இதெல்லம் ஒரு பிழைப்பா ?...


விஜய்க்கு இது போதாத காலம் போலிருக்கிறது.  வேட்டைக்காரன் விவகாரத்திற்கே இன்னும் விடை தெரியமாமல் இருக்கிறது.   இதில் அடுத்த பிரச்சனை வேறு.

நில வில்லங்கத்தில் சிக்கியுள்ளார்.  காய்த்த மரம் கல்லடி படத்தானே செய்யும் என்று விஜய் வட்டாரம் ஆறுதல் சொல்லிக்கொண்டாலும்,  அடி மேல் அடி விழுகிறதே என்று கவலையிலும் இருக்கிறது.

நடிகர் விஜய்க்கு வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கீடு செய்தது. இதை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை செனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
’’எனது தந்தை ரத்தினபாண்டியன் சென்னை பாடி பகுதியில் நிறைய நிலம் வைத்திருந்தார். கொரட்டூர் வீட்டு வசதி வாரியத்துக்காக 1973-ல் எனது தந்தையின் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலம் 36 ஆண்டுகளாக பயன்படுத்தப்படவில்லை. இவ்வாறு பயன்படுத்தாமல் இருந்தால் நில சொந்தக்காரருக்கே அந்த நிலத்தை திருப்பி தரவேண்டும்.
எனவே, நிலத்தை திருப்பி தருமாறு ஐகோர்ட்டில் எனது தாயார் வழக்கு தொடர்ந்தார். 3 மாதத்தில் எங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4.3.2008 அன்று வீட்டு வசதி துறை செயலாளர் ஆர்ஜிதம் செய்த நிலத்தை திருப்பிதர இயலாது என்று தெரிவித்தார்.

ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் ஒருபகுதி அம்பத்தூர் நகராட்சி சாலைக்கும், இன்னொரு பகுதி குடியிருப்புக்கும், வணிக வளாகத்துக்கும் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதுதவிர, .38 ஏக்கர் நிலம் திராவிடம் பஞ்சாயத்து திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, நாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், 2008 செப்டம்பர் மாதம் .38 ஏக்கர் நிலத்தில் காம்பவுண்டு சுவர் கட்டுவது தெரிய வந்தது. இந்த நிலத்தின் பெரும்பகுதி நடிகர் விஜய்க்கு ஒதுக்கியுள்ளனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுபற்றி கேட்டபோது, 25.4.2007-லிலேயே விஜய்க்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் திராவிட பஞ்சாயத்து திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை விஜய்க்கு வீட்டு வசதி வாரியம் வழங்கியுள்ளது.
வீட்டுவசதி வாரியம் ஒருவருக்கு அதிகபட்சம் ஒரு கிரவுண்டு, குறைந்தபட்சம் 5 சென்ட்தான் ஒதுக்க முடியும். ஆனால் வரைமுறையை மீறி பெரிய அளவில் .27 ஏக்கர் நிலம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட செல்வாக்கு அடிப்படையில் அவருக்கு இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும்.
4.3.2008 அன்று நிலத்தை எங்களுக்கு திருப்பித்தர முடியாது என்று வீட்டு வசதி துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். நிலத்தை விஜய்க்கு ஒதுக்கீடு செய்ததையும் ரத்து செய்யவேண்டும்’’என்று கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

---------------------------------------------------
பைசாவுக்காக, சினிமவில் வாய் கிழிய பேசி உத்தமனாக பக்கம் பக்கமாக டயலாக் பேசும் நடிகனுக்கு, அநியாயத்தை எதிர்த்து அரை டஜன் பன்ச் டயலாக் பேசும் நாயகனுக்கு நிஜ வாழ்கையில் கொஞ்சம் தூய்மையாக, நேர்மையாக,  வாழ கசக்கிறதோ? இதெல்லம் ஒரு பிழைப்பா.?

நிலத்தினை விஜய் தெரிந்து அல்லது தெரியாமல் வாங்கியிருந்தாலும் குற்றம் குற்றமே. அவருக்கு இருக்கும் காசுக்கும் புகழுக்கும் வேறு எத்தனை எத்தனையோ இடங்கள் கிடைத்திருக்கும், வாங்கியிருக்கலாம்.இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் வரம்பு மீறச் செய்து, குற்றத்திற்கு, நிலா மோசடிக்கு துணையாக பயன்படுத்தியிருக்கிறார். இடத்தினை மிகக் குறைந்த அளவிற்கு வாங்கிருக்கிறார் பாருங்கள் இவரது குறுக்கு புத்தியினை.

மனிதாபிமானம், நேர்மை, தூய்மை உடையவன் இதை செய்ய மாட்டான். செய்யவும் துணிவு வராது. இது ஒரு கீழ்த்தரமான செயல். கோர்ட் கடுமையான கண்டனகளை விஜய் தரப்புக்கு தெரிவிக்க வேண்டும். கண்டிக்க வேண்டும். இன்னும் எத்தனை இடத்தில் இது போன்ற இடத்தினை வாங்கி போட்டுள்ளாரோ ?.

இப்பொழுதுதான் தெரிகிறது, விஜய் அரசியலுக்கு வர முயற்சிப்பது இது போன்று குறுக்கு வழியில் வாங்கி வைத்திருக்கும் சொத்துக்களை பாதுகாக்கவேயன்றி வேறு எதற்குமில்லை என்று. சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கோர்ட் கண்டிக்க, தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு தகுந்த, சாதகமான பதிலினை கூறி நீதியை நிலை நாட்ட வேண்டும். இதற்கு மேலும் தன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் தவறை உணர்ந்து மீண்டும் நிலத்தின் உரிமையாளரிடம் நிலத்தினை ஒப்படைத்தால் உமக்கு ஒரு நன்றி + வாழ்த்துக்கள். அப்படியில்லைனா.கடவுள் பாத்துப்பார்..அதிலிருந்து தப்ப முடியாது. ஒவ்வொரு பலனுக்கு ஒரு பிரதிபலன் உண்டு.

Posted by போவாஸ் | at 11:17 PM | 0 கருத்துக்கள்

மொபைலில் அதிக நேரம் பேசுபவரா? இதை‌ப் படி‌ங்க முதல்ல....

எ‌ந்த நோயு‌ம் வ‌ந்த ‌பிறகு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது எ‌ன்று கூறு‌கிறா‌ர் மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் சா‌‌ர்‌லி டியோ.



ம‌‌‌னித‌ர்க‌ள் த‌ங்களது செ‌ல்போனை ல‌வ்டு‌ஸ்‌பீ‌க்க‌ரி‌ல் வை‌த்து‌ப் பேசுவது‌ம், மை‌க்ரோவேவ‌னி‌ல் வேலை முடி‌ந்தத‌ற்காக ‌பீ‌ப் ஒ‌லி எழு‌ம்‌பிய ‌பிறகு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து ‌திற‌ப்பது‌ம் ந‌ல்லது எ‌ன்று‌ம் நம‌க்கு அ‌றிவுறு‌த்து‌கிறா‌ர் இ‌ந்த புக‌ழ்பெ‌ற்ற மரு‌த்துவ ‌நிபுண‌ர்.


மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் கைரா‌சியான, ‌சி‌ட்‌னியை‌ச் சே‌ர்‌ந்த இ‌ந்த ‌நிபுண‌ர், ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌‌க் கா‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம், அதுபோ‌ன்ற பொரு‌ட்களை ந‌ம்முடனேயே வை‌த்து‌க் கொ‌ண்டு வா‌ழ்‌க்கை‌யி‌ல் இதுபோ‌ன்ற சவாலை யாரு‌ம் ச‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் கூறு‌கிறா‌ர்.


cell

உ‌ங்க‌ள் படு‌க்கை அறை‌யி‌ல் உ‌ள்ள ‌மி‌ன்சாதன‌ங்கள‌் எ‌ல்லா‌ம் தலை‌க்கு அருகே இ‌ல்லாம‌ல், கா‌ல் ப‌க்கமாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் பார‌்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்று கூறு‌கிறா‌ர்.

அதாவது படு‌க்கை அறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌மி‌ன்சார அலரா‌ம் பொரு‌த்‌த‌ப்ப‌ட்ட கடிகார‌ம், ரேடியோ, நை‌ட் லே‌ம்‌ப், ஏ‌சி போ‌ன்றவை. 

அ‌வ்வாறு இ‌ல்லையெ‌னி‌ல், ‌இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ன் இணை‌ப்‌பை‌த் து‌ண்டி‌த்துவ‌ி‌ட்டு படு‌க்கை‌க்கு‌ச் செ‌ல்லு‌ங்க‌ள். அதுபோல மை‌க்ரோவே‌வி‌ல் சமைய‌ல் முடி‌ந்தது‌ம் 5 ‌பீ‌ப் ஒ‌லிக‌ள் வ‌ந்தது‌ம் உ‌ங்க‌ள் கைகளை உ‌ள்ளே‌ ‌‌வி‌‌ட்டு உணவு‌ப் பொரு‌ட்களை எடு‌க்கவு‌ம் எ‌ன்‌‌கிறா‌ர் அவ‌ர்.


மேலு‌ம், செ‌ல்பே‌சிக‌ளி‌ல் ஒரு நபரை அழை‌க்கு‌ம் போது அவ‌ர் இணை‌ப்‌பி‌ற்கு வரு‌ம் வரை செ‌ல்பே‌சியை உ‌ங்க‌ள் காத‌‌ல் இரு‌ந்து ‌சி‌றிது தூர‌ம் நக‌ர்‌த்‌தி வை‌ப்பது‌ம், பொதுவாக ல‌வ்டு ‌ஸ்‌பீ‌க்க‌‌ரி‌ல் பேசுவது‌ம் உ‌ங்க‌ள் மூளையை‌க் கா‌ப்பா‌ற்‌றி‌க் கொ‌ள்ள உதவு‌ம் எ‌ன்‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.



மூளை‌யி‌ல் உ‌ண்டாகு‌ம் க‌ட்டிகளை அ‌க‌ற்று‌ம் அறுவை ‌சி‌கி‌ச்சைகளை வெ‌ற்‌றிகரமாக செ‌ய்து வரு‌ம் டியோ, தலை‌ முடிக்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் ‌சில ‌நிறமூ‌ட்டிகளு‌ம் (டை), கு‌றி‌ப்பாக ‌சிவ‌ப்பு ‌நிற மூ‌ட்டிக‌ள், மூளை‌ப் பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்பட வா‌ய்‌ப்ப‌ளி‌க்‌கிறது எ‌ன்‌கிறா‌ர்.

முடி‌க்கு ‌நிறமூ‌ட்டுபவைக‌ள், செ‌ல்பே‌சிக‌ள் போ‌ன்றவை நேரடியாக மூளையை‌த் தா‌க்‌கி பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்துவ‌தி‌ல் முத‌ன்மையாக செய‌ல்படு‌கி‌ன்றன எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.

ம‌ற்ற பு‌ற்றுநோ‌ய் செ‌ல்களை ‌விட, மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் வேகமாக வள‌ர்‌‌கி‌ன்றன. அதாவது, மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் த‌ங்களது எ‌ண்‌ணி‌க்கையை ஒரு வார‌த்‌தி‌ல் அ‌ல்ல‌து ஒரு மாத‌த்‌தி‌ல் அ‌ப்படியே இர‌ட்டி‌ப்பா‌க்கு‌கி‌ன்றன. ஆனா‌ல் மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் இதனை வெறு‌ம் 16 ம‌ணி நேர‌த்‌தில‌் நட‌த்‌தி‌விடு‌கி‌ன்றன. மேலு‌ம், மூளை‌யி‌ல் க‌ட்டி வளர எ‌ந்த வயது வர‌ம்பு‌ம், வயது‌த் தடையு‌ம் இ‌ல்லை.



முத‌லி‌ல் செ‌ல்பே‌சிக‌ளி‌ல் அலார‌ம் வை‌த்து‌வி‌ட்டு, அதனை தலையணை‌க்கு அடி‌யி‌ல் வை‌த்‌திரு‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை கை‌விடு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.



எவ‌ர் ஒருவ‌ர் 10 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம் மேலாக செ‌ல்பே‌சியை‌ப் பய‌ன்படு‌த்து‌கிறாரோ அவ‌ர்களு‌க்கு மூளை‌யி‌ல் ‌சில பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று‌ம், செ‌ல்பே‌சிகளை ஆ‌ண்க‌ள் த‌ங்களது பெ‌ல்‌ட் அதாவது இடு‌ப்பு‌ப் பகு‌தி‌யி‌ல் வை‌த்‌தி‌ரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படுவதை ஒரு ஆ‌ய்வு க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளதையு‌ம் அவ‌ர் மே‌ற்கோ‌ள் கா‌ட்டினா‌ர்.


த‌ற்போது மூளை‌க் க‌ட்டிகளை அக‌ற்ற ப‌ல்வேறு ‌சி‌கி‌ச்சை முறைக‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. அதாது, மை‌க்ரோவே‌வ் ‌சி‌கி‌ச்சை போ‌ன்றவை நேரடியாக க‌ட்டிக‌‌ள் ‌மீது செலு‌த்த‌ப்ப‌ட்டு அவ‌ற்றை அ‌ழி‌க்கு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. எதுவாக இரு‌ந்தாலு‌ம் ந‌ல்ல உணவு ம‌ற்று‌ம் பழ‌க்க வழ‌க்க‌ங்களா‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்‌திரு‌ப்பதே ‌சிற‌ந்தது. வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே நல‌ம் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் எடு‌த்து‌க் கூ‌று‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ. 

Posted by போவாஸ் | at 6:59 PM | 0 கருத்துக்கள்

இன்டர்நெட் பேனர் விளம்பரத்திற்கு 15 வயசு

இணையத் தளத்தில் உலகின் முதல் பேனர் விளம்பரம் வெளியாகி நேற்றுடன் (அக்டோபர் 27) 15 வருடங்களாகி விட்டது.

1994ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி Hotwired.com என்ற இணையத் தளத்தில் வெளியான பேனர் விளம்பரமே, உலகின் முதல் டிஜிட்டல் விளம்பரமாகும்.

ஹாட்வைர்ட் இணையதளம் ஒரு டிஜிட்டல் வர்த்தக இணையத் தளமாகும். இதுவே உலகின் முதல் டிஜிட்டல் வர்த்தக இணையத் தளமும் கூட, வைர்ட் இதழின் இணையத் தளப் பதிப்பும் ஆகும்.

டிஜிட்டல் விளம்பரம் குறித்து பி அன்ட் ஜி நிறுவனத்தின் தலைவரான எட் அர்ட்ஸ்ட் 1994ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக விழிப்புணர்வுப் பேச்சை நிகழ்த்தினார். டிஜிட்டல் விளம்பரமே இனி வர்த்தக உலகின் புதிய எதிர்காலமாக இருக்கும். அதற்கு அனைவரும் மாற வேண்டும். இல்லாவிட்டால் தனிமைப்படுத்தப்படுவோம் என்று அவர் கூறினார்.

அவரது பேச்சைக் கேட்ட மெஸ்னர் வெட்ரே பெர்ஜர் மெக்நாமி ஸ்மாட்டரர் நிறுவனத்தின் தலைவரான பாப் ஸ்மிட்டரருக்கு புதிய உற்சாகம் பிறந்தது. இதையடுத்து ஒரு விளம்பரத்தை உருவாக்கும் பணியை முடுக்கி விட்டார் பாப்.

இன்டர்நெட்டில் விளம்பரம் என்பது அப்போது புதிது என்பதால் சும்மா போட்டு பார்ப்போம் என்ற எண்ணமே அப்போது பாப் மற்றும் அவரது குழுவினரிடம் இருந்தது.

பின்னர் ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரை இதில் பயன்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே சிலரை அணுகினர். அதன்படி தொலைத் தொடர்பு நிறுவனமான எம்.சி.ஐ, வோல்வோ நிறுவனம், கிளப்மெட், 1-800 கலெக்ட், ஏடி அன்ட் டி, ஜிமா ஆகியவை விளம்பரம் தர முன் வந்தன..

இந்த ஆறு நிறுவனங்களின் பெயர்களையும் வைத்து பேனர் விளம்பரம் தயாரிக்கப்பட்டது. அப்போது இருந்த வெப் பிரவுசர் மொசைக் (பின்னர் நெட்ஸ்கேப் எக்ஸ்புளோரர் வந்து மொசைக்கை விரட்டி விட்டது).

மேலும், இப்போது போல பிராட்பேண்ட்டும் கிடையாது. டயல் அப் மட்டுமே. அதிகபட்ச வேகமே 24.4 கேபிபிஎஸ் தான். அமெரிக்காவில் இன்டர்நெட் வைத்திருந்தவர்கள் எண்ணிக்கை அப்போது 20 லட்சம்தான்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த 6 நிறுவனங்களின் பெயர்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் பேனர் விளம்பரங்கள் இடம் பெற்றன. இன்டர்நெட்டில் இடம் பெற்ற உலகின் முதல் விளம்பரங்கள் என்ற பெருமையை இந்த ஆறு நிறுவனங்களின் பெயர்களும் பெற்றன. 

இந்த பேனர் விளம்பரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே சோதனை ரீதியாக வெளியிடப்பட்ட இந்த பேனர் விளம்பரங்கள், உலகின் முதல் டிஜிட்டல் விளம்பரம் ஒரு வழியாக வெற்றி பெற்றது- பின்னர் நடந்தது வரலாறு.

வோல்வோ நிறுவனம் இந்த விளம்பர வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தது. இருப்பினும் விளம்பரத்தை கிளிக் செய்து வாடிக்கையாளர்கள் தங்களை அணுகுவதை அது விரும்பவில்லை.

அதற்கு சுவாரஸ்யமான காரணம் இருந்தது- முதலில் ஆன்லைன் மூலம் தங்களை அணுகும் வாடிக்கையாளர்ளை எப்படி கையாளுவது என்பது குறித்து அதற்குத் தெரியாமல் இருந்தது.

2வது, சட்ட ரீதியான பிரச்சினைகள் வந்து விடுமோ என்ற குழப்பம் ஒரு பக்கம். இதனால் விளம்பரத்தை கிளிக் செய்து பார்க்கும்படியாக அதை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது வோலவோ.

எனவே வோல்வோ நிறுவனத்தின் லோகோ மற்றும் ஒரு வாகனத்தின்படம் மட்டுமே அந்த பேனர் விளம்பரத்தில் இடம் பெற்றதாம்.

இருப்பினும் அப்படியே விட்டால் நலமாக இருக்காது என்று எண்ணிய பாப் குழுவினர், வோல்வோ பேனரை கிளிக் செய்து உள்ளே போன பின்னர் ஒரு கொஸ்டினர் வருவது போல வடிவமைத்திருந்தனர். அதில் உங்களுக்கு எந்த வோல்வகார்  பிடிக்கும் என்ற கேள்வியைக் கேட்டிருந்தனர்.

இப்படி விளையாட்டு போல ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பரம் இன்று எப்படி உள்ளது?. இன்றைய டிஜிட்டல் விளம்பர வர்த்தகத்தின் மதிப்பு 24 பில்லியன் டாலர்களாம்!

Posted by போவாஸ் | at 6:30 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails