ரூ.315 கோடி செலவில் ராஜசேகர ரெட்டி நினைவாலயம்.






ஆந்திர முதல்- மந்திரியாக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவர் சென்ற ஹெலிகாப்டர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலை காட்டுப்பகுதியில் சிறு மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
ராஜசேகர ரெட்டி உயிரிழந்த அந்த மலையில் மிகப்பிரமாண்டமான நினைவாலயம் அமைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. 1412 ஹெக்டர் நிலப்பரப்பில்,ரூ.315 கோடி செலவில் ராஜசேகர ரெட்டி இந்த நினைவாலயம் அமையும்.
நல்லமலை காட்டுப்பகுதி வன இலாகாவுக்கு உரியதாகும். அந்த இடத்தின் சுற்றுச்சூழல் பாதிக்காதபடி மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ராஜசேகர ரெட்டிக்கு உருவாக்கப்படும் இந்த நினைவாலயம், இந்தியாவில் இதுவரை எந்த தலைவருக்கும் இல்லாத வகையில் மிக, மிக பிரமாண்டமாக இருக்கும். மொத்தம் 315 கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இந்த நினைவாலயம் கட்டி முடித்து திறக்கப்படும் என்று ஆந்திர மந்திரி கீதா ரெட்டி கூறினார். ராஜசேகர ரெட்டி நினைவிடத்தை சுற்றுலா தலம் போல மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடப்பா,சித்தூர், கர்னூல் போன்ற மாவட்டங்கள் நீர் நிலையுள்ள மாவட்டங்கள் . காரணம் பசுமை குறைவில்லாத பிரதேசம் அது. அதனால் விவசாயம் என்பது எப்போதும் செழிப்போடு இருக்கும். டிவியிலேயே நல்ல காமிச்சாங்க..அவ்வளவு ஒரு அடர்ந்த காடா இருக்குது. இப்போ அதை அழித்து, முன்னூற்றி பதினைந்து கோடி பணத்தை விரயம் செய்வதென்பது வடிகட்டின முட்டாள்தனம். 

யாரு வீட்டு காச யாரு இப்படி வீணா செலவு செய்யுறது , கட்சி நிதியிலோ அல்லது ரெட்டியோட சொந்த பணத்துல செஞ்சா பரவாயில்லை. அரசாங்க பணத்துல ஏன் செய்யணும். மக்களோட வரிப்பணத்துல ஏன் செய்யணும்.

1412. ஹெக்டேர் நிலப்பரப்பில் 315 கோடி செலவில் ஒரு தொழிற்சாலை தொடங்கினால், கிட்டத்தட்ட 1000 குடும்பங்கள் நிரந்தரமாக பிழைக்க வழி பிறக்கும். தொழிற்சாலை லாபகரமாக செயல்பட்டால், அரசாங்கத்திற்கு வருமானம் வரும். அதை விடுத்து நினைவாலயம் கட்டினால் 1412. ஹெக்டேர் நிலம் வேஸ்ட், 315 கோடி பணம் வேஸ்ட், அதோடுமட்டுமல்லாமல் எதிர் காலத்தில் பராமரிப்பிற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
 
மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வரும் வேளையில் இது போன்ற முட்டாள்தனமான் செயல்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். 
பிரதமர், பிரணாப் முகர்ஜீ, அறியாமை பகழ் ராகுல் காந்தி, அன்னை சோனியா எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். 

இது மிக மிக தவறான, கண்டிக்கத்தக்க செயல்.எல்லா அரசியல் தலைவர்களும் இதை பின்பற்ற ஆரம்பித்து விடுவர். மக்கள் பணத்தை இப்படியா விரயம் செய்வது. இதை தடுக்காவிடில், இது ஒரு தவறான முன்னுதாரணத்திற்கு வழி செய்துவிடும். 
இதை பின்பற்றி இனி பலர் எதிர்காலத்தில் செய்யக்கூடும்.  
இதை தடுக்காவிடில், இனி காங்கிரஸ் அரசு, சிக்கன நடவடிக்கை என்பதைக் கூறுவதற்கு எந்த முகாந்திரமும், அதை பற்றி பேச ஒரு அருகதையுமில்லை.  

1412. ஹெக்டேர் என்பது கிட்டத்தட்ட 3489 ஏக்கர். 
3489 ஏக்கர் என்பது கிட்டத்தட்ட 1,52,024,400 சதுர அடி. 
இவ்ளோ பெரிய பரப்பளவு கொண்ட இடத்தில் சராசரியாக 1000 அடி கொண்டு வீடுகளை கட்டினால் கிட்டத்தட்ட 1,50,000 வீடுகள் கட்ட முடியும். 
315 கோடியில், வீடில்லாதோருக்கு, வீடுகளைக் கட்டிக் கொடுத்தால்... 5 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 6300 பேருக்கு கட்டிகொடுக்க முடியும். 
10 லட்சம் செலவில் பள்ளிகளைக் கட்டினால், கிட்டத்தட்ட 3000 பள்ளிகளைக் கட்ட முடியும்.  
இன்னும் என்னென்னமோ நல காரியங்களைச் செய்யலாம்.


இதெயெல்லாம் விட்டுட்டு நினைவாலயம் கடடுறாங்கலாம். யாரு பணத்துல யாரு கட்டுறது. பரதேசி பசங்க. முட்டாள்கள்.
தலைவர்கள் மீது பற்றும், பாசமும், பிரியமும் இருக்க வேண்டியதுதான். அதற்காக மக்கள் வரிப்பணத்தில் இது போன்று செலவு செய்வது தேவைதானா?

இன்னும் என்னன்ன கூத்து நடக்கப் போகுதோ.

Posted by போவாஸ் | at 11:18 PM

1 கருத்துக்கள்:

Anonymous said...

WELL SAID.

Anand

Post a Comment

Related Posts with Thumbnails