பேரறிஞர் அண்ணா உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயம்

அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, அவரது உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயத்தை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார். இந்த நாணயம் மஞ்சள் நிறத்திலானது.


அதில், "அண்ணா நூற்றாண்டு' என்று குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அவரது உருவத்தின் கீழ், "அண்ணாதுரை' என்ற அவரது கையெழுத்தும், அதன் கீழ், அவர் பிறந்த ஆண்டு மற்றும் இறந்த ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த நாணயம் மொத்தம் ஆறு கிராம் எடை கொண்டது. இதில், 75 சதவீதம் செப்பு, 20 சதவீதம் துத்த நாகம், 5 சதவீதம் நிக்கல் கலந்திருக்கும். இந்த நாணயம், கோல்கட்டாவில் உள்ள இந்திய அரசின் அச்சகத்தில் தயாரிக்கப்பட்டது.

இந்த நாணயத்தை பொதுமக்களிடம் புழக்கத்தில் விடுவதற்கான கோப்பு, தற்போது மத்திய நிதியமைச்சகத்திடம் உள்ளது. பல்வேறு ஒப்புதல்கள் கிடைத்த பின், இந்த நாணயத்தை புழக்கத்தில் விடுவதற்கு ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். கூடிய விரைவில் பொதுமக்களுக்கு இந்த நாணயம் கிடைக்கும் என எதிர்பாக்கலாம்.

Posted by போவாஸ் | at 5:10 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails