சுய சிந்தனையில்லாத விஜயகாந்த்.

சுய சிந்தனையில்லாத விஜயகாந்த்.

அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் ஆட்களை நாம் பார்த்திருக்க கூடும்.

அடுத்தவருடைய பெயர்களையும், பட்டங்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட ஒரு மகா மனிதர் இருக்கின்றார்.

அவரு வேற யாருமில்லைங்க…..நம்ம புரட்சி கலைஞர், கருப்பு எம்.ஜி.யார் விஜயகாந்து தாங்க.



இப்படி பெயர்களையும் பட்டங்ககளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு இவர் அடைந்த பேரும் புகழும் மிக அதிகமே.

எப்படி என்று பார்ப்போம்.


அ. விஜயகாந்தாக மாறிய விஜயராஜ் அழகர்சாமி நாயுடு:

விஜயராஜ் அவர்கள் சினிமா உலகில் நுழைய, பிரபலமாக ஆசை பட்டு தனது பெயரில் உள்ள “ராஜ்” இனை நீக்கி விட்டு …. அப்பொழுது மிக பிரபலமாக பேசப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல் வர வேண்டும் என்று எண்ணி ரஜினியின் பெயரில் இருக்கும் காந்தை எடுத்து தனது பெயரோடு ஒட்டிக் கொண்டு விஜயராஜ்……விஜயகாந்தாக மாறினார்.

பட வாய்ப்புகளும் வந்தது, அதன் மூலம் பேரும் புகழும் வந்தது.


ஆ. புரட்சி கலைஞராக மாறிய விஜயகாந்த்:

புரட்சி கலைஞர் என்று அழைக்கப்படும் இவர் என்ன புரட்சி செய்தார்.
பசுமை புரட்சியா ?
கல்வி புரட்சியா ?.
அல்லது
மக்கள் நலனுக்காக பல போராட்டங்கள் நடத்தி மக்கள் புரட்சி செய்தாரா ?.

ஒன்றுமே செய்ய வில்லை.

நமது தமிழக முதல்வர் கருணாநிதியை விரும்புவர்களும் விரும்பாதவர்கள்கூட அவரைக் கலைஞர் என்று பெருமையாக அழைத்து புகழாரம் சூட்டுவர்.

கலைஞரிடம் மதிப்பும் மரியாதையும் இருப்பதை போல் காட்டிக் கொண்டு ஆட்டுத் தோல் போர்த்தி கொண்ட ஒரு நரி போல் அவரிடம் நட்பாக இருந்து கொண்டு, கலைஞரிடம் அளவற்ற பாசத்துடன் இருப்பதைப் போல் நடித்து கொண்டு, சத்தமில்லாமல் புரட்சியையும் கலைஞரையும் ஏற்கனவே மாற்றிய பெயரோடு அடை மொழி போல் போட்டுக் கொண்டார்.

இதன் மூலம் அவர் அடைந்த பேரும் புகழும் அதிகமே.


இ. தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் :

விஜயராஜ் விஜயகாந்தாக மாறி, விஜயகாந்துக்கு முன்பு புரட்சி கலைஞர் என்ற அடை மொழியும் போட்டுக் கொண்டு சில காலங்கள் சொல்லும் படியான படங்களில் நடித்து கொண்டு இருந்தார்.

பின்னர் காலங்கள் மாறின, காட்சிகள் மாறின. நடித்த படங்கள் ஓடவில்லை, பார்க்க ஆளுமில்லை என்ற நிலை ஆனது. இந்த நிலையில் அவருக்கு உதித்ததுதான் அரசியல் பிரவேசம்.

கட்சி
ஆரம்பித்தார்.

தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் என்று பெயரும் சூட்டினார்.

கட்சியின்
பெயராவது தனது சுய சிந்தனையில் உதித்த பெயரை வைத்தாரா ?. அதுவுமில்லை. கட்சிக்கு பெயர் வைக்க இவர் திரும்பிய இடம் தி.மு...

திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை காப்பி அடித்து கொஞ்சம் உல்டா பண்ணிமுற்ப்போக்கு திராவிட கழகம் என்று மாற்றி, அதன் முன் தேசிய என்று போட்டுக் கொண்டார்.

கட்சியின் பேரைக் கூட சுயமாக சிந்தித்து பெயர் வைக்க தெரியாதவர். கட்சிக்கு பெயர் வைப்பதற்கே இவர் இன்னொரு கட்சியை நாட வேண்டியிருக்கின்றது. அப்படி பட்ட இவரெல்லாம் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்.


ஈ. தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் கட்சிக் கொடி :

கட்சியின் பெயருக்கு தி.மு.கவிடம் இருந்து திருடிய இவர், கட்சிக் கொடியையும் தி.மு.கவிடம் இருந்தே திருட நினைத்தார். அதுவும் நடந்தது.

கருப்பு சிவப்பு நடுவே மஞ்சளைச் சேர்த்தார்.

கட்சிக் கொடியகிவிட்டது.






நீங்களே பாருங்கள் , இவரது கட்சிக் கொடியில் கருப்பும், சிவப்பும் மட்டுமே மேலோங்கித் தெளிவாக தெரிகிறது. இவர் கழுத்தில் இருக்கும் துண்டினைப் பாருங்கள்.


. கருப்பு எம்.ஜி.யார் - விஜயராஜ் :

தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் என்று கட்சியும் ஆரம்பித்து விட்டார். சட்ட சபைத் தேர்தல் வந்தது. பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். கட்சியின் பெயர் சூட்ட தி.மு.க தேவைப் பட்டது.

இப்பொழுது அரசியலில், பிரசாரத்தில், மக்களிடம் பிரபலமாக, ஓட்டுக்களை வாங்க இன்னொரு நபரின் பெயர் தேவைப் பட்டது.

அவர் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.யாரின் பெயர்.

பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் தன்னை ஒரு கருப்பு எம்.ஜி.யார். என்று கூறி பிரச்சாரம் செய்தார். அவரது ரசிகர்கள் தொண்டர்கள் கருப்பு எம்.ஜி.யார் என்று பேனர்களும் வைத்தனர், அப்படியே கோஷமிட்டனர்.

ஆனால் நம் மக்கள், விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.யார் அல்ல அவர் ஒரு வெறுப்பு எம்.ஜி.யார் என்று தங்களது ஓட்டுகள் மூலம் காட்டினர்.

எம்..ஜி.யாரின் பெயரைக் கூட சொல்லக் கூட இவருக்கு தகுதியில்லை.


இனி வரும் காலங்களில் யாரின் பெயரை தன்னுடன் சேர்க்கிறார் என்று பார்க்கலாம்.

இன்று கலைஞரை தாக்கும் இந்த விஜயராஜ் என்ற விஜயகாந்த் தனது அடைமொழியான புரட்சி கலைஞரை நீக்க மனம் உள்ளதா.

திராவிட முன்னேற்ற கழகத்தினை, கடுமையாக, வெட்டி பரபரப்புக்காக தாக்கும் நீங்கள் உங்களது கட்சியில் உள்ள திராவிட கழகம் என்று இருப்பதை நீக்கத் தயாரா ?

கொஞ்சம் கூட சுய சிந்தனைல இதுவரை ஏதும் பண்ணாத இவர் என்னத்தை பண்ணி கிழிக்க போறார்.

இதுல
ஆட்சி மாற்றம் வரும், தே.மு.தி.க ஆட்சியைப் பிடிக்கும், முதல்வர் ஆவேன் என்று வெட்டி வாய்ச் சவடாலுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.

Posted by போவாஸ் | at 3:21 PM | 1 கருத்துக்கள்

சிவமணியின் " DRUMS ON FIRE "

சிவமணியின் " DRUMS ON FIRE " ஆல்பம்

http://www.hotlinkfiles.com/files/2783669_s6kzo/on_Fire_-_01_-_Raindance.mp3.mp3]on_Fire_-_01_-_Raindance.mp3.mp3

http://www.hotlinkfiles.com/files/2783674_yfaqa/02_-_Amma__Extended_Mix__095131.mp3_095131.mp3]02_-_Amma__Extended_Mix__095131.mp3_095131.mp3

http://www.hotlinkfiles.com/files/2783702_firs8/_on_Fire_-_03_-_Treetops.mp3.mp3]_on_Fire_-_03_-_Treetops.mp3.mp3

http://www.hotlinkfiles.com/files/2783710_pocqa/_04_-_Through_the_Flames.mp3.mp3]_04_-_Through_the_Flames.mp3.mp3

http://www.hotlinkfiles.com/files/2783712_ip4bi/6_-_A_Drop_in_the_Bucket.mp3.mp3]6_-_A_Drop_in_the_Bucket.mp3.mp3

http://www.hotlinkfiles.com/files/2784537_45lwo/on_Fire_-_07_-_Hang_Fire_070039.mp3_070039.mp3]on_Fire_-_07_-_Hang_Fire_070039.mp3_070039.mp3

http://www.hotlinkfiles.com/files/2784518_hzuh2/_on_Fire_-_08_-_Lakeside.mp3.mp3]_on_Fire_-_08_-_Lakeside.mp3.mp3

http://www.hotlinkfiles.com/files/2784539_7luzq/-_Drums_on_Fire_-_09_-_Pablo.mp3]-_Drums_on_Fire_-_09_-_Pablo.mp3


(வேறொரு தளத்தில் இருந்து முன்னர் நான் டவுன்லோட் செய்ததை இப்பொழுது அப்லோட் செய்து இருக்கிறேன். )

Posted by போவாஸ் | at 10:53 AM | 0 கருத்துக்கள்

நான்தான் அடுத்த முதல்வர் - விஜய் வைத்த டிமாண்ட், மிரண்டு போன ராகுல்




நான்தான் அடுத்த முதல்வர் - விஜய் வைத்த டிமாண்ட், மிரண்டு போன ராகுல் காந்தி.

சினிமாவில் பஞ்ச் டைலாக் பேசுவதும் படங்கள் ஊற்றிக் கொள்ளும்போது, அரசியல் பிரவேசம் நடத்தி அதைச் சரிக்கட்ட முயல்வதும் காலம் காலமாக தமிழ் சினிமா ஹீரோக்கள் நடத்தும் கோடம்பாக்கக் குசும்புதான். அந்த வகையில் அரசியலில் அச்சாரம் போட கால் பதித்திருக்கிறார், இளைய தளபதி விஜய்.

``இந்தியாவின் இளைய தளபதி ராகுல்காந்தியை, தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய் சந்தித்தது சந்தோஷம் தரும் விஷயம்தான். ஆனால், இந்த விஜய் விஷயம் உள்ளவரா, விஷமக்காரரா என்றுதான் தெரியவில்லை. ஏனென்றால், முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பில், விஜய் அரசியல் பேசியதைவிட வியாபாரம் பேசியதுதான் வியப்பைத் தருகிறது'' என்று டெல்லி காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறுகிறார்.

இவர்கள் சந்திப்பு எங்கேதான் நடந்தது என்றும், என்னதான் பேசினார்கள் என்றும் விசாரித்தோம். முதலில் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கேட்டோம். அவரோ, ``இந்தியாவை வழிநடத்தும் இடத்தில் உள்ள இளைய தலைவர் ராகுலைச் சந்தித்தது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தச் சந்திப்பின் போது, பல விஷயங்களைப் பேசினோம், என்ன பேசினோம் என்பதை இப்போது வெளியிட முடியாது'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

நாமும் விடுவதாக இல்லை. டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, வியப்பும், சிரிப்பும்தான் அவர்களிடம் இருந்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் நடித்த `அழகிய தமிழ்மகன்', `குருவி', `வில்லு' ஆகிய மூன்று படங்களும் சரியாகப் போகவில்லை. `போக்கிரி' படம் வரை ரஜினிக்கு அடுத்து வசூல் மன்னன் என்று பெயரெடுத்திருந்த விஜய் தரப்புக்கு இந்த மூன்று படங்களின் தோல்வி மிகப்பெரிய வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது என்னவோ உண்மைதான். இப்போது நடந்து வரும் `வேட்டைக்காரன்' பெரிய வெற்றி பெறும் பட்சத்தில்தான் அவரது அடுத்த படமான ஐம்பதாவது படத்திற்கு வரவேற்பு இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் முணுமுணுக்கத் தொடங்கியது விஜய் காதுகளில் விழாமல் இல்லை.


இதைச் சமாளிக்கும் விதத்தில், ஏற்கெனவே ரஜினி கையாண்ட ஃபார்முலாவான `மக்கள் இயக்கம்' மற்றும் `அரசியல் அரங்கம்' என்று அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். அதன்படி கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் நூறு இடங்களில் இலவச கம்ப்யூட்டர் மையம் திறப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்த இளைய தளபதி, அகில இந்திய அளவில் தன் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் திட்டத்தையும் செயல்படுத்திக் கொண்டிருந்தார்.

இதற்காக, விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் காங்கிரஸ் தலைவர்களான வாசன், சிதம்பரம், தங்கபாலு போன்றவர்களைச் சந்தித்து ஆரம்பகட்ட ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் தன் மகனுக்கு தமிழகத்தில் உள்ள செல்வாக்குப் பற்றியும், புதிதாக ஆரம்பித்துள்ள `மக்கள் இயக்கம்' பற்றியும் பிரமிப்பூட்டும் விதத்தில் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே, தமிழக காங்கிரஸுக்கு ஒரு நட்சத்திர முகம் இருந்தால் தேவலை என்று நினைத்த மேற்படி தலைவர்கள் விஜய்யை நேரில் சந்தித்துப் பேச ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.


ஆனால். அதற்குப் பிடி கொடுக்காத எஸ்.ஏ.சி. தானும் தனது மகனும், சோனியா காந்தி அல்லது ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு, மேற்கண்ட தலைவர்கள் உடனடியாக செவிசாய்க்கவில்லை. என்றாலும், கடந்த வாரம் புதுவையில் `மக்கள் இயக்கம்' மற்றும் புதிய இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்த விஜய்யை காங்கிரஸ் எம்.பி.யும் அமைச்சருமான நாராயணசாமி சந்தித்துப் பேசினார்.

அவர் மூலமே ராகுல் காந்தியைச் சந்திக்க அப்பாயின்மெண்ட் கிடைத்ததாம். அதன்படி கடந்த திங்கட்கிழமை டெல்லியில் நடந்த சந்திப்பு பற்றி நம்மிடம் சிரிப்பு மாறாமல் சொன்னார், தமிழகத்தின் இளைய எம்.பி. ஒருவர்.

``வழக்கமாக நெம்பர் 12, துக்ளக் லேண்ட் பங்களாவில்தான் தனது அரசியல் சந்திப்புகளை ராகுல் காந்தி வைத்துக் கொள்வார். கட்சியின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பு என்றால், ஜன்பத் சாலையில் உள்ள தனது தாய் சோனியா காந்தி வீட்டில் வைத்துக் கொள்வது அவரது பழக்கம். ஆனால், விஜய்யின் செல்வாக்கு மற்றும் இமேஜிற்குப் பங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, ராகுலின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான வட இந்திய அமைச்சர் ஒருவரின் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

பெரியளவில் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாமல் மிகவும் சாதாரணமாக அமைச்சரின் வீட்டிற்கு ஒரு விருந்தாளியைப் போல் அழைத்துச் செல்லப்பட்டார் விஜய். அவருக்காகக் காத்திருந்த ராகுல், விஜய்யுடன் கைகுலுக்கினார். காபி, காச்சோரி மற்றும் வடஇந்திய இனிப்புகளுடன் அளிக்கப்பட்ட விருந்தோம்பலில் விஜய் உண்மையிலேயே திக்குமுக்காடிப் போனார்.

பின்னர், மெதுவாகத் தொடங்கியது, ராகுல்- விஜய் பேச்சு. ஆரம்பத்தில் விஜய் நடித்த படங்கள், நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் பற்றி ராகுல் விசாரித்தாராம். கடந்த முறை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், பிரதமர் தலைமையில் டெல்லியில் நடந்த தபால் தலை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டதை நினைவுகூர்ந்தார் ராகுல்.

தமிழ்நாட்டின் ஷாருக்கான் என்று பெயரெடுத்துள்ள நீங்கள், காங்கிரஸ் பேரியக்கத்தில் இரண்டறக் கலக்க வேண்டும் என்று இயல்பாக ராகுல் சொல்லியிருக்கிறார். அதுவரை மௌனமாக இருந்த விஜய், தனது மெல்லிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, தனது ட்ரேடு மார்க் வசனமான `சரிங்ண்ணா' என்று போட்டுப் பேசாமல் ஆங்கிலத்தில் பதிலளித்தார். தனக்குத் தமிழ்நாட்டில் தனிப்பெரும் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, தனக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து, மிகப்பெரிய அந்தஸ்துடன் கூடிய பதவியைக் கொடுக்க வேண்டும் என்று எடுத்த எடுப்பில் நிபந்தனை விதித்திருக்கிறார். இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்த ராகுல்ஜி சிரித்தபடியே, எதிரில் இருந்த லாப்டாப்பைத் தட்டியபடியே `காங்கிரஸ் பேரியக்கத்தில், நேரடியாக யாரும் தலைவராக வரமுடியாது; அடிப்படை உறுப்பினரான பிறகு, கட்சித் தேர்தல் மூலமே பதவிகளுக்கு வரமுடியும்' என்ற நிலைமையை எடுத்துச் சொன்னார்.

அதை சரிவரப் புரிந்துகொள்ளமுடியாத விஜய், தன் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலானோர் தன்னை தமிழக முதல்வர் (!) பதவிக்குப் போட்டியிட நிர்ப்பந்திப்பதாகக் கூறி, அதற்கு காங்கிரஸ் உதவுமா என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.

அதைக் கேட்டு சில வினாடிகள் மௌனமாக இருந்த ராகுல்ஜி, `இதை உரிய நேரத்தில் பரிசீலிக்கலாம். ஏற்கெனவே, கட்சி தொடங்கி தமிழகத்தில் முக்கிய இடத்திலிருக்கும் விஜயகாந்திடமும் இதுகுறித்துப் பேசியிருக்கிறோம்; அவருடன் இணைந்து செயல்பட முடியுமா என்பதை யோசித்துச் சொல்லுங்கள்' என்று விஜய்யிடம் சொன்னார். அதற்கு அதுவரை மௌனமாக இருந்த விஜய்யின் தந்தை, `எங்களது ரசிகர் மன்றங்களை அரசியல் கட்சியாக்கி தனியாகச் செயல்படலாம் என்றுதான் திட்டமிடுகிறோம். அப்படி ஆரம்பிக்கப்படும் கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்வது பற்றிக் கூட யோசிக்கலாம். அதோடு, நாங்கள் கொஞ்சம் பொருளாதார ரீதியாக இழப்பைச் சந்தித்துள்ளோம். அதை சரிக்கட்டி சமாளிக்க காங்கிரஸ் உதவும் என்று நம்புகிறோம்' என்றார்.

இதற்கும் ராகுல் சிரித்தபடியே, `பார்க்கலாம். இன்னும் நமக்குள் பல சந்திப்புகள் நடக்கும் என்று நம்புகிறேன். அப்போதும் நாம் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். இப்போது நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம். அதுவே போதுமான அளவுக்கு சந்தோஷமாக உள்ளது' என்று மீண்டும் விஜய்யுடன் கைகுலுக்கி விடை கொடுத்தார். இருந்தும் மறுநாள் வரை டெல்லியிலேயே விஜய்யும், அவரது தந்தையும் இருந்தனர்'' என்று முடித்துக்கொண்டார் அந்தப் பிரமுகர்.

முன்னதாக, விஜய் குறித்து ராகுலுக்குத் தயாரித்துக் கொடுக்கப்பட்ட ப்ரொஃபைலில், விஜய்யின் சில ஹிட் படங்களின் சிடிகள் இருந்ததாம். அத்துடன், ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் என்கிற புள்ளிவிவரங்களும் ராகுலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

திடீரென விஜய்க்கு அரசியல் ஆர்வம் ஏற்பட என்ன காரணம் என்ற கேள்விக்கும் அந்த ப்ரொஃபைலில் பதில் இருந்ததாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நேரு ஸ்டேடியத்தில் நடந்த `தசாவதாரம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது, முதல்வரை கலைஞர் என்று குறிப்பிடாமல், `கருணாநிதி' என்று சொல்லிவிட்டார். அதில், கடுப்பான தி.மு.க.வினர் சிலர், நேரடியாகவே விஜய்யை தொலைபேசியில் அழைத்து மிரட்டியிருக்கிறார்கள். இதனால், நொந்துபோன எஸ்.ஏ.சி. `என் மகனை அமைச்சரென்ன முதலமைச்சரே ஆக்கிக் காட்டுகிறேன்' என்று தன் நெருங்கிய வட்டாரத்தில் சபதம் செய்தாராம். இதையெல்லாம் படித்துப் பார்த்திருக்கிறார், ராகுல்காந்தி. உளவுத்துறை மூலமாக விஜய்யின் ரசிகர்களில் எத்தனை பேர் வாக்குவங்கியாக இருக்கிறார்கள் என்பது குறித்தும் தகவல் சேகரித்து ராகுலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, விஜயகாந்தின் தே.மு.தி.க., அ.தி.மு.க.வின் இளைஞர் பாசறை ஆகியவற்றால் தி.மு.க.வில் இளைஞர் வரத்துக் குறைந்துவிட்டது. இதனாலேயே ராகுல், காங்கிரஸுக்குப் புது ரத்தம் பாய்ச்ச முடிவெடுத்து பல ஆண்டுகளாக நடக்காமல் இருந்த இளைஞர் காங்கிரஸில் கோஷ்டிகளை ஒழித்துக்கட்டிவிட்டு கட்சித் தேர்தலை நடத்தப் போகிறார். அதன் ஒருபகுதியாகத்தான் தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் விஜய் உடன் சந்திப்பு நடத்தி முடித்திருக்கிறார் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள்.

விஜய்யை இழுத்துப் போடும் திட்டம் தி.மு.க.வுக்கு ஏற்கெனவே இருந்தது. அதன்படியே தபால் தலை வெளியீட்டு விழாவுக்கு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன், ஸ்டாலின் மகன் உதயநிதி `குருவி' படத்தை விஜய்யை வைத்து தயாரித்தார். அழகிரி மகன் தயாநிதி நடத்திய ஒரு விழாவில் அழைப்பின் பேரில் விஜய்யும் கலந்துகொண்டார். இந்த நிலையில் விஜய் காங்கிரஸுடன் காட்டும் நெருக்கம் தி.மு.க. தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

``ஒரு தடவை முடிவெடுத்துவிட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்''- இது விஜய்யின் பிரபலமான பஞ்ச் டைலாக்.


தேங்க்ஸ் : குமுதம் ரிப்போர்டர்.

Posted by போவாஸ் | at 12:44 AM | 0 கருத்துக்கள்

மதுரைக்கு ஒரு மறுமலர்ச்சி

மதுரையில் புதிய தொழிற்சாலைகள் ஒரு லட்சம் பேருக்கு வேலை : மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உறுதி
ஆகஸ்ட் 30,2009,00:00 IST

அழகர்கோவில் : ""மதுரையை தொழில் நகரமாக மாற்றி ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பேன்,'' என மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க., அழகிரி தெரிவித்தார்.



மதுரை லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பாடு பட்ட தி.மு.க.,வினருக்கு நன்றி தெரிவிக்கும் விழா அழகர்கோவிலில் நடந்தது. புறநகர் தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ., தலை மை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் சிறைச் செல்வன் வரவேற்றார்.



176 பேருக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மோதிரம் அணிவித்து பேசியதாவது: பலர் வேலை கேட்டு மனு கொடுக்கின்றனர். அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது என்றாலும், அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மேலூரில் கிரானைட் பாலீஷ் பட்டறை, இடையப்பட்டியில் சிப்பட் தொழிற்சாலை அமைக்கவும், மத்திய அரசின் "ஏரோபார்க்" அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். கட்சி நிர்வாகிகள் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து எனக்கு தகவல் தெரிவியுங்கள். மக்களின் குறைகளை தீர்ப்பதே எனது முதல் கடமை. சட்டசபை தேர்தலில் தென் தமிழகத்தில் உள்ள 60 தொகுதிகளிலும் தி.மு.., வெற்றிபெற வேண்டும் என்றார். நகர் செயலாளர் தளபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேற்கு ஒன்றிய தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.

Posted by போவாஸ் | at 12:31 AM | 0 கருத்துக்கள்

சிவமணியின் மகா லீலா 2

டிரம்ஸ் சிவமணியின் மகா லீலா - பகுதி 2


www.hotlinkfiles.com/files/2779064_rrqjz/07Track07.m4a]07Track07.m4a

www.hotlinkfiles.com/files/2779069_h7wuw/08Track08_1.m4a]08Track08_1.m4a

www.hotlinkfiles.com/files/2779073_pmeso/09Track09.m4a]09Track09.
m4a

www.hotlinkfiles.com/files/2779080_jqcuu/10Track10.m4a]10Track10.
m4a


www.hotlinkfiles.com/files/2779082_dayvg/11Track11.m4a]11Track11.m4a

www.hotlinkfiles.com/files/2779087_v0fme/12Track12.m4a]12Track12.m4a


(வேறொரு தளத்தில் இருந்து முன்னர் நான் டவுன்லோட் செய்ததை இப்பொழுது அப்லோட் செய்து இருக்கிறேன். )

Posted by போவாஸ் | at 10:29 AM | 0 கருத்துக்கள்

விஜய் என்றொரு மகா நடிகன்


அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ கட்சியில் சேரும் முன்னரே பல விதமான கண்டனங்களையும், கருத்துக்களையும் எதிர் கொள்ளும் விஜய். காங்கிரஸில் சேரும் தன முடிவை மாற்றிக் கொள்வாரா ?.

பல கண்டனங்கள், கிண்டல்கள், எதிர்ப்புகள், விவாதங்கள் தொடருகின்றன.

விடுதலைப் புலிகள் நல்லவர்களோ கெட்டவர்களோ, இலங்கை அரசாங்கம் நல்ல அரசாங்கமோ கேட்ட அரசாங்கமோ,

ஆனால் நம் உடன் பிறவாத அண்ணன், தம்பி, அக்க, தங்கை, அம்மா, அப்பா நம் இன மக்களை அழிக்க இந்தியாவும் காங்கிரசும் துணை போனது அனைவரும் அறிந்த ஒன்று.

இன்றும் நம் மக்கள் பல பிரச்சனைகளுடந்தான் இருக்கின்றனர்.
அவர்களும் படும் வேதனைகளை பார்க்கும் போதும், அது தொடர்பான விஷயங்களைக் கேட்க்கும்போதும் நம் கண்களின் ஓரத்தில் ஒரு துளியாவது கண்ணீர் வருவது நிச்சயம்.

இலங்கையில் போர் நடந்த பொது இந்த விஜய் ஒரு காரியம் செய்தார்.

அது என்ன ?. வாருங்கள்....ஒரு சின்ன பிளாஷ் பேக்.


Friday, November 14 2008

நெல்லையில் வில்லு படப்பிடிப்பில் நிருபர்கதளிடம் விஜய் கூறியதாவது:

இலங்கையில் கொல்லப்படும் நம் தமிழ்ச் சகோதர சகோதரிகள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் அங்கு பூரண சுதந்திரத்துடன் வாழ வகை செய்யப்பட வேண்டும். போர் நிறுத்தம் இப்போதே முடிவுக்கு வர வேண்டும். இந்த நோக்கங்களுக்காகத்தான் சென்னையில் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்றேன்.

அதற்காக பிரதமருக்கு தந்தி அனுப்புமாறு எனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாரத பிரதமருக்கு தந்தி அனுப்பியதற்கு நன்றி.

இலங்கையில் தமிழ் மக்கள் தங்களின் சொந்த இடத்தை விட்டு விட்டு உயிரைக் காப்பாற்ற காடுகளுக்குள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கை தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் படுகொலையை கண்டித்து தமிழ் உணர்வை காட்ட வேண்டிய கட்டாயம், நேரம் வந்துள்ளது என்பதை உணர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என எனது நற்பணி மன்றத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

அதை ஏற்றுத்தான் வருகிற 16ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதம் இருக்கிறோம் அதாவது காவிரிப் பிரச்சினைக்காக ரஜினி உண்ணாவிரதமிருந்த இடம். இதில் நான் கலந்து கொள்வேன்.

இதேபோல மாவட்ட தலை நகரங்களிலும், மற்ற நகரங்களிலும் நடக்கும் உண்ணாவிரதத்தில் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கிற்கு பங்கம் ஏற்படாமல் உண்ணாவிரதம் நடத்த வேண்டும்.

அங்குள்ள தமிழர்கள் காக்கப்பட வேண்டும். எனவே உண்ணாவிரதத்தின் போது துயரத்தின் அடையாளமாக கறுப்புத் துணியுடன் மவுனமாகவும், அமைதியாகவும், அகிம்சை வழியில் உணர்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்றார் விஜய்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில்,

இலங்கை தமிழ் சகோதர-சகோதரிகளின் படுகொலையை கண்டித்து, தமிழ் உணர்வை காட்ட வேண்டிய கட்டாயமும், நேரமும் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து, நம் நற்பணி இயக்கத்தின் சார்பில் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என்று அனைவரும் எனக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தீர்கள்.

ஆகவே வரும் 16ம் தேதி நற்பணி இயக்கத்தினரோடு சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து ஈழ தமிழர்கள் மீது நமக்கு இருக்கும் பரிவையும், பாசத்தையும் வெளிக்காட்ட நான் முடிவு செய்திருக்கிறேன். காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை உண்ணாவிரதம் நடைபெறும்.

அதே நாளில் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும், அத்தனை நகரங்களிலும் நீங்களும் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜய் பேசியதாவது.

November 16, 2008









விஜய் பேசியதாவது-

இலங்கை பிரச்சனையை சின்ன வயது முதல் நானும் அறிந்து இருக்கிறேன். நீங்களும் அறிந்து இருப்பீர்கள். கடந்த இரண்டு மாதங்களாக பத்திரிகைகளிலும், டிவியிலும் வருகிற தகவல்களை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நம் ஊரில் விமானம் பறந்து போவதை பார்த்து சிறுவர், சிறுமிகள் உற்சாகத்துடன் கை தட்டுவார்கள். ஆனால் இலங்கையில் ஒரு விமானம் பறந்தாலோ, சிறுவர் சிறுமிகள் எல்லாரும் பயந்து பதுங்கு குழியில் போய் ஒளிந்து கொள்கிறார்கள். நம் வீட்டில் கல் விழுந்தால், கல் வீசியது யார்? என்று அதட்டி கேட்கிறோம். அங்கே வீடுகள் மீது குண்டு விழுகிறது. நம்மால் தட்டிக் கேட்க முடியவில்லை. இலங்கை தமிழர்கள் மூன்று வேளை நிம்மதியாக சாப்பிட வேண்டும். நிம்மதியாக உறங்க வேண்டும்.

இவ்வாறு பேசிய விஜய், நான்கு மணிக்கு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
------------------------------------------
இப்படி உண்ணாவிரதம் இருந்தது வெறும் வேஷம்தானா ?

அதே மேடையில் நம் இன மக்களுக்காக வருத்தப் பட்டது, பேசியது எல்லாம் வெறும் வேஷம்தானா?

வெக்கமில்லாம பொசுக்குன்னு போய் காங்கிரஸில் சேருவதற்கு எப்படி இவருக்கு மனம் வந்தது ?.

ராஜ்ய சபா எம்.பி. பதவி தரப் போகிறார்கள் என்றும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி தரப் போகிறார்கள் என்றும் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் உள்ளன.

இது உண்மைதானா ?

அப்படியென்றால் வெறும்
பணம் , பதவிக்காகவா இந்த அரசியல் பிரவேசம் ?

இவரின் உண்ணாவிரத நாடகத்தில் விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா சந்திரசேகரன், மனைவி சங்கீதா, விஜய்யின் ஒன்று விட்ட சகோதரர் விக்ராந்த் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்கள்.

இயக்குனர் பேரரசு, மன்சூரலிகான் ஆகியோர் நேரில் வந்திருந்து ஆதரவு தெரிவித்தார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எங்கு, யார் போராட்டம் நடத்தினாலும், நேரில் சென்று ஆதரவு கொடுத்து வரும் தமிழர் தேசிய தலைவர் பழ.நெடுமாறன், மற்றும் சுப.வீரபாண்டியன், தா.பாண்டியன் ஆகியோர் விஜய்யின் இந்த உண்ணாவிரதத்திற்கும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

காங்கிரஸில் விஜய் சேரப்போவதாக அனைத்து பத்திரிக்கையும் செய்திகள் வெளியிட்டது.

இன்று
கூட தினமலரில், விஜயும், பிரபுவும் காங்கிரஸில் சேரப்போவதாக திரு..வி.கே.எஸ்.இளங்கோவன்
தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அன்று
இவரது உண்ணாவிரத்திற்கு ஆதரவு தெரிவித்த பழ.நெடுமாறன், இன்று இந்த விஷயத்தினைக் குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசாமல், வாயை மூடிக் கொண்டு இருப்பது ஏன்?

விஜய் தன முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் எனப் பலர் விரும்புகின்றனர்.

விஜய் காங்கிரஸில் சேருவது அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்....

நாம் இவருக்கு தெரிவிக்கும் கண்டனம், இவரது அடுத்து வரும் படங்களைப் புறக்கணிப்பதே ஆகும்.

விஜயின்
ரசிகர்களே, தொண்டர்களே ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள் உங்களது இளைய தளபதியின் முடிவைப் பற்றி.

விஜையை
பிடித்தவர்களே,

பிடிக்காதவர்களே
,

நடு
நிலையானவர்களே,

தமிழ்
உணர்வாளர்களே,

தமிழ்
பேசும் மக்களே,

அனைவரும்
புறக்கணியுங்கள்....இவரையும், இவரது திரைப்படங்களையும்.

இப்பொழுது
இருக்கும் சூழ்நிலையில், விஜய்
டித்து வெளி வர இருக்கும்

வேட்டைக்காரன் ஓட்டைக்காரனாவது உறுதி.

Posted by போவாஸ் | at 9:28 AM | 2 கருத்துக்கள்

சிவமணியின் மகா லீலா

டிரம்ஸ் சிவமணியின் மகா லீலா - பகுதி 1


http://www.hotlinkfiles.com/files/2777193_n39ls/01Track01_1.m4a]01Track01_1.m4a

http://www.hotlinkfiles.com/files/2777204_4i8rz/02Track02.m4a]02Track02.m4a

http://www.hotlinkfiles.com/files/2777211_s5hah/03Track03.m4a]03Track03.m4a

http://www.hotlinkfiles.com/files/2777507_plqyy/04Track04_1.m4a]04Track04_1.m4a

http://www.hotlinkfiles.com/files/2777510_6z8mv/05Track05.m4a]05Track05.m4a

http://www.hotlinkfiles.com/files/2777795_w2utx/06Track06_1.m4a]06Track06_1.m4a

(வேறொரு தளத்தில் இருந்து முன்னர் நான் டவுன்லோட் செய்ததை இப்பொழுது அப்லோட் செய்து இருக்கிறேன். )


மகாலீலா பகுதி 2, சிவமணியின் இன்னும் இரண்டு ஆல்பங்களும், கிரேசி மோகன், எஸ்.வீ.சேகர் நகைச்சுவை நாடகங்கள் மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனியின் பட்டிமன்றங்களும் இனி வர இருக்கின்றன.

Posted by போவாஸ் | at 12:12 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails