இலங்கை தமிழர் மறுகுடியமர்த்தும் பணி துவங்கியது


இலங்கையில் முகாம் தமிழர்களை மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்துவது தொடர்பாக தமிழக எம்பிக்கள் குழு இலங்கை சென்றது.

ஐந்து நாள் இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய குழு முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர்,  நாளை முதல் இலங்கையில் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்தார்.  அவர் மேலும் 58 ஆயிரம் பேரை 15 நாட்களுக்குள் அனுப்பப்படுவார்கள் என்று அறிவித்தார்.
அதன்படி   இன்று முதற்கட்டமாக, 2400 பேர், பஸ்களில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நல்லது நடக்கிறது என்று நம்புவோம். இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு சென்று வாழ வேண்டும் என்பதே அனைவரது ஆசை.

இலங்கைத் தமிழர்களுக்கு செழிப்பான மறுவாழ்வு மலர வாழ்த்துவோம்.

source:dinamalar,nakkheeran.

சொன்னதை, சொல்வதைக் கொஞ்சமாவது நிறைவேற்றுபவர் கலைஞர்.



Posted by போவாஸ் | at 12:11 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails