மீண்டும் வருகின்றது LML வெஸ்பா

மீண்டும் வருகின்றது LML வெஸ்பா


இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்கள் என்றால் இப்போது பைக் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், 1960ம் ஆண்டு காலத்தில், இரு சக்கர வாகனம் என்றால் ஸ்கூட்டர் தான் நினைக்கு வரும். அந்த அளவுக்கு வெஸ்பா ஸ்கூட்டர் புகழ் பெற்று இருந்த காலம் அது. 1960ம் ஆண்டுகளில், இத்தாலியின் பியாஜியோ நிறுவனம் இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு, கியருடன் கூடிய வெஸ்பா ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தது.

இதன் பின்னர் 1971ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 'சேட்டக்' என்ற பெயரில் தனியாக ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய தொடங்கியது. இருந்தாலும், கியர் ஸ்கூட்டர் என்றால், வெஸ்பா தான் என்ற பெயர் தொடர்ந்து நீடித்து வந்தது. 1983ம் ஆண்டு, எல்எம்எல் நிறுவனத்துடன் இணைந்து பியாஜியோ நிறுவனம், கியருடன் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய தொடங்கியது. இருந்தாலும், 1999ம் ஆண்டுடன் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விட்டது.


இந்தியாவில் தற்போது ஸ்கூட்டர் என்றால், கியர் இல்லாத ஸ்கூட்டர்கள் தான் என்ற நிலை காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பியாஜியோ நிறுவனம் மீண்டும் இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் முதல், மீண்டும் வெஸ்பா ஸ்கூட்டர்கள் வலம் வர உள்ளன. இருந்தலும், ' கிலிரா, ஏப்ரலியா, டெர்பி' ஆகிய பிராண்ட் பெயர்களில் தான் இந்த புதிய ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வரும்.

Posted by போவாஸ் | at 8:04 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails