இந்தியாவின் முதல் பெண் விமானி - சரளா தாக்ரல்


1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அன்றைய தினத்தில் பெரும்பாலான பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. ஆல்வாரின் மகாராணிக்கு தனிப்பட்ட முறையில் செயல்பட ஒரு விமானி தேவை. அதுவும் ஒரு பெண் விமானி தேவை என்று.
அந்த நாள்களில் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தனி விமானத்தில் பறப்பது வினோதமல்ல. ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் பெண் விமானிகள் மிகவும் அபூர்வம். 
இந்தியப்பெண்மணியும் இளம் வயதினருமான சரளா தாக்ரல் அந்தப் பணியில் சேர்ந்தார். விமானம் என்பதே அபூர்வமான விஞ்ஞான முன்னேற்றம் என்று கருதப்பட்ட அன்றையக் காலக்கட்டத்தில் முதன் முதலில் விமானம் ஓட்டிய இந்தியப் பெண்மணி என்ற பெருமையை சரளா தாக்ரல் பெற்றார். ‘’விமானம் ஓட்ட கற்ற பிறகுதான் கார், சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.
Sarla Thakral - First lady pilot of India - Successful Stories of Women in Tamil
பயிற்சி பெற்ற நேரம் பத்து மணிநேரம். அதற்குப் பிறகு, தனியாக விமானம் ஓட்டி சாதனை புரிந்தேன்’’ என்கிறார் சரளா. அய்ம்பதுகளில் நகை வடிவமைப்பாளராகவும் டெக்ஸ்டைல் பிரின்டிங்கிலும் சாதனை புரிந்தவர் இவர். திரு-மணத்திற்குப் பிறகு சரளா விமானம் ஓட்ட பயிற்சி எடுத்தார்.
இவருடைய குடும்பத்தில் 9 விமான ஓட்டிகள் இருந்தனர். புகுந்த வீட்டில் ஹமாலயா ஃப்ளை-யிங் கம்பெனி வைத்திருந்ததால் இவர் பயிற்சி பெறுவது கஷ்டமாக இருக்கவில்லை. அன்றைய காலக்கட்டத்தில் ‘’ஏ’’ நிலை உரிமம் பெற்றார். ‘’பி’’ நிலை உரிமம் பெற முயற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விமான விபத்தில் கணவரை இழந்தார். இது 1939ஆம் ஆண்டு நடந்தது. சோகத்திலிருந்து மீண்டு மறுமணம் செய்து கொண்டார்.
பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தினார். இவருடைய கண்காட்சிகளில் பெரும்பாலும் பெண்களின் உருவங்களே நிறைந்திருக்கும். சில காலம் கழித்து ‘’பி’’ உரிமம் பெற்றுத் திரும்பவும் விமானியாக பணியாற்றினார். ஆறுமாத காலம் ஆல்வார் ராணிக்கு தனிப்பட்ட விமானியாக இருந்து பிறகு விலகினார்.
88 வயதாகும் சரளா இன்னும் நகை வடிவமைப்பாளராகவும், தேசிய நாடகப் பள்ளிக்காக பல வேலைகளைச் செய்பவருமாக இருக்கிறார். தினமும் காலையில் கண்விழிக்கும் போது அன்றைய தினம் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு விடுவதாகக் கூறும் இவர், திட்டமிடாத வாழ்க்கை வீண் என்கிறார். இவ்வளவு வேலைகள் செய்யவும் இவர், வீட்டு வேலைக்காக யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. அதையும் தானே செய்கிறார் இந்தச் சுறுசுறுப்பான பெண்மணி

Posted by போவாஸ் | at 6:32 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails