காம​ரா​ஜ​ருக்கு பெருமை சேர்த்​தது திமுக: ஸ்டா​லின்

திருச்​செந்​தூர் தொகுதி திமுக வேட்​பா​ளர் அனிதா ஆர்.​ ராதா​கி​ருஷ்​ணனை ஆத​ரித்து,​​ மு.க.​ ஸ்டா​லின் தனது 2-வது நாள் பிர​சா​ரத்தை திருச்​செந்​தூர் அரு​கே​யுள்ள முரு​கன்​கு​றிச்​சி​யில் திங்​கள்​கி​ழமை தொடங்​கி​னார்.​

​ அப்​போது அவர் பேசி​யது:​

​ கடந்த 2 நாள்​க​ளாக இங்கு முகா​மிட்டு பிர​சா​ரம் செய்த அதி​முக பொதுச்​செ​ய​லர் ஜெயல​லிதா முரண்​பட்ட ஒரு கருத்தை தெரி​வித்​துள்​ளார்.​ காம​ரா​ஜர் பெயரை திமுக மறைத்து வரு​வ​தாக அவர் கூறிச் சென்​றுள்​ளார்.​

​ அதி​முக ஆட்சி நடை​பெற்​ற​போ​து​ தான் காம​ரா​ஜர் நூற்​றாண்டு விழா கொண்​டா​டப்​பட்​டது.​ அந்த விழா​வுக்கு எதிர்க்​கட்சி தலை​வர்​களை அழைக்​கக்​கூட இல்லை.​ சமு​தா​யப் பெரி​ய​வர்​கள் கலந்​து​கொண்ட அந்த விழா​வில்,​​ அவர்​க​ளுக்கு உரிய மரி​யாதை கொடுக்​கப்​ப​ட​வில்லை.​

​ மேலும்,​​ காம​ரா​ஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறி​விக்க வேண்​டும் என,​​ சமு​தாய மக்​கள் வைத்த கோரிக்​கையை அதி​முக அரசு நிறை​வேற்​ற​வில்லை.​

தமி​ழ​கத்​தில் முதல்​வர் கரு​ணா​நிதி தலை​மை​யில் திமுக அரசு பத​வி​யேற்​ற​தும் காம​ரா​ஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறி​வித்து அவ​ருக்கு பெருமை சேர்த்​த​வர் முதல்​வர் கரு​ணா​நிதி.​

காம​ரா​ஜர் மறைந்​த​போது,​​ அப்​போது முதல்​வ​ராக இருந்த கரு​ணா​நிதி அவ​ருக்கு உரிய மரி​யாதை செலுத்​தி​ய​து​டன்,​​ நினை​வி​டம் அமைக்க இடத்​தை​யும் ஒதுக்​கிக் கொடுத்​தார்.​

​ கன்​னி​யா​கு​ம​ரி​யில் கடற்​க​ரை​யோ​ரம் காம​ரா​ஜர் மணி​மண்​ட​பம் அமைக்க கோரிக்கை வைக்​கப்​பட்​ட​போது,​​ முதல்​வர் கரு​ணா​நி​தி​யும் அதனை வலி​யு​றுத்​தி​னார்.​ கடற்​க​ரை​யில் எந்த கட்​ட​ட​மும் கட்ட அனு​மதி கிடை​யாது என்ற சட்​டம் அம​லில் இருந்​த​தால்,​​ மத்​திய அர​சி​டம் வலி​யு​றுத்தி காம​ரா​ஜர் மணி​மண்​ட​பம் கட்ட நட​வ​டிக்கை எடுத்​தார்.​

வி.பி.சிங் பிர​த​ம​ராக இருந்​த​போது,​​ சென்​னை​யில் உள்ள வெளி​நாட்டு விமான நிலை​யத்​திற்கு அண்ணா பெய​ரும்,​​ உள்​நாட்டு விமான நிலை​யத்​திற்கு காம​ரா​ஜர் பெய​ரும் சூட்ட வேண்​டும் என்று கோரிக்கை வைத்து,​​ அதனை நிறை​வேற்​றி​ய​வர் முதல்​வர் கரு​ணா​நிதி.​

பள்​ளிக் குழந்​தை​க​ளுக்​காக மதிய உண​வுத் திட்​டத்​தைத் தொடங்​கி​னார் காம​ரா​ஜர்.​ அத் திட்​டத்தை எம்.ஜி.ஆர்.​ விரி​வு​ப​டுத்​தி​னார்.​ தற்​போது அதனை மேலும் மேம்​ப​டுத்தி வாரத்​தில் மூன்று முட்​டை​க​ளு​டன் வழங்கி வரு​கி​றார் முதல்​வர் கரு​ணா​நிதி.​

இவற்​றை​யெல்​லா​மல் அறி​யா​மல் ஜெயல​லிதா முரண்​பட்ட கருத்​து​க​ளைக் கூறி வரு​கி​றார்.​

திமுக அரசு தொடர்ந்து மக்​கள் நல திட்​டங்​க​ளைச் செயல்​ப​டுத்தி வரு​கி​றது.​ ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி,​​ ரூ.7 ஆயி​ரம் கோடி விவ​சா​யக் கடன் தள்​ளு​படி,​​ இந்​தி​யா​வில் எந்த மாநி​லத்​தி​லும் இல்​லாத திட்​ட​மான பெண்​க​ளுக்கு ரூ.20 ஆயி​ரம் திரு​மண உத​வித்​தொகை வழங்​கும் திட்​டம்,​​ மகப்​பேறு உத​வி​யாக கர்ப்​பி​ணி​க​ளுக்கு ரூ.6 ஆயி​ரம் உத​வித்​தொகை,​​ மாண​வர்​க​ளுக்கு சத்​து​ண​வில் வாரம் 3 முட்டை என திட்​டங்​க​ளைக் கூறிக் கொண்டே போக​லாம் என்​றார்.​

Posted by போவாஸ் | at 1:31 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails