ஏன் ?. இப்படியெல்லாம்?. உலக நன்மைக்காக இப்படி விளக்கேத்துனா எல்லாம் சரியா போய்டுமா?


 
உலக நன்மைக்காக இப்படி விளக்கேத்துனா எல்லாம் சரியா போய்டுமா? வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் - நீர் ஆதாரம் பெருகும், மழை பெய்யும், உடம்பிற்கு குளிர்ந்த, சுகமான, ஆரோக்கியமான காற்றைத் தரும். 
2007 விளக்கு பூஜைக்கு ஆன செலவைக் கொண்டு நலிந்தோருக்கு உதவிகள் செய்திருக்கலாம். ஏழைக் குழந்தைகள் படிக்க உதவி செய்து ஊக்குவிக்கலாம். இதனால் சமத்துவம் பெருகும், மனித நேயம் வளரும், சமுதாய அக்கறை வரும். அன்பும் பாசமும் அதிகரிக்கும்.
கடவுள் நமக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவினைக் கொடுத்ததே சிரித்து, சிந்தித்து, நன்மை, தீமை அறிந்து செயல்பட்டு ஒழுக்கத்துடன் வாழ்வதற்காகவே. இப்படி மூட நம்பிக்கைகளில் மூழ்கி கெட்டு சீரழிவதற்காக அல்ல.
என்று திருந்தப் போகிறார்கள் இவர்கள் ? ? ?

Posted by போவாஸ் | at 5:14 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails