முல்லா ஸ்பெஷல் - II

முல்லா- ஒரு பெண்-நூடுல்ஸ்

முல்லா நஸ்ருதீன் பெண்கள் மீது விருப்பம் கொண்டவர் என்று நான் கெள்விப்பட்டிருக்கிறேன்,ஆனால் அவருக்கு பெண்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமே கிடையாது. எவரும் அவரை விரும்ப மாட்டார்கள். ஒரு பெண்னை அவர் முதன்முறையாக சந்திக்க சென்றார்.அதற்க்கு முன் அவர் தனது நண்பனிடம் கேட்டார்; “ உன்னுடைய ரகசியம் என்ன ? நீ பெண்களுடன் நன்றாக பழகுகிறாயே ? நீ எளிதில் அவர்களை மயக்கிவிடுகிறாய். ஆனால் நான் தோல்வி காண்கிறேன். எனவே எனக்கு எதாவது வழிவகை சொல்லிக்கொடு. நான் முதன்முறையாக ஒரு பெண்னைப் பார்க்க போகிறேன், எனக்குச் சில ரகசியங்களை சொல்லிக்கொடு.

நண்பன் கூறினான் ; “ மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். எப்போது, உணவைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி, தத்துவத்தைப்பற்றிப் பேசு”.

ஏன் உண்வைப்பற்றி பேச வேண்டும்என்று கேட்டார் முல்லா. நண்பன் கூறினான்; “உண்வைப் பற்றி பேசுவதை பெண் விரும்புவதால் நான் அதைப் பற்றிப் பேசுகிறேன் . ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் உணவில் விருப்பம் உண்டு. அவள் குழந்தைக்கு உண்வாகிறாள், மனித சமுதாயம் முழுமைக்கும் அவள் உணவாக இருக்கிறாள். எனவே அடிப்படையில் அவள் உணவில் விருப்பம் கொண்டிருக்கிறாள்”.

சரி குடும்பத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் ?” என்று முல்லா கேட்டார். அவளுடைய குடும்பத்தைப் பற்றி நீ பேசினால் உன்னுடைய உள்நோக்கங்களை நேர்மையானவையாக காட்டும் என்று நண்பன் பதில் கூறினான்.

தத்துவத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும் ? “ என்று முல்லா அடுத்த கேள்வியை கேட்டான். அதற்க்கு அந்த நண்பன் பதில் தருகையில் , “ தத்துவத்தைப்பற்றி பேசினால் அந்த பெண் தன்னைப் புத்திசாலியாக கருதிக் கொள்கிறாள் என்றான்

உடனே முல்லா விரைந்து சென்றான். அந்த பெண்னைக் கண்டதும் ஹல்லோ , உணக்கு நூடுல்ஸ்” ( ஒரு வகை உணவு என்றும் முட்டாள் என்றும் பொருள் உண்டு) பிடிக்குமா ? என்று கேட்டான். அதை கேட்டு அவள் அதிர்ச்சி அடைந்தாள், “ இல்லை என்று பதில் கூறினாள் . முல்லா இரண்டாவது கேள்வியைக் கேட்டான் , “ உணக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்களா ? “
இல்லைஎன்றாள். முல்லா ஒரு நிமிடம் திகைத்தான் . தத்துவத்தைப்பற்றி எப்படி ஆரம்பிப்பது? “ என்று யோசித்தான். ஒரு வினாடி கழித்து கேட்டான், “ உணக்கு ஒரு சகோதரன் இருந்தால் அவனுக்கு நூடுல்ஸ்பிடிக்குமா ? “


விண்மீன்கள் பளிச்சிடும் இரவில்….. காதலியுடன்

முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது.

ஆகவே அவர் கண் டாகடரிடம் கேட்டார் : கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள் ? அவளுடைய முகம் கூட எனக்கு சரியாகத் தெர்யவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதிரில் போகக் கூடாது : உடனே என்னை நிராகரித்து விடுவாள் . என்ன செய்யலாம் ? “

டாக்டர் ஆலோசனை கூறினார் : ஒன்று செய்யலாமே! வெகு தொலைவு வரை உம்மால் பார்க்க முடிவது போல் நடியும் . இப்படி அவள் நம்பும்படி ஏதாவது செய்து பாரும் !

முல்லா இதை செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார். ஒரு நாள் பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது . தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு தையல் ஊசியைக் குத்திவிட்டு வந்தார்.நல்ல கண்பார்வை இருந்தால் கூட அவ்வளவு தொலைவில் உள்ள ஊசியை யாராலும் பார்க்க முடியாது.

முல்லா விண்மீ ன்கள் பளிச்ச்சிடும் இரவில் அன்று அந்த மரத்திலிருந்து 100 அடி தொலைவில் தன் காதலியுடன் உட்கார்ந்திருந்தார், திடிமென அவளிடம் அதோ அந்த மரத்தில் பொருப்பில்லாமல் யாரோ ஒரு தையல் ஊசியை குத்தி வைத்திருக்கிறார்களே ! என்று கூறினார்.

அப்பெண் முல்லாவின் கண்பார்வையின் மேல் ஏற்க்னவே சந்தேகம் கொண்டிருந்தாள். அப்படி இருக்க இவ்வளவு தொலைவில் ஒரு ஊசி இருப்பதை அவரால் எப்படி காண முடிந்தது என்று ஐயம் கொண்டாள். மேலும் அவளாலும் அதை பார்க்க முடியவில்லை ; அந்த மரத்தையும் கூட சரியாகப் பார்க்கவில்லை . நஸ்ருதீன் , எனக்கு ஊசி ஒன்றும் தெரியவில்லையே,” என்று கூறினாள்.

முல்லா பந்தாவாக எழுந்து , “ நான் போய் அதை எடுத்து வருகிறேன் “, என்று கூறியபடி நடக்கலானார். ஓன்றிரண்டு அடி வைத்ததுமே தொப்பென்று தரையில் விழுந்தார். ஏனேன்றால் எதிரில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. இது அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.

எந்த வேஷமும் நெடு நேரம் நிலைத்திருக்காது! உங்கள் வேஷத்தை மக்கள் கண்டுபிடிக்க வெகுனநேரமாகாது. ஆனாலும் மரியாதைக்காக நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்று உங்களிடம் அவர்கள் சொல்லுவதில்லை. ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது நாகரீகமாகிவிட்டது

முல்லாவும் இளம் விதவையும்

முல்லாவும் ஒரு இளம் பணக்கார விதவைப் பெண்னும் காதலித்துவந்தார்கள் . தீடிரேன ஒரு நாள் அந்தப்பெண் தான் நடத்திவந்த தொழில் அடைந்த நஷ்டத்தில் அவளிடம் இருந்த செல்வம் அனைத்தையும் இழந்துவிட்டாள் அதை முல்லாவிடம் சொல்லிவிட்டு அன்பே , நான் செல்வம் இழந்து ஏழையாகிவிட்டேன் இப்போதும் என்னை தொடர்ந்து காதலிப்பாயா ? “


முல்லா என்ன இது அசடு மாதிரி பேசிக் கொண்டு! நான் கண்டிப்பாக காதலிக்கிறேன் அனேகமாக இதுவே நான் உண்னை பார்ப்பது கடைசி முறையாக இருக்கக் கூடும் என்ற போதிலும்

ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் என்று சொன்னான்.


முல்லா கம்பீரமானார். எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார்.

இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்குஎன்றான் அவன்

அந்த நாள் நசுருதீனின் பொழுது மன ஆமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பைடவில்லை. இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது என்று முடிவு செய்திருந்தார்.

நேரம் போய் கொண்டே இருந்தது.

அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.

இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.

அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. தனக்கு திருமணம் ஆகவில்லை என்பது

ஒரு பொண்னு கடல்ல முழ்கப்போனபோது

இரு நண்பர்கள் பேசிக்கொள்கிறார்கள்

"
நம்ம முல்லாவிற்க்கு என்னாச்சு ? பார்த்து நம்ப வ்ருசமாச்சு ! "

"
அடப்பாவி ! உனக்குத் தெரியாதா ? அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான் , அத்வும் ஒரு பொண்ணு கடல்ல முழுகப்போன போது காப்பாத்தி கல்யாண்ம் பண்ணிக்கிட்டான் "

"
அப்படியா ? சந்தோசமாத்தான இருக்கான் ? "

"
அது எனக்கு தெரியாது ! ஆனா அவன் கடல்ன்னு சொன்னாவே கடுப்பாய்விடுகிறான்"

என் பரம்பரயே ஒரு கம்யூனிஸ்ட்

ஒரு முறை முல்லா ரஷ்ய அரசின் நீதிமன்றத்தின் முன் ஏதோ குற்றத்திற்க்காக் ஆஜர் படுத்தப்பட்டார்.

நீதிபதி : " நீங்கள் எத்தனை காலமாக கட்சியில் உள்ளீர் ? "

முல்லா " பல ஆண்டுகளாக ?

நீதிபதி : " உமது தந்தை ? "

முல்லா : " அவரும் தான் அவர்மட்டும் அல்ல அவ்ரது தந்தை அவரது தாத்தா அனைவரும் கம்யூனிஸ்ட்கள்தான் "

நீதிபதி : " கவனி ! அப்போது கட்சியே ஆரம்பிக்கபடவில்லை ! "

முல்லா : " அதனால் என்ன ? அவர்கள் அப்போதே திருடிக்கொண்டும் பிச்சையெடுத்து கொண்டும்தான் இருந்தனர்."

Posted by போவாஸ் | at 1:54 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails