கடவுளை காப்பாற்றும் காவல் துறை




செஞ்சி அருகில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் 17ஆம் தேதி நடைபெற்றது. காலையில் அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் நடைபெற்றதாம். அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை ஊஞ்சல் மண்டபத்துக்கு நள்ளிரவு 12 மணிக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு ஊஞ்சலில் அம்மனை வைத்து உற்சவம் நடத்தினர். இரவு 1 மணிவரை பக்திப் பாடல்களும், தாலாட்டுப் பாடல்களும் பாடப்பட்டன.
இந்த ஊஞ்சல் உற்சவத்தின்போது அம்மன் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted by போவாஸ் | at 11:19 PM | 0 கருத்துக்கள்

இளைஞர்கள் செய்த உதவி : 45 பேர் உயிர் தப்பினர்.


ஊட்டியில் கீழ் காந்தி நகர் பகுதி இளைஞர்கள், சாதுரியமாக செயல்பட்டதால் 18 குடும்பங்களை சேர்ந்த 45 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.நீலகிரியில் கடந்த 8ம் தேதி தொடர்மழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு, மண் சரிவு, உயிர்ச்சேதம் என்று தகவல்கள் வந்த வண்ணமிருந்தன. அதே இரவில், ஊட்டி லவ்டேல் சந்திப்பு அருகிலுள்ள கீழ் காந்தி நகரில் பல இடங்களில் சிறு சிறு அளவில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.
Human Intrest detail news
அப்போது, இந்த பகுதி நேருயுவகேந்திரா அமைப்பின் கீழ் செயல்படும், குறிஞ்சி மலர்கள் இளைஞர் மன்றத்தினர், இங்குள்ள வீடுகளில் வசித்தவர்களை வெளியேற்றி பள்ளியில் தங்க வைக்க முயற்சித்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி மூடப்பட்டிருந்தது. அவர் களை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்க வைத்தனர். இவர்கள் அனைவரையும் வெ ளியேற்றிய பின்பே, இந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்றனர்.அன்று இரவு இப்பகுதியிலிருந்த 18 வீடுகளை மண் மூடி முற்றிலுமாகச் சிதைத்து விட்டது. முன்னெச்சரிக்கை உணர்வுடன் இளைஞர்கள் செயல்படாமல் இருந்திருந்தால், அந்த வீடுகளில் இருந்த 45 பேர், உயிரிழந்திருக்கக் கூடும். தற்போது இவர்கள், ஓல்டு ஊட்டியிலுள்ள சமுதாயக் கூடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாற்று உடைகள் கூட இல்லாததால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இளைஞர் மன்ற தலைவர் தியாகராஜன் கூறுகையில், ""எங்களுக்கு சமுதாயக்கூடத்தில் உணவு, குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளனர். எங்களுக்கு எங்கே, எப்போது வீடுகள் அமைத்துத் தரப்படும் என்பது பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை,'' என்றார். கவுன்சிலர் பத்மாவதி மண்சரிவுக்கு முன்பாக பலரை அங்கிருந்து வெளியேற்ற உதவியுள்ளார்.
---------------------------------------------------------------------------------
இப்படியும் இளைஞர்கள் இருப்பதால்தான் இந்தியாவை அசைக்க முடியாமல் சில நாடுகள் தடுமாறுகின்றன, இந்திய இளைஞர்களை சரியான முறையில் வழிநடத்த ஒரு தன்னலமற்ற தலைமைதான் இப்போதைய நாட்டின் தேவை.
சரியான நேரத்தில், தன்னலம் பாராமல் இந்த இளைஞர்கள் உதவி செய்தது பாராட்டக்குரியது.
தமிழக அரசு இவர்களை சிறப்பாக கௌரவித்து, உற்சாகபடுத்த வேண்டும்.
இவர்கள், ஏன் பண்ற, நம் போன்ற இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி, முன்னுதாரணம்.


நண்பர்களே உங்களை, நன்றியுடன்  வாழ்த்தி வணங்குகிறேன்.
இச்செய்தியை வெளியிட்டு பலரும் அறியும்படி செய்த, தினமலர் நாளிதழுக்கும் நன்றி.

Posted by போவாஸ் | at 9:37 PM | 0 கருத்துக்கள்

பகவான் எப்போ சரணடைவார் ?


பகவானோட அறையில காமலீலைகள் செய்த 
அர்ச்சகர் சரணடைந்துவிட்டார். 
பகவான் எப்போ சரணடைவார்?
thanks:viduthalai.com

Posted by போவாஸ் | at 8:42 PM | 0 கருத்துக்கள்

கேள்விக்குறியாகும் சேது சமுத்திர திட்டம் ?.


சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மாற்றுப்பாதை குறித்த ஆய்வு அறிக்கை என்னவானது என்று சுப்ரீம் கோர்ட் கேட்டபிறகுதான், இது குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு உருப்படியான காரணமும் இன்றி, இத்திட்டம் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் மேற் கொள்ளாமல் ஆறுமாத காலம் வீணாக கழிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Front page news and headlines today
சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற் றிட முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தரும்படி சுப்ரீம் கோர்ட் கேட்டிருந்தது.2008ம் ஆண்டு ஆரம்பத்தில், தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இது குறித்து வழக்கு விசாரணையின் போது, "ராமர் பாலத்தை தவிர்த்துவிட்டு நான்கு ஏ என்றழைக்கப்படும் மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று கேட்டது."குறிப்பாக தனுஷ்கோடி அருகில் நிலத்தை வெட்டி அதன் மூலம் செயல்படுத்த முடியுமா என்பது குறித்து, எவ்வளவு விரைவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிக்கையை அளிக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பச்சவுரி என்பவர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆராய்வதாகக் கூறப்பட் டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் பஞ்சால் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஏற்கனவே கேட்டிருந்த அறிக்கை என்ன ஆனது என்று கேட்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு நாட்களில் அவசர அவசரமாக இந்த பச்சவுரி குழு கூடியது. அப்போது, நான்கு ஏ வழிப்பாதையில் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா, இல்லையா என்பது குறித்து கோவாவில் உள்ள நேஷனல் ஓசியோகிராபிக் இன்ஸ்டிடியூட் மூலம் ஆராய முடிவு செய்திருப்பதாக இந்த குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் புதன்கிழமை அன்று டில்லியில் மிகவும் ரகசியமாக கூடிய இக்கூட்டத்தில் இந்த முடிவை பச்சவுரி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இந்த முடிவு, கடந்த ஜூன் மாதமே எடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. ஆனால், உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. இந்த குழுவில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் துறைமுக துறை இணை செயலர் ஸ்ரீவத்சவா என்பவரும் உறுப்பினர். கோவா இன்ஸ்டிடியூட் இயக்குனரும் ஒரு உறுப்பினர்.இவர்கள் தரப்பில் எடுக்கப்பட்ட அப்போதைய முடிவு, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டது. அப்போது இருந்து கடந்த ஆறு மாதமாக இந்த முடிவு வெறுமனே அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கோர்ட் கேட்டபிறகு தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவிர, 2008ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களிலுமே பச்சவுரி குழு கூடி ஆலோசனை செய்தது. அந்த மூன்று ஆலோசனை கூட்டங்களிலும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் காலம் தாழ்த் தப்பட்டுள்ளது.இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், இந்த பச்சவுரி தலைமையிலான குழுவில் தமிழகத்தில் இருந்தும் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.ஒருவர் தமிழக அரசின் சுற்றுச்சூழல் பிரிவின் தலைமைச் செயலர். மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கலெக்டர். இவர்கள் மேற்கொண்ட நிலைப் பாடும் வெளியே வரவில்லை.

இத்திட்டத்திற்கு என, 700 கோடி ரூபாய் வரை செலவாகிவிட்டது. திட்டப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த டிரெட்ஜர்கள் எனப்படும் மணல் அள்ளும் இயந்திரங்கள் எல்லாம் திருப்பிச் சென்றுவிட்டன. பணிகள் அனைத்துமே நிறுத்தப்பட்டு உள்ளன.மேலும் இத்திட்டத்திற்கு என நிர்ணயிக்கப்பட்ட செலவான 2,500 கோடி ரூபாய் என்பது, தற்போது 4,500 கோடி ரூபாயாக உயர்ந்தும் விட்டது. இது குறித்தும் எந்தவொரு புதிய முடிவும் எடுக்காமல் அமைச்சரவையின் கவனத்துக் கொண்டு செல்லாமல் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகமும் அமைதியாகவே உள்ளது.காரணங்களே இல்லாமல் காலதாமதம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதன் மூலம், சேதுசமுத்திர திட்டம் என்பது கேள்விக் குறியாக மாறிக் கொண்டுள்ளது.

Posted by போவாஸ் | at 8:28 PM | 0 கருத்துக்கள்

சென்னையில் பிரமாண்ட திரைப்பட நகரம்

இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு சார்பில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக மாநாடு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:




1952-ம் ஆண்டு, என்னுடைய 28-வது வயதிலிருந்து தமிழ் திரைப்படத் துறையில் பங்காற்றி வருகிறேன். இப்போது எனக்கு வயது 86. இப்போதும் இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

திரைப்படங்கள் மூலம் எனக்குக் கிடைக்கும் வருமானத்தை அருந்ததி மாணவ, மாணவிகள், ஏழை எளியோர், நலிந்த திரைப்படக் கலைஞர்கள் ஆகியோருக்கு வழங்கி வருகிறேன். இதேபோல மற்ற திரைப்படக் கலைஞர்களும் தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்.

நமது நாடு, பலதரப்பட்ட கலைகளுக்கு மிகச் சிறந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. அதிலும் தென்னிந்தியாவின் பங்கு போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. நமது திரைப்படம் உள்ளிட்ட பொழுதுபோக்குத் துறைகள் நம்முடைய பாரம்பரிய கலாசாரத்தால் வரையறுக்கப்பட்டு சிறந்து விளங்குகின்றன.

திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் தமிழ் சினிமாவின் பங்கு இன்றியமையாதது. அதற்கு ஈடாக தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு சமுதாய பின்புலத்தை திராவிட இயக்கம் ஏற்படுத்தி தந்தது. அதன்மூலம் சினிமாவை சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டது.

சினிமாவின் வளர்ச்சிக்கு திமுக அரசு ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளது. 1989-ல் 54 சதவீதமாக இருந்த கேளிக்கை வரியை 40 சதவீதமாகக் குறைத்தோம். 1998-ல் அதை 30 சதவீதமாகவும் 2000-ல் 25 சதவீதமாகவும் குறைத்தோம். தமிழ் படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் சலுகை, படப்பிடிப்புக் கட்டணங்களை குறைத்தது, மாநில அரசு விருதுகளுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு, திரைப்படங்களுக்கான நல வாரியம் அமைத்தது என ஏராளமான நன்மைகளைச் செய்திருக்கிறோம்.

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை மிக வேகமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. நம்முடைய திறமைகளை மேற்கத்திய நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. 2008-ல் ரூ.58 ஆயிரம் கோடியாக இருந்த இந்திய ஊடகத் துறையின் வர்த்தகம், 2013-ல் ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்கை அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நமது ஸ்டுடியோக்களின் தரமும் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறனும் உலக அளவில் சிறந்து விளங்குகின்றன. சோனி பிரதர்ஸ், வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நிறுவனங்கள் சென்னையை மையமாகக் கொண்டு இந்திய நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பை ஏற்படுத்தியுள்ளன. இது தென்னிந்திய சினிமாவை மேலும் வளர்ச்சிக்குள்ளாக்கும்.

தமிழகத்தின் கலை, பொழுதுபோக்குத்துறை நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணி கொண்டது. தமிழகத்தை சர்வதேச அளவில் கலை, பண்பாடு, பொழுதுபோக்கு மையமாகத் திகழச் செய்ய வேண்டும். அந்த இலக்கை நோக்கியே நம்முடைய முயற்சிகள் அமைய வேண்டும் என்றார்.

விழாவில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு அமைப்பின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் வரவேற்றுப் பேசினார்.

மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், பரிதி இளம்வழுதி, தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், ஹிந்திப் படத் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Posted by போவாஸ் | at 5:19 PM | 2 கருத்துக்கள்

புலிகள் அவசரப்பட்டு எடுத்த முடிவுகளின் விளைவுகள் : முதல்வர் வேதனை


Front page news and headlines today
"விடுதலைப்புலிகள் அவசரப்பட்டு எடுத்த அரசியல் முடிவின் விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது; நம் மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது?' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் நடந்த "டெசோ' இயக்க மாநாட்டில், பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் பங்கேற்று, சகோதார ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினர். அந்த மாநாட்டில் எல்.டி.டி.ஈ., இயக்கத்தின் சார்பாக திலகர் என்பவர் வந்திருந்தார்; பிரபாகரன் வரவில்லை. அரசு பொறுப்பில் முதல்வராக இருந்து கொண்டே, அமைதிப்படை நாட்டிற்கு திரும்பி வந்ததை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழகத்தின் உணர்வை நான் வெளிப்படுத்தினேன். ஆனால், விடுதலைப் படைமுகத்தில் நின்ற ஒரு சில தலைவர்களுக்கு, நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. போர் முனையில் வீரத்தை பயன்படுத்திய அளவு, விவேகத்தை பயன்படுத்த வேண் டும் என, நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தினாலோ அலட் சியப்படுத்தினர்.


இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அளித்த பேட்டியை கூர்ந்து கவனித்தால், விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைபிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும். சகோதர யுத்தத்தின் காரணமாக, தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு இருக்கிறது. நான் யார் மீதும் குற்றம் குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை. சகோதர யுத்தத்தின் காரணமாக நம்மை நாமே, கொன்று குவித்துக் கொண்டு, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால், நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், எத்தனை தமிழர்கள் உயிரிழக்க நேரிட்டது? பலர் தங்கள் சொத்துக்களை இழந்து விட்டு, நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சை, பராரிகளாக செல்ல நேரிட்டது. அகதிகள் முகாம்களில் பலர் ஆண்டுக் கணக்கில் வாட நேர்ந்தது. இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரன் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதிதான் என்ன? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து, தமிழர்களின் உயர்வுக் காக பாடுபட வேண்டியவர்கள், தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டுவிட்டார்களே என்ற ஆதங்கமும், வேதனையும் ஏற்படுகிறது.


விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றியும், இலங்கைப் பிரச்னை பற்றியும் 1989ம் ஆண்டு என்னை அழைத்து பேசிய ராஜிவ் காந்தி "நீங்களும், முரசொலி மாறனும், வைகோவும் இலங்கை சென்று பிரபாகரனுடன் இந்த பிரச்னை குறித்து விரிவாக பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்கான நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். சந்திப்புக்கு தேவையான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன். இலங்கைத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்' என்று உறுதியளித்தார். அந்த இளம்தலைவர், தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோக சம்பவம். அந்த சம்பவமும் இலங்கை விடுதலைப் போராட்டத் தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.


இலங்கை அதிபரை தேர்ந்தெடுக்க 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட ரணில், "தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன்' என்றார். ஆனால், அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். ஏழு லட்சம் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்ததால், ஒரு லட்சத்து 81 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், ரணில் தோல்வியடைந்தார். "தேர்தலில் தமிழர்கள் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்று அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை, தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்' என, இது பற்றி ரணில் அண்மையில் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் சார்பாக, அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது; நம் மவுன வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது? இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்


எப்போதும் கலைஞரை குறை சொல்லும் கூட்டம் இதை நன்கு படித்து பொருள் கொள்ளவேண்டும். கண்மூடித்தனமாக அவரை குறை கூறாமல் ஒருகால் தாங்கள் நினைப்பது போல் மத்திய கூட்டணி ஆதரவு வாபஸ் பெற்று அவர் செயல்பட்டிருந்தால் நல்லது நடந்திருக்குமா என்று யோசித்து பாருங்கள். என்னதான் தமிழகம் மற்றும் இந்தியா முயன்றிருந்தாலும் முடிவை தடுத்திருக்க முடியாது. அப்படி குறை சொல்பவர்கள் ஏன் கலைஞருடன் கை கோர்த்து போராடவில்லை.


திமுகவின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனரா ? இல்லை. அனைத்துக் கட்சிகளையும் கூட்டிய போது..கலந்து கொண்டனரா என்றால் இல்லவே இல்லை.கலைஞரை தமிழின துரோகி என்று கூறுகின்றனர்.சரி கலைஞரும் வேண்டாம், திமுக அரசும் வேண்டாம். பிற கட்சிகளை இணைத்தாவாது, ஒன்று பட்டு போராடினார்களா ? வலியுருத்தினார்கள ? ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினார்களா? என்றால் இல்லவே இல்லை.


ஒரு பக்கம் இலங்கைத் தமிழர் பாதகாப்பு இயக்கம்.
ஒரு பக்கம் நாம் தமிழர் இயக்கம்.
ஒரு பக்கம் ஓய்வு நேர அரசியல்வாதி விஜயகாந்தின் குரல்.
ஒரு பக்கம் செல்வி.ஜெயலிதாவின் குரல்.
ஒரு பக்கம் பிஜேபியின் குரல்.


இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு திசையில் குரல் கொடுத்தால் கேட்போர் காதுகாளுக்கு ஒரு உளறலைப் போல்தான் இருக்கும். செவி கிழியும் அளவுக்கு சேர்ந்து கூக்குரல் கொடுத்தால், 100 சதவீதம் இல்லையென்றாலும் குறைந்த பட்சம் 50 சதவீதம் நன்மைகள் கிடைத்திருக்கும்.


இவர்கள் வெறும் வாய்ச்சவடால் வீரர்கள்தான், செயலில் ஒன்றும் இருக்காது என்பது சிந்தித்து செயல்படும் எல்லோருக்கும் நன்கு தெரியும். இவர்கள் செய்வது வெறும் அரசியல் என்பது சென்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின்மூலம் தமிழக மக்கள் ஏற்கனவே உணர்த்தியுள்ளனர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் உணர்த்துவர்.

Posted by போவாஸ் | at 12:57 AM | 7 கருத்துக்கள்

தேமுதிக அலுவலகத்தில் - இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி.

" தே.மு.தி.க. அலுவலகத்திற்குள் தி.மு.க. இருக்கிற கதையைக் கேளுங்கள். தேர்தல் பிரசாரத்தின்போது, தனியார் மருத்துவமனைகளில் அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இருப்பதாகக் குற்றஞ்சாட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார் அல்லவா? ஆனால், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. அலுவலகத்திலேயே அரசு வண்ணத் தொலைகாட்சிப் பெட்டிதான் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறதாம்."
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்.


தன் கட்சியில இருக்குற ஓட்டையையே பாக்க முடியலை, தீர்க்க முடியலை. இதுல திமுகவை எதிர்க்க, குறை சொல்ல வந்துட்டாரு விஜயகாந்து. அடுத்தவங்கள குறை சொல்றது சுலபம். விஜயகாந்து மத்தவங்கள குறைசொல்றதுகு முன்னாடி இவரு பக்கம் எல்லாம் ஒழுங்கானு பாக்கணும்.


என்னத்தசொல்ல, இவரு பின்னாடி போற மக்கள் பாடு திண்டாட்டம்தான். வெளில தெரிஞ்சது தூத்துக்குடில மட்டும்தான். தெரியாதது எங்கெல்லாம் இருக்கோ?. சொல்ல முடியாது அவரு வீட்டுலயும், அவரோட காலேஜ் ஹாஷ்டல்லையும் கூட இருக்கலாம் ? எல்லாம் விஜயகாந்துக்கே வெளிச்சம்.

Posted by போவாஸ் | at 12:03 AM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails