நகைச்சுவை துணுக்குகள்

ஏ‌ன்யா.. அ‌ந்த ‌தீ‌ப்‌பிடி‌ச்ச க‌ட்டி‌ட‌த்‌தி‌ல் இரு‌ந்து 6 பேரை‌க் கா‌ப்பா‌த்‌தினது‌க்கா அவரை போ‌லி‌ஸ் ‌பிடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு போகுது.
ந‌ல்லது‌க்கே கால‌மி‌ல்லை‌ போ..
‌நீ‌ங்க வேற? அ‌ந்த க‌‌ட்டிட‌த்‌தி‌ல் இரு‌ந்து அவ‌ர் கா‌ப்பா‌த்‌தி வெ‌ளிய கொ‌ண்டு வ‌ந்ததா சொ‌ல்றவ‌ங்க 6 பேரும் தீயணைப்புப் படை வீரர்களாம்.

மகன் : அப்பா! என்ன அடி‌க்க மா‌ட்டீ‌‌ங்களே...
அ‌ப்பா : எது‌‌க்கு?
மக‌ன் : நா‌ன் எல்லா சப்ஜெக்ட்லயும் ஃபெயிலாயிட்டேன்.
அப்பா : நினைச்சேன்! எக்ஸாம்லேர்ந்து அரைமணி நேரத்துல வீட்டுக்கு வந்துட்டு எல்லார்ட்டயும் "ரொம்ப ஈ.சி. டூ சிம்பிள்.." அப்படீன்னு கமெண்ட் அடிச்சப்பவே...

ஒருவ‌ர் : ‌நீ‌ங்க பாடிக் கொண்டிருக்கும்போது ஒருவன் செருப்பால் அடி‌ச்சானே அ‌ப்புறமு‌ம் ஏ‌ன் தொட‌ர்‌ந்து பாடு‌றீ‌ங்க
பாடியவ‌ர் : ஒரு செரு‌ப்ப ‌வ‌ச்‌சி‌க்‌கி‌ட்டு நா‌ன் எ‌ன்ன ப‌ண்றது? அது‌க்கு‌த்தா‌ன்.

நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து ஒருவ‌ர் பேசிக்கொண்டிருந்தார்.

நண்பர் கேட்டார்... 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?
என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்.
வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?
அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

நண்பர் : "டாக்டர் வெயிட் தூக்கக் கூடாதுன்னு சொன்னதுக்காக உங்க அம்மா பெரிய வெங்காயம் வாங்காம சின்ன வெங்காயம் வாங்கறதப்பாத்தா எனக்கு எரிச்சலா வருது.

சார் நீங்க செஞ்ச உதவிக்கு என் தோலை செருப்பா செஞ்சு போடணும்.
நான் செருப்பு போடறதுல்ல. ஷுவா தெச்சுக்குடுங்க.

ஒயின் ஷாப்ல வேலைக்குச் சேந்தானே உன் பையன் சம்பளம் ஒழுங்கா வருதா?
சம்பளம் எங்க வருது சரக்குதான் வருது.

மணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது ?
மணப்பெண் : ஏன் .. .. ? என்னாச்சு.. .. .. ?
மணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு .. .. பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்

காதலன் :உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..
காதலி : ஏன் டார்லிங்..?
காதலன் : திருப்பிக் கொடுக்கறதே இல்லியே.

நண்பர் 1:உன் பொண்ணு ஓடிப்போனப்ப கௌரவம் சிவாஜி மாதிரி "கிளிக்கு ரெக்க முளைச்சுடுச்சு ஆத்த விட்டு பறந்து போயிடுச்சு" அப்டீன்ன இப்ப உன் பையன் 30 வயசாகியும் வேலைக்கு போகாம வீட்லயே உட்கார்ந்திட்டுருக்கானே இதுக்கு என்ன சொல்லப்போற?"

நண்பர் 2 : "கொரங்குக்கு கால் ஒடஞ்சுபோச்சு ஆத்லயே உக்காந்துட்டுருக்கு."

Posted by போவாஸ் | at 7:26 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails