நகைச்சுவை துணுக்குகள் - சர்தார்ஜி ஜோக்ஸ் - 1

சிறுநீர் கொண்டு வா!
ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார். 
டாக்டர்: என்ன இவை?
சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க.

ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.
சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.
நண்பர்: ஏன்?
சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது
நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?
சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே. 

சிறந்த டிரைவர்..?
அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்.
 


அன்னையின் கடிதம்.  
வஹே.. குரு..
அன்புள்ள பந்தாவுக்கு,நான் இந்த கடிதத்தை மெதுவாக எழுதுகிறேன், ஏன்னா நான் வேகமா எழுதினா உன்னால படிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். நீ வீட்டைவிட்டு போகும் போது இருந்த வீட்ல இப்ப நாங்க இல்லை. நம்ம வீட்டிலிருந்து 20 மைல் து¡ரத்தில்தான் எல்லா ஆக்சிடன்டும் நடக்குதுன்னு பேப்பர்ல வந்த அன்னைக்கே அந்த வீட்டை உன் அப்பா காலி பண்ணிவிட்டார். புதுவீட்டு அட்ரசை என்னால இப்ப உனக்கு எழுத முடியாது, ஏன்னா, இதற்கு முன்னால இங்கிருந்த சர்தார் இந்த வீட்டு நம்பரை அவன் புதிய வீட்டுக்கு வைக்கிறதுக்கு எடுத்துக்கிட்டு போய்விட்டானாம். ஏன்னா அவன் வீட்டு அட்ர¨¨ மாற்ற வேண்டாம் பாரு..இந்த இடம் மிகவும் நன்றாக உள்ளது. இங்கு வாஷிங் மிசின் கூட இருக்கிறது. ஆனா அது ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்கிறது. போன வாரம் மூனு சட்டையை போட்டு சங்கிலியை பிடித்து இழுத்து விட்டேன். பிறகு கொஞ்சம் சத்தம் கேட்டது, ஆனா சட்டைகள் இதுவரை எங்கு போனதுன்னு தெரியல. கிளைமேட் ரொம்ப மோசமில்கை, போன வாரம் இரண்டு முறை மழை பெய்தது, முதன் முறை மூன்று நாட்களும், இரண்டாவது முறை நான்கு நாட்களும் பெய்தது. நீ கோட்டு கேட்டிருந்தாய் அல்லவா? அனுப்பியிருக்கிறேன். மெயிலில் அனுப்புவதற்க்கு கோட்டு மிகவும், எடை அதிகமாக இருந்ததால், அதிலிருந்த பட்டன்களை அறுத்து எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் போட்டிருக்கிறேன். சுடுகாட்டிலிருந்து, பாட்டியை எரித்ததிற்கான பில் வந்திருக்கிறது. இந்த முறை பணம் கட்டாவிட்டால் பாட்டியையே திருப்பி இங்கு அனுப்பி விடுவாதாக எழுதியிருக்கிறார்கள். மறுபடியும் பாட்டி இங்கு வந்துவிட்டால் தங்குவதற்கு ரொம்ப ககடமாக இருக்கும். உன் அப்பா மயானத்தில் புல்வெட்டும் வேலை ஒன்றில் சேர்ந்திருக்கிறார். நல்ல வேலை, அவருக்கு கீழே 500 பேர் இருக்கிறார்களாம், பெறுமையாக எல்லோரிடமும் சொல்கிறார். முக்கியமான செய்தி, உன் அக்காவுக்கு இன்று காலை குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை ஆனா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை, அதனால நீ இப்ப மாமாவா இல்லை மாமியா என்று எனக்கு புரியல. உன் மாமா ஜீதேந்தர் போன வாரம் தவறுதலா விஸ்கி வாட்டுக்குள்(பெரிய பாத்திரம்) விழுந்துவிட்டார். காப்பாற்றப் போன இரு நன்பரையும் போட்டு அடி அடின்னு அடித்துவிட்டு கடைசியில் மூழ்கி செத்து போனார், அவரை எரிச்சப்ப மூன்று நாள் முழுசா எரிஞ்சாராம். வேறு ஒன்றும் எழுதுவதற்க்கு இல்லை. மற்றவை அடுத்த மடலில்..அன்புடன் உன் அம்மா.

Posted by போவாஸ் | at 9:21 PM | 1 கருத்துக்கள்

விஜயின் மாஸ்டர் ப்ளான் - புதிய தகவல்கள்.

விஜயின் மாஸ்டர் ப்ளான்  - புதிய தகவல்கள்.


நடிகர்  விஜய்  புதிதாக அரசியல் கட்சி துவங்கப் போகிறார், காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார். - என்றெல்லாம் உலவிய பேச்சுக்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். " நான் தற்போது அரசியல் கட்சி துவக்கப் போவதுமில்லை, காங்கிரஸில் சேரப்போவதுமில்லை. எனது மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி நற்பணிகளைத் தொடருவேன்" என்று தெரிவித்தார். விஜய் எடுத்துள்ள இந்த முடிவின் பின்னணியில் பல்வேறு ரகசியங்கள் இருக்கின்றன.
புதிதாக அரசியல் கட்சி துவங்கி அதை அடுத்த தேர்தல் வரை கொண்டு செல்ல கோடிக் கணக்கில் பணம் தேவை. ஆகவே, இப்போதே கட்சி ஆரம்பித்தால் தேர்தல் வரை கட்சியை வளர்க்க பெருந்தொகை செலவு செய்ய வேண்டியிருக்கும். அப்படி செலவு செய்து ஒரு கட்சியை உருவாக்க, நடிகர் விஜய்யோ, அவரை இயக்கிக் கொண்டிருக்கும் அவரது தந்தை எஸ்.எ. சந்திரசேகரோ தயாராக இல்லை.
 இந்த சூழ்நிலையில்தான் விஜய் காங்கிரஸில் சேருவது பற்றி யோசித்து இருக்கிறார். காங்கிரஸில் இனைந்து ஒரு குறிப்பிட்ட காலம் வர பாலிடிக்ஸ் நடத்திவிட்டு பிறகு ஏதாவது காரணத்தைச் சொல்லி காங்கிரசிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பிப்பது (மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் தோற்றுவித்ததைப் போல) எனத் திட்டமிட்டிருக்கிறார் விஜய்.
காங்கிரஸில் இணைவதன் மூலம் தான் மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களின் போது  வரவேற்பு ஏற்பாடுகள், விளம்பரங்கள், நிகழ்ச்சி ஏற்பாடுகள், பயணச் செலவுகள் ஆகியவற்றை கட்சிப் பிரமுகர்கள் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தனக்கோ, தனது ரசிகர் மன்றத்தினுக்கோ பெருஞ்செலவு ஏற்படாது என்பது ஒரு காரணம்.
காங்கிரஸில் இருக்கும் காலம் வரை கட்சி நிகழ்ச்சி, சுற்றுப்பயணம் என்கிற பெயரில் தமிழகம் முழுக்க கட்சி செலவிலேயே பயணித்து தனது ரசிகர் மன்றங்களை விரிவுபடுத்தி ஆதரவாளர்களை பெருக்கிக் கொள்வது. இது இரண்டாவது காரணம்.

இந்நிலையில், 'காங்கிரஸில் சேரும் தனது முடிவு பற்றி ரசிகர் மன்ற பிரமுகர்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்பதை அறிந்துல்கொள்ள மாவட்ட ரீதியாக ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளார் விஜய். ரசிகர் மன்ற நிர்வாகிகளில் பலர் தி.மு.க அனுதாபிகள். அப்படிப்பட்ட அனுதாபிகள், காங்கிரஸில் இனைந்து பணியாற்றும் விஜயின் யோசைன்ன்கு எதிர்ப்ப தெரிவித்திருக்கிறார்கள்.
"காங்கிரஸில் நாம் இணைந்தால் நமது தனித்தன்மையை இழந்துவிடுவோம். காங்கிரஸில் உள்ள பத்து கோஷ்டிகளில் நமது அணி பதினொன்றாவது கோஷ்டியாக இருக்குமேயொழிய் பலமான கோஷ்டியாக உருவெடுக்க முடியாது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உங்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் எங்கள் சொந்த பணத்தை செலவழித்து மன்றத்தை வளர்த்துள்ளோம். காங்கிரசிற்கு நீங்கள் போவதாக இருந்தால் உங்களின் ரசிகராக மட்டுமே இருப்போம். நாங்கள் காங்கிரசிற்கு வர மாட்டோம்" என்று கூறி விட்டனர்.
இவர்களில் வேறு சிலர், "இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவுக் குரல் கொடுத்து உண்ணாவிரதம் இருந்தவர் நீங்கள். ஆனால் காங்கிரஸ்காரர்களோ இலங்கைத் தமிழர்களை ஒழிக்க ஆயுதம் வழங்கியவர்கள். அவர்களுடன் இணைவதா?" என்று குரல் எழுப்பினார்கள். "வெட்கக்கேடு! வெட்ககேடு! காங்கிரஸில் சேருவது வெட்கக்கேடு" என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். இதனால் விஜய் சற்று குழம்பித்தான் போனார்.


பிறகு தன தந்தையுடன் தீவிர ஆலோசனை செய்திருக்கிறார். தன தந்தையிடம் விஜய், "காங்கிரஸில் சேர்ந்தால் சினிமா தொழில் போய்விடும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர் மன்றங்களில் இருந்து எதிர்ப்பு இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு மக்களிடம் பாய் நம் ஆதரவாளர்களை வளர்ப்போம். பிறகு தனிக்கட்சியா ? காங்கிரசா ? என்று முடிவு செய்வோம்" என்று கூறிவிட்டாராம். இதைத் தொடர்ந்தே காங்கிரஸில் சேரும் முடிவைக் கைவிட்டார் விஜய்.
இந்நிலையில் புதிய மூவ்களில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய். தனது மக்கள் இயக்கத்தை வலுவானதாக ஆக்குவதில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார். இனி ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு விசிட் செய்வார். அங்கே தனது ரசிகர்களை மட்டுமல்லாமல் நற்பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களையும் சந்தித்துப் பேசுவார்.
முதல் கட்டமாக வருகின்ற செப்டம்பர் இருபதாம் தேதி பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். மக்கள் இயக்கித்தில் உறுப்பினர்களை சேர்க்கவும் மக்கள் நலப்பணிகளைத் துவக்கி வைக்கவும் போகிறார் நடிகர் விஜய்.
முதல் ரவுண்ட் சுற்றுப் பயணத்தில் மக்கள் இயக்க உறுப்பினர் சேர்ப்பு வைபவங்களை நடத்தி முடித்த பிறகு இலவச கம்ப்யூட்டர் பயிற்ச்சி மையங்களையும், இலவச தையல் பயிற்ச்சி மையங்களையும் மாவட்டம் மற்றும் ஒன்றியம் தோறும் வேகமாக துவக்கப் போகிறாராம்.
சென்னையில் துவக்கிய கம்ப்யூட்டர் பயிற்ச்சி மையத்திற்கான முழு செலவையும் விஜய் தனது சொந்தப் பணத்தில் செய்திருக்கிறார். பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ரசிகர் மன்றத்தினர் செலவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளிடம், "அரசியலில் குதித்த பிறகு நாங்கள் சென்னையில் தேர்தல் களத்தை சந்திப்போம்.

அதனால்தான் இந்த மாவட்டத்தில் எங்கள் சொந்த செலவில் பயிற்சி மையம் ஆரம்பித்திருக்கிறோம். மற்ற மாவட்டங்களில் நாங்கள் போட்டியிடப் போவத்தில்லை. அங்கேயுள்ள மன்ற நிர்வாகிகளான உங்களுக்குத்தான் எம்.எல்.ஏ சீட் தரப் போகிறோம். எதிர்காலத்தில் எம்.எல்.ஏ வாகப் போகும் நீங்கள் இந்தச் செலவைக் கூட செய்யக் கூடாதா ? " என ஆசை வார்த்தை பேசி இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் துவக்கத் தூண்டுகின்றனராம் நடிகர் விஜயும், அவரது அப்பாவும்.
சென்னை, புதுக்கோட்டை, பாண்டிச்சேரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னையில் உள்ள பயிற்சி மையம் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. மற்ற இரு மாவட்டப் பயிற்சி மையங்களும் பணமில்லாததால் சரிவர இயங்கவில்லை.
இதில் புதுக்கோட்டை மையத்தில் பழைய கம்ப்யூட்டர்களை வைத்து மையத்தைத் துவக்கியுள்ளனர். சில நாட்களிலேயே அந்தக் கம்ப்யூட்டர்கள் பழுதாக, பயிற்ச்சி மையம் பயனற்று கிடக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் துவங்க விரும்புவோருக்கு புதிய நிபந்ததனைகளை விதித்துள்ளார் நடிகர் விஜய்.
கம்ப்யூட்டர் மையம் நடத்தும் இடத்தை மூன்றாண்டு கால ஒப்பந்தத்திற்கு வாடகை அல்லது ஒத்திக்கு எடுத்து பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்பது முதல் நிபந்தனை.
கம்ப்யூட்டர் பயிற்சியாலரிடமும் பனி ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை.
கம்ப்யூட்டர் பயிற்சியாளரை சென்னை அலுவலகத்துக்கு நேர்முகத் தேர்விற்கு அனுப்ப வேண்டும்.
அங்கு நடக்கும் நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்றவரையே பயிற்றுநராக நியமிக்க வேண்டும் என்பது மூன்றாவது நிபந்தனை.

இவற்றை செய்த பிறகே கம்ப்யூட்டர் பயிற்சி மையம் துவக்க அனுமதியும், துவக்க விழாவிற்கு வருகை தர 'கிரீன் சிக்னலையும்' கொடுக்கிறாராம் நடிகர் விஜய்.
அடுத்த ஆறு மாத காலங்களுக்குள் பத்து லட்சம் உறுப்பினர்களை மக்கள் இயக்கத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பது விஜய் போட்டுல்லா அதிரடி திட்டமாம். அதைத் தன ரசிகர் மன்றத்தினரிடம் கூறியுள்ள விஜய், மக்கள் இயக்கத்தை வளர்ப்பது, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம், தையல் பயிற்சி மையம், மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துவது போன்றவற்றை முடிக்கிவிட்டுள்ளார்.
இவையெல்லாம் முழு வீச்சில் (நாடகத்தை)அரங்கேறிய பிறகே 'புதிய கட்சியா ? , காங்கிரசா ?' என்பதை முடிவு செய்வாராம் நடிகர் விஜய்.

நன்றி: தமிழன் எக்ஸ்பிரஸ்.


தன ரசிகர்களின் உதவியால், முழுக்க முழுக்க தன சுய லாபத்திற்காக, அரசியலில் அடி எடுத்து வைக்கவே இவர் முயல்கிறார்.இவர் ஊர் ஊருக்கு கம்ப்யூட்டர் சென்டர் திறப்பது, நலத்திட்டப் பணிகள் எல்லாம் ஒரு கண்துடைப்பு.
அதுவும் அவர் தன சொந்த செலவில் செய்யவில்லை. செய்யமாட்டாராம்.ரசிகர்கள் செய்ய வேண்டுமாம்.
சென்னையில் மட்டும் இவர் கம்ப்யூட்டர் சென்டர் திறப்பாராம். தமிழகம் முழுவதும் உள்ள மற்ற ஊர்களுக்கெல்லாம் தன ரசிகர் மன்றங்களின் சார்பாக ரசிகர்கள் திறக்க வேண்டுமாம். என்ன கொடுமை இது ?.



ஒரு படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர் தன ஒரு படத்தின் பாதி சம்பளத் தொகையை கொடுத்தாலே தமிழகம் முழுவதும் குறைந்தது 6 கம்ப்யூட்டர்கள் வாங்கி, இடம் பார்த்து, கம்ப்யூட்டர் சென்டர் திறக்க முடியும். நடத்த முடியும். ஆனால் இவர் செய்ய மாட்டார்.
ஒரு உண்மையான சமுதாய அக்கறையும், மக்கள் முன்னேற வேண்டும் என்று நினைப்பவன் கண்டிப்பாக செய்வான்.ஆனால் இவர் அப்படியல்ல.
ரசிகர்கள் கம்ப்யூட்டர் வாங்கி, ஒரு இடத்தினை வாடகைக்கு எடுத்து, கற்றுத்தர பயிற்சியாளரை வேலைக்கு எடுத்து, மாதா மாதம் வாடகை, மின்சாரம் முதலான இதர செலவுகள் செய்ய வேண்டுமாம். இவர் கம்ப்யூட்டர் சென்டர் திறக்க மட்டும் வருவாராம்.
இன்றைய சூழ்நிலையில் ஒரு பத்து கம்ப்யூட்டர் வாங்க வேண்டுமென்றால் குறைந்தது இரண்டரை லட்சமாவது தேவை படும். கம்ப்யூட்டர் சென்டர் நடத்தப் போகும் இடத்திற்கு வாடகை ஒரு 1000 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் பத்து மாத வாடகைப் பணம் அட்வான்ஸாக இட உரிமையாளரிடம் தர வேண்டும், இதற்கு மேல் கம்ப்யூட்டர் சென்டரின் இன்டீரியர்,பயிற்சியாளர்கள், இதர செலவுகள் எல்லாம் சேர்த்து ஒரு 1.50 லட்சமாவது செலவாகும்.
மொத்தம் எல்லாம் சேர்த்து சுமார் ஐந்து லட்சத்திற்கு குறையாமல் தேவைப்படும.
ரசிகர்களின் மேல் இவர் சுமத்தும் பாரங்களைப் பார்த்தீர்களா ? எப்படித் தாங்கப் போகிறார்கள் இவரது ரசிகர்கள் ?.
யாரோ நட்டுவைத்து தண்ணீர் ஊற்றி, பாதுகாப்பாய் வளர்த்த மரத்தில், காய்க்கின்ற காய் கனிகள் மட்டும் இவருக்கு வேண்டுமாம். என்ன ஒரு வில்லத்தனமான் எண்ணம்.
இவரிடம் தெளிவான பேச்சுமில்லை, தெளிவான சிந்தனையுமில்லை.விஜயை உயிராக மதிக்கும் ரசிகர்கள் மேல் அக்கறையுமில்லை.
இவரது எண்ணம், செயல், பேச்சு, செயல்பாடு எல்லாம் அரசியலை நோக்கி, தன சுய லாபத்திற்காகவே என்பது இந்த கட்டுரை மூலம் நிரூபணமாகிறது.
சமுதாய அக்கறை, மக்கள் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி, ஒரு தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகள் இவரிடம் துளி கூட இல்லை.
தயவு செய்து இவரது ரசிகர்கள், தொண்டர்கள், நடுநிலையானவர்கள், இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் எல்லோரும் ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்.

இவரா நமக்கு நன்மைகளை செய்யப் போகிறார். போராடப் போகிறார்.

சத்தியமாக இல்லை. 
இதெயெல்லாம் மீறி இவரது தொண்டர்கள், ரசிகர்கள் கம்ப்யூட்டர் சென்டர்களைத் திறந்தால் தன் தலையில் தானே மண் அள்ளிப் போடுவதற்கு சமம். அவர்களைப் போல ஒரு சிறந்த முட்டாள்கள் வேறு யாருமில்லை. 
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல எல்லாம் செய்துவிட்டு பின்னர் வருத்தப்பட்டு புலம்பாமல் இருக்க, இனிமேலாவது இவரது ரசிகர்கள், தொண்டர்கள் சற்று முழித்துக் கொள்வது நல்லது.
 

விஜய்க்கு எதிராகவோ அல்லது வெறும் வெட்டிப் பேச்சாகவோ எழுதவில்லை. ரசிகர்கள், தொண்டர்கள், மக்கள் ஒரு விழிப்புணர்வுடன் இருக்கவே எழுதப்பட்டது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

Posted by போவாஸ் | at 10:53 AM | 3 கருத்துக்கள்

தெரிந்துகொள்வோம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகுதி 2


தகவல் பெறும் உரிமைச்சட்டம், 2005

 

மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இந்த நோக்கத்தை எய்துவதற்கும், குடிமக்கள் ஒவ்வொருவரும், அரசு(அல்லது) அரசு சார்ந்த அலவலகங்களிடமிருந்து தகவல் பெறுவதற்கும் ஏதுவாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
தற்போது,தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005-ஐ, ஐம்மு-காஷ்மீர் மாநிலம் நீங்கலாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், அக்டோபர் மாதம் 2005-ல் முழுமையாக நடைமுறைப்படுத்த, மத்திய அரசால் சட்டம் வெளியிடப் பட்டுள்ளது. அரசு அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்கும் வகையில் இச்சட்டம் உள்ளது. எனவே அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல் திறனிலும், வெளிப்படையான நிலை, செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலங்களின் கட்டுப்பாட்டிலுள்ள தகவல்களை குடிமக்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொ்ள வழி செய்யும் சட்டமே தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 ஆகும். 2005 ஆம் ஆண்டின் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கண்காணித்தல் மற்றும் செயலாக்கம் தொடர்பான பொருள் பொதுத்துறையிலிருந்து, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறைக்கு அரசாணை நிலை எண்.1365, நாள். 21.11.2006ன் மூலம் மாற்றப்பட்டுள்ளது. இத்துறையில், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் செயலாக்கம் மற்றும் நிருவாகம், அதன் தொடர்புடைய அறிவுரைகள்,


ஆணைகள், விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. இச்சட்டம் தொடர்பாக ஏதேனும் விளக்கம் அல்லது தெளிவுரை வேண்டின் பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை (நி.சீ.3) என்ற பிரிவிலிருந்து உரிய தகவலைப்பெறலாம். பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறையின் சிறப்பு ஆணையாளர் மற்றும் அரசு செயலாளர் அவர்கள் இச்சட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் ஆவார். இச்சட்டத்தின் கண்காணித்தல் மற்றும் செயலாக்கத்திற்காக துணைச்செயலாளர் (த.பெ.உ.ச.) மற்றும் சார்புச்செயலாளர் (த.பெ.உ.ச.) ஆகியோர் தனியே நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டத்தின் நோக்கங்கள் 
1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான 
ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்;
2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே 
பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் 
பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை ஊழலை ஒழித்தல்.
4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு 
உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.

Posted by போவாஸ் | at 12:21 AM | 1 கருத்துக்கள்

Related Posts with Thumbnails