செம்மொழி மாநாடு: செய்திப் படம் தயாராகிறது



உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி மற்றும் இயக்குநர்கள் அமீர், லிங்குசாமி, சுப்ரமணியசிவா, மிஷ்கின், விக்கிரமன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அனைத்துத் திரைப்பட இயக்குநர்களும் கலந்துகொள்கிறோம். மேலும் தமிழ் மொழியின் பெருமையைப் போற்றும் விதமாக திரைப்பட இயக்குநர்களே எழுதி, நடிக்கும் வரலாற்று நாடகம் ஒன்றை நடத்தவுள்ளோம்.


மாநாட்டு நிகழ்ச்சிகளை முன்னணி இயக்குநர்கள் சிறப்பாகப் படமாக்கி அதை மாநாடு முடிந்த அடுத்த ஆறு மாத காலத்தில் வெளிவரும் அனைத்துத் தமிழ்ப் படங்களின் இடைவேளையிலும் சிறப்புச் செய்திப் படமாகத் திரையிடவுள்ளோம். திரைப்பட இயக்குநர்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் யாவும் அரசு வழிகாட்டுதலின்படி முறையாக நடத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்

Posted by போவாஸ் | at 2:31 AM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails