ஆயிரம் எயிட்ஸ் குழந்தைகளை தத்து எடுக்கிறார் நடிகர் கமல்


உலக எய்ட்ஸ் தினம் இன்று (டிசம்பர் 1) கடைபிடிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய், குழந்தைகளை மிக எளிதாக தாக்குகிறது.

நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில்தான் எய்ட்ஸ் நோய் அதிகமான குழந்தைகளை பாதித்துள்ளது. தமிழகத்தில் 2,651 குழந்தைகள் இந்த ஆண்டு புதிதாக எய்ட்ஸ் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.


 நடிகர் கமல்ஹாசன் எய்ட்ஸ் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்து எடுப்பதாக அறிவித்துள்ளார்.

அவர் மேலும்,  ’’குழந்தைகள்தான் நமது எதிர்காலம். ஆனால் அவர்களில் சிலர் நம்பிக்கையின்மையின் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கிறது.

 அவர்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிப்பது நமது கடமை, பொறுப்பு.  என்னை பின்பற்றி பலரும் இந்த சேவையை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

என்னை விட சிறந்தவர்களும், வசதியானவர்களும் இருக்கிறார்கள். நான் ஒரு இயக்கத்தை மட்டுமே தொடங்கி இருக்கிறேன் மற்றவர்கள் இதை முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன்’’என்று தெரிவித்தார்

Posted by போவாஸ் | at 9:50 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails