நடிகை கிடைக்காமல் 'மாலுமி' விஜயகாந்த் திண்டாட்டம்


விஜயகாந்தின் முதல் இயக்குனர் முயற்சி, விருத்தகிரி சர்வதேச குற்றவாளியை கண்டுபிடித்து விலங்கு மாட்டும் அசகாயசூரர் பாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்கிறார். கதை தயார், லொகேஷன் தயார் ஆனால் ஹீரோயின் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.


முன்னணி நடிகைகள் யாரும் ஜோடி சேர முன்வராத நிலையில் புதுமுகம் ஒருவரை தனக்கு ஜோடியாக்க விஜயகாந்த் தீர்மானித்திருக்கிறார். இந்தியா முழுவதும் தேடி அலைஞ்சு திரிஞ்சுகிட்டு இருக்காங்கனு கொஞ்ச நாள் முன்னாடி ஒரு நியூஸ் வந்தது. தேடு தேடுன்னு இன்னும் தேடிட்டு இருக்காங்களாம்.


ஜோடியின் நிலைமை இப்படியென்றால், படத்தில் வரும் முக்கியமான கேரக்டருக்கும் திண்டாட்டம். ஹீரோயின் அளவுக்கு படத்தில் குணச்சித்திர வேடம் ஒன்றும் இடம் பெறுகிறதாம். இதில் நடிக்க தேவயானி, மீனா இருவ‌ரிடமும் கேட்டிருக்கிறார். இருவருமே கால்ஷீட் பிஸி என்று கைவிரித்திருக்கிறார்கள்.



அடுத்து யாரிடம் கேட்பது என்று மண்டையை குடைந்து கொண்டிருக்கிறார்கள் விஜயகாந்தின் முகாமில்.
இன்னும் காலம் கடந்து போகவில்லை...சூட்டிங் ஆரம்பிக்கவில்லை. 'மாலுமி' விஜயகாந்து ரூம் போட்டு உக்காந்து 'அவசியம் சினிமாவில் நடிக்க வேண்டுமா' என்பதை ஒரு முறை யோசிக்க வேண்டும்.

Posted by போவாஸ் | at 3:33 PM

1 கருத்துக்கள்:

Anonymous said...

yes of course,how long he is going to torture the people by acting

Post a Comment

Related Posts with Thumbnails