சோதனை எலிகளாகும் இந்தியர்கள்!

மரபணு மாற்று கத்திரிக்காயை இந்திய அரசின் விவசாயத்துறை சோதனைரீதியாக பயிரிட அனுமதி-செய்தி
இந்த செய்தி பெரும்பான்மை மக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இயற்கையை நேசிப்பவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து போராட்டங்

களை நடத்தினர். அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளை இவர்கள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மரபணு மாற்று பயிரில்? என்ற கேள்வி நம்மில் இயல்பாகவே எழும். இந்த கேள்விகளுக்கு விடை காணும் முன், முதலில் மரபணு மாற்றுப் பயிர் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

மரபணு மாற்று பயிர்

நாம் ஒரு வீடு கட்ட நினைக்கும் போது அந்த வீட்டிற்கான மாதிரியை உருவாக்குவோம். ஆங்கிலத்தில் அதை புளூ பிரிண்ட் என்று அழைப்பார்கள். இதில் அந்த வீட்டின் நீளம், அகலம், வாசல், ஜன்னல் ஆகியவை எங்கே அமைய வேண்டும், எந்த வடிவத்தில் அமைய வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும்.

இதேபோல் ஒவ்வொரு உயிரினங்களின் உடல் அமைப்பு, நிறம், உயரம், அளவு, பண்புக்கூறுகள் என வரைபடமாக உள்ளது தான் மரபணுக்கள். உதாரணமாக நாம் கருப்பாக இருப்போமா? உயரமா? குட்டையா? சுருட்டை முடியா? பூனைக் கண்ணா? என்று ஒரு மனிதனின் அத்தனை அடையாளங்களையும் உள்ளடக்கிய தகவல் களஞ்சியமே மரபணுவில் உள்ளது.

இந்த மரபணுக்களில் மாற்றங்கள் செய்யும் போது உயிரினங்களின் அடிப்படை குணாம்சங்களை கூட மாற்றிவிட முடியும். மரபணு மாற்றம் என்பது தற்போது மருத்துவ துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரபணு மாற்றத்தை விவசாயத்துறையிலும் புகுத்தி இயற்கை விவசாயத்தை தலைகீழாக மாற்ற தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

எதற்கு இந்த மரபணு மாற்றம்? 

உதாரணத்திற்கு கத்தரிக்காய் விதைகளை மரபணு மாற்றம் செய்து ஒரு கம்பெனி வெளியிடுகிறது என்றால் அதற்கான காப்புரிமையை அந்த நிறுவனம் பெற்றுக் கொள்கிறது. அந்த குறிப்பிட்ட பயிரின் விதையை காப்புரிமை பெற்ற நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனமும் விற்பனை செய்ய முடியாது உற்பத்தியும் செய்ய முடியாது, ஏன் அந்த பயிரைப் பயிரிடும் விவசாயி கூட அந்த விதைகளை மறுபடியும் உற்பத்தி செய்ய முடியாது! அது எப்படி என்றால் குறிப்பிட்ட நிறுவனங்கள் மரபணுமாற்று விதையை விவசாயிகள் மறு உற்பத்தி செய்வதை தடுப்பதற்காக ஒரு முறை மட்டுமே பூத்து காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்து மலட்டுத் தன்மையை செயற்கையாகவே விதைகளில் உண்டாக்கி விடுகின்றன. 
மாற்றத்தின் விளைவு

மரபணு மாற்றம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கை சோதனைக்காக 30 எலிகளுக்கு தந்த போது 8 எலிகள் காரணம் கண்டறியப்படாமலேயே உயிரிழந்தன. இறந்த எலிகளை பரிசோதித்ததில் பெரும்பாலான எலிகளின் உணவுப் பாதையில் புண் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது. அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனை நடத்திய ஆய்வில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை சாப்பிட்ட அமெரிக்காவின் மக்கள் தொகையில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மரபணு மாற்று பயிர்களில் செயற்கையாக மலட்டு தன்மை உண்டாக்கப்படுவதால் அதை தொடர்ந்து சாப்பிடுவோருக்கும் மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சோதனை எலிகள்

அமெரிக்காவில் ஒரு ஆப்பிளின் விலை இந்திய மதிப்பில் ரூ.50க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டாலும் அமெரிக்காவில் விளைந்த மரபணு மாற்று ஆப்பிள்கள் இந்தியாவில்
இறக்குமதி செய்யப்பட்டு ரூ.15க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இது எப்படி சாத்தியம்?
அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வர போக்குவரத்து, குளிர் சாதன பாதுகாப்பு கிடங்கு வாடகை, விவசாயிக்கான லாபம் என எல்லாவற்றையும் கூட்டினாலே ஒரு ஆப்பிளின் விலை ரூ.100ஐ தாண்டும். ஆனாலும் அமெரிக்க அரசு புதிய ரக மரபணுமாற்று ஆப்பிள்களை மானிய வசதியுடன் இந்தியாவிற்கு இலவசமாக ஏற்றுமதி செய்கிறது. இதற்காக இந்தியர்களை அமெரிக்கா சோதனை எலிகளாக பயன்படுத்துகிறது.

இந்தியாவில் விளையும் சிம்லா ஆப்பிள்களை முழுவதும் அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்காக அதிக விலை கொடுத்து வாங்கி கொள்கிறது. நமது பாரம்பரிய ஆப்பிள்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது பல்வேறு வண்ணங்களில் நாம் சாப்பிடும் ஆப்பிள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மரபணு மாற்றம் செய்யப்பட்டவையே!

40 நாடுகளில் தடை

மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி-பழங்களுக்கு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் தடைவிதித்துள்ளன. அல்ஜீரியா, இலங்கை, தாய்லாந்து, சீனா போன்ற நாடுகள் ‘மரபணு’ மாற்றப்பட்ட பயிர்களுக்கு தடை விதித்துள்ளன.

ஜப்பானில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. நார்வே, ஆஸ்திரியா நாடுகள் நன்றாக பரிசோதிக்கப்பட்ட மரபணு பொருட்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கின்றன. 

ஜெர்மனியில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகள் மரபணு மாற்று பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் முழு அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து, பராகுவே, ஆஸ்திரேலியாவில் வணிக நோக்கத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள மேரிலேன்ட் தீவு, கொலாராடோ, சான் பிரன்சிஸ்கோ, கலிபோர்னியாவில் மரபணு மாற்றப்பட்ட மீன்களுக்கு தடை உள்ளது. ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் மரபணு காய்கறி-பழங்கள், தானியங்கள் மீது “மரபணு மாற்றப்பட்ட பொருள்” என்று லேபிள் ஒட்டும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரபணு மாற்று காய்கறி, பழங்கள், தானியங்கள் முழு அளவில் பரிசோதனை செய்யப்பட்டதால் இந்த நாடுகளில் எல்லாம் இப்பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இந்த பட்டியலில் இந்தியாவைக் காணவில்லையே ஏன்?

Posted by போவாஸ் | at 9:02 PM

0 கருத்துக்கள்:

Post a Comment

Related Posts with Thumbnails