108 ஆண்டுகளுக்கு பின் தெரியும் அதிசய கங்கண சூரிய கிரகணம்

வருகிற 2010 ஜனவரி மாதம் 2 கிரகணங்கள் நிகழ உள்ளன. ஒன்று ஜனவரி முதல்நாளான புத்தாண்டு அன்று நிகழ உள்ள சந்திரகிரகணம், 2-வது ஜனவரி 15-ந்தேதி நிகழ உள்ள சூரியகிரகணம்.
இந்த சூரியகிரகணம் 108 ஆண்டுகளுக்கு பிறகு வரக்கூடிய ஒரு கங்கண சூரிய கிரகணம் ஆகும். தமிழகத்தில் பல பகுதிகளில் இதை காணமுடியும்.
வருகிற ஜனவரி மாதம் பார்க்கலாம்: 
 
 108 ஆண்டுகளுக்கு பின் தெரியும் அதிசய கங்கண சூரிய கிரகணம்-
 
...
புவியை நிலவு நீள்வட்ட பாதையில் சுற்றிவருகிறது.இதனால் புவிக்கு அருகே வரும்போது 3,57,200 கிலோ மீட்டர் தூரத்திலும் புவியை விட்டு வெளியில் செல்கையில் 4,07,100 கிலோ மீட்டர் தொலைவிலும் சுற்றிலும் நிலவு இருக்கும். தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்ற அளவு சற்று சிறியதாக இருக்கும்.

எனவே புவியை விட்டு விலகி செல்கையில் ஒரு சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழு மையாக மறைக்க முடியாது. அதிகபட்ச கிரகணத்தின் போது சூரியனின் வெளி விளிம்பு ஒரு கங்கணம்போல வட்டமாக ஒளியுடன் தெரியும். இதுவே கங்கண சூரிய கிரகணம் எனப்படும்.

1901 ஆம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி கங்கண சூரிய கிரகணம் தமிழகத்தில் தெரிந்தது. 108 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜனவரி 15-ந் தேதி மீண்டும் சூரிய கிரகணம் தெரிய உள்ளது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரியிலும், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியிலும் சந்திரனின் நிகழ்வின் மையப்பகுதிக்கு அருகில் இருப்பதால் அங்கு அதிகபட்ச சூரிய கிரகணத்தின்போது ஓரளவு வட்டமான வளைய வடிவில் சூரியன் தோன்றும், மேலும் கங்கண சூரிய கிரகணம் நிகழும்கால அளவு அதிகமாக இருக்கும்.

கன்னியாகுமரியில் கங்கண சூரிய கிரகணத்தை காண்பதற்கான விசேஷ ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கலை செல்வன், சுற்றுலா அதிகாரி அரிராதா கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், ஆர்.டி.ஓ.நடராஜன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ நிருபர் களிடம் கூறியதாவது:


108 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தெரியும் கங்கண சூரிய கிரகணம் கன்னியா குமரியில் காலை 11.04 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 3.05 மணிவரை கிரகணம்தெரியும். 1.14 மணிக்கு அதிகபட்ச கிரகணம் நிகழும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது , அவ்வாறு பார்த்தால் கண்களில் பாதிப்பு ஏற்படும். கண் பார்வை கூட இழக்கலாம்.

எனவே தகுந்த அறிவியல் முறைப்படி சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கன்னியாகுமரியில் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு தமிழ்நாடு சயின்ஸ் அண்ட்டெக்னாலஜி உதவியுடன் கண் கண்ணாடிகள் மூலமாகவும், திரைகள் மூலமாகவும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்க ஏற்பாடு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம், கேரளதவிர இந்தியாவின் பிறபகுதிகளில் இது பகுதி அளவில் சூரிய கிரகணமாக தெரியும். அவர்கள் சூரியனின் ஒரு பாதியை சந்திரன் மறைப்பதுபோல் இருப்பதை காண்பார்கள். சென்னையில் கிரகணத்தின் போதுசுமார் 88.5 விழுக்காடு வரை சூரியன் மறைக்கப்படும்.

Posted by போவாஸ் | at 8:26 PM | 0 கருத்துக்கள்

இந்தியாவில் மட்டமான எதிர்க் கட்சிகள் - முதலிடம் அதிமுகவுக்கு.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத வகையில் செயலிழந்து போயுள்ளன அல்லது சிதறிப் போய்க் கிடக்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆளுங்கட்களின் செயல்பாடுகள் கேட்க நாதியில்லாமல் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


உட்கட்சிப் பூசல், கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் ஏற்படும் சிரமங்கள், ஆளுங்கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகளுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை தலைவர் பித்யூத் சக்ரவர்த்தி கூறுகையில், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் முழுமையாக சிதறிப் போய்க் கிடக்கின்றன. 


மத்தியிலும் கூட இதே நிலைதான். எதிர்க்கட்சி என்பது அரசைக் கட்டுப்படுத்துவதில், கண்காணிப்பதில் கடிவாளம் போல இருக்கும் என்ற தோற்றம் தற்போது மறைந்து விட்டது. மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி எதிர்க்கட்சிகள் செயலிழந்து போய்க் கிடக்கின்றன.


மத்தியப் பிரதேசத்தில், 2வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் திறமையாக செயல்பட வேண்டிய காங்கிரஸ் அங்கு உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிப்பதால் எதிர்க்கட்சியாக அதன் செயல்பாடு பூஜ்யமாக உள்ளது.


ராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கு நிகராக எதிர்க்கட்சியான பாஜக இல்லை. தேங்கிப் போய்க் கிடக்கிறது பாஜக.


தமிழகத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கு கிட்டத்தட்ட எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு தோற்றம் அளிக்கிறது. வழக்கமான முறையிலான எதிர்ப்புகளையோ அல்லது போராட்டங்களையோ, அரசின் மீதான விமர்சனங்களோ கூட இங்கு கேட்பதில்லை. அடுத்து வரப் போகும் சட்டசபைத் தேர்தல் குறித்தும், இடைத் தேர்தல் குறித்தும், கூட்டணிகள் குறித்துமே அத்தனை பேரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


கடந்த ஆறு மாதங்களாகவே முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவர் சென்னையில் இல்லை. சமீபத்தில்தான் அவர் கொடநாடு போய் திரும்பி வந்தார்.


பிரதான எதிர்க்கட்சியின் செயல்பாடு கடந்த ஆறு மாதங்களாக இல்லாததால் திமுக அரசின் செயல்பாடு எந்தவிதத்திலும் பாதிப்பை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. மேலும் வெற்று அறிக்கைகள் மூலம் மட்டுமே அரசை விமர்சித்து வரும் ஜெயலலிதாவால் ஆளும் கட்சி்க்கு எந்த நெருக்கடியும் இல்லை.


இதேபோல கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் முறையே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை திறமையான எதிர்க்கட்சிகளாக செயல்படாத நிலை காணப்படுகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், இன்னும் முழுமையான எதிர்க்கட்சியாக செயல்படாமலேயே உள்ளது என்றார் சக்ரவர்த்தி.


அதேசமயம், மேற்கு வங்கம், உ.பி ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்களின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக உள்ளன. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் அரசின் தவறுகளை விமர்சிப்பதற்குப் பதில், வளர்ச்சி நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் செயல்படுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


அதேபோலத்தான் உ.பியில் சமாஜ்வாடிக் கட்சி ஆக்கப்பூர்வமாக செயல்படாமல், வளர்ச்சி நடவடிக்கைகளே செயல்படாத வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.


மேற்கு வங்க அரசு எதைச் செய்தாலும் அதைக் கடுமையாக எதிர்க்கிறார் மமதா பானர்ஜி. இதனால் அங்கு வளர்ச்சி நடவடிக்கைள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.


இந்தியாவிலேயே உருப்படியான எதிர்க்கட்சி உள்ள மாநிலம் எது என்றால் ஜம்மு காஷ்மீரைத்தான் சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். அங்கு மெஹபூபா முக்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தேவையில்லாத பிரச்சினகைளுக்கெல்லாம் போராட்டம் நடத்தாமல், மக்கள் விரோத நடவடிக்கைகளை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்து வருகிறது.


தீவிரவாத மனப்போக்குள்ளவர்களையும், தேசியத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களையும் அனுசரித்து நடந்து கொள்கிறது மக்கள் ஜனநாயகக் கட்சி. இன்னும் சொல்லப் போனால் தீவிரவாத மனப்போக்குள்ளவர்களை மாற்றி தேசியத்திற்கு அது அழைத்து வரும் பணியையும் கூடவே செய்கிறது.


மக்கள் ஜனநாயகக் கட்சி எப்போதும் விழிப்புடன் இருப்பதால் ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி தவறுகள் செய்யாமல் தவிர்ப்பதில் அக்கறையுடன் உள்ளது. இப்படி ஆளுங்கட்சி தனது பணியில் கவனத்துடன் இருப்பதாலும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆளுங்கட்சியை தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் அங்கு தவறுகள் நடப்பது வெகுவாக குறைந்துள்ளது. 


கடந்த 2002ம் ஆண்டிலிருந்தே ஜம்மு காஷ்மீரில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.


நன்றி:தட்ஸ்தமிழ்


தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த செய்தி மற்றும் திரு சக்கரவர்த்தி அவர்களின் இந்த அறிக்கை முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. தமிழ்நாட்டில் முக்கிய எதிர்கட்சியான அதிமுக வின் செயல்பாடு எப்படி இருக்கிறது?. ஒரு ஆக்கப்பூர்வமான மக்கள் நலன் கருதும் எதிர்கட்சியாகவே இல்லை. நன்மை தீமைகளை சுட்டி காட்டும் எதிர்கட்சியாக இல்லை. இந்த அரசால் கொண்டு வரும் அனைத்து விதமான நல்ல திட்டங்களை வரவேற்றும் அதில் குறைபாடுகள் இருந்தால் சுட்டி கட்டவும் தவறுகின்றது மாறாக கருணாநிதியையும் அவர் குடும்பத்தையுமே விமர்சனம் செய்து கொண்டிருக்கிறது.

Posted by போவாஸ் | at 7:17 PM | 0 கருத்துக்கள்

இத்தனை நாள் இது தெரியாதா ?



இலங்கை அகதிகள் முகாம்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற குறைகளையும் கண்டறிந்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத்தான், 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது' எனக் குறிப் பிட்டுள்ள முதல்வர் கருணாநிதி, அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள நலத் திட்டப் பணிகளையும் பட்டியலிட்டுள்ளார்.


அவரது அறிக்கை: கடந்த முதல் தேதி மாலை, காரில் வந்து கொண்டிருந்தேன். என் அருகில், அந்த வார இதழ்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஏட்டைப் புரட்டினேன். தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதி முகாம்களைப் பற்றி படித்தபோது, என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே எனது செயலர்களை அழைத்து, 2ம் தேதி காலை இதுபற்றி விவாதிப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறினேன். நிதித் துறைச் செயலரையும் அழைத்து, இதுபற்றிய அனைத் துக் குறிப்புகளையும் தயாரிக்கச் செய்தேன்.


இலங்கைத் தமிழரும், சிறந்த எழுத்தாளருமான மறவன்புலவு சச்சிதானந்தனை போனில் அழைத்து, இலங்கைத் தமிழர் அகதிகளின் அவசர, அவசியமான தேவைகள் என்ன என்பது பற்றி, நாளைக் காலை 8 மணிக் குள் எனக்கொரு குறிப்பைத் தர வேண்டுமென கேட்டுக் கொண் டேன். மறவன்புலவு சச்சிதானந்தம், சொன்னபடி காலை 8 மணிக்கே வந்து விட்டார். அவரது குறிப்புகளைப் பெற்று, தலைமைச் செயலகக் கூட்டத்துக்கு விரைந்தேன்.


தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 115 முகாம்களில் (இரண்டு சிறப்பு முகாம்கள் உட்பட) இலங்கைத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 340 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 241 பேர் முகாம்களில் தங்கவைக் கப்பட் டுள்ளனர். 11 ஆயிரத்து 288 குடும் பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 802 பேர், முகாம்களுக்கு வெளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகள் சீரமைக் கப்படுவதில் இருந்து, கழிப் பறைகள், குடிநீர் வசதி உள் ளிட்ட ஏராளமான நலத்திட்டப் பணிகள் பல கோடி ரூபாய் செலவில், தி.மு.க., அரசால் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 2009-10ம் ஆண்டு பட்ஜெட்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2006ம் ஆண்டு முதல் மத்திய - மாநில அரசுகள் வழங் கும் பணம், இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ அரிசி 57 காசு என்ற மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுக்கான 6,000 ரூபாய் நிதியுதவித் திட்டம், 2007 முதல், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. பிளஸ் 2 வரை கல்வி, புத்தகம், நோட்டு, சீருடை, மதிய உணவு, பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக் கிள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, சுகாதார வசதிகள், மருத்துவ சிகிச்சைகள் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 2006 முதல் முகாம்களில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இத்துடன் கடமை முடிந்து விட்டதாக நான் கருதவில்லை. அதனால் தான், அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில், இறுதித் தீர்மானமாக, "இவர் களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும்' என, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டோம். மறுநாளே, இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.


இந்த அரசைப் பொறுத்தவரை, அவர்கள் இலங்கைத் தமிழ் அகதிகள் அல்ல; அவர்களும் தமிழர்கள் தான். நம்மோடு தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் தான். அவர்களை வாழ்விக்கச் செய்யும் அனைத்து முயற்சிகளும், நம்மை நாமே வாழ்வித்துக் கொள்ளச் செய்யும் முயற்சிகள் தான் என்ற நோக்கோடு செயல்படுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிற குறைகளையும் கண்டறிந்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தான், இந்த அரசின் சார்பில் 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் உதவிகளும் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இத்தனை நாள் இல்லாமல் இது பற்றி சிந்திக்காமல், திடீரென்று இலங்கைத் தமிழர்கள் வாழும் முகாம்களை அமைச்சர்களைக் கொண்டு பார்வையிடச் செய்வதும்,  நிறை குறைகளை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லியிருப்பதும், இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன் ? என்ற ஒரு கேள்வி மனதில் இருந்தாலும்...இப்பொழுதாவது ஒரு விடியல் வந்ததே...கொஞ்சம் கோவம் இருந்தாலும் வரவேற்போம்...வெறும் அறிக்கையோடு நிற்காமல், முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களின் நிறை குறைகளை அறிந்து ஆவண செய்ய வேண்டும்.


அட..கலைஞர் கருணாநிதியின் திமுக அரசு இப்பொழுதாவது விழித்துக் கொண்டு, அக்கறை கொண்டு...ஏதோ கொஞ்சம் சொல்லும் அளவுக்கு நன்மைகளை செய்ய முன் வந்திருக்கிறது. நல்லது நடக்கட்டும்.


ஆனால் வாய்க்கு வாய் ஈழத் தமிழர்களுக்காக வாதாடும், தாறு மாறான அறிக்கை விடும் பழ.நெடுமாறன், வைகோ, அதிமுக, பாமக, "மாலுமி " விஜயகாந்த் ஆகியோர் இதை இதுவரை வரவேற்கவில்லை. வரவேற்க மனமுமில்லை. வரவேற்கவும் மாட்டார்கள்.


பாமக ராமதாஸ் மட்டுமே...இங்கு வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும், சமத்துவபுரம் போன்ற வீடுகள் கட்டிக் ஒடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


தமிழக அரசு, மற்றும் திமுகவின் செயல்பாடுகள் எல்லாவற்றுக்கும் வழக்கம் போல் எதிர்க்கும், அரசியலாக்கும் எதிர்கட்சியினர் மற்றும், இலங்கை தமிழர்களுக்காக போராடும் பிற கட்சியினரும், இயக்கங்களும் என்ன செய்ய, சொல்லப் போகிறார்கள் ?
பார்ப்போம்.

Posted by போவாஸ் | at 5:11 PM | 0 கருத்துக்கள்

Related Posts with Thumbnails