விஜய் டி.வி அழைப்பு கமல் மீண்டும் சம்மதம்!


கலைஞானி கமல்ஹாசனுக்கு விழா எடுத்து கவுரவித்தது விஜய் டி.வி. ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் கலந்து கொண்ட இந்த விழா, சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்தது. தமிழ் திரையுலகில் நடிக்க வந்து ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்த கமலுக்கு பொன்விழா நடத்திய விஜய் டிவி, அதன் மூலம் தனது உயரத்தை இன்னும் சில அங்குலம் வளர்த்துக் கொண்டது.

'காலங்களில் அவள் வசந்தம் மாதிரி, கலைகளில் அவர் கமல்ஹாசன்' என்ற பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த விஜய் டிவிக்கு கைமாறாக ஏதாவது செய்து தனது நன்றியை தெரிவிக்க நினைத்தாராம் கமல். "என்ன வேணுமோ கேளுங்க...?" என்று அவர் சொல்ல, விஜய் டி.வி கேட்டதுதான் விசேஷம்!


"நீங்களே பங்குபெரும் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்கிறோம். அதில் உங்களின் முழுமையான பங்களிப்பு வேண்டும்" இதுதான் விஜய் டி.வி கேட்ட விஷயம். அதாவது இந்தியில் அமிதாப் செய்தாரே கோடீஸ்வரன் நிகழ்ச்சி! அது மாதிரி ஒரு ஷோ. முதலில் யோசித்த கமல், தற்போது அதற்கும் ஓ.கே சொல்லியிருக்கிறாராம்.


நடிகர்களில் உலக ஞானம் பெற்றவர் கமல் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்போது அவர் நடத்தப் போகும் ஷோ, அதை இன்னும் தெளிவுபடுத்தும் என்பது மட்டும் நிச்சயம்!

Posted by போவாஸ் | at 9:00 PM | 0 கருத்துக்கள்

செக்ஸ் புகாரால் பதவி இழப்பு என்.டி.திவாரி ஓட்டம்




செக்ஸ் புகாரால் பதவி இழந்த முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரி சப்தமின்றி நேற்று அதிகாலை ஆந்-திராவில் இருந்து வெளியேறினார்.
ஆந்திர ஆளுநராக பதவி வகித்த என்.டி. திவாரி ஆளுநர் மாளிகையில் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக குற்றம் சாற்றப்பட்டது. இதுதொடர்பாக சில படங்கள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து என்.டி.திவாரி பதவி விலகினார். உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகுவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அவருடைய பதவி விலகல் ஏற்கப்பட்டு சட்டீஸ்கர் மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் லட்சுமிநரசிம்மன் ஆந்திர ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. லட்சுமி நரசிம்மன் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை அய்தராபாத் வந்து நேற்று காலை பதவி பொறுப்பை ஏற்பதாக முடிவானது.
லட்சுமி நரசிம்மன் வருவதற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குள்ளாக அய்தராபாத்தில் இருந்து புறப்பட்டு செல்ல திவாரி திட்டமிட்டார். ஆனால் அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து பகல் நேரத்தில் வெளியே வந்தால் மகளிர் அமைப்புகள் அவருடைய காரை வழிமறித்து ஆர்ப்பாட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் விமானநிலையத்திலும் ஆர்ப்பாட்டம் நடக்கலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த திவாரி தனது பயண திட்டத்தில் மாற்றம் செய்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே சப்தமின்றி அய்தராபாத்தில் இருந்து புறப்பட்டு செல்ல முடிவு செய்தார்.
ஆனால் அந்த திட்டத்திலும் சிக்கல் எழுந்தது. அவர் ஆளுநர் பதவியில் இருந்து விலகிவிட்டு செல்வதால் ‘கார்டு ஆப் ஆனர்’ எனப்படும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த மரியாதையை சூரிய உதயத்துக்கு முன்பாகவோ சூரிய மறைவிற்குப் பின்போ வழங்க முடியாது. இதனால் அவர் அதிகாலையில் புறப்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பயணம் தள்ளி வைக்கப்பட்டது.
ஞாயிற்றுகிழமை மாலை 4 மணிக்கு அவ-ருக்கு வழியனுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன்பிறகு முதல் அமைச்சர் ரோசய்யா, தலைமை செயலாளர் ரமாகாந்த் ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் திவாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வழியனுப்பினார்கள்.
பின்னர் நேற்று அதிகாலையில் திவாரி சப்தமின்றி காரில் விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
கடைசிவரை அவருடைய இந்த பயண திட்டம் கமுக்கமாக வைக்கப்பட்டு இருந்தது. முன்னதாக ஆளுநர் மாளிகையில் இருந்த அவருக்கு சொந்தமான பொருள்கள் லாரியில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டன

Posted by போவாஸ் | at 5:18 PM | 1 கருத்துக்கள்

தமிழ்ப் படங்களைக் கொண்டாட வரும் 'தமிழ் படம்'

தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் குடும்பத்தில் இருந்து வரும் மற்றொரு தயாரிப்பாளர், தயாநிதி அழகிரி. இவர் தயாரிக்கும் முதல் படத்திற்குத் 'தமிழ் படம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்த சி.எஸ்.அமுதன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகனாகச் சிவா நடிக்க, அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த தீஷாபாண்டே அறிமுகம் ஆகிறார்.

வித்தியாசமான தலைப்புடன் வரும் 'தமிழ் படம்', இதுவரை ரசிகர்களை வேறு எந்தத் தமிழ்ப் படமும் சிரிக்க வைக்காத அளவிற்குச் சிரிக்க வைக்குமாம். படம் மட்டும் அல்லாமல் இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றும் புதுமையாக இருக்குமாம். அதில் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் வித்தியாசமான சத்தங்களை வைத்து 'ஒமகஷியா...' என்ற பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். இப்பாடலை இலங்கையில் படம் பிடித்துள்ளனர்.

எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா போன்ற நடிகர்கள் இப்படத்தில் கல்லூரி மாணவர்களாக வலம் வருகிறார்கள். மேலும் டெல்லி கணேஷ், வி.எஸ்.ராகவன், பரவை முனியம்மா, பெரியார்தாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர்.

"தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு புதுமையான நகைச்சுவைப் படமாக உருவாகி வரும் 'தமிழ் படம்', தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு மாபெரும் வெற்றிப் படங்களைக் கொண்டாடும் விதத்தில் அமைந்திருக்கும்" என்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்த டி.சந்தானம் இப்படத்திற்குக் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

கண்ணன் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் திரை முன்னோட்டத்தைக் கமல்ஹாசன் வெளியிட, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பெற்றுக்கொண்டார். இசை வெளியீட்டு நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சியில் 2009, டிசம்பர் 25ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது

Posted by போவாஸ் | at 4:58 PM | 0 கருத்துக்கள்

கலைஞர் காப்பீட்டு திட்டம்:கருணாநிதிக்கு மருத்துவர்கள் பாராட்டு


ஏழை எளிய மக்களைப் பாதித்திடும் கொடிய நோய்களிலிருந்து அரசு மேற்கொண்டுவரும் பல் வேறு மருத்துவ நலத்திட்டங்களில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பினை பெற்றுப் பாராட்டுகளை குவித்து வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 443 பேருக்கு ரூ. 76 கோடியே 63 லட்சம் செலவில் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சிகிச்சைகளை அளிப்பதில் தனியார் மருத்துவ மனைகளில் பங்கு பாராட்டத்தக்கது.
 கருணாநிதிக்கு மருத்துவர்கள் பாராட்டு

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் வெற்றிக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கி வரும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சென்னை செனாய் நகரிலுள்ள “பில்ராத்” மருத்துவமனை, ரத்தினவடிவு என்ற ஏழை விவசாயிக்கு இத் திட்டத்தின்கீழ் முதல் இருதய அறுவை சிகிச்சையை பெற்றிகரமாகச் செய்த மருத்துவமனை. இங்கு இதுவரை 400-க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு அறுவை சிகிச்சைகளைச் செய்து சாதனை படைத்துள்ளது


இதனையொட்டி “பில் ராத்” மருத்துவமனையின் இயக்குநர்கள் நாராயண சாமி, கோபி, அறுவை சிகிச்சை நிபுணர் தியாகராஜ மூர்த்தி, மயக்க மருந்து நிபுணர்கள் நெடுமாறன், மகாதேவன் ஆகியோர் இன்று முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்தியமைக்காக தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் கூறியதாவது:-

பில்ராத் குடும்பத்தின் சார்பில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மிகச்சிறந்த முறையில் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் ஆதரவோடு செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டம் வெற்றியடைவதற்கு முக்கிய காரணமாக செயல்பட்டு வரும் தாங்களும், தங்கள் தலைமையின் கீழ் செயல் படுகின்ற தமிழக அரசுதான் காரணம்.

மேலும், நல்ல முறையில் நடைபெற்று வரும் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் எங்களையும் பங்கு பெறச்செய்து 400-க்கும் மேற்பட்ட ஏழை எளியோர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய அரிய வாய்ப்பை ஏற்படுத்தியக் கொடுத்த தங்களுக்கு, எங்கள் பில்ராத் மருத்துவமனையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு மக்களுக்கு தாங்கள் செய்யும் சீரிய பணி மேலும் பல்லாண்டு காலம் தொடர எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


நன்றி:மாலைமலர்.

Posted by போவாஸ் | at 4:44 PM | 0 கருத்துக்கள்

உடல் எடையை குறைக்கும் குடை மிளகாய் கேப்சூல்


குடை மிளகாயை உணவுப்பொருள் என்பதை விட ஒரு சிறந்த மருத்துவப் பொருள் என்றே கூற வேண்டும் என்கின்றனர் பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானிகள்.

அதற்கு காரணம், குடை மிளகாயையும், மிளகையும் சேர்த்து மாத்திரை தயாரித்துள்ளனர். கேப்சூல் வடிவிலான அந்த மாத்திரைக்கு உடல் எடையை குறைக்கும் மகிமை உண்டு என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
 
அவர்கள் தயாரித்துள்ள மாத்திரையின் பெயர் கேப்ஸி ப்ளெக்ஸ். இந்த மாத்திரை குறித்து பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது:-
 
கேபஸி ப்ளெக்ஸ் மாத்திரையை குண்டாக இருக்கும் ஒருவர் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் அவரது உடலில் அதிகப்படியாக சேமித்து வைக்கப்பட்டுள்ள சக்தி படிப்படியாக குறையும். ஒருவர் 80 நிமிடம் நடந்தால் எவ்வளவு சக்தியை இழப்பாரோ அந்த அளவுக்கு சக்தியை ஒரு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் குறைந்துவிடும்.
 
பொதுவாக நமது உடலில் வளர்சிதை மாற்றம் அதிகமாக நடக்கும் போது சக்தி கணிசமாக குறைகிறது. இதனால் உடல் எடையும் குறையும். இதன் அடிப்படையில்தான் மாத்திரையை தயாரித்துள்ளோம்.
 
வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை துரிதப்படுத்தும் வல்லமை மிளகுக்கும், குடை மிளகாய்க்கும் இயற்கையாகவே உண்டு. அந்த விதத்தில் மிளகையும், குடை மிளகாயையும் மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள மாத்திரையை சாப்பிடுவதன் மூலம் குண்டாக உள்ளவர்கள் கணிசமான எடை இழப்பு அடைகின்றனர்.
 
இந்த மாத்திரையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் குண்டாக உள்ளவர்கள் மெலிந்து பார்ப்பதற்கு அழகாக மாறிவிடுவர். இந்த மாத்திரை தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அது முடிந்ததும் சந்தைக்கு வரும்.
 
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Posted by போவாஸ் | at 3:16 PM | 0 கருத்துக்கள்

திருப்பதி ஏழுமலையானுக்கு ரஹ்மான் இசை அமைக்கக் கூடாது! - இந்து முன்னணி

eventsimg
திருப்பதி ஏழுமலையான் பற்றிய பாடல்களுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைக்கக் கூடாது என இந்தி முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திருப்பதி வெங்கடாஜலபதி பற்றிய பாடல்களுக்கு இசைஅமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை வைத்து இசை அமைத்து ஆல்பம் வெளியிடப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

அதை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இசை அமைத்தால் சிறப்பாக இருக்கும். எனவே தேவஸ்தானம் தனது திட்டத்தை கைவிட வேண்டும்.

ஆங்கிலப் புத்தாண்டுக்கு கோயில் திறக்கக் கூடாது!

ஆங்கில புத்தாண்டு பிறப்பை வெளிநாட்டை சேர்ந்தவர்களும், கிறிஸ்தவர்களும் கொண்டாடலாம்.  

இந்து கோவில்களை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறை சிவராத்திரி விழாவைத்தவிர வேறு எந்த நாளிலும் கோவில்களை நள்ளிரவில் திறப்பதும் இல்லை. அபிஷேகம், பூஜை, தீபாராதனை என்று எதுவும் நடைபெறுவதும் இல்லை.

ஆனால் வருகிற டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவில் ஆங்கில புத்தாண்டுக்காக சில இந்து கோவில்களை திறக்க இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

ஆகம விதிக்கு இந்து கோவில்களை புத்தாண்டு பிறப்புக்காக டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவில் திறந்து பூஜை செய்தால் இந்து முன்னணி அதை தடுக்கும் விதத்தில் போராட்டம் நடத்தும். அத்துடன் அதற்கு உடந்தையாக இருக்கும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அறங்காவலர்கள் மீது வழக்கு தொடருவோம்..." என்றார் வெள்ளையப்பன்.
-----------------------------------------------
ஜாதி, மதம் என வேறுபாடுகள் இல்லாதது கலை. அதில் இசையும் ஒன்று. 

உலகமே பாராட்டும் ஏ.ஆர்.ரகுமானிடம் திருப்பதி ஏழு மலையான் பற்றிய பாடல்களுக்கு இசையமைக்கும்படி திருப்பதி தேவஸ்தான போர்டு தான் கேட்டுக் கொண்டது. இசை அமைக்க வாய்ப்பு தருமாறு ஏ.ஆர்.ரகுமான் தேவஸ்தானத்திடம் கேட்கவில்லை. 

இசை அமைக்கக் கூடாது என்று ஏ.ஆர்.ரகுமானை எதிர்ப்பதை விட்டு விட்டு, வெள்ளையப்பன் அவர்களுக்கு தைரியமிருந்தால் திருப்பதி தேவஸ்தானம் போர்டிடம் முட்டி மோதி வேறு ஒரு நல்ல இந்து இசைக் கலைஞரிடமே இசை அமைக்க முயற்ச்சிக்கலாமே. முடியுமா இவரால் ?.

எல்லாவற்றிலும் ஜாதி, மதம் என்ற வேற்றுமையைக் கண்டு ஒற்றுமையை சீர்குலைக்கும், இந்த வெள்ளையப்பன் போன்றோரை மடையப்பன் என்று சொன்னாலும் தவறேதுமில்லை என்றே நினைக்கிறேன்.

Posted by போவாஸ் | at 12:52 PM | 1 கருத்துக்கள்

திமுக-அதிமுக கூட்டணி அமைத்து பாமகவை தோற்கடித்து விட்டனர்-ராமதாஸ்

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து பாமகவை தோற்கடித்து விட்டனர் (ஆப்பு வைத்தனர் என்று பொருள்) என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.




கிருஷ்ணகிரி மாவட்ட வன்னியர் சங்க மாநாடு அந்த நகரில் நடைபெற்றது. பாமக தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் பங்கேற்ற இக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,


தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களில் 2 கோடி பேர் வன்னியர்களாக உள்ளனர். மேலும் தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள ஜாதிகளில் வன்னியர்கள் தான் அதிகம்.


ஆனால் இட ஒதுக்கீடு, மற்றும் வேலைவாய்ப்பில் மிக குறைவான எண்ணிக்கையில் தான் வன்னியர்கள் இருந்து வருகின்றனர். எனவே தான் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் (ஓஹோ) .


இதனால் இந்நிலை மாற வேண்டும் என்பதற்காக தைலாபுரத்தில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் கல்வி கோவிலை உருவாக்கி வருகிறோம். இதில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கல்வி பயின்று வாழ்க்கை தரத்தினை உயர்த்தி கொள்ள இலவசமாக கல்வி வழங்கி வருகிறோம். (அப்படியா சொல்லவே இல்லை...ம்ம்ம்ம்)


ஆனால் தமழகத்தில் வன்னியர்கள் ஏமாற்றபடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதனால் தான் நான் 1980ல் இருந்து தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.


குறைந்த மக்கள் தொகை உள்ள ஜாதியினர் தான் அதிகாரத்தில் உள்ளனர். ஆனால் நமது ஜாதியினர் அதிகமாக இருந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. வரும் காலங்களில் இந்நிலை மாற வேண்டும்.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டனி அமைத்து கொண்டு திட்டமிட்டு தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போடாமல் செய்து விட்டனர். இதனால் தான் நாங்கள் 7 இடங்களிலும் வெற்றி பெரும் வாய்ப்பினை இழந்து விட்டோம்.


ஆனாலும் நாங்கள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். தொடர்ந்தும் பாடுபடுவோம் (செம காமெடி..போங்க)என்றார் ராமதாஸ்.
--------------------------------------------------
எந்தக்காலத்திலாவது திமுகவும், அதிமுகவும் கூட்டு சேருமா? இதற்கு முன்தான் சேர்ந்ததாக ஒரு வரலாறு உண்டா? 


தேர்தலுக்கு தேர்தல் சுயலாபத்துக்காக அடிக்கடி கூட்டணி மாறும் குரங்கு புத்தியால்தான் பாமக தோற்றது.


2 கோடி வன்னியர் இருந்தும் இவர் வெற்றி பெற முடியவில்லையே. ஏன்?.  வன்னியர்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்ததால்தான் வன்னியர் ஓட்டுக்கள் அனைத்தும் பாமகவைத் தவிர இதர கட்சிகளுக்கு சென்றது என்கிற உண்மை இன்னமும் இவருக்கு புரியவில்லை என்றால் என்ன செய்வது ?.


டாக்டர் ராமதாஸ் இனியாவது இப்போதிருக்கிற சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு நடந்தால் பாமகவிற்கு நல்லது. அல்லது வீம்பு பிடித்து கொண்டிருந்தால் இருக்குற நிலைமை இன்னும் மோசம்தான் ஆகும்.     


பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஜெயிக்குதோ , அதிமுக ஜெயிக்குதோ...பாமக சொல்லும்படியான ஓட்டுக்களைப் பெற்றால்தான் பாமகவிற்கு எதிர்காலத்தில் கொஞ்சம் மதிப்பு மரியாதை இருக்கும். இல்லையேல் அழிவுதான்.


பிற கட்சிகளையும் , ஆளும் திமுக அரசினை தரம் தாழ்ந்தும், தமிழக அரசு முன் எடுத்துவைக்கும் நல்ல திட்டம் முதற்கொண்டு எல்லாவற்றையும் விமர்சனம் செய்யாமல், வீண் குற்றசாட்டும் சுமத்தாமல் நாளொரு அறிக்கையும், பொழுதொரு பேட்டியும் தராமல், முதலில் தன்னை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். 


சாதி என்ற அடிப்படையைத் தவிர்த்து மக்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்பதை ஆராய்ந்து அதன்படி செயல்பட்டால், தப்பிக்கலாம்.


இல்லையேல் "அடி மேல் அடிபட்டால் அம்மியும் நகரும்" என்பதைப்போல "தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டு பாமக கரைந்து காணாமல் போகும்".

Posted by போவாஸ் | at 12:21 PM | 1 கருத்துக்கள்

Related Posts with Thumbnails