சீனாவை விட செழிப்பாக உள்ளது இந்தியா - ஆய்வு

செழுமையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 45வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் சீனா, 75வது இடத்தில் உள்ளது.

இந்தியாவை விட சீனா ராணுவ ரீதியில் பலம் வாய்ந்த நாடாக இருக்கலாம். ஆனால் செழுமையான நாடுகள் வரிசையில் இந்தியா, சீனாவை விட மிக உயரத்தில் உள்ளது.

லிகேட்டம் பிராஸ்பரிடிட்டி இன்டெக்ஸ் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் இந்தியாவுக்கு 45வது இடமும், சீனாவுக்கு 75வது இடமும் கிடைத்துள்ளன.

உலகின் மக்கள் தொகையில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள 104 நாடுகளின் வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றை தொகுத்து இந்த தரவரிசைப் பட்டியலை லிகேட்டம் வெளியிட்டுள்ளது. இது 3வது சர்வே ஆகும்.

பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரம், மக்களின் மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொணடு இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவை விட சீனா பல்வேறு பொருளாதாரப் பிரிவுகளில் எங்கேயோ உள்ளது. ஆனால் சீனாவிடம் இல்லாத ஜனநாயகம், சகிப்புத்தனமை, இனக் குழுக்களுக்கிடையிலான நல்லிணக்கம், மத சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஒருமைப்பாடு, சிறுபான்மையினரை மதிக்கும் தன்மை, அவர்களுக்கான  பாதுகாப்பு போன்றவை காரணமாக, இந்தியா, சீனாவை பின்னுக்குத் தள்ளி விட்டது.

இதுதுறித்து லிகேட்டம் கழகத்தின் மூத்த துணைத் தலைவர் வில்லியம் இன்போடன் கூறுகையில், மிகச் சிறந்த சமூகக் கட்டமைப்பு மற்றும் அருமையான வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைப் பேணுவதில் இந்தியா மிகச் சிறப்பாக உள்ளது. இந்தியாவை விட பொருளாதார ரீதியில், சீனா பல மடங்கு உயரத்தில் இருந்தாலும் கூட, அங்கு ஜனநாயகம் இல்லாமை, பேச்சுச் சுதந்திரம், மத சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என எதுவுமே இல்லாததால், சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னணி பெற்றுள்ளது என்றார்.

ஒவ்வொரு பிரிவிலும் இந்தியா பெற்றுள்ள ரேங்கிங்..
சமூகப் பிரிவில் இந்தியா, அமெரிக்காவை விட முன்னுக்கு உள்ளது. அதாவது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவும் தன்மை, இல்லாதவர்களுக்கு உதவுவது, தொண்டுப் பணிகளில் அதிக அக்கறை காட்டுவது, குடும்பத்தினர், நண்பர்கள் என்று உறவுமுறைகளை வலுவாக வைத்துக் கொள்வது போன்றவற்றில் இந்தியா சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா 6வது இடத்திலும், இங்கிலாந்து 7 மறறும் பின்லாந்து 8வது இடத்திலும் உள்ளன.

கல்வி, சுகாதாரத்தில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. சுகாதாரத்தில் 88வது இடத்தையும், கல்வியில் 86வது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது.

நவீனமயமாக்கல், சிறு தொழில் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் தர வரிசை 55.

இந்த தரி வரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள்..

பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, அமேரிக்கா , நியூசிலாந்து.

Posted by போவாஸ் | at 5:24 PM | 1 கருத்துக்கள்

`டீலா நோ டீலா' - சன் டி.வி.-யில் புதிய கேம் ஷோ


தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமாகத் திகழ்ந்து வரும் சன் தொலைக்காட்சி, வரும் (அக்டோபர்) 31ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் `டீலா நோ டீலா' என்ற பெயரில் புதிய கேம் ஷோ நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.



இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியை சன் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து சர்ஃப் எக்ஸல் மற்றும் என்டிமோல் நிறுவனங்கள் வழங்குகின்றன.

`
ஆனந்த தாண்டவம்', `பிரிவோம் சந்திப்போம்' படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ரிஷி இந்த கேம் ஷோவை தொகுத்து வழங்கவுள்ளார்.



சென்னையில் `டீலா நோ டீலா' அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய சன் டி.வி. நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் வித்யாசாகர், சன் டி.வி தொடங்கப்பட்ட காலம் முதல் அனைத்து அறிமுகப்படுத்திய அனைத்து நிகழ்ச்சிகளுமே வெற்றிகரமாக அமைந்ததைச் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் இப்போது புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் இந்த கேம் ஷோவும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார்.



தொலைக்காட்சி வரலாற்றில் தென்னிந்தியாவில் இருந்து, அதுவும் சன் குழுமத்தில் இருந்து தமிழ் மொழியில் இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருப்பது நல்ல தொடக்கம். எதிர்காலத்தில் இதேபோன்ற பல கேம் ஷோக்கள் வெளிவருவதற்கு இது வழிவகுக்கும் என்றும் அஜய் குறிப்பிட்டார்.

மேலும் இந்த கேம் ஷோ பற்றிய அறிவிப்பை சன் டி.வியில் அறிவிப்பு செய்து, பங்கேற்க விரும்புவோர் பற்றி தெரிவிக்கக் கேட்ட முதல் நாளிலேயே சுமார் 11 லட்சம் பேர் தமிழகம் முழுவதும் இருந்து தொலைபேசியிலும், குறுந்தகவல் சேவை மூலமாகவும் பங்கேற்கும் விருப்பத்தைத் தெரிவித்ததே அந்த ஷோவின் வெற்றியை முன்கூட்டியே உணர்த்தியுள்ளதாகவும் அஜய் கூறினார்.



தமிழ் மொழிக்கேற்ப இந்த நிகழ்ச்சியை சற்றே வித்தியாசப்படுத்தி, உலகத் தரம் மாறாமல் தயாரித்து வழங்கப்படவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாக தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரவி மேனன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கேம் ஷோ குறித்த விவரத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.

என்டிமோல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபக் தார் கூறுகையில், தென்னிந்தியாவில் பிரபல நிறுவனமாக விளங்கும் சன் குழுமத்துடன் இணைந்து கேம் ஷோ ஒளிபரப்பில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்க பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.

பொழுதுபோக்குடன் கூடிய மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளை சன் டிவியுடன் இணைந்து தொடர்ந்து என்டிமோல் வழங்கும் என்றார்.

73 
நாடுகளில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சிக்கான மொத்த பரிசுத்தொகை 500 கோடி ரூபாயாகும். 

இந்த விளையாட்டில் 26 பெட்டிகள் (சூட்கேஸ்கள்) இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 1 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வைக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் ஏதாவது ஒரு சூட்கேஸை எடுத்து அதில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறியாமலேயே மற்ற 25 பெட்டிகளிலும் உள்ள அதிகபட்ச பணத்தை அவர் தேர்வு செய்ய வேண்டும். 

போட்டிக்கு இடையே வங்கியாளர் ஒருவர், போட்டியாளரின் சூட்கேஸை பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவிப்பார். இதுவே டீலா நோ டீலா போட்டி.

இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் என்ன `ரேட்டிங் டீல்' கொடுக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Posted by போவாஸ் | at 7:43 PM | 1 கருத்துக்கள்

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் குளறுபடி ?



தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சைக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படுவதால் பொது மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.



இந்தத் திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகளிடம், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் குறிப்பிட்ட அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகளுக்கு மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கின்றன.



அதாவது, அறுவை சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனைக்கான கட்டணம் முழுவதையும் நோயாளிகள்தான் செலுத்த வேண்டியுள்ளது. உதாரணமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள ஒருவர் செல்லும் நிலையில், ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., ஆன்ஜியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


இதற்காக தனியார் மருத்துவமனைக்கு ஏற்ப ரூ.15,000 வரை செலவாகிறது. இதை நோயாளியே செலுத்தும் நிலை உள்ளது. அரசு அறிவித்த காப்பீட்டுத் திட்டத்துக்கு எதிரான நிலையை மருத்துவமனைகள் கடைப்பிடிப்பதே இதற்குக் காரணம்.


மேலும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே உதவி கிடைக்கிறது. அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளாமல், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை.


ஏற்கெனவே பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குறைந்தது 24 மணி நேரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றாலே, சிகிச்சைக்கான கட்டணத்தை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிவிடும். காய்ச்சலுக்குக் கூட காப்பீட்டு நிதியுதவி பெறலாம்.


ஆனால் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டால்தான் காப்பீட்டு உதவி கிடைக்கும் என்பது ஏழைகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தி, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


இவ்வாறு தேர்வாகும் பயனாளிகள், இலவச சிகிச்சை கிடைக்கும் என நினைத்து தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். ஆனால் பரிசோதனை உள்ளிட்ட செலவினங்களை நோயாளிகள்தான் ஏற்க வேண்டும் என தெரியவரும்போது பலரும் சிகிச்சை பெறாமல் வீடுகளுக்குத் திரும்பி விடுகின்றனர்.


முதல்வரின் சொந்த மாவட்டத்தில்...: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் கடந்த 22-ம் தேதி மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்களில் 86 பேர் அறுவைச் சிகிச்சைக்காக தேர்வு செய்து, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


ஆனால், மருத்துவப் பரிசோதனை போன்றவற்றுக்காக மருத்துவமனை நிர்வாகங்கள் அவர்களிடம் கட்டணம் கேட்டதால் அதை செலுத்த முடியாமல் அனைவரும் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அனைவரும் சிகிச்சை பெறாமல் உள்ளனர்.


மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை:


கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை உள்பட எந்தவிதமான கட்டணத்தையும் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.


இவ்வாறு கட்டணம் கேட்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.


கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம், சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகளுக்கு மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக திட்ட இயக்குநர் டாக்டர் எஸ். விஜயகுமார் "தினமணி' நிருபரிடம் கூறியதாவது:


"கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1 லட்சம் நிதியுதவியின் கீழ், உயர் சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனைகள் அல்லது சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சை மதிப்பீடு பரிசோதனைகள் உள்பட எதற்கும் கட்டணத்தை தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கக் கூடாது.


திருவாரூரில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி நடைபெற்ற முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளிடம் மருத்துவமனைகள் பரிசோதனைக் கட்டணம் கேட்டது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன் விசாரணை மேற்கொண்டுள்ளார். தவறு செய்த மருத்துவமனைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


எங்கு புகார் கூறுவது? கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சை பெறுவோரிடம், தனியார் மருத்துவமனைகள் எந்த விதமான கட்டணத்தைக் கேட்டாலும், அது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்ட குறை கேட்புக் குழுவிடம் தகுந்த ஆதாரங்களுடன் பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார் நிரூபிக்கப்படும் நிலையில், காப்பீட்டுத் திட்ட பட்டியலிலிருந்து அந்த மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என்றார் விஜயகுமார்.


நன்றி :தினமணி

Posted by போவாஸ் | at 7:24 PM | 0 கருத்துக்கள்

செம்மொழி மாநாடு: செய்திப் படம் தயாராகிறது



உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி மற்றும் இயக்குநர்கள் அமீர், லிங்குசாமி, சுப்ரமணியசிவா, மிஷ்கின், விக்கிரமன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அனைத்துத் திரைப்பட இயக்குநர்களும் கலந்துகொள்கிறோம். மேலும் தமிழ் மொழியின் பெருமையைப் போற்றும் விதமாக திரைப்பட இயக்குநர்களே எழுதி, நடிக்கும் வரலாற்று நாடகம் ஒன்றை நடத்தவுள்ளோம்.


மாநாட்டு நிகழ்ச்சிகளை முன்னணி இயக்குநர்கள் சிறப்பாகப் படமாக்கி அதை மாநாடு முடிந்த அடுத்த ஆறு மாத காலத்தில் வெளிவரும் அனைத்துத் தமிழ்ப் படங்களின் இடைவேளையிலும் சிறப்புச் செய்திப் படமாகத் திரையிடவுள்ளோம். திரைப்பட இயக்குநர்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் யாவும் அரசு வழிகாட்டுதலின்படி முறையாக நடத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்

Posted by போவாஸ் | at 2:31 AM | 0 கருத்துக்கள்

தொடர் சறுக்கலில் கலைஞர்



முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக, மதுரையில் நவம்பர் 1-ம் தேதி நடத்துவதாக அறிவித்திருந்த எதிர்ப்பு பொதுக் கூட்டத்தை ஒத்திவைப்பதாக திமுக அறிவித்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கேரளத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.


திமுக பட்டும் படாமல் இருந்தபோது, இவ்விசயத்தில் திமுகவுக்கு எதிராக ஜெயலலிதா அம்மையாரின் கடுமையான் கண்டனங்களையும், அறிக்கைகளையும் கண்டு சூடான திமுக தரப்பு பத்தி அறிக்கையும் விட்டுக் கொண்டு இருந்தது. அது அப்படி இது இப்படி என்று திமுகவும், அதிமுகவும் அறிக்கை போர் நடத்திக் கொண்டிருந்தது.

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த போது தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் கண்டனங்களைத் தெரிவித்தது உச்ச நீதி மன்றம். இதையடுத்து வழக்கினை ஒத்தி வசித்தது.


இந்நிலையில், ஊர் வாயை மூடுவதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்த திமுக, "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் மத்திய இணையமைச்சர் ஒருவரின் செயல்பாடுகளைக் கண்டித்து மதுரையில் நவம்பர் 1-ம் தேதி கலைஞர் தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெறும்' என்று முதலில் அறிவித்தது.

ஓரிரு நாளில் இந்தக் கண்டனம் கூட்டம் எதிர்ப்புக் கூட்டமாக மாறியது. "முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டம்' என அறிவிக்கப்பட்டது. முக. அழகிரி தலைமையில் என்று கூட்டம் நடை பெரும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், அந்த எதிர்ப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.


இதுகுறித்து, திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:


"முல்லைப் பெரியாறு புதிய அணை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் இப்போதுள்ள முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது எனவும், புதிய அணை கட்டத் தேவையில்லை எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் முன் எடுத்து வைத்து வாதாடி வருகிறது.


மத்திய அரசின் வழக்கறிஞரும் இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்டு, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என கூறியிருப்பதையே இப்போதும் வலியுறுத்துவதாக எடுத்துரைத்துள்ளார்.


இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கருத்தில் கொண்டு, மதுரையில் நவம்பர் 1-ம் தேதி நடத்துவதாக திட்டமிட்டு இருந்த பொதுக் கூட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


திமுகவின் இந்த திடீர் பின்வாங்கலுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுப்  பிரச்சனை, சிபிஐ ரெய்டு போன்றவை காரணமாக இருக்கலாம் என்று ஐயம் உண்டாகியுள்ளது. காங்கிரசிடம் திமுக சரண்டர் ஆனதைப் போலுள்ளது.ஸ்பெக்ட்ரம் ஊழல், சிபிஐ ரெய்டு தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கும் வேளையில், திமுகவின் தலைவர், தமிழக முதல்வர் கலைஞர் வாயெடுத்து இன்னும் கூறவில்லை. தெளிவான அறிக்கையையும் தரவில்லை.

ஆ.ராஜா அவர்கள் ஊழல் குற்றச்சாட்டை மறுத்து வரும் நிலையிலும், பிரதமர் அவர்களே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெறவில்லை என்று அறிவித்த நிலையிலும்,  பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் பதவி விலக வேண்டும் என்று குரல் கொடுத்தும் கூட, கலைஞர் அவர்கள் இன்னமும் தெளிவான பதிலோ அறிக்கையோ தராமல் மெளனமாக இருக்கிறார்.

மத்தியில் மீண்டும் வந்த காங்கிரஸ் ஆட்சி, திமுகவை மட்டுமல்ல தமிழர்களையும் துச்சமென நினைத்தே செயல் பட்டு வருகின்றது.தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும், ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து கஷ்டமான சூழ்நிலைகளை உருவாக்கிக்  கொண்டிருக்கிறது. காங்கிரஸ் திமுக கூட்டணி உடையப் போகும் சூழ்நிலையைப் போல் இருக்கிறது. கூட்டணியிலிருந்து திமுகவை வெளியேற்றாமல், காங்கிரஸ் கூட்டணியை விட்டு திமுக தானாகவே வெளியே செல்லக் கூடிய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது காங்கிரஸ். அதற்கான காய்களை பக்குவமாகவே நகர்த்துவது போலத் தெரிகிறது.


விரைவில் சமரசம் ஏற்பட்டு விஷயங்கள் அமுங்கிப் போகலாம் அல்லது காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக பிரிந்து வெளியே வந்து, மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் நிலை உண்டாகலாம். அப்படியொரு நிலை வந்தால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாவது நிச்சயம். வைகோ வெளியேற்றப் படுவார். அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில், விஜயகாந்த் சேர வாய்ப்பு அதிகம் உள்ளது.

எந்த விசயத்தையும் நன்கு ஆராய்ந்து யோசித்து, ராஜ தந்திரத்துடன் செயல் படுத்தும் பக்குவமிக்க தலைவர் கலைஞர் இந்த விசயத்தில் தொடர்ந்து சறுக்கியிருக்கிறார். எப்படி கோட்டைவிட்டார் என்று புரியவில்லை. ?


கலைஞரின் சறுக்கலின் பின்னணி என்ன ? பின்வாங்கலுக்கான காரணம் என்ன ?.. விளக்கம் வருமா கலைஞரிடமிருந்து.....பொறுத்திருந்து பார்ப்போம்.



ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கலந்து கொண்டு, ஏலத்தினை எடுத்த யுனிடெக் & ஸ்வான் கம்பெனியில், ஸ்வான் கம்பெனி மத்திய அமைச்சரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாருக்கு சொந்தமானதாகும். தற்போது நடை பெற்ற மகாராஷ்ட்ரா மாநில தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது இரு கட்சிகளுக்குள் யாருக்கு என்ன பதவி, என்ன அமைச்சகம், என்ன பொறுப்பு என்பதில் பலமான பிரச்சனைகள் இருப்பதாக தெரிகிறது.


கடந்த, 1999ம் ஆண்டு இரு கட்சிகளுக்கு இடையில் போடப்பட்ட ஒப்பந்தப்படி உள்துறை, நிதி, மின்சாரம் ஆகிய இலாகாக்களையும், துணைமுதல்வர் மற்றும் சபாநாயகர் ஆகிய பதவிகளையும் தேசியவாத காங்கிரசே வைத்துக் கொண்டு, முதல்வர் பதவியை காங்கிரசுக்கு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. 2004ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகும் இதே பார்முலா அமல்படுத் தப்பட்டது. இந்த முறை அதிக இடங்களை பெற்றுள்ள காங் கிரஸ், முக்கிய இலாகாக்களை குறிவைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த, மத்திய இணையமைச்சர் பிரபுல் படேலை அக்கட்சி அறிவித் துள்ளது. இவர், திக்விஜய்சிங்குடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இருப்பினும், நேற்று இரவு வரை எந்த ஒரு சுமுக உடன்பாட்டையும் இவர்களால் எட்ட முடியவில்லை. சரத் பவார் கட்சி ரொம்பக் கறாராகக் இருக்கிறதாம்.
அதனால்தான், ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டைப் பயன்படுத்தி, அதிரடியான தொடர் ரெய்டுகளின் மூலம் சரத் பவாருக்கு கொஞ்சம் ஆட்டம் கொடுத்து அவரை கண்ட்ரோல் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது என்றும் இதுதான் ரெய்டுக்கான உண்மையான காரணம் என்றும் ஒரு பக்க பேச்சாக இருக்கிறது.
எது உண்மை?
விரைவில் தெரியவருமா?...அமுங்கிப்போகுமா ? பார்ப்போம்.

Posted by போவாஸ் | at 1:57 AM | 0 கருத்துக்கள்

கழுதைக்கு கல்யாணம்...மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் மக்கள்.

கழுதைக்கு கல்யாணம்...மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கும் மக்கள்.


மழை பெய்ய வேண்டி இரு கழுதைகளை பிடித்து, கோவிலில் வைத்து கல்யாணம் செய்துள்ளனர், கோவில்பட்டியில் இருக்கும் ஒரு பகுதி மக்கள். கழுதைகளுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் மழை பெய்துவிடுமா என்ன?


இன்றைய காலத்தில் இது போன்று சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பது நமக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இன்னும் நம் மக்கள் அறியாமையிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிப் போயுள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது. வேதனையைத் தருகிறது.


இந்த வீடியோவின் பின்னணியில் குரல் கொடுத்த முகம் தெரியாத தினமலர் பத்திரிக்கையின் நபர்,  இப்படி ஒரு முட்டாள்தனமான செயலைக் கண்டித்து, மூடனம்பிக்கையை போக்கும் சமுதாய, சமூக அக்கறையில்லாமல், கழுதைக்கு கல்யாணம் நடந்தத்தைப் பற்றி பெருமை பட வர்ணனையாக வர்ணித்துள்ளார்.



என்று திருந்தப் போகிறார்களோ. இது போன்று மூடநம்பிக்கையில் ஊறிப்போன மக்களுக்கும், இப்படி ஒரு விவஸ்தகெட்ட கலாச்சாரத்தை பின்பற்றும் மக்களுக்கு இருக்கும் அறியாமை விலக சமுதாய சமூக அக்கறையோடு தினமலர் போன்ற பத்திரிகைகள் செயல்பட வேண்டும்.

இப்படி கழுதைகளுக்கு கல்யாண, மரத்திற்கு கல்யாணம், தவளைக்கு கல்யாணம் அப்படிங்குற விசயத்துல முக்கியத்துவம் கொடுக்குற நம்ம மக்கள், செலவு செய்கிற மக்கள், .. உருப்படியா நல்ல மரங்களை நட்டு வைத்தால், அடுத்து வரும் சந்ததிகளாவது சீரான, ஆரோக்கியமான, நல் வாழ்வு வாழ வழி வகுக்கும். மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

Posted by போவாஸ் | at 12:58 AM | 1 கருத்துக்கள்

இதெல்லம் ஒரு பிழைப்பா ?...


விஜய்க்கு இது போதாத காலம் போலிருக்கிறது.  வேட்டைக்காரன் விவகாரத்திற்கே இன்னும் விடை தெரியமாமல் இருக்கிறது.   இதில் அடுத்த பிரச்சனை வேறு.

நில வில்லங்கத்தில் சிக்கியுள்ளார்.  காய்த்த மரம் கல்லடி படத்தானே செய்யும் என்று விஜய் வட்டாரம் ஆறுதல் சொல்லிக்கொண்டாலும்,  அடி மேல் அடி விழுகிறதே என்று கவலையிலும் இருக்கிறது.

நடிகர் விஜய்க்கு வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கீடு செய்தது. இதை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை செனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
’’எனது தந்தை ரத்தினபாண்டியன் சென்னை பாடி பகுதியில் நிறைய நிலம் வைத்திருந்தார். கொரட்டூர் வீட்டு வசதி வாரியத்துக்காக 1973-ல் எனது தந்தையின் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலம் 36 ஆண்டுகளாக பயன்படுத்தப்படவில்லை. இவ்வாறு பயன்படுத்தாமல் இருந்தால் நில சொந்தக்காரருக்கே அந்த நிலத்தை திருப்பி தரவேண்டும்.
எனவே, நிலத்தை திருப்பி தருமாறு ஐகோர்ட்டில் எனது தாயார் வழக்கு தொடர்ந்தார். 3 மாதத்தில் எங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
4.3.2008 அன்று வீட்டு வசதி துறை செயலாளர் ஆர்ஜிதம் செய்த நிலத்தை திருப்பிதர இயலாது என்று தெரிவித்தார்.

ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் ஒருபகுதி அம்பத்தூர் நகராட்சி சாலைக்கும், இன்னொரு பகுதி குடியிருப்புக்கும், வணிக வளாகத்துக்கும் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதுதவிர, .38 ஏக்கர் நிலம் திராவிடம் பஞ்சாயத்து திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, நாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், 2008 செப்டம்பர் மாதம் .38 ஏக்கர் நிலத்தில் காம்பவுண்டு சுவர் கட்டுவது தெரிய வந்தது. இந்த நிலத்தின் பெரும்பகுதி நடிகர் விஜய்க்கு ஒதுக்கியுள்ளனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுபற்றி கேட்டபோது, 25.4.2007-லிலேயே விஜய்க்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் திராவிட பஞ்சாயத்து திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை விஜய்க்கு வீட்டு வசதி வாரியம் வழங்கியுள்ளது.
வீட்டுவசதி வாரியம் ஒருவருக்கு அதிகபட்சம் ஒரு கிரவுண்டு, குறைந்தபட்சம் 5 சென்ட்தான் ஒதுக்க முடியும். ஆனால் வரைமுறையை மீறி பெரிய அளவில் .27 ஏக்கர் நிலம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட செல்வாக்கு அடிப்படையில் அவருக்கு இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும்.
4.3.2008 அன்று நிலத்தை எங்களுக்கு திருப்பித்தர முடியாது என்று வீட்டு வசதி துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். நிலத்தை விஜய்க்கு ஒதுக்கீடு செய்ததையும் ரத்து செய்யவேண்டும்’’என்று கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

---------------------------------------------------
பைசாவுக்காக, சினிமவில் வாய் கிழிய பேசி உத்தமனாக பக்கம் பக்கமாக டயலாக் பேசும் நடிகனுக்கு, அநியாயத்தை எதிர்த்து அரை டஜன் பன்ச் டயலாக் பேசும் நாயகனுக்கு நிஜ வாழ்கையில் கொஞ்சம் தூய்மையாக, நேர்மையாக,  வாழ கசக்கிறதோ? இதெல்லம் ஒரு பிழைப்பா.?

நிலத்தினை விஜய் தெரிந்து அல்லது தெரியாமல் வாங்கியிருந்தாலும் குற்றம் குற்றமே. அவருக்கு இருக்கும் காசுக்கும் புகழுக்கும் வேறு எத்தனை எத்தனையோ இடங்கள் கிடைத்திருக்கும், வாங்கியிருக்கலாம்.இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் வரம்பு மீறச் செய்து, குற்றத்திற்கு, நிலா மோசடிக்கு துணையாக பயன்படுத்தியிருக்கிறார். இடத்தினை மிகக் குறைந்த அளவிற்கு வாங்கிருக்கிறார் பாருங்கள் இவரது குறுக்கு புத்தியினை.

மனிதாபிமானம், நேர்மை, தூய்மை உடையவன் இதை செய்ய மாட்டான். செய்யவும் துணிவு வராது. இது ஒரு கீழ்த்தரமான செயல். கோர்ட் கடுமையான கண்டனகளை விஜய் தரப்புக்கு தெரிவிக்க வேண்டும். கண்டிக்க வேண்டும். இன்னும் எத்தனை இடத்தில் இது போன்ற இடத்தினை வாங்கி போட்டுள்ளாரோ ?.

இப்பொழுதுதான் தெரிகிறது, விஜய் அரசியலுக்கு வர முயற்சிப்பது இது போன்று குறுக்கு வழியில் வாங்கி வைத்திருக்கும் சொத்துக்களை பாதுகாக்கவேயன்றி வேறு எதற்குமில்லை என்று. சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கோர்ட் கண்டிக்க, தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு தகுந்த, சாதகமான பதிலினை கூறி நீதியை நிலை நாட்ட வேண்டும். இதற்கு மேலும் தன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் தவறை உணர்ந்து மீண்டும் நிலத்தின் உரிமையாளரிடம் நிலத்தினை ஒப்படைத்தால் உமக்கு ஒரு நன்றி + வாழ்த்துக்கள். அப்படியில்லைனா.கடவுள் பாத்துப்பார்..அதிலிருந்து தப்ப முடியாது. ஒவ்வொரு பலனுக்கு ஒரு பிரதிபலன் உண்டு.

Posted by போவாஸ் | at 11:17 PM | 0 கருத்துக்கள்

மொபைலில் அதிக நேரம் பேசுபவரா? இதை‌ப் படி‌ங்க முதல்ல....

எ‌ந்த நோயு‌ம் வ‌ந்த ‌பிறகு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது எ‌ன்று கூறு‌கிறா‌ர் மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் சா‌‌ர்‌லி டியோ.



ம‌‌‌னித‌ர்க‌ள் த‌ங்களது செ‌ல்போனை ல‌வ்டு‌ஸ்‌பீ‌க்க‌ரி‌ல் வை‌த்து‌ப் பேசுவது‌ம், மை‌க்ரோவேவ‌னி‌ல் வேலை முடி‌ந்தத‌ற்காக ‌பீ‌ப் ஒ‌லி எழு‌ம்‌பிய ‌பிறகு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து ‌திற‌ப்பது‌ம் ந‌ல்லது எ‌ன்று‌ம் நம‌க்கு அ‌றிவுறு‌த்து‌கிறா‌ர் இ‌ந்த புக‌ழ்பெ‌ற்ற மரு‌த்துவ ‌நிபுண‌ர்.


மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் கைரா‌சியான, ‌சி‌ட்‌னியை‌ச் சே‌ர்‌ந்த இ‌ந்த ‌நிபுண‌ர், ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌‌க் கா‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம், அதுபோ‌ன்ற பொரு‌ட்களை ந‌ம்முடனேயே வை‌த்து‌க் கொ‌ண்டு வா‌ழ்‌க்கை‌யி‌ல் இதுபோ‌ன்ற சவாலை யாரு‌ம் ச‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் கூறு‌கிறா‌ர்.


cell

உ‌ங்க‌ள் படு‌க்கை அறை‌யி‌ல் உ‌ள்ள ‌மி‌ன்சாதன‌ங்கள‌் எ‌ல்லா‌ம் தலை‌க்கு அருகே இ‌ல்லாம‌ல், கா‌ல் ப‌க்கமாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் பார‌்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்று கூறு‌கிறா‌ர்.

அதாவது படு‌க்கை அறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌மி‌ன்சார அலரா‌ம் பொரு‌த்‌த‌ப்ப‌ட்ட கடிகார‌ம், ரேடியோ, நை‌ட் லே‌ம்‌ப், ஏ‌சி போ‌ன்றவை. 

அ‌வ்வாறு இ‌ல்லையெ‌னி‌ல், ‌இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ன் இணை‌ப்‌பை‌த் து‌ண்டி‌த்துவ‌ி‌ட்டு படு‌க்கை‌க்கு‌ச் செ‌ல்லு‌ங்க‌ள். அதுபோல மை‌க்ரோவே‌வி‌ல் சமைய‌ல் முடி‌ந்தது‌ம் 5 ‌பீ‌ப் ஒ‌லிக‌ள் வ‌ந்தது‌ம் உ‌ங்க‌ள் கைகளை உ‌ள்ளே‌ ‌‌வி‌‌ட்டு உணவு‌ப் பொரு‌ட்களை எடு‌க்கவு‌ம் எ‌ன்‌‌கிறா‌ர் அவ‌ர்.


மேலு‌ம், செ‌ல்பே‌சிக‌ளி‌ல் ஒரு நபரை அழை‌க்கு‌ம் போது அவ‌ர் இணை‌ப்‌பி‌ற்கு வரு‌ம் வரை செ‌ல்பே‌சியை உ‌ங்க‌ள் காத‌‌ல் இரு‌ந்து ‌சி‌றிது தூர‌ம் நக‌ர்‌த்‌தி வை‌ப்பது‌ம், பொதுவாக ல‌வ்டு ‌ஸ்‌பீ‌க்க‌‌ரி‌ல் பேசுவது‌ம் உ‌ங்க‌ள் மூளையை‌க் கா‌ப்பா‌ற்‌றி‌க் கொ‌ள்ள உதவு‌ம் எ‌ன்‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.



மூளை‌யி‌ல் உ‌ண்டாகு‌ம் க‌ட்டிகளை அ‌க‌ற்று‌ம் அறுவை ‌சி‌கி‌ச்சைகளை வெ‌ற்‌றிகரமாக செ‌ய்து வரு‌ம் டியோ, தலை‌ முடிக்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் ‌சில ‌நிறமூ‌ட்டிகளு‌ம் (டை), கு‌றி‌ப்பாக ‌சிவ‌ப்பு ‌நிற மூ‌ட்டிக‌ள், மூளை‌ப் பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்பட வா‌ய்‌ப்ப‌ளி‌க்‌கிறது எ‌ன்‌கிறா‌ர்.

முடி‌க்கு ‌நிறமூ‌ட்டுபவைக‌ள், செ‌ல்பே‌சிக‌ள் போ‌ன்றவை நேரடியாக மூளையை‌த் தா‌க்‌கி பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்துவ‌தி‌ல் முத‌ன்மையாக செய‌ல்படு‌கி‌ன்றன எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.

ம‌ற்ற பு‌ற்றுநோ‌ய் செ‌ல்களை ‌விட, மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் வேகமாக வள‌ர்‌‌கி‌ன்றன. அதாவது, மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் த‌ங்களது எ‌ண்‌ணி‌க்கையை ஒரு வார‌த்‌தி‌ல் அ‌ல்ல‌து ஒரு மாத‌த்‌தி‌ல் அ‌ப்படியே இர‌ட்டி‌ப்பா‌க்கு‌கி‌ன்றன. ஆனா‌ல் மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் இதனை வெறு‌ம் 16 ம‌ணி நேர‌த்‌தில‌் நட‌த்‌தி‌விடு‌கி‌ன்றன. மேலு‌ம், மூளை‌யி‌ல் க‌ட்டி வளர எ‌ந்த வயது வர‌ம்பு‌ம், வயது‌த் தடையு‌ம் இ‌ல்லை.



முத‌லி‌ல் செ‌ல்பே‌சிக‌ளி‌ல் அலார‌ம் வை‌த்து‌வி‌ட்டு, அதனை தலையணை‌க்கு அடி‌யி‌ல் வை‌த்‌திரு‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை கை‌விடு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.



எவ‌ர் ஒருவ‌ர் 10 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம் மேலாக செ‌ல்பே‌சியை‌ப் பய‌ன்படு‌த்து‌கிறாரோ அவ‌ர்களு‌க்கு மூளை‌யி‌ல் ‌சில பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று‌ம், செ‌ல்பே‌சிகளை ஆ‌ண்க‌ள் த‌ங்களது பெ‌ல்‌ட் அதாவது இடு‌ப்பு‌ப் பகு‌தி‌யி‌ல் வை‌த்‌தி‌ரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படுவதை ஒரு ஆ‌ய்வு க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளதையு‌ம் அவ‌ர் மே‌ற்கோ‌ள் கா‌ட்டினா‌ர்.


த‌ற்போது மூளை‌க் க‌ட்டிகளை அக‌ற்ற ப‌ல்வேறு ‌சி‌கி‌ச்சை முறைக‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. அதாது, மை‌க்ரோவே‌வ் ‌சி‌கி‌ச்சை போ‌ன்றவை நேரடியாக க‌ட்டிக‌‌ள் ‌மீது செலு‌த்த‌ப்ப‌ட்டு அவ‌ற்றை அ‌ழி‌க்கு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. எதுவாக இரு‌ந்தாலு‌ம் ந‌ல்ல உணவு ம‌ற்று‌ம் பழ‌க்க வழ‌க்க‌ங்களா‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்‌திரு‌ப்பதே ‌சிற‌ந்தது. வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே நல‌ம் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் எடு‌த்து‌க் கூ‌று‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ. 

Posted by போவாஸ் | at 6:59 PM | 0 கருத்துக்கள்

இன்டர்நெட் பேனர் விளம்பரத்திற்கு 15 வயசு

இணையத் தளத்தில் உலகின் முதல் பேனர் விளம்பரம் வெளியாகி நேற்றுடன் (அக்டோபர் 27) 15 வருடங்களாகி விட்டது.

1994ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி Hotwired.com என்ற இணையத் தளத்தில் வெளியான பேனர் விளம்பரமே, உலகின் முதல் டிஜிட்டல் விளம்பரமாகும்.

ஹாட்வைர்ட் இணையதளம் ஒரு டிஜிட்டல் வர்த்தக இணையத் தளமாகும். இதுவே உலகின் முதல் டிஜிட்டல் வர்த்தக இணையத் தளமும் கூட, வைர்ட் இதழின் இணையத் தளப் பதிப்பும் ஆகும்.

டிஜிட்டல் விளம்பரம் குறித்து பி அன்ட் ஜி நிறுவனத்தின் தலைவரான எட் அர்ட்ஸ்ட் 1994ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக விழிப்புணர்வுப் பேச்சை நிகழ்த்தினார். டிஜிட்டல் விளம்பரமே இனி வர்த்தக உலகின் புதிய எதிர்காலமாக இருக்கும். அதற்கு அனைவரும் மாற வேண்டும். இல்லாவிட்டால் தனிமைப்படுத்தப்படுவோம் என்று அவர் கூறினார்.

அவரது பேச்சைக் கேட்ட மெஸ்னர் வெட்ரே பெர்ஜர் மெக்நாமி ஸ்மாட்டரர் நிறுவனத்தின் தலைவரான பாப் ஸ்மிட்டரருக்கு புதிய உற்சாகம் பிறந்தது. இதையடுத்து ஒரு விளம்பரத்தை உருவாக்கும் பணியை முடுக்கி விட்டார் பாப்.

இன்டர்நெட்டில் விளம்பரம் என்பது அப்போது புதிது என்பதால் சும்மா போட்டு பார்ப்போம் என்ற எண்ணமே அப்போது பாப் மற்றும் அவரது குழுவினரிடம் இருந்தது.

பின்னர் ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரை இதில் பயன்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே சிலரை அணுகினர். அதன்படி தொலைத் தொடர்பு நிறுவனமான எம்.சி.ஐ, வோல்வோ நிறுவனம், கிளப்மெட், 1-800 கலெக்ட், ஏடி அன்ட் டி, ஜிமா ஆகியவை விளம்பரம் தர முன் வந்தன..

இந்த ஆறு நிறுவனங்களின் பெயர்களையும் வைத்து பேனர் விளம்பரம் தயாரிக்கப்பட்டது. அப்போது இருந்த வெப் பிரவுசர் மொசைக் (பின்னர் நெட்ஸ்கேப் எக்ஸ்புளோரர் வந்து மொசைக்கை விரட்டி விட்டது).

மேலும், இப்போது போல பிராட்பேண்ட்டும் கிடையாது. டயல் அப் மட்டுமே. அதிகபட்ச வேகமே 24.4 கேபிபிஎஸ் தான். அமெரிக்காவில் இன்டர்நெட் வைத்திருந்தவர்கள் எண்ணிக்கை அப்போது 20 லட்சம்தான்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த 6 நிறுவனங்களின் பெயர்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் பேனர் விளம்பரங்கள் இடம் பெற்றன. இன்டர்நெட்டில் இடம் பெற்ற உலகின் முதல் விளம்பரங்கள் என்ற பெருமையை இந்த ஆறு நிறுவனங்களின் பெயர்களும் பெற்றன. 

இந்த பேனர் விளம்பரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே சோதனை ரீதியாக வெளியிடப்பட்ட இந்த பேனர் விளம்பரங்கள், உலகின் முதல் டிஜிட்டல் விளம்பரம் ஒரு வழியாக வெற்றி பெற்றது- பின்னர் நடந்தது வரலாறு.

வோல்வோ நிறுவனம் இந்த விளம்பர வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தது. இருப்பினும் விளம்பரத்தை கிளிக் செய்து வாடிக்கையாளர்கள் தங்களை அணுகுவதை அது விரும்பவில்லை.

அதற்கு சுவாரஸ்யமான காரணம் இருந்தது- முதலில் ஆன்லைன் மூலம் தங்களை அணுகும் வாடிக்கையாளர்ளை எப்படி கையாளுவது என்பது குறித்து அதற்குத் தெரியாமல் இருந்தது.

2வது, சட்ட ரீதியான பிரச்சினைகள் வந்து விடுமோ என்ற குழப்பம் ஒரு பக்கம். இதனால் விளம்பரத்தை கிளிக் செய்து பார்க்கும்படியாக அதை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது வோலவோ.

எனவே வோல்வோ நிறுவனத்தின் லோகோ மற்றும் ஒரு வாகனத்தின்படம் மட்டுமே அந்த பேனர் விளம்பரத்தில் இடம் பெற்றதாம்.

இருப்பினும் அப்படியே விட்டால் நலமாக இருக்காது என்று எண்ணிய பாப் குழுவினர், வோல்வோ பேனரை கிளிக் செய்து உள்ளே போன பின்னர் ஒரு கொஸ்டினர் வருவது போல வடிவமைத்திருந்தனர். அதில் உங்களுக்கு எந்த வோல்வகார்  பிடிக்கும் என்ற கேள்வியைக் கேட்டிருந்தனர்.

இப்படி விளையாட்டு போல ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் விளம்பரம் இன்று எப்படி உள்ளது?. இன்றைய டிஜிட்டல் விளம்பர வர்த்தகத்தின் மதிப்பு 24 பில்லியன் டாலர்களாம்!

Posted by போவாஸ் | at 6:30 PM | 0 கருத்துக்கள்

ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த நோக்கியா



ஐ போன் மென்பொருள் பயன்படுத்தலில் காப்புரிமை மீறப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது மொபைல் தயாரிப்பில் முன்னோடியான நோக்கியா. 

ஐபோனில் ஜிஎஸ்எம், யுஎம்டிஎஸ் மற்றும் லோக்கல் ஏரியா நெட்வொர்க் (லான்) போன்ற தொழில் நுட்பப் பயன்பாட்டில் நோக்கியா தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது அப்பட்டமான காப்புரிமை மீறல் என்றும் நோக்கியா தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் ஆப்பிள் போனில் உள்ள வயர்லெஸ் டேட்டா, ஸ்பீச் கோடிங், செக்யூரிட்டி உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களிலும் நோக்கியா தொழில் நுட்பமே உள்ளதாகவும், இதுகுறித்து தங்களுக்கும் ஆப்பிளுக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை, இது அப்பட்டமான காப்புரிமை மீறல் என்றும் நோக்கியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் டிலெவர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்துள்ள ஆப்பிள் பதில் நடவடிக்கை  குறித்து ஆலோசித்து வருவதாக அறிவித்துள்ளது.

Posted by போவாஸ் | at 11:59 AM | 0 கருத்துக்கள்

மொட்டை அடித்து பெண் சித்ரவதை



கோவையில், குடும்பத் தகராறில் மனைவியை சித்ரவதை செய்து, மொட்டை அடித்து அவமானப்படுத்திய கணவர், உடந்தையாக இருந்த மாமியார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான நாத்தனாரை போலீசார் தேடுகின்றனர்.
Important incidents and happenings in and around the world

கோவை, கோட்டைமேடு, சாமராவ் வீதியில் வசிப்பவர் இப்ராகிம்ஷா(35); ரெடிமேடு ஆடை விற்பனை மையம் வைத்துள்ளார். இவரது மனைவி நதீரா பானு(26). இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம்.


சில நாட்களுக்கு முன், இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், நதீராபானு கோபித்துக் கொண்டு, உக்கடம் சுப்ரமணியசுவாமி கோவில் வீதியில் வசிக்கும் பெற்றோரிடம் சென்று விட்டார். ஜமாத்தில் நடந்த சமரசத்துக்குப் பின் நதீராபானு, மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார்.


நேற்று முன்தினம் இரவு, இவர்களது குழந்தைகள் மூவரும் சுப்பிரமணியசுவாமி கோவில் வீதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றனர். அம்மா எங்கே இரண்டு நாட்களாக வெளியில் வரவில்லை என கேட்டதற்கு, பதிலளித்த குழந்தைகள், அப்பா, சித்தப்பா, அத்தை மற்றும் பாட்டி ஆகியோர் அம்மாவுக்கு மொட்டை அடித்து விட்டனர். அதனால் வெளியில் வரவில்லை என சோகத்துடன் தெரிவித்தனர்.


குழந்தைகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நதிராபானுவின் பெற்றோர், உக்கடம் போலீசில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமச்சந்திரன் விசாரித்ததில், "இப்ராகிம்ஷாவின் தங்கை ஆமீனாவின் பேச்சை கேட்டு, நதிராபானுவின், நீளமான தலைமுடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு நதீரா மறுப்பு தெரிவித்துள்ளார்.


ஆமினா வற்புறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று, வலுக்கட்டாயமாக நதீராபானு மொட்டை அடிக்கப்பட்டார். இதற்கு இப்ராகிம்ஷாவின் தம்பி பைரோஷ், மாமியார் சரீபா(55) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளது தெரிந்தது.


இதைத் தொடர்ந்து, நதீராபானுவுக்கு வலுக்கட்டாயமாக மொட்டையடித்த, கணவர் இப்ராகிம்ஷா, இவரது தம்பி பைரோஷ், மாமியார் சரீபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இக்கொடுமைக்கு தூபம் போட்ட நாத்தனார் ஆமினா தலைமறைவாகி விட்டார்.


கைது செய்யப்பட்ட மூவர் மீதும், குடும்பப் பெண்கள் வன்கொடுமை சட்டம், மானபங்கப்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


கணவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து மனைவியை மொட்டை அடித்து, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது



நன்றி : தினமலர் 


குடும்பத்தில் பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். அதற்காக பெண்ணைக் கொடுமைப்படுத்தி மொட்டையடிப்பது கீழ்த்தரமான எண்ணங்கொண்ட மனிதர்களின் செயல். காவல்துறையும், சட்டமும் குற்றம் செய்தோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். குறிப்பாக ஜாமீன் வழங்கக் கூடாது. அவர்களுக்கு எந்த ஒரு வக்கீலும் வாதாடக் கூடாது. முக்கியமாக இப்படி ஒரு மனிதாபிமானமில்லாத குற்றம் புரிந்த நபர்கள் முஸ்லிம் மதத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். குறைந்த பட்சம் ஜமாத்திலிருந்தாவது நீக்கவேண்டும்.

Posted by போவாஸ் | at 12:10 PM | 1 கருத்துக்கள்

உங்க பிளாகின் மதிப்பு எவ்வளவு?

உங்க பிளாகின் மதிப்பு எவ்வளவு ?. 
சராசரியா தினமும் உங்க பிளாக்குக்கு எத்தனை பேரு வந்துட்டு போறாங்க ?. 
எத்தனை பேரு பாக்குறாங்க ?. 
உலகில் உள்ள இணையதளத்தினில் உங்க பிளாக்கு எத்தனையாவது ரேங்க்?. 
இந்தியா அளவுல எத்தனையாவது ரேங்க் ?  
............தெரிந்து கொள்ள ஆசையா ?. 
வாங்க ஒரு நொடியில தெரிஞ்சுக்கலாம்.


http://www.bizinformation.org அப்படிங்குற இணையதளத்திற்கு போங்க.  
முதல் & முகப்பு பக்கம் வந்ததும். அதுல address bar மாதிரி இருக்கறதுல, நீங்க எந்த இணையதளத்தின் விவரங்களை தெரிஞ்ச்ய்கனுமோ, அதோட இணையதள முகவரியை கொடுத்து, வழக்கம்போல ENTER Keyயை தட்டவும்.  



இப்போ இரண்டாம் பக்கம் லோட் ஆகி வரும். அதில் நீங்கள் எதிர்பார்த்த விவரங்கள் கிடைக்கும்.



உங்கள் பிளாகின் மதிப்பு குறித்த விவரங்களை உங்கள பிலாகினிலும் Gadegetஆக இணைத்துக் கொள்ளலாம்.
நம்ம பிளாக் மட்டுமல்ல, நாம அன்றாடம் போய் படிக்கிற, பார்க்குற இணையதளங்கள் மதிப்பும் தெரிஞ்சுக்கலாம்.

Posted by போவாஸ் | at 3:09 AM | 0 கருத்துக்கள்

நகைச்சுவை துணுக்குகள்

எ‌ன்ன‌ங்க சா‌ர் இது.
ஏ‌ன் எ‌ன்ன ஆ‌ச்சு.
உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் பிராந்தி குடிக்கறானே
சீ! சீ! அவனுக்கு முன்னாடியே நான் குடிக்க ஆரம்பிச்சுட்டேன். அவ‌ன் இ‌ப்போ‌த்தா‌ன் ஆர‌ம்‌பி‌ச்‌சி‌யிரு‌க்கா‌ன்.

என் பையன் 420 மார்க் எடுத்ததுனால என‌க்கு தெ‌ரி‌‌‌ஞ்சவ‌ங்க ‌கி‌ட்ட எ‌ல்லா‌ம் போ‌ய் ‌சீ‌ட் கே‌ட்க வே‌ண்டிய ‌நிலைமை ஆ‌யிடு‌ச்சு.
என்ன சார் 420 மார்க்குக்கு கேக்கற குரூப் கொடுப்பாங்களே! ஆமா‌ம்.. 10வ‌தி‌ல் எடு‌த்‌திரு‌ந்தா பரவா‌யி‌ல்லை. இவ‌ன் ‌தா‌ன் ‌பிள‌்‌ஸ்டூ வா‌ச்சே.

உன் பையனுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுவியே இப்ப என்ன பண்றான்?
தொலைதூர‌க் க‌ல்‌வி வ‌ழியா பி.ஏ. படிக்கிறான்!

ஆ‌சி‌ரிய‌ர் : வான் கோழி முட்டை போடு‌‌ற பறவை இன‌ம்
மாணவ‌ன் : அ‌ப்போது அது உ‌ங்க இன‌ம்னு சொ‌ல்லு‌ங்க..
ஆ‌சி‌ரிய‌ர் : ‌‌எ‌ப்படிடா?
மாணவ‌‌ன் : நீ‌ங்க‌ளு‌ம் மு‌ட்டைதானே போடு‌‌றீ‌ங்க.

நா‌ன் எழு‌தின கதை எ‌ப்படி இரு‌க்கு?
ரொம்ப சுமாராத்தான் இருக்கு உப்பு சப்பே இல்ல!
கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது.

திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?.

அண்ணாச்சி கடையில போய் திருடணும்னா உனக்கு என்ன தைரியம்?
எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில எடுத்துக்கோன்னு அவங்கதான எசமான் விளம்பரம் செஞ்சாங்க!

"அந்த பொண்ணு அவன் கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினானே.. இப்ப என்னாச்சு தெரியுமா...?"
"
என்னாச்சு?"
"
பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான்..."

என்ன உன்னோட லவர் கிட்ட அடி வாங்கிட்டேன்னு கேள்விபட்டேன்?
அத ஏன் கேக்கற! இந்த டிரஸ்ல நான் நல்லா இருக்கேனான்னு கேட்டா. இந்த டிரஸ் இல்லாமையும் நல்லா இருப்பன்னு சொன்னேன், தப்பா எடுத்துக்கிட்டா!

நல்லா ஓவர் போடுவாரே அவர் இன்னிக்கு ஆடலியா?
ஓவரா போட்டுட்டுப் படுத்துட்டாராம்.

Posted by போவாஸ் | at 6:27 PM | 0 கருத்துக்கள்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு

அடுத்த ஆண்டு கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழ்த் திரையுலகம் முழு ஆதரவு அளிக்கும் என திரையுலக அமைப்புகள் தெரிவித்துள்ளன.


இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் சார்பாக ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதன் விவரம்:

உலகத் தமிழ் மாநாடு பல காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்று தமிழுக்குப் புத்துணர்ச்சி அளித்து வந்துள்ளது. ஆனால் தமிழ் மொழி "செம்மொழி' ஆன பிறகு, 2010-ம் ஆண்டு ஜூன் 24 முதல் 27 வரை கோவையில் நடைபெறவுள்ள "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' சரித்திரத்தில் சாதனையாகப் போற்றக்கூடிய நிகழ்வாகும்.

இந்த மாநாட்டை தமிழ்த் திரையுலகமே திரண்டு வரவேற்கிறது. மாநாடு தொடர்பாக முதல்வர் கருணாநிதியும், அரசும் இடும் பணிகளை எழுச்சியோடும், உணர்வுப்பூர்வமாகவும் செய்ய தமிழ்த் திரையுலகம் தயாராக இருக்கிறது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கலை மற்றும் இலக்கியம் சம்பந்தப்பட்ட பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகளைச் சிறப்புற செய்வதற்கு தமிழ்த் திரையுலகம் ஆர்வமுடன் உள்ளது.

இந்த விவரங்களை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ராம.நாராயணன், நடிகர் சங்கம் சார்பாக ராதாரவி, பெப்ஸி அமைப்பு சார்பாக வி.சி.குகநாதன், விநியோகஸ்தர் சங்கம் சார்பாக கலைப்புலி ஜி.சேகரன், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பாக அபிராமி ராமநாதன், தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பாக பன்னீர்செல்வம், திரைப்பட மக்கள் தொடர்பு சங்கம் சார்பாக விஜயமுரளி ஆகியோர் தெரிவித்தனர்.
நன்றி: தினமணி

Posted by போவாஸ் | at 5:34 PM | 1 கருத்துக்கள்

காதல் வைரஸ் : சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்


ந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து தொலைத்தவர்களும் உண்டு.


ஆனால் காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும். அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள்.

உங்கள் காதலைப் பற்றி உங்களுக்கு எப்போது அதீத நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான் நீங்கள் அதனை கூறுவீர்கள். அப்படி வரும்வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

அவரும் நம்மை காதலிக்கிறார் என்று தெரிந்து கூறும் காதலும் உண்டு, நாம் காதலை உணர்த்தியப் பிறகே அவருக்கு நம் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்ற வகையும் உண்டு.

கல்லை எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும் என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும்.

உங்களுக்கு இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தை சாதாரண நண்பர்கள் போலவா அல்லது நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கிறதா என்பதை அலச வேண்டும்.



சாதாரண நண்பர்கள் போல் என்றால் நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்து உங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது.


நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள்.

சரியான நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல் ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி கப் தான் கையில் மிஞ்சும்.

Posted by போவாஸ் | at 5:28 PM | 0 கருத்துக்கள்

வேட்டையாடப்படும் வேட்டைக்காரன்






இப்படி ஆப்பு வச்சிட்டாங்களே.
நாம கொஞ்சம் ஓவராதான் போய்ட்டோமோ..?
எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப்படமான "வேட்டைக்காரன்' என்கிற தலைப்பால் ஈர்க்கப்பட்டோ அல்லது கற்பனை வறட்சியால் பீடிக்கப்பட்டோ அதே தலைப்பிலேயே தற்போது இன்னொரு படம் தயாராகியுள்ளது.

வேடிக்கை என்னவென்றால்,   எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் தலைப்பில் உருவான "அன்பே வா', "நாடோடி மன்னன்', "ரகசிய போலீஸ் 115', "நம் நாடு', "நாளை நமதே' உள்ளிட்ட எந்தத் திரைப்படமுமே இதுவரை வெற்றி பெற்றதில்லை. பரத் நடிப்பில் "எங்க வீட்டு பிள்ளை' என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட படமும் நின்றுவிட்டது. செல்வராகவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட "ஆயிரத்தில் ஒருவன்' படம் இரண்டு வருடங்களாகியும் இன்னும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் புதிய "வேட்டைக்காரன்' படத்தை பாரம்பரியம் மிக்க ஏவி.எம். நிறுவனம் சார்பாக ஏவி.எம்.பாலசுப்ரமணியனும் பி.குருநாத்தும் தயாரிக்க, நடிகர் விஜய் நடித்திருக்கிறார்.

அவரோடு, தெலுங்கின் முன்னணி நடிகை அனுஷ்கா கை கோர்த்திருக்கிறார் கதாநாயகியாக! வியாபார ரீதியான இயக்குநர் தரணியின் உதவியாளர் பாபு சிவன் இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

ஆக, ஒரு கமர்ஷியல் திரைப்பட கூட்டணியின் பின்புலத்தோடு கடந்த ஆண்டு இறுதியில் "வேட்டைக்காரன்' வெற்றிக் கனவோடு பயணிக்கத் தொடங்கினான்.

கடந்த இரண்டு வருடங்களாக, அவ்வப்போது தனது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி, மன்றத்துக்கென தனிக்கொடி, இயக்கம், இலச்சினை (ப்ர்ஞ்ர்)  உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் விஜய்யின் இந்தப் பயணத்தை அரசியலில் வெற்றிக் கூட்டணி அமைத்து வருபவர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர்.

சுமார் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக எதிர்பாராத அறிவிப்பு வந்தது.

பொதுவாக, எந்த நிறுவனம் தயாரித்த படமாக இருந்தாலும் அதை தங்களது விளம்பர சக்தியைக் காட்டி மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதே சன் பிக்சர்ஸின் வழக்கம் எனக் கூறப்படுவதுண்டு. அப்படிப்பட்ட படங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பெறாவிட்டாலும் கூட சன் டி.வி.யின் "டாப் டென்' பட வரிசையில் முதலிடம் பெற்றுவிடும்.

படத்தைத் தயாரித்து வியாபாரம் செய்ய முடியாமலோ அல்லது பணம் குறைந்தால் கூட பரவாயில்லை; நல்ல விளம்பரம் கிடைக்கும்; அதை வைத்து அடுத்த படத்தில் காலூன்றிவிடலாம் என நினைப்போர் தங்களது படங்களை "சன்' வசம் தருவதாகவும் பேச்சு உண்டு.

விளம்பரங்களில் ஏவி.எம்.மின் "வேட்டைக்காரன்', இளைய தளபதியின் "வேட்டைக்காரன்' என்றெல்லாம் பயன்படுத்த முடியாது; சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் "வேட்டைக்காரன்' என்றுதான் வரும். அதனால் வேட்டைக்காரனாக இருந்துகொண்டு சன் பிக்சர்ஸ் கூண்டில் அடைபடுவதை விஜய் தரப்பும் தயாரிப்பு தரப்பும் ஆரம்பத்தில் விரும்பவில்லை என்றே அவர்களது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சன் பிக்சர்ஸ் வசம் படம் போய்விட்டால் தங்களுக்கு சென்னை ஏரியா விநியோக உரிமை கிடைக்காது என்பதும் விஜய் வட்டாரத்தில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் என்ன காரணத்தாலோ, வேறு வழியில்லாமல் வேட்டைக்காரனே வலையில் சிக்கிக்கொண்டான். படம் சன் பிக்சர்ஸ் வசம் மாறியது, விஜய் தரப்பே எதிர்பார்க்காத... குறிப்பாக, அறியாத ஒன்று எனவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதற்கிடையில் சில நல விரும்பிகள் மூலம் தில்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியையும் சந்தித்துவிட்டு வந்தார். உடனே காங்கிரஸில் சேரப் போகிறார்; இளைஞரணித் தலைவர் ஆகப்போகிறார் போன்ற ரீதியில் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் செய்தியாளர்களை திடீரென அழைத்து "எனக்கு எல்லாமே சினிமாதான்; "வேட்டைக்காரன்' படம்தான் என் தற்போதைய இலக்கு. இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன்' என திடீரெனப் பின்வாங்கினார் நடிகர் விஜய்.

அவராகப் பின்வாங்கவில்லை; சில சக்திகளும் சூழ்நிலைகளும்தான் அவரை அப்படிப் பேசச் செய்தன என்று கூறியவர்களும் உண்டு.

விஜய்யும் அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்தது போல, தில்லி காங்கிரஸ் வட்டாரங்களில் அவருக்கு வரவேற்பு இருக்கவில்லை என்று தெரிகிறது. தனது தந்தைக்கு மத்திய அமைச்சர் பதவி, தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பதவி, தனது ரசிகர் மன்றத்தினருக்கு வட்ட, மாவட்ட, மாநில அளவில் கட்சிப் பதவிகள் என்றெல்லாம் கனவுகள் கண்ட நடிகர் விஜய், காங்கிரஸ் மேலிடத்தின் "ஆகட்டும் பார்க்கலாம்' நமுட்டுச் சிரிப்பைப் பார்த்ததும் தகர்ந்தன. அதிகபட்சம் நடிகர் விஜய் மாநிலங்களவை உறுப்பினராக்கப் படலாம் என்பதுதான் காங்கிரஸ் தரப்பில் வாக்குறுதியாக இருந்ததாம்.

அது ஒரு புறம் இருக்க, "இளைய தளபதி'யின் அரசியல் ஆசையும், காங்கிரஸில் இணைந்து கட்சியை பலப்படுத்தும் முயற்சியும் ஆளும் திமுக தரப்பை எரிச்சலூட்டியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

அதையடுத்து உருவான அரசியல் திட்டமே "உறவாடிக் கெடு' ப்ராஜெக்ட். அதன் முன்னோட்டம்தான் "வேட்டைக்காரன்' படம் கைப்பற்றப்பட்டதன் பின்னணி என்கிறார்கள்.

தீபாவளிக்கு வர வேண்டிய படம் வெளிவரவில்லை. இதற்கு துணை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த "ஆதவன்' படம்தான் காரணம். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கக் காரணமாக இருந்த காரணிகளைக் காலமும் பணமும் மாற்றிவிட்ட சூழ்நிலை நிலவுவதால் வேட்டைக்காரனும் ஆதவனும் ஓரிடத்துப் பிள்ளைகளாகிவிட்டனர். அதனால் தீபாவளிக்கு "ஆதவன்' அதன் பிறகு "வேட்டைக்காரன்' என முடிவு செய்யப்பட்டது.

விஜய்யின் முந்தைய பட வெளியீடுகளின்போது இருந்த அவருடைய தலையீடு முதல்முறையாகத் தகர்ந்தது. "வேட்டைக்காரன்' வெளிவராமல் தள்ளிப் போவதால், அடுத்த படத்தின் தயாரிப்பும், ரிலீசும் தள்ளிப் போகும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று "வேட்டைக்காரன்' தள்ளித் தள்ளிப் போகிறதே என்கிற கவலையில் "விஜய்' வட்டாரம் நிலைகுலைந்து போயிருக்கிறதே... சினிமாவைப் பொருத்தவரை ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தானுங்களே..!




Posted by போவாஸ் | at 3:38 PM | 0 கருத்துக்கள்

காஞ்சி ஜெயேந்திரர் தாமாஷ் அட்வைஸ்

இன்றைய திமனலரில் வெளியான செய்தி ஒன்று. படித்து பார்த்து சிரிப்பு கலந்த ஆத்திரம்தான் வந்தது. சிரிப்பு வந்தது செய்தியை படித்து, ஆத்திரம் வந்தது தினமலரை நினைத்து.
சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீது தாக்குதல் வழக்கு, பாலியல் குற்றச்சாட்டு, மோசடி போன்ற பல வழக்க்குகளில் குற்றச்சாட்டப்பட்டு கொஞ்ச நாள் ஜெயிலுக்குள்ளே இருந்துட்டு வந்த காஞ்சி ஜெயேந்திரர் தான் மனித நேயத்தையும், நற்பண்புகளையும் பற்றி தாமாஷ் அட்வைஸ் பண்ணியிருக்கிறார். நீங்களும் படியுங்கள்.
" சமுதாயத்தில் இன்று நிறைய பக்தி வளர்ந்து வருகிறது. நல்ல பண்புகள் குறைந்து வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும், பள்ளிகளிலும் நற்பண்புகளை வளர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். குழந்தை பருவத்தில் நல்ல பண்புகளை வளர்த்தால் தான் பெரியவர்களாகியும் நிற்கும். மனித வாழ்க்கையில் இரு கண்கள் தேவை. ஒரு கண் பக்தி. இரண்டாவது கண் நற்பண்புகள். நற்பண்புகள் வளர்ந்தால்தான் மனித வாழ்வு அமைதி, சாந்தி, சந்தோஷம் மிக்கதாகும்.


General India news in detail
ஐந்தாண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் மழை வேண்டி பூஜை நடத்தப் பட்டது. அப்போது அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது திருநாவுக்கரசர் மழை வேண்டி பாடிய பதிகத்தை மக்களை படிக்க செய்ய வேண்டும். இயற்கை மாற்றங்கள் விரைவில் சரியாகும், என்றார். பிறகு அவர் சங்கரன் கோவில் புறப்பட்டு சென்றார். நாளை மீண்டும் மதுரை வரும் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்".
அட்வைஸ் பன்றதுக்கு ஒரு அருகதை வேண்டும். சமுதாயத்தில் இவருக்கு இருந்த மதிப்பு, மரியாதை, அருகதையை என்றோ இவர் இழந்துவிட்டார். இன்னும் இவருக்கு கூஜா தூக்கி கொண்டு ஜால்ரா அடித்து கொண்டு இருக்கும் நபர்களை நினைத்தும், இப்படிப்பட்ட ஒரு ஆளை தலயில் தூக்கி வைத்து ஆடி, செய்திகளை பிரசுரித்து தான் பார்பன பத்திரிகை என்று மார்தட்டும் தினமலரையும் நினைத்தால் ஆத்திரம்தான் வருகிறது.

Posted by போவாஸ் | at 1:45 PM | 0 கருத்துக்கள்

நகைச்சுவை துணுக்குகள்

என் காதலருக்கு குறும்பு ஜாஸ்தி.
எப்படி சொல்ற?
உங்களையே நினைச்சு உருகிக்கிட்டிருக்கேன்'னு சொன்னதுக்கு, எத்தன டிகிரி செல்சியஸ்லனு கேக்குறாரு
எங்க ஆபிஸ் மேனேஜருக்கு குழந்தை மனசு

எப்படிச் சொல்ற?

என் மடியில படுத்துதான் தூங்குவார்.
என்ன உன் கணவர் தூக்கதுல 'ஹலோ.. ஹலோ..'ன்னு டெலிபோன்ல பேசறது மாதிரி பேசறாரு?.
நான்தான் சொன்னேனே, அவருக்கு தூக்கத்துல 'கால்' போட்ற பழக்கம் இருக்குன்னு.
நண்பர் 1: எப்பவும் 'காப்பி' அடிச்சே பாச பண்ணுவானே, உன் பிரண்டு..இப்ப என்ன பண்றான்?.
நண்பர் 2: ஒரு பத்திர்க்கை ஆபிசில 'காப்பி' ரைட்டரா இருக்கான்.

நண்பர் 1: டேய் நீ வெப்சைட் வெச்சிருக்கியா..?
நண்பர் 2: இல்லடா.. பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன்

அமலா : என்னது உன் கணவரை அந்த பிரபலமான பாகவதர் கச்சேரிக்கு கூப்பிட்டாரா ஆச்சரியமா இருக்கே!
விமலா : இதுல என்ன ஆச்சரியம் அவர் எனக்கு போட்ற ஜால்ராவ பாத்துட்டு அந்த பாகவதர் ஜால்ரா தட்ட கூப்பிட்டிருக்கார்.

நண்பர் 1 : சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?
நண்பர் 2 : கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்.

என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே?
பின்ன நீ செஞ்சு வச்ச பலகார‌த்தை எ‌ல்லா‌ம் சா‌ப்‌பிட‌ணு‌ம்னா வேற எ‌ன்ன ப‌‌ண்றது சொ‌ல்லு?

நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...
வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

ராமு : நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என் வீடு ?
சோமு : ம் .. .. .. உங்க வீடா ?

Posted by போவாஸ் | at 7:13 PM | 1 கருத்துக்கள்

Related Posts with Thumbnails