரசு தரப்பிலிருந்து தேவைப்படுகிறது. இல்லையெனில் இது நாட்டின் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று அவர் அபாய மணி ஒலித்துள்ளார். 


ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்க நாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய செல்பேசிகளை மாற்றுகின்றனர். இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 100 மில்லியன் செல்பேசிகள் பயனற்ற குப்பைகளாய் மாறுகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Posted by போவாஸ் | at 7:43 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails