பிரீ கே.ஜி அடமிஷனுக்கே போராட்டம்


பிரீ.கே.ஜி., படிப்புக்கான விண்ணப்ப படிவம் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட குளறுபடியை கண்டித்து, தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள் இன்டர்நேஷனல் பள்ளி, பப்ளிக் ஸ்கூல் போன்ற பெயர்களை வைத்துக் கொண்டு கட்டண வசூலில் குறியாக உள்ளன. இப்பள்ளிகளில் ப்ரீ கே.ஜி., அட்மிஷனுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பெறப்படுகிறது.
General India news in detail

ஆங்கில மீடியம் என்ற ஒரே காரணத்துக்காக எவ்வளவு கட்டணம் கேட்டாலும் அள்ளிக் கொடுக்க, பெற்றோர் தயாராக உள்ளதே இப்பள்ளிகளின் பெருக்கத்துக்கு காரணம். சில "சீட்' களுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை விற்பனை செய்து லாபம் பார்க் கின்றனர். இது போன்ற ஒருசில பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க கடந்த ஆண்டு நள்ளிரவு முதல் பெற்றோர் காத்துக் கிடந்தனர். பெற்றோர் சிலர் அளித்த புகாரின்படி, விண்ணப்ப படிவம் வழங்கும் தேதியை முன்னரே அறிவித்து, அதன்படி வழங்க வேண்டும் என, கடந்த ஆண்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டரின் இந்த உத்தரவை பள்ளிகள் கண்டு கொள்வதில்லை.


இந்நிலையில், கோவை ஆடீஸ் வீதியில் உள்ள ஒரு தனியார் நர்சரி பள்ளியில் 2010-11ம் கல்வியாண் டில் ப்ரீ கே.ஜி., பிரிவில் மாணவர் களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம், நேற்று மதியம் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கான டோக் கனை அதிகாலையிலேயே பெற, நேற்று முன் தினம் பெற்றோரில் சிலர் "இரண்டாவது ஆட்டம் சினிமா முடித்து' பள்ளி முன் காத்துக் கிடந்தனர். அவர்களுக்கு இரவு 2.00 மணிக்கு மேல் டோக்கன் வழங்கப் பட்டுள்ளது. காலையில் விண் ணப்ப படிவம் வழங்கப்பட்டுள் ளது. அறிவிப்பில் குறிப்பிடப்பட் டிருந்த நேரத்தில் மதியம் பள்ளிக்கு வந்த பெற்றோர், டோக்கன் முடிந்து விட்டதை அறிந்து கொதிப்படைந்தனர். ஆடீஸ் வீதியில் கூடியதால் போக்குவரத்து தடை பட்டது.


இது பற்றி பெற்றோர் சிலர் கூறியதாவது:


மதியம் 1.30 மணி முதல் 3.00 மணிக்குள் விண்ணப்பம் வழங்கப் படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதன்படி வந்தோம். ஆனால் அதிகாலை 2.00 மணி முதல் காலை 8.00 மணிக்குள் வந்த 100 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கி விட்டனர்; டோக்கன் தீர்ந்து விட்டதாக கூறுகின்றனர். இதற்காக அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து காத்திருந்தும் பயன் இல்லாமல் போனது. தீபாவளி, ஆடி பண்டிகை சலுகை போல் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என விண்ணப்ப படிவங்களை விற்கின்றனர். இவ்வாறு, பெற்றோர் தெரிவித்தனர். பிரச்னை பெரிதாவதைக் கண்ட பள்ளி நிர்வாகம், அனைவருக்கும் விண்ணப்ப படிவம் வழங்கியதையடுத்து கலைந்து சென்றனர்.


நன்றி:தினமலர்.

Posted by போவாஸ் | at 8:15 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails