தமிழர்கள் மறுவாழ்விற்கு 2.65 மில்லியன், சிறிலங்க இரயில்வேக்கு 67.4 மில்லியன்

இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களில் வசிப்பிடங்கள் ஏற்படுத்திக்கொள்ள 2.65 மில்லயன் டாலர்களையும், சிங்களர் பகுதியில் இரயில் பாதை அமைப்பிற்கு மேலும் 67.4 மில்லியன் டாலர் நிதியுதவியையும் இந்தியா அறிவித்துள்ளது. என்ன கொடுமை இது...?

தமிழர்கள் மறுவாழ்விற்கும், சிங்களர் வாழ் பகுதிகளில் புதிய இரயில் பாதை அமைத்து மின்சார இரயில் விடவும் இந்தியா அளிக்க முன்வந்துள்ள இந்த நிதியுதவி குறித்து சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறி சிறிலங்காவிற்கான இந்தியத் தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஈழப்போர்-4 காரணமாக தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் குடியமர்த்தும் போது அவர்கள் தற்காலிக வீடுகள் கட்டிக்கொள்ள 2.65 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு 2,600 மெட்ரிக் டன் துத்தநாகத் தகடுகளை கடந்து ஆகஸ்ட் மாதத்தில் வழங்கியதாகவும், அதே அளவிற்கு மேலும் 2,600 மெட்ரிக் டன் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதுமட்டுமின்றி, இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் இடங்களில் குடியமர்த்தும் போது அவர்கள் மீண்டும் விவசாயத் தொழிலைத் தொடங்க உழவுக் கருவிகள் 50,000 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும், ஏற்கனவே, 20,000 குடும்பங்களுக்கு உழவுக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சிங்களப் பகுதியில் இரயில் போக்குவரத்திற்கு உதவி! 

இலங்கையின் தெற்கு மாகாணத்தில் உள்ள மாத்தரை என்ற இடத்திலிருந்து கொழும்புவிற்கு இரயில் பாதை அமைக்க ஏற்கனவே இந்தியா 100 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 100 கோடி) நிதியுதவி அளித்திருந்தது. அத்திட்டத்திற்காக மேலும் 67.4 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இரயில் பாதை அமைப்பது மட்டுமின்றி, 20 டீசல் வண்டிகளையும் இந்தியா வழங்கவுள்ளது என்றும், அதனை இயக்க சிறிலங்க பொறியாளர்களுக்கு இந்தியா பயிற்சியளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த இரயில்வே பணிகளை இந்திய இரயில்வேயின் ரைட்ஸ் மற்றும் இர்கான் நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்று கூறிப்பட்டுள்ளது.

கண்ணி வெடி அகற்ற மேலும் இரண்டு இந்திய குழுக்கள்! 

இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கண்ணி வெடிகளை அகற்ற ஏற்கனவே நான்கு இந்தியக் குழுக்கள் அங்கு பணியாற்றிவரும் நிலையில், மேலும் இரண்டு இந்தியக் குழுக்கள் அங்கு செல்லும் என்றும் கூறியுள்ள அந்த அறிக்கை, போர் நடந்த 402 சதுர கி.மீ. பரப்பில் 15 இலட்சம் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 70 விழுக்காடு அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடங்களை அந்த அறிக்கை குறிப்பிடவில்லை, இதுவரை சிறிலங்க அரசும் அதைப் பற்றி எந்தத் தகவலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted by போவாஸ் | at 10:07 PM | 0 கருத்துக்கள்

உஷார்..உஷார்..!!! டிசம்பர் 18-ம் தேதி வேட்டைக்காரன் ரிலீஸ்

ஒரு வழியாக விஜய்யின் வேட்டைக்காரன் இழுபறி முடிவுக்கு வந்து விட்டது. படத்தில் சில காட்சிகளை கண்டிப்பாக ரீஷூட் நடத்த வேண்டும் என சன் பிக்சர்ஸ் தரப்பில் கூறப்பட்டதை, படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர்களான ஏவிஎம் ஒப்புக் கொண்டதால், வரும் டிசம்பர் 18-ம் தேதி வேட்டைக்காரன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 Vettaikkaran
இந்தப் படம் கிறிஸ்துமஸ் அல்லது அதற்கு முன்பே வெளியாகக் கூடும் என்று நேற்று தட்ஸ்தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். 
படத்துக்கு தணிக்கைக் குழுவினர் யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
படத்தின் சில காட்சிகளை மட்டும் மீண்டும் படப்பிடிப்பு நடத்தி சன் விரும்பும் வகையில் மாற்றித் தர தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியம் மற்றும் இயக்குநர் பாபு சிவன் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தக் காட்சிகள் விஜய்யின் அரசியல் குறித்தவை(இன்னும் நிறைய படனும் போலருக்கு) என்பது குறிப்பிடத்தக்கது.
பல கசப்பான அனுபவங்களை இந்தப் படத்தில் விஜய் சந்தித்தாலும், அவர் மனதுக்குப் பிடித்தமான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்தப் படம் வெளியாவதால், சென்டிமெண்டாக ஒர்க் அவுட் ஆகும் என சந்தோஷப்படுகிறாராம்.
சன் பிக்சர்ஸும் விரைவில் கண்டேன் காதலை விளம்பரங்களை நிறுத்திவிட்டு, வேட்டைக்காரனை துவங்க உள்ளது.

நல்ல வேளை இந்த படம், இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் அன்னைக்கு ரிலீஸ் ஆகலை. அதுவரை சந்தோசம்தான்.

Posted by போவாஸ் | at 9:08 PM | 1 கருத்துக்கள்

உ‌ல‌கிலேயே ‌மிக உயரமான க‌ட்டட‌ம்


உல‌கிலேய ‌மிக உயரமான க‌ட்டி முடி‌க்க‌ப்ப‌ட்ட க‌ட்டட‌ம் ஐ‌க்‌கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள துபாயில் அமை‌ந்து‌ள்ளது. இதன் உயரம் 2 ஆயிரத்து 600 அடி ஆகும்.
 
புர்ஜ் துபாய் (துபாய் கோபுரம்) என்ற அந்த கட்டிடம் துபாய் நகரின் மையப்பகுதியில் 500 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு உள்ளது. 100 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தை 3 ஆயிரம் தொழிலாளர்கள் கட்டிமுடி‌த்து‌ள்ளன‌ர்.

இதை ‌விட உயரமான க‌ட்டட‌ங்க‌ள் க‌ட்டுவத‌ற்கான ‌தி‌ட்ட‌ப் ப‌ணிக‌ள் நட‌ந்து வ‌ந்தாலு‌ம், த‌ற்போதைய ‌நிலை‌யி‌ல் க‌ட்டி முடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌மிக உயரமான க‌ட்டட‌ம் எ‌ன்ற புகழை பு‌‌ர்‌ஜ் து‌பா‌ய் க‌ட்டட‌ம் பெறு‌கிறது.

இ‌ந்த க‌ட்ட‌ட‌த்தை‌க் க‌ட்டியவ‌ர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். இந்த கட்டிடம் வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி ‌திற‌ந்துவை‌க்க‌ப்பட இருந்தது. ‌‌சில மு‌க்‌கிய‌ப் ப‌ணிக‌ள் காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது.

 
துபாயின் மன்னராக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டூம் பதவி ஏற்ற 4-வது ஆண்டு தினத்தில் இந்த கட்டிடம் திறக்கப்படுகிறது கு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கது.

ஐ‌க்‌கிய அரபு எ‌மிரே‌ட்‌ஸி‌ல் உ‌ள்ள பல மு‌க்‌கிய சு‌ற்றுலா‌த் தள‌ங்க‌ளி‌ல் இதுவு‌ம் ஒ‌ன்றாக இணைய உ‌ள்ளது. இ‌னி து‌பா‌ய் செ‌ல்லு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளு‌க்கு‌ம், அ‌‌ப்பகு‌தி‌யி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் வெ‌ளிநா‌ட்டினரு‌க்கு‌ம் கூட இ‌ந்த பு‌ர்‌ஜ் துபா‌ய் ‌சிற‌ந்த சு‌ற்றுலா‌த் தளமாக ‌விள‌ங்கு‌ம் எ‌ன்பதை மறு‌ப்பத‌ற்‌கி‌ல்லை.

உல‌கிலேயே ‌மிக உயரமான க‌ட்டட‌ம் எ‌ன்றது‌ம், ஒரு சாதாரண ‌விஷயமாக நா‌ம் கரு‌தி‌விட முடியாது.

100
வது மாடி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் ‌லி‌ப்‌ட் சேவை, நகரு‌ம் படிக‌ட்டு‌ள், குடி‌நீ‌ர் சேவை போ‌ன்றவ‌ற்றை நா‌ம் யோ‌சி‌த்தா‌ல்தா‌ன் ச‌ற்று ‌விள‌ங்கு‌ம் இத‌ன் சாதனை.

அதாவது, இ‌ந்த க‌ட்ட‌டம் முழு‌மை‌க்கு‌ம் ஒரு ‌நி‌மி‌ட‌த்‌தி‌ற்கு 10,000 ட‌ன் கு‌ளி‌ர் கா‌ற்று அனு‌ப்ப‌ப்பட வே‌ண்டு‌ம். ஒரு நா‌ள் முழும‌ை‌க்கு‌ம், இ‌ந்த க‌ட்டட‌த்‌தி‌ன் அனை‌த்து மாடிகளு‌க்கு‌ம் செ‌ல்லு‌ம் ‌நீ‌ரி‌ன் அளவு எ‌வ்வளவு‌த் தெ‌ரியுமா? 9,46,000 ‌லி‌ட்ட‌ர். 

இ‌ங்கு இர‌ண்டு ‌லி‌ப்‌ட் வச‌திக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. ஒ‌வ்வொ‌ன்று‌ம் 21 நப‌ர்க‌ள் செ‌ல்லு‌ம் வகை‌யி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த ‌‌லி‌ப்டுக‌ள் ஒரு நொடி‌க்கு 18 ‌மீ‌ட்ட‌ர் தூ‌ர‌ம் செ‌ல்லு‌ம் வகை‌யி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. உல‌கிலேயே ‌மிக உயர‌த்‌தி‌ற்கு அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌லி‌ப்‌ட் வச‌தி இதுவாக‌த்தா‌ன் உ‌ள்ளது.

இ‌தி‌ல் பல ‌உணவக‌ங்களு‌ம், ஷா‌ப்‌பி‌ங் மா‌ல்களு‌ம், ‌நிறுவன‌ங்களு‌ம், ஹோ‌ட்ட‌ல்களு‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இ‌ந்த க‌ட்டட‌ம் ‌திற‌ந்த ‌‌பிறகு, துபா‌யி‌ல் ம‌ட்டும‌ல்லாம‌ல், ஐ‌க்‌கிய அரபு எ‌மிரே‌‌ட்டி‌‌ன் ச‌ரி‌ந்து‌ள்ள பொருளாதார‌ம் உய‌ர்வை நோ‌க்‌கி‌ச் செ‌ல்லு‌‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது. 

 

மேலும் சில படங்கள் 
    burj dubai



Posted by போவாஸ் | at 7:40 PM | 0 கருத்துக்கள்

தலைமுறைகளை பாதிக்கும் மரபணு மாற்றப்பட்ட ஆடுகள்


மரபணு மாற்றப்பட்ட பி.டி. காட்டன், பி.டி. கத்திரிக்காய் வரிசையில் அடுத்து மரபணு மாற்றப்பட்ட ஆடு, செம்மறியாடுகள் உருவாக்கப்பட்டுவிட்டன.

பி.டி. பருத்தி பயிரினங்கள் ஏற்கெனவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்போது உருவாக்கப்பட்டுள்ள மரபணு மாற்றப்பட்ட ஆடுகள் இந்திய சந்தைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.


அந்த வகையில் இந்த ஆடுகளை வெளிநாடுகளில் பயன்படுத்திய பிறகு, மெதுவாக இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் இது நமது தலைமுறையை பாதிக்கும் விஷயமாகும் என்று மரபணுவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர் சுதாகர் எச்சரித்துள்ளார்.


மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி. டி.  கத்தரிக்காயை வணிக ரீதியில் பயிரிடலாம்' என்று மத்திய அரசு அண்மையில் பரிந்துரை செய்தது. இது விவசாயிகள் மத்தியில் பலத்த புயலை கிளப்பியது.


"பொதுமக்கள் கருத்தறிந்த பின்னரே, வணிக ரீதியில் பயிரிட முழுமையான அனுமதி தரப்படும்' என்று மத்திய அரசு தெரிவித்தது.


மரபணு மாற்றப்பட்ட ஆடு...: இது ஒருபுறமிருக்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளாடுகளை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இப்போது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இந்த வகை ஆடுகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.


மருந்தாகவும் வந்துவிட்டது!   இப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளாட்டில் இருந்து பெறப்படும் பாலில், மனித உடலில் சீரான ரத்த ஓட்டத்தை தரும் (அதாவது ரத்தம் கட்டிகளாக மாறாமல் தடுக்கும்) "ஆன்டி திராம்பின்' என்ற புரதம் இருப்பதாகவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் "ஏட்ரின்' என்ற மருந்தாகவும் சந்தையில் வெளிவந்துள்ளது.


மரபணு மாற்றப்பட்ட செம்மறியாடு...:  அடுத்து மரபணு மாற்றப்பட்ட செம்மாறியாடுகளும் உருவாக்கப்பட்டு விட்டன. இது இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சந்தைக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.


மாதவிடாய் பிரச்னைக்கான தீர்வு:  இந்த செம்மறியாட்டில் இருந்து பெறப்படும் பாலில், கருமுட்டை வெளிவராத பிரச்னையை (சிஸ்டிக் பைபுரோசிஸ் என்ற நோய்) சரிசெய்யக் கூடிய புரதம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது மாதவிடாய் பிரச்னையுள்ள பெண்களுக்கு இது மருந்தாக அமையும் என்று தெரிகிறது.


பி.டி. காட்டன் பருத்தி: மரபணு மாற்றப்பட்ட பி.டி. காட்டன் பருத்தி, இந்தியாவில் குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் பெருமளவில் பயிரிடப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. இப்போது பி.டி. கத்திரிக்காயை பயிரிடலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மேலும் ஒரு சர்ச்சைக்கு வழிவகுக்கும்.


இந்த சர்ச்சைகள் முழுவதும் அடங்குவதற்குள் அடுத்து மரபணு மாற்றப்பட்ட ஆடுகள் நம் நாட்டு சந்தைக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.


தலைமுறைகளை பாதிக்கும்...:இதுபற்றி மரபணுவியல் தொடர்பான ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் சுதாகர் கூறியதாவது:


ஆந்திரத்தின் வாரங்கலில் மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தி செடிகளை சாப்பிட்ட ஏராளமான ஆடுகள் இறந்தன. இது நச்சுத்தன்மையைக் கொண்டதா? என்ற உண்மையை அறிய முற்பட்ட நேரத்தில், இந்தியாவில் சோதனைகளை மேற்கொள்ள போதிய ஆய்வுக் கூடங்கள் இல்லை. பின்னர் அமெரிக்காவுக்கு சென்று சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.


இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளாடுகள், செம்மறியாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை வளர்ச்சியடைந்த நாடுகளில் முழு அளவில் பயன்படுத்திய பிறகு நமது நாட்டுக்கு கொண்டு வரலாம். இந்த ஆடுகளை மருந்துக்காக மட்டுமே பயன்படுத்தலாம்; உணவுப் பொருளாகப் பயன்படுத்தக்கூடாது.


ஏனெனில் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட விதைகளையோ, பருத்தியையோ முழு அளவில் ஆராய்ச்சி செய்ய நவீன ஆய்வுக் கூடங்கள் இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆடுகளும் இப்போது வந்துவிட்ட நிலையில் இவைகளினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆராய்வதற்கு நவீன ஆய்வுக்கூடங்கள் அவசியமாகும்.

இந்த சோதனைகள் நமது நாட்டிலேயே செய்யப்பட்டு, மக்களுக்கு அதன் நன்மை, தீமைகளை தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை. ஏனெனில் இது நமது அடுத்த தலைமுறையைப் பாதிக்கும் விஷயமாகும்' என்றார்.

Posted by போவாஸ் | at 6:12 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails