வர​தட்​சிணை கேட்டதால் மாப்பிள்ளையை ஏற்க மறுத்த மணமகள்

தமி​ழ​கப் பகு​தி​யான திரு​வக்​க​ரை​யைச் சேர்ந்த தவ​மணி என்​கிற பிரி​யா​வுக்​கும் ​(21), வானூர் அரு​கே​யுள்ள கோரைக்​கே​ணி​யைச் சேர்ந்த வெங்​க​டே​சன் ​(25) என்​ப​வ​ருக்​கும் வெள்​ளிக்​கி​ழமை திரு​ம​ணம் நடை​பெ​று​வ​தாக இருந்​தது. புதுச்​சேரி அரு​கே​யுள்ள திருக்​க​னூர் பால​மு​ரு​கன் ​திரு​மண நிலை​யத்​தில் வியா​ழக்​கி​ழமை இரவு பெண் அழைப்பு ​ நடந்​தது. இதில் இரு தரப்​பி​ன​ரும் கலந்து கொண்டு விருந்து சாப்​பிட்​ட​னர். ​


​ வெள்​ளிக்​கி​ழமை காலை​யில் மண​மே​டை​யில் மண​ம​கள் வந்து அமர்ந்​தார். முகூர்த்த நேரம் நெருங்​கி​யும் மாப்​பிள்ளை வர​வில்லை. பெண் வீட்​டார் பதற்​றத்​து​டன் காணப்​பட்​ட


​னர். முகூர்த்த நேரம் முடிய 10 நிமி​டங்​க​ளுக்கு முன் மாப்​பிள்ளை வந்​தார். டி.வி., வாஷிங் மெஸின்,​ மிக்சி ஆகி​ய​வற்றை சீர் வரி​சை​யாக கொடுத்​தால்​தான் தாலி கட்​டு​வேன் என்​றார்.


​ முகூர்த்த நேரம் முடி​யப் போகி​றது. தாலி கட்​டுங்​கள். பிறகு பார்க்​க​லாம் என்று எல்​லோ​ரும் கூறி​யும் அவர் கேட்​க​வில்லை. திரு​ம​ணம் நின்​றது. அங்​கி​ருந்​த​வர்​கள் பஞ்​சா​யத்து பேசி​னர். பின்​னர் தாலி கட்ட மாப்​பிள்ளை ஒப்​புக் கொண்​டார். ஆனால் மண​ம​கள் பிரியா அந்த மாப்​பிள்​ளையை ஏற்​றுக் கொள்​ளத் தயா​ராக இல்லை. அவர் எனக்கு வேண்​டாம் என்று கூறி​விட்​டார்.


​ இருப்​பி​னும் உற​வி​னர்​க​ளும்,​ நண்​பர்​க​ளும் அதே தினத்​தில் மண​ம​க​ளுக்கு திரு​ம​ணம் செய்து வைக்க முயற்சி எடுத்​த​னர். அப்​போது மண​ம​க​ளின் அத்தை மக​னான திண்​டி​வ​னம் அரு​கே​யுள்ள பேர​டிக்​குப்​பத்​தைச் சேர்ந்த விஜய் என்​கிற விஜ​ய​கு​மார் ​(25) சம்​ம​தித்​தார். இதை​ய​டுத்து அரு​கில் உள்ள ​ ​ ​ ​முத்​து​மா​ரி​யம்​மன் கோயி​லில் திரு​ம​ணம் நடந்​தது. ​


​ பிரியா கூறு​கை​யில்,​ ""திரு​ம​ணம் நின்​று​போ​னால் எங்​கள் குடும்ப கெüர​வம் என்ன ஆகும் என்று பயந்​தேன். என்​னு​டைய அத்தை மகன் அதைக் காப்​பாற்​றி​விட்​டார். அவ​ருக்கு அன்​பான மனை​வி​யாக இருப்​பேன். மாப்​பிள்ளை வெங்​க​டே​சன் ஏற்​கெ​னவே கேட்ட வர​தட்​சி​ணையை எங்​கள் வீட்​டி​னர் செய்​தி​ருந்​த​னர். மண​மே​டை​யில் கூடு​த​லாக வர​தட்​சிணை கேட்​டது என் மனதை வேத​னைப்​ப​டுத்​தி​யது. எங்​கள் குடும்​பத்​தில் 3 பெண்​கள். மூத்த மகள் நான்'' என்​றார் பிரியா.


​ புதிய மாப்​பிள்ளை விஜ​ய​கு​மார் கூறு​கை​யில்,​ ""வர​தட்​சிணை கேட்​கும் மாப்​பிள்ளை வீட்​டா​ருக்கு இந்​தத் திரு​ம​ணம் ஒரு பாட​மாக அமை​யட்​டும். என் மனை​வி​யைக் கடைசி வரை காப்​பாற்​று​வேன். இப்​படி நடக்​கும் என்று எதிர்ப்​பார்க்​க​வில்லை. என் மாமா குடும்​பத்​தின் கெüர​வம் பாதிக்​கக் கூடாது என்​ப​தற்​காக முழு மன​து​டன் பிரி​யா​வைத் திரு​ம​ணம் செய்து கொண்​டேன்'' என்​றார். ​
-------------------------------------------------------
மணமகள் பிரியாவின் தைரியத்தையும், திடமனதையும் பாராட்டியே ஆகவேண்டும்.
பிரியாவிற்கு கை கொடுத்து, குடும்ப கௌரவத்தையும் காத்த புதிய மாப்பிள்ளை விஜயகுமாருக்கும் பாராட்டுக்கள்.
வரதட்சனைப் பிரச்சனையால் கணவனுடன் சேர்ந்து வாழமுடியாமல் முடங்கிக் கிடக்கும் பெண்களுக்கும், செய்வதறியாது திகைத்த்ப் போய் நிற்கும் பல பெண்களுக்கு ஊக்கத்தையும், தைரியத்தையும் கொடுக்கும் ஒரு உதாரணச் சம்பவமாக இருக்கும்.
வரதட்சணை வாங்கும் ஆண்களுக்கு இது ஒரு படிப்பினை.


மணமக்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

Posted by போவாஸ் | at 2:58 PM

1 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails