ஜீன்ஸ்பேண்ட்-டி.சர்ட், ஜன்னல் ஜாக்கெட் அணிய தடை: தமிழக அரசு உத்தரவு.


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் உடலை இறுக்கும் வகையிலான ஜீன்ஸ்- பேண்ட், டி-சர்ட் உடைகளை அணிந்து வருவதாகவும், ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட் அணிவதாகவும் பள்ளிக் கல்வித்துறைக்கு பெற்றோரிகளிடம் இருந்து புகார்கள் வந்தன.
 
மாணவ- மாணவிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஆசிரியர் -ஆசிரியைகள் இதுபோன்ற உடைகளை அணிவதால் தவறான சிந்தனைக்கு வழிவகுக்கும் என்று பெற்றோர்கள் முறையீடு செய்தனர்.
 
இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளுக்கு இது போன்ற ஆடைகளை ஆசிரியர் -ஆசிரியைகள் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.
 
மாணவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையிலான ஜீன்ஸ், டி-சர்ட், ஜன்னல் ஜாக்கெட் போன்ற ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் இதை பின்பற்ற வேண்டும். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பண்பாடு சார்ந்த உடைகளை அணிந்து வரவேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இணை இயக்குனர் உஷாராணி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அவை அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அவர்கள் அனுப்பியுள்ளனர்.
----------------
அரசின் இந்த உத்தரவுக்கு ஆசிரியைகள் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்து உள்ளார்களாம்.
ஒட்டு மொத்த ஆசிரியைகளுக்கும் நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணியுங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் இவர்களைப் பாதித்திருக்கிறது ?. உங்களில் யாரோ ஒரு சிலர் அநாகரீகமான முறையில் உடை அணிந்து வந்ததால், பெற்றோர்கள் அதை சுட்டிக்காட்டி புகார் கொடுத்ததால் இன்று அரசே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிரியர், ஆசிரியரிகளின் வேலையே கல்வியுடன் சேர்த்து ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் கற்றுத் தருவது தான்.

இவர்களே அநாகரீகமான உடையில் வந்தால் மாணவர்களின் எப்படி இருக்கும்.?

பல தனியார் மேற்றி பள்ளிகளில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மாணவர்களுக்கு இருப்பதைப் போல் யூனிபார்ம் உண்டு. தமிழக அரசும் அது போன்று யூனிபார்ம் சிச்ட்டத்தை கொண்டு வர வேண்டும். ஒரே மாதிரியான டிரஸ் கோட் (dress code) கொண்டு வரவேண்டும்.

ஆயிரம் படிச்சிருந்தாலும், சம்பாதிச்சாலும்...ஒழுக்கமில்லை என்றால் குப்பைக்கு சமம்தான்.

Posted by போவாஸ் | at 2:53 PM

1 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails