டீ கடையான தேமுதிக அலுவலகம்.


டீ கடையான தேமுதிக அலுவலகம்.


போன வருஷம், தலைநகர் தில்லியில தே.மு.தி.க., ஆபீசை விஜயகாந்த் திறந்து வச்சாரு. அப்ப நடந்த தடபுடல் விழாவுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து கட்சிக்காரங்க விமானத்தளையும் ரயில்லயும் கைகாசப் போட்டு கஷ்டப்பட்டு போனாங்க. தில்லி கட்சி ஆபீஸ்ல இருந்த ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட்டு, எல்லாரும் சந்தோசப்பட்டு, அடுத்த பிரதமர் & ஜனாதிபதி விஜயகாந்துதான் என்று கோஷம் போட்டுட்டு தமிழகம் வந்து சேந்தாங்க.
இப்போ என்ன மேட்டருன்னா , செப்டெம்பர் மாசம் 29ம் தேதி, தமிழக  மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னைக்காக, தில்லியில விஜயகாந்த் உண்ணாவிரதம் (நாடகம்) இருந்தாரு. அதுல கலந்துகிரதுக்காக, வழக்கம் போல தங்களது கை காசை போட்டு விமானத்திலும் ரயில்லயும் இங்கிருந்து போன கட்சிக்காரங்க,  ஆசை ஆசையா மிகுந்த பொறுப்புணர்வோடு ஒரு ஆர்வக் கோளாறுல, தில்லி கட்சி ஆபீஸில் இருக்கும் ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட கட்சி ஆபீஸ தேடிப் போய் இருக்காங்க.

தேடு தேடுன்னு தேடி இருக்காங்க..கட்சி ஆபீசைக் காணோமாம். வடிவேலு காமெடி பாணியில்  "கட்சி ஆபீசைக் காணோம் " "கட்சி ஆபீசைக் காணோம் " அப்படின்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தங்களுக்குள் புலம்பிகிட்டு இருந்தாங்களாம்.
கடைசியா அக்கம்பக்கம் விசாரிச்சு கட்சி ஆபீஸ் இருந்த இடத்தை கண்டுபிடுச்சவுங்க....அப்படியே ஷாக் ஆயிட்டாங்களாம்.
கட்சி ஆபீஸ் இருந்த இடத்துல டீக்கடைதான் இருந்துச்சாம்.
ஒரு நிமிஷம் ஆடிப்போன கட்சிக்காரங்க என்ன எதுன்னு விசாரிச்சப்ப, மாசம் 13,000 வாடகை தர முடியாம கட்சி ஆபீசைக் காலி செஞ்சுட்டதா சொல்லி இருக்காங்க.
இதை கேட்டு மேலும் அதிர்ச்சியான கட்சிக்காரங்க நொந்து போய் திரும்பி வந்து இருக்காங்க.

தமிழ்நாட்டுலேயே இன்னும் பெரிதாக சாதிக்க முடியாம இருக்கும் தேமுதிக கட்சிக்கும், விஜயகாந்துக்கும் தில்லியில் கட்சி ஆபீசை ஆரம்பித்தது எல்லாம் தேவையா.
அப்படியே தேவை என்றால் வாடகையை கொடுத்து கட்சி ஆபீசை மூடாமல் இருந்திருக்கலாம். குறைந்த வாடகைக்கு வேறு இடம் மாறி இருக்கலாம்.
ஒரு வேளை இப்படி இருக்கலாம், கட்சி ஆபீசுக்கு மாசா மாசம் வாடகை கட்ட சரியான ஒரு உண்மைத் தொண்டர் கிடைக்கவில்லை போல.
ஆகாயத்தில் கோட்டைகட்ட ஆசைப் பட்டால் இப்படித்தான்.
விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும்.
படிப்படியாக முன்னேற நினைக்காமல் ஓவர் நைட்டுல முதல்வரா, பிரதமரா, ஜனாதிபதியா ஆயிடலாம்னு நினைச்சா இப்படித்தான்.
எதுக்கு இப்படி கட்சி ஆபீஸ திறக்கனும், வாடகை கூட கட்ட முடியாம மூடனும்.இந்த பந்தா எல்லாம் தேவையா.
தன்னோட கட்சி ஆபீசுக்கு 13,000 ரூபாய் கட்ட முடியாத நிலையிலா இருக்கிறார் விஜயகாந்த்?.எல்லா செலவுகளையும் தொண்டர்களின் தலையில் கட்டுவிடலாம் என்ற ஒரு அற்ப புத்திதான்.
என்னிக்கு இவரைப் பத்தி, இவரோட கட்சிக்காரங்க தெரிஞ்சு புரிஞ்சிக்கப் போறாங்களோ. பாவம்.

Posted by போவாஸ் | at 8:10 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails