போட்டோ கமெண்ட்ஸ் - 1

 
உள்நாட்டு பாதகாப்பு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, மறுபடியும் 
எப்போ ஆப்பு வைக்கப் போறாங்கனு ஒரு பக்கம் பயமாவும் இருக்கு.

 
என்னய்யா...பாஜகவ ஆட்டம் காண வச்சது போதுமா ?...
இன்னும் வேணுமா ?

 
தமிழ்நாட்டையும், தமிழர்களையும் இந்தியாவுல இருக்கிரதாவே மத்திய அரசு நினைக்கலை. ஒபாமாட்ட சொல்லி தமிழ்நாட்டை அமெரிக்காவோட சேத்துக்கோங்க. நாங்கெல்லாம்,அமெரிக்கத் தமிழர்கள் ஆய்டுறோம்.

 
எவ்வளவுதான் மேக்கப் போடாம அரசியல்ல வேஷம் போட்டாலும்..
அதுக்குன்னு நாலு ஜனங்க வரத்தான் செய்யுது.அவுங்க 
தலையேலுதத யார் மாத்த முடியும்.

 
தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து  
"நாமம்" 
போடுறதை இப்படி சிம்பாலிக்கா காட்டுறிங்களா.

photos: dinamalar.com 

Posted by போவாஸ் | at 5:20 PM | 0 கருத்துக்கள்

நகைச்சுவை துணுக்குகள் - சர்தார்ஜி ஜோக்ஸ் - 2

எது என் குதிரை..?
குதிரை ரேசில் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதையறிந்த சந்தாவும் பந்தாவும் ஆளுக்கொரு ரேஸ் குதிரையை வாங்கினர்.
சந்தா கேட்டார், "நாம் நம் குதிரைகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம்?".
அதற்கு பந்தா சொன்னார், "என் குதிரைக்கு மட்டும் வாலைக் கட் செய்து எடுத்து விடலாம், அதை வைத்து அடையாளம் தெரிந்துக் கொள்வோம்" என்றார். அதுபோல் ஒரு குதிரையின் வால் கட் செய்யப்பட்டது. ஆனால் அன்றிரவு அந்த வீட்டில் இருந்த குரும்பு பையன் இன்னொரு குதிரையின் வாலையும் கட் செய்து விட்டதால், அடுத்தநாள் சந்தாவும் பந்தாவும் ஒரு குதிரையின் காதை எடுத்துவிட்டனர். இது இரு குதிரைகளும் தங்களுடைய காது, மூக்கு, கண் என்று உறுப்புகளை இழக்கும் வரை தொடர்ந்தது. குதிரைகள் நான்கு காலையும், கொஞ்சம் உயிரையும் வைத்துக் கொண்டு நின்றது. இதைப்பார்த்து கவலைப்பட்ட சந்தா சொன்னார், "சரி இனி சிகப்பு குதிரை உன்னது, வெள்ளை என்னது" 

வேலை வாய்ப்பகத்தில்...  
அரசு பணிக்காக வேலை வாய்ப்பகத்தில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துக்கொண்டிருந்தார் ஒரு சர்தார். மிக கவனமாக ஒவ்வொன்றாக படித்து பூர்த்தி செய்துக் கொண்டிருந்தார். SEX என்று குறிப்பிட்டிருந்த இடத்திற்கு என்ன எழுதுவது என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, 'மாதம் ஒரு முறை குறிப்பிட்டார்.இதை கவனித்த அருகில் இருந்த ஒருவர், சர்தாரிடம் சொன்னார், "அதில் ஆணா அல்லது பெண்ணா என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்" என்று சொன்னார். உடனே சர்தார், 'ஆண்/பெண் NN blem' என்று திருத்தி எழுதினார். அதற்க்கு பிறகு Salaaa EEEecced: என்ற இடத்தில் 'Yee' என்று எழுதினார். விண்ணப்பத்தின் கீழ் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்த குறிப்புகளை படித்துவிட்டு (IIIIIIcciii), உடனே விண்ணப்பத்தை கிழித்து போட்டு விட்டார். பக்கத்திலிருந்த ஒருவர் "ஏன் என்னாச்சு கிழித்து போட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டதற்கு சர்தார் சொன்னார், "நான் இப்ப அவசரமா டெல்லி போகனும், ஏன்னா இந்த விண்ணப்பத்தை அங்கதான் பூர்த்தி செய்யனும்னு இதிலே போட்டிருக்கு" என்றார். அருகிலிருந்தவர் குழம்பிப் போனவராய், "எங்கே அப்படி போட்டிருக்கு காண்பிங்க பார்க்கலாம்" என்றதற்க்கு, சர்தார் காண்பித்த இடத்தில் " Fill The Application In Capital" என்று எழுதியிருந்தது.. 

என்னையா முந்துகிறாய்..
ஒரு இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக்கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்தனர். முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப் போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ் நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்.. 

எத்தனை இட்லி?
ஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார்.அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார், 'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார். உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்.. 
சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்?' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார். 

ஹாஸ்பிட்டலில் நண்பர்
நோய்வாய்பட்டு கிட்டத்தட்ட மரணத்தின் வாயிலுக்கே சென்றுவிட்ட நண்பரை பார்க்க சர்தார் ஒருவர் ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்றுக் கொண்டிருந்த சர்தார், நண்பரின் நிலைமை திடிரென்டு மிகவும் மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார். அந்த நிலையில் பேச முடியாத நண்பர் செய்கையால் ஒரு பேப்பரும், பேனாவும் வேண்டுமென கேட்டார். அவசரமாக ஏதோ எழுதி கொண்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே அவரைவிட்டு பிரிந்தது. சர்தார் அந்த பேப்பரில் தன் குடும்பத்துக்கு ஏதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்கக் கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பைக்குள் வைத்துக் கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் சர்தார், நண்பர் வீட்டுக்கு போய் துண்டு பேப்பர் விஷயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி அதைப் படித்துப் பார்க்க சொன்னார். பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி மயக்கம் போட்டு கீழேயே விழுந்துவிட்டார், அப்பொழுதுதான் சர்தார் அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தார். அதில் "நீ என் ஆக்சிஜன் குழாய் மீது நின்றுக் கொண்டிருக்கிறாய் என்று எழுதியிருந்தது.." 

Posted by போவாஸ் | at 11:35 AM | 1 கருத்துக்கள்

தெரிந்துகொள்வோம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பகுதி 3

மாநில தகவல் ஆணையம் 
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15ன்படி, தமிrநாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீr 07.10.2005 முதல் இயங்கி வருகிறது. 

பொது தகவல் அலுவலர் மற்றும் உதவி பொது தகவல் அலுவலர் நியமனம் 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு (1)ன்படி, தகவலுக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு,
தகவல் அளிக்க ஏதுவாக, ஒவ்வொரு அலுவலகங்களிலும், பொது தகவல் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். மேலும் உட்பிரிவு 2ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றை பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். (தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் தகவல் பெறுவதற்காக பொது தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், நிகரி எண் போன்றவைகள் தரப்பட்டுள்ளன.

தகவல் பெறுவதற்குச் செய்ய வேண்டிய நடைமுறை 
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6ன்படி, தகவல் பெற விரும்பும் நபர், ஆங்கிலம் அல்லது தமிழ்மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர்களிடத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான இன்றைய கட்டணமான ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) பணமாகவோ வரைவோலையாகவோ அல்லது அரசு கருவூல சீட்டு மூலமாகவோ, அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தன்னால் கோரப்படும் தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாதவிடத்து, அதனை எழுத்து வடிவில் கொணர்ந்திட தகுந்த, எல்லா உதவிகளையும் பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர் செய்திட வேண்டும்
தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடமிருந்து அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் கூடாது. மேலும், அவரை தொடர்பு கொள்வதற்காக தேவையான விவரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் தகவல் பெற விரும்புபவர்களிடமிருந்து கோருதல் கூடாது. 

ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிறவிடத்து, அந்தத் தகவல்; (அ) பிரிதொரு அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக; அல்லது அதன் உறு பொருள் பிறிதொரு அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற் பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்குமிடத்து, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து, அத்தகைய மாற்றல் குறித்து விண்ணப்பதாரருக்கு உடனடியாக தெரிவிக்கப்படல் வேண்டும். 
இதனை இயன்ற அளவு விரைவாக செய்திடல் வேண்டும். எந்நேர்விலும் அந்த விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்குமிகைபடாமல் செய்யப்படவேண்டும்.

Posted by போவாஸ் | at 11:30 AM | 0 கருத்துக்கள்

'வேட்டைக்காரன்' - கவலையில் விஜய்

'வேட்டைக்காரன்' படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கிவிட்டதால் விஜய் நிம்மதியாக இருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் நிஜம் அதுவல்ல... சன் நிறுவனத்தின் வியாபார திறமையையும் மீறி இந்தப் படம் ஓடாமல் போய்விடுமோ என்ற கவலையில், எடுத்த காட்சிகள் மற்றும் பாடல்களில் திருத்தங்கள் செய்த வண்ணமுள்ளாராம் விஜய். 

தொடர்ந்து மூன்று படங்கள் படுசுமார் என்ற ரிசல்ட் வந்துவிட்டதால், வேட்டைக்காரன் ஹிட் ஆகியே தீரவேண்டிய கட்டாயம் விஜய்க்கு. 

இந்தப் படமும் சொதப்பினால், நிச்சயம் தனது பொன்விழாப் படத்துக்கு கத்தி வைப்பார்கள் விநியோகஸ்தர்கள் என்பதால் இந்தக் கூடுதல் அக்கறையாம். 

மேலும் இதுவரை இணையத்தில் வெளியானதாகச் சொல்லப்பட்ட பாடல்கள் மற்றும் வீடியோ எதுவுமே உண்மையானவை இல்லையாம். இவை இணையத்தில் வந்ததால் அவற்றுக்குப் பதில் புதிதாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள் வேட்டைக்காரன் யூனிட்டில். 

மேலும் இந்தப் படத்தோடு சூர்யாவின் ஆதவன் படமும் தீபாவளிக்கு மோத உள்ளது. எனவே அந்தப் பட வெளியீட்டை சில நாட்கள் தள்ளி வைக்க முடியுமா என்றும் முயற்சித்து வருகிறார்களாம். 

இவற்றையெல்லாம்விட விஜய்யை மிகவும் கவலையில் ஆழ்த்தியிருப்பது இணையத் தளங்களில் தன்னைப் பற்றி வரும் தாறுமாறான செய்திகள்தானாம். தன் படங்களை கிண்டலடித்து வரும் இணையதள நக்கல் கட்டுரைகளைப் பார்த்து பயங்கர அப்செட்டிலுள்ள விஜய், இதைச் சமாளிப்பது எப்படி என்று தெரிந்த பிஆர்ஓக்களிடம் கேட்டு வருகிறாராம். 

இந்தப் பிஆர்ஓக்களில் சிலர்தான் இணையத் தளங்களைப் புறக்கணித்து நடிகர்களுக்கும் படங்களுக்கும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ரகசியம் விஜய்க்கு தெரியாது போலும்!. 

இந்த செய்தியினை thatstamil.comல் இருந்து படித்தது.எடுத்தது, 
 thatstamil.comல் இந்த செய்தியை படித்த வாசகர்கள் தந்த சில நக்கலான (உண்மையான) கமெண்ட்ஸ்.... 

"அய்யய்யோ வருதுடா விஜய் படம் தமிழ்நாட விட்டு எல்லா ஓடுங்கடா, இவன் தொல்ல தாங்கமுடியலப்பா, பன்ச் டயலொக் பேசியே ஆழ காளிபன்னிடுவன் "

vijay: சார், என்னோட வேட்டைக்காரன் பட ரிலீஸ் தேதி அறிவிக்கட்டா? 
rajini: நோ .நோ
vijay: ஏன்? 
rajini: கண்ணா, சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகம் ஆய்டும்.

" ஆபத்து. ஆபத்து. விஜய் படம் ரிலீஸ் ஆக போகுதாம். எல்லோரும் பாதுகாப்பான இடத்த நோக்கி போங்க."

" ஹலோ விஜய் மொதல்ல நடிக்க பழகு, தேவை இல்லாம பன்ச் டயலாக் பேசாத, அடுத்த நடிகர்களை சீண்டாத, அட்லீஸ்ட் ஒரு படத்துலயாவது உன் நடிப்பு தெரமய காட்டு அதவிட்டுட்டு ஓவரா புல்டப்ப் குடுக்காத "

" என்ன தான் உடம்புல ஆயில் தடவி மண்ணில் புரண்டாலும் ஓட்டுற மண்தான் உடம்பில் ஓட்டும். "

" டோன்ட் வொர்ரி விஜய் [^] சார் நீங்க நெனச்ச மாத்ரி வேட்டைக்காரன் படம் நல்லா ரன் (தியேட்டரை விட்டு) ஆகும் ஆல் தி பெஸ்ட் "

" உன் படத்தை பார்ப்பவர்கள் பைத்தியமாகிவிடுகிறார்கள் "

" இப்பதான் மக்களுக்கு உண்மை தெரிய ஆரம்பிச்சிருக்கு. so wait and see vijay. "

" அது nammala thorathitu வருது. அது ரொம்ப danger ache. Pona தீபாவளி ku அத pathavanga mental ayitangalam. Athoda attack la இருந்து makala kapatha Government vaccine kandu pidika pogutham. அது அது அது....... எது??? Vettaikaran... Ellorum பொய் olinchukunga. "

" விஜய்:அஜித் இன்னுமா என்ன இந்த உலகம் நம்புது? 
அஜித்: அது அவுங்க செஞ்ச பாவத்துக்கு நாம கொடுக்குற தண்டனை தன நாம படம். அது!!!!!அது!!!!அது!!!!! 
விஜய்:நீங்க பரவ இல.என்னை தான் இவனுக ரொம்ப படுத்துறங்க. 
அஜித்:ஆமா விஜய் உங்க படம் எப்ப ரிலீஸ்? 
விஜய்:தீவாளி ரிலீஸ்.உங்களுக்கு 2 டிக்கெட் அனுப்புறன் ஷாலினியோட வந்துருங்க அஜித்: (யோசிக்கிறார்) இந்த தீபாவளிக்கு நாம இங்க இருந்த நாம செத்தோம்.முதல மலேசியாக்கு ரெண்டு டிக்கெட் வாங்கனும். "

" சன் நிறுவனத்தின் வியாபார திறமையையும் மீறி இந்தப் படம் ஓடாமல் போய்விடுமோ ? Thats Correct. "

" விஜய் தமிழ் சினிமாவின் சாபம்.. விஜய் [^] ரசிகர்கள் எல்லாம் நான் முட்டாளாய்தான் இருப்பேன் என்று சபதம் எடுத்து கொண்டவர்கள்.. அது அவர்களின் தலைவிதி.. யார் என்ன செய்ய முடியும்.. ஐம்பது தடவை ஒரே படத்தில நடிக்கிறான்..."

" சத்தியமா சொல்றேன். கடவுள் மனிதனாக தமிழனாக பிறக்க வேண்டும். அவன் விஜய் படம் பார்த்து மூளை கொழம்பி அழுவுறதை நான் ரசிக்க வேண்டும் "

" டேய் இன்னாட பேரு இது வேட்டைக்காரன். தாடிக்காரன் என்று வை, படம் நல்ல ஓடும், இல்லன இந்த படமும் ஒரு வில்லு ஆயிரும்." 

"யாராவது விஜய் நடிச்ச(Act) படம் ஒன்னு சொல்லுங்களேன் "

" விஜய்யா யாரு அது ? புது நடிகரா? "

" ஒரே மாதிரி படங்கள் பண்ணின யார்தான் வேருக்கமட்டர்கள் DO சொமே THING DEFERRENCE மூவிஸ் அண்ட் DEFERENT கரக்டோர் லைக் சூர்யா ,விக்ரம் பிறகு யு வில் ராக் அண்ட் CHANGE யுவர் சென்டிமென்ட் ABOUT அம்மா . தக்கசி தட்ஸ் ஆல் டூ ஓல்ட் SUBJECTSOME THING லைக் ரோமடிங் மூவிஸ் அண்ட் சங்கே யுவர் கேட்டுப்லைக் ஹேர் ஸ்டால் CUT ஆப் யுஒர் FUNKY ஹேர் மேக் இட் ஸ்மார்ட் ." 
படம் ரிலீசாகுரதுக்கு முன்னாடியே இப்படி கமெண்ட்ஸ். 
இனி ரிலீஸ் ஆச்சுனா...இன்னும் எவ்ளோ கமண்ட்ஸ் வருமோ ?..நினைச்சு பாக்கவே முடியலை, 

என்னோட கமண்ட்ஸ்.
" எத்தனை படம் நடிச்சோமாங்கிறது முக்கியமில்லை. நாலு பேரு சொல்ற மாதிரி நடிச்சோமாங்கிறது தான் முக்கியம். " 
" தரமில்லாத சாப்பாட்டை அண்டா நிறைய பொங்கி வைக்கிறது வேஸ்ட்.
தரமோடு இருக்கும் சாப்பாட்டை ஒரு தட்டு நிறைய கொடுப்பது பெஸ்ட். " 
" எண்ணிக்கையில் உயர்வது உயர்வல்ல .... தரத்தில் உயர்வதே உயர்வு "

Posted by போவாஸ் | at 12:39 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails