அய்யப்பன் மீது நம்பிக்கை


சபரிமலை மண்டலப் பூஜை விழா தற்போது நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க மாலை அணிந்து 41 நாள் விரதம் இருந்து வந்து செல்வார்கள். இதில் உடல் பலகீனமானவர்களுக்கு கேரள தேவசம் போர்டு சில அறிவிப்புகளைச் செய்துள்ளது.
 
அதன்படி நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயாளிகள், ஆஸ்துமா பாதித்தவர்கள் சபரிமலை வரும்போது தங்களது மருத்துவர்களிடம் ஆலோசனை மற்றும் அனுமதி பெற்று வருவது சிறந்தது என்றும், முறையான உடற்பயிசிக்குப் பின்னரே சபரிமலை வரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

நோய் அறிகுறி உள்ளவர்கள் மாலை அணியும் முன்பும், மாலை அணிந்த பின்பும் சபரிமலை தட்பவெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. அவ்வாறு சிகிச்சை பெற்ற பின்பும் 41 நாள் விரதம் முடிந்த பின்பு சபரிமலை செல்லலாம் என்று மருத்துவர்கள் அனுமதி அளித்தால் வரலாம்.

சபரிமலையில் 18 படிகளை ஏறி அய்யப்பனை தரிசிப்பதற்கு முன்னதாக உடல் நலம் பாதித்தவர்கள் மருத்து மாத்திரைகளைக் கொண்டு வரவேண்டும். மேலும் சபரிமலையில் உள்ள மருத்துவ ஆலோசனை மையங்களின் உதவியையும் நாடலாம் என்று கேரள தேவசம் போர்டு தெரிவித்துள்ளது 

இதிலிருந்து அவர்களுக்கே அய்யப்பன் மீது நம்பிக்கை என்பது தெளிவாகிறது.

என்று திருந்தப் போகிறார்களோ ?.

Posted by போவாஸ் | at 9:59 PM | 0 கருத்துக்கள்

சோனி எரிக்சன் கம்பெனி மூடல்:2ஆயிரம் ஊழியர்கள் வேலை இழப்பார்கள்

செல்போன் தயாரிப்பில் ஜப்பானைச் சேர்ந்த சோனி எரிக்சன் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஜப்பான், சுவீடன், ஆலந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன. 
 
சென்னை அருகில் உள்ள மணப்பாக்கத்தில் சோனி எரிக்சனின் மென் பொருள் மேம்பாட்டு மையம் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்தது. சமீபத்தில் வெளியான டி.715செல் போன்கள் இங்கு தான் வடிவமைக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. 
 
சர்வதேச அளவில் சோனி எரிக்சன் நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சோனி எரிக்சனின் புதிய தலைவராக பொறுப்பேற்றவர் உலகம் முழுவதும் உள்ள கிளைகளின் செயல் பாட்டை ஆராய்ந்தார். அவர் அனுப்பிய பிரதிநிதிகள் சென்னை வந்து ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினர். 
 
இதில் சென்னை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் இம்மையத்தை உடனடியாக மூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மணப்பாக்கத்தில் சோனி எரிக்சனின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அலுவலகமும் மூடப்படுகிறது. 
 
சென்னை அலுவலகம் மூடப்பட்டதன் மூலம் 60ஊழியர்கள் உடனடியாக வேலை இழந்தனர். 2010-ம் ஆண்டு வாக்கில் 2ஆயிரம் ஊழியர்கள் வேலை இழப்பார்கள்.

Posted by போவாஸ் | at 12:24 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails