ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ இறுதி எச்சரிக்கை


ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ இறுதி எச்சரிக்கை

களத்தில் நடந்துகொள்ளும் முறையை மாற்றிக்கொள்ளத் தவறினால் உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாக்பூரில் மும்பைக்கு எதிரான சமீபத்திய இரானி கோப்பைப் போட்டியின்போது ஸ்ரீசாந்த் மோசமாக நடந்துகொண்டதாக பிசிசிஐ தனது எச்சரிக்கைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. பிசிசிஐ நன்னடத்தை விதியை மீறக்கூடாது என்பதை உறுதிசெய்ய இறுதி எச்சரிக்கை விடப்படுவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் உள்ளூர் ஆட்டங்களில் விளையாடத் தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் ஆட்டக்காரரான நீங்கள், இந்த விளையாட்டினைப் பார்ப்பவர்களுக்கும், விளையாட்டில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணத்தை(?) ஏற்படுத்த வேண்டும் என பிசிசிஐ தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடியபோது மும்பை ஆல்-ரவுண்டர் தவால் குல்கர்னியைத் திட்டியதற்காக ஸ்ரீசாந்தின் ஊதியத்தில் 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

Posted by போவாஸ் | at 9:25 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails